Jump to content

ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை


Recommended Posts

ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை

ஜெயலலிதாவிற்கு பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை

 
உடல்நலக் குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 29வது நாளாக சிகிச்சைப் பெற்று வரும் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தவிர, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகியோரும் இடையிடையே ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு முதல் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை பிசியோ தெரபி நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோரும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப அதிமுகவினர் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியேயும் அதிமுகவினரின் பிரார்த்தனைகள் தொடர்ந்து வருகின்றன.

http://tamil.adaderana.lk/news.php?nid=84617

Link to comment
Share on other sites

‘முதல்வர் ஜெயலலிதா எப்போது டிஸ்சார்ஜ்?' -அப்போலோ அப்டேட்ஸ்

appolollo_13326.jpg

ப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 29 நாட்கள் ஆகிவிட்டன. ' முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்தாலும், தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுகிறது. கார்டன் திரும்புவதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். 

போயஸ் கார்டனில் இருந்து கடந்த 22-ம் தேதி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டாலும், நுரையீரல் தொற்று உள்பட பலவித சிரமங்களுக்கு ஆளானார். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் வருகையும் அதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் சிகிச்சையும் முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை அளித்தன. இந்நிலையில், 'முதல்வர் சில நாட்களில் வீடு திரும்புவார். அதன்பிறகு கார்டனிலேயே சிகிச்சையைத் தொடர்வார்' என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

" முதல்வர் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேல் சர்க்கரை நோய் பாதிப்பில் இருக்கிறார் முதல்வர். நுரையீரலில் நீர்க் கோர்ப்பைச் சரிசெய்வதற்கான சிகிச்சைகள்தான் தொடக்கத்தில் வேகமெடுத்தன. தற்போது நுரையீரல் தொற்றின் பாதிப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இன்னமும் வெண்டிலேட்டர் நீக்கப்படவில்லை. treacheostomy எனப்படும் மூச்சுக் குழாயை தொண்டையில் இருந்து அகற்றப்பட உள்ளது. சில நேரங்களில் மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறார். நல்ல நினைவோடு சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கிறார்" என நம்மிடம் தெரிவித்த கார்டன் ஊழியர் ஒருவர், "முகம் மற்றும் இரண்டு கை, கால்களுக்கு பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் இயக்கங்களை மீண்டும் இயல்புக்குக் கொண்டு வரும் வேலைகளில் பிஸியோதெரபி நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேரத்தில், சிறுநீரகத் தொற்றுக்கும் ஆளானார் முதல்வர். அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. பலவிதமான சிகிச்சை முறைகளால் உடல் மெலிந்துவிட்டார் முதல்வர். 

படுக்கையில் தொடர்ந்து இருப்பதால், முதுகில் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை நடக்கிறது. படுக்கையில் இருந்து அவ்வப்போது நிமிர்ந்து உட்காரும் அளவுக்கு அவரை தயார்படுத்திவிட்டனர் மருத்துவர்கள். ஆனால், சிகிச்சைக்கான மருந்துகளை மிகவும் தாமதமாகத்தான் அவரது உடல் ஏற்றுக் கொள்கிறது. எனவே, படிப்படியான முன்னேற்றத்தை நோக்கித்தான் சிகிச்சை முறைகள் செல்கின்றன. ஜெயலலிதாவின உடல்நிலையில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் தெரிந்தாலும், இன்றைய நிலவரப்படி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. அவரது கழுத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் பொருத்தப்பட்ட TRACHEOSTOMY - இன்று (வெள்ளிக்கிழமை) நல்ல நேரத்தில் அகற்றப்படலாம். அதற்கான பணியில் தற்போது மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதை எடுத்தாலே, ஒரளவு பேச ஆரம்பித்துவிடுவார். அதோடு ஜெயலலிதா உடல்நிலையின் முழு ரிப்போர்ட் அப்போலோ தரப்பில் இன்று வெளியிடப்படலாம்... அல்லது கடைசி நிமிட அறிவுறுத்தல் காரணமாக நிறுத்தப்படலாம்!’’ என்றார் விரிவாக. 

"இயல்பாகவே, ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் முதல்வர் ஜெயலலிதா. தற்போதுள்ள கிரக சூழல்களின்படி, ' தீபாவளிக்கு முன்பு டிஸ்சார்ஜ் ஆவது சரியல்ல' என சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர். எனவே, தீபாவளிக்கு முன்பு முதல்வர் வீடு திரும்பும் வாய்ப்பு குறைவு. தினமும் காலையில், அனைத்து அமைச்சர்களும் அப்போலோவில் அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டுத்தான் கோட்டைக்குச் செல்கிறார்கள். ஒவ்வொருவரையும் தீவிரக் கண்காணிப்பில் வைத்திருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையும், உளவுத்துறை மூலம் உடனுக்குடன் அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

தீச்சட்டி ஏந்துவது, நோன்பு திறப்பது, அலகு குத்துவது, பால் குடம் சுமப்பது என அப்போலோ வாசலே, ஆன்மிகத் தலமாக மாறிவிட்டது. முதல்வரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள் கார்டன் ஊழியர்கள். 

முதல்வர் விரைவில் நலம் பெறட்டும்....!

http://www.vikatan.com/news/tamilnadu/70209-apollo-updates-on-cm-health-condition.art

Link to comment
Share on other sites

'நன்றாக பேசி வருகிறார் ஜெ.,' -அப்போலோ அறிக்கை

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ 10-வது அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், 'முதல்வர் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நன்றாக அவர் பேசி வருகிறார். சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களின் அறிவுரைகளின் பேரில் சிகிச்சை தரப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்' என கூறப்பட்டுள்ளது. 

மேலும், தீவிர சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய், சர்க்கரை நோய் குழுவினரது கவனத்திலும், பிசியோத்தெரபி நிபுணர்களால் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோவின் 9-வது அறிக்கை கடந்த 10-ம் தேதி வெளியாகியிருந்தது.

apollo_19527.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/70250-cm-jayalalitha-interacting-and-progressing-gradually-says-apollo.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'நன்றாக பேசி வருகிறார் ஜெ.,' 

சும்மா கிருமி தோற்று அம்மா வந்துடுவா ....
நீ சாப்பிடு என்று சொன்னார்கள்.

இப்போ அம்மா பேசுறா என்கிறார்கள் .....
அப்போ பேசாமல் இருந்திருக்கிறார் ???


எதோ .....
2 மாதம் கழித்து 
மூச்சு விடுகிறார் என்று சொல்லாமல் இருந்தால் சரிதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.