Jump to content

பங்களாதேஷு எதிர் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

பங்களாதேஷுக்கு எதிரான வெற்றி அலையை இங்கிலாந்து அணியினால் தொடர முடியுமா? டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
2016-10-20 09:46:03

பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்­வ­தற்கு இங்­கி­லாந்து உறுதி பூண்­டுள்­ளது. ஆனால் அது இல­கு­வாக அமையும் என்று கூறு­வ­தற்­கில்லை.

 

20097england---bangaladesh2.jpgபங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக 2003 முதல் 2010 வரை விளை­யா­டிய 8 போட்­டி­க­ளிலும் இங்­கி­லாந்து வெற்­றி­பெற்­றுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யா­வை­விட பங்­க­ளா­தே­ஷு­ட­னான டெஸ்ட் போட்­டிகள் அனைத்­திலும் வெற்­றி­பெற்ற இரண்­டா­வது நாடு இங்­கி­லாந்து ஆகும்.

 

எனினும் பங்­க­ளா­தேஷின் அண்­மைக்­கால ஆற்­றல்­களை நோக்­கும்­போது அந் நாட்­டு­ட­னான வெற்றி அலையை இங்­கி­லாந்து தொட­ருமா என்ற கேள்வி எழாமல் இல்லை.
பங்­க­ளாதேஷ் அண்­மைக்­கா­ல­மாக வெளிப்­ப­டுத்தி வரும் ஆற்றல், குறிப்­பாக சொந்த மண்ணில் அதன் திற­மைகள் இக்கேள்­வியை எழுப்பக் கார­ண­மாக அமைந்­துள்­ளது.

 

இங்­கி­லாந்து தனது வெற்றி அலையை பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ராக தொடர்­வ­தற்கு முயற்­சிக்கும் அதே­வேளை, தனது சொந்த நாட்டில் இங்­கி­லாந்தை முதல் தட­வை­யாக வீழ்த்தும் கங்­க­ணத்­துடன் இத்தொடரை பங்­க­ளாதேஷ் எதிர்­கொள்­ள­வுள்­ளது.

 

டெஸ்ட் குழாம்கள்

 

இங்­கி­லாந்து: அலஸ்­டெயார் குக் (அணித் தலைவர்), மொயீன் அலி, ஸவார் அன்­சாரி, ஜொனி பெயார்ஸ்டோ, ஜேக் போல், கறி பெலன்ஸ், கரத் பட்டி, ஸ்டுவர்ட் ப்றோட், ஜொஸ் பட்லர், பென் டுக்கட், ஸ்டீவன் ஃபின், ஹசீப் ஹமீத், ஆதில் ராஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், க்றிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜெம்ஸ் அண்­டர்சன்.

 

பங்­க­ளாதேஷ்: (முத­லா­வது டெஸ்ட்­டுக்­கா­னது) முஷ்ஃ­பிக்குர் ரஹிம் (அணித் தலைவர்), தமிம் இக்பால், இம்ருள் கயேஸ், கம்ருள் இஸ்லாம் ராபி, மஹ்­மு­துல்லாஹ், மெஹெதி ஹசன், மொமினுள் ஹக், நூருள் ஹசன், சபிர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், ஷக்கிப் அல் ஹசன், ஷுவாகட்டா ஹொம், சௌம்ய சர்கார், தைஜுல் இஸ்லாம்.
 

http://www.metronews.lk/article.php?category=sports&news=20097

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கான சாதனையை நோக்கி அலஸ்டெயார் குக்
2016-10-20 09:54:55

சித்­தா­கொங்கில் இன்று ஆரம்­ப­மா­ன பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யா­னது இங்­கி­லாந்து அணித் தலைவர் அலஸ்­டெயார் குக்­கிற்கு வர­லாற்று முக்­கியம் வாய்ந்­த­தாக அமை­ய­வுள்­ளது.

 

2009843.jpg

 

 

இந்தப் போட்­டியில் விளை­யா­டு­வதன் மூலம் இங்­கி­லாந்து சார்­பாக அதிக டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டிய வீரர் என்ற மைல்­கல்லை அலஸ்­டெயார் குக் எட்­ட­வுள்ளார்.

 

இங்­கி­லாந்து சார்­பாக அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்­டிகளில் விளை­யா­டி­ய­வர்கள் வரி­சையில் முன்னாள் அணித் தலைவர் அலெக் ஸ்டுவர்ட்டும் அலஸ்­டெயார் குக்கும் 133 போட்­டி­க­ளுடன் முத­லி­டத்தில் சம­நி­லையில் இருக்­கின்­றனர்.

 

இந்­தி­யா­வுக்கு எதி­ராக நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதா­னத்தில் 2006 மார்ச் 1 முதல் 5 வரை நடை­பெற்ற டெஸ்ட் போட்­டியில் அறி­மு­க­மான அலஸ்­டெயர் குக், இரண்டு வாரங்கள் கழித்து நடை­பெற்ற போட்­டியில் மாத்­தி­ரமே விளை­யா­ட­வில்லை.

 

அதன் பின்னர் இங்­கி­லாந்து சார்­பாக தொடர்ச்­சி­யாக 131 டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களில் அலஸ்­டெயார் குக் விளை­யா­டி­வந்­துள்ளார்.
தனது இரண்­டா­வது மகளின் பிறப்­பிற்­காக இங்­கி­லாந்து திரும்­பி­யி­ருந்த குக், திங்­க­ளன்று மீண்டும் பங்­க­ளாதேஷ் சென்­ற­டைந்தார்.

 

இங்­கி­லாந்து அதிக டெஸ்ட்­களில் விளை­யா­டி­யவர் என்ற மைல்­கல்லை எட்­ட­வுள்ள நத்தார் தினத்­தன்று பிறந்த 31 வய­தான குக் இது­வரை விளை­யா­டி­யுள்ள 132 டெஸ்ட் போட்­டி­களில் 29 சதங்கள், 51 அரைச் சதங்கள் அடங்­க­லாக மொத்தம் 10,599 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார்.

 

இலங்­கைக்கு எதி­ராக ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் 2014 டிசம்பர் 16ஆம் திகதி நடை­பெற்ற போட்­டி­யுடன் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்­கிற்கு விடை பகர்ந்த குக்,டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார்.

http://www.metronews.lk/article.php?category=sports&news=20099

Link to comment
Share on other sites

'அவுட்' ஆன 3 முறையும் டிஆர்எஸ்-சில் தப்பிய மொயின் அலி: இங்கிலாந்து அணி திணறல்

 

 
மொயின் அலி ரிவியூ முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் வங்கதேச வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.
மொயின் அலி ரிவியூ முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் வங்கதேச வீரர்கள். | படம்: ஏ.எஃப்.பி.

சிட்டகாங்கில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 3 முறை டி.ஆர்.எஸ். முறையீட்டில் தப்பிய மொயின் அலி, இங்கிலாந்தை ஓரளவுக்கு மீட்டார்.

சிட்டகாங்கில் வங்கதேசம்-இங்கிலாந்து இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சற்று முன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

வங்கதேச அணியில் 3 அறிமுக வீரர்கள்: கம்ருல் இஸ்லாம் ராபி, மெஹ்தி ஹசன் மிராஸ், சபீர் ரஹ்மான்.

இங்கிலாந்து அணியில் டக்கெட் தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார்.

மூன்று முறை பிழைத்த மொயின் அலி:

27-வது ஓவரின் 5-வது பந்தை ஷாகிப் அல் ஹசன் ஓவர் த விக்கெட்டிலிருந்து வீச ஸ்வீப் ஆட முயன்ற மொயின் அலி கால்காப்பில் வாங்கினார், தர்மசேனா அவுட் என்று கையை உயர்த்தினார், ஆனால் மொயின் அலி ரிவியூ செய்தார். அதில் பந்து லேசாக மட்டையில் பட்டது தெரியவர நாட் அவுட் ஆனது.

29-வது ஓவரில் இதே ஷாகிப் அல் ஹசன் மீண்டும் மொயின் அலி பேடில் வாங்கினார். நடுவர் விரலை உயர்த்தினார். மொயின் மீண்டும் ரிவியூ செய்தார். இம்முறையும் ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை தாக்காது என்று தெரியவர அவுட் தீர்ப்பு திருத்தப்பட்டது.

அதே ஓவரில் மீண்டும் 4-வது பந்தில் மீண்டும் மொயின் அலி ஸ்வீப் செய்ய பெரிய முறையீடு மீண்டும் தர்மசேனா கையை உயர்த்தினார், மீண்டும் மொயின் அலி ரிவியூ செய்தார். இம்முறையும் பந்து ஸ்டம்பு லைனுக்கு வெளியே பிட்ச் ஆனது ரிவியூவில் தெரியவர மீண்டும் அவுட் தீர்ப்பு நாட் அவுட் என்று மாற்றப்பட்டது. 6 பந்துகளில் 3 முறை தர்மசேனா கையை உயர்த்தி மூன்று முறையும் டி.ஆர்.எஸ். மொயீன் அலியை காப்பாற்றியது.

இதை விட வங்கதேசத்திற்கு வேதனையான நகைமுரண் என்னவெனில் மொயின் அலி 1 ரன்னில் இருந்த போது மெஹெதி ஹசன் மிராஸ் பந்து கால்காப்பை தாக்க பெரிய முறையீடு எழுந்தது, ஆனால் நடுவர் நாட் அவுட் என்றார், இதனை வங்கதேசம் டி.ஆர்.எஸ். மேல்முறையீட்டு தீர்ப்பை கேட்டிருந்தால் அவுட் என்று தீர்ப்பாகியிருக்கும்.

இந்த தப்பித்தல்களினால் மொயின் அலி தற்போது 63 ரன்களுடன் ஆடி வருகிறார்.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட் செய்ய முடிவெடுத்தது. அறிமுக வீரர் டக்கெட் 14 ரன்களில் அறிமுக ஸ்பின் பவுலர் மெஹெதி ஹசன் மிராஸிடம் பவுல்டு ஆகி வெளியேறினார்.

கேப்டன் அலிஸ்டர் குக் 26 பந்துகளில் 4 ரன்களை எடுத்து ஷாகிப் அல் ஹசனின் நன்றாகத் திரும்பிய பந்து ஒன்றில் பவுல்டு ஆனார்.

பாலன்ஸ் களமிறங்கி 7 பந்துகளில் 1 ரன் எடுத்து மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் எல்.பி.ஆனார். இதுவும் ரிவியூவில் வந்த அவுட்தான்.

ஜோ ரூட் தனது வழக்கமான பாணியில் சரளமாக 49 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் எட்ஜ் செய்து வெளியேறினார். ஸ்டோக்ஸ் களமிறங்கி ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசனின் மீண்டும் ஒரு நல்ல திருப்பம் கண்ட பந்தில் பவுல்டு ஆனார்.

இவர் அவுட் ஆகும் போது வங்கதேசம் 106/.5 என்று திணறியது. அதன் பிறகுதான் மொயின் அலி ஒரு முறை ரிவியூ செய்யப்படாமலும் 3 முறை ரிவியூ செய்தும் தப்பித்தார், கடைசியில் 68 ரன்களில் மெஹதி ஹசன் மிராஸ் பந்தில் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இம்முறை சந்தேகமில்லை.

அறிமுக வீச்சாளர் மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் 19 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 40 ரன்களுடனும் கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். மொயின் அலி, பேர்ஸ்டோ இணைந்து 88 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

http://tamil.thehindu.com/sports/அவுட்-ஆன-3-முறையும்-டிஆர்எஸ்சில்-தப்பிய-மொயின்-அலி-இங்கிலாந்து-அணி-திணறல்/article9245254.ece?homepage=true

Link to comment
Share on other sites

விறுவிறுப்பான கட்டத்தில் வங்கதேசம்-இங்கிலாந்து டெஸ்ட்

 

 
 
  • 5 விக்கெட்டுகளை 2-வது இன்னிங்ஸில் கைப்பற்றிய ஷாகிப் அல் ஹசன், பென்ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்ப்ற்றிய மகிழ்ச்சியில். | படம். ஏ.பி.
    5 விக்கெட்டுகளை 2-வது இன்னிங்ஸில் கைப்பற்றிய ஷாகிப் அல் ஹசன், பென்ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்ப்ற்றிய மகிழ்ச்சியில். | படம். ஏ.பி.
  • பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். | படம். கெட்டி இமேஜஸ்.
    பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். | படம். கெட்டி இமேஜஸ்.

சிட்டகாங் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் வங்கதேசத்தை 248 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 228/8 என்று மொத்தம் 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 2-வது இன்னிங்ஸில் 62/5 என்று கடுமையாகப் போராடிய இங்கிலாந்தை தனது 85 ரன்கள் இன்னிங்ஸினால் ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்தை மீட்டார். இவரும், ஜானி பேர்ஸ்டோவும் இணைந்து 6-வது விக்கெட்டுக்காக பேட்டிங்கிற்கு பகைமையான பிட்சில் 127 ரன்களைச் சேர்த்தது இந்த டெஸ்ட் போட்டியின் திருப்பு முனை அம்சமாகும். பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களை தன் இன்னிங்சில் அடித்தார்.

இருவரும் இன்றைய தினத்தின் கடைசி மணி நேரத்தில் ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்துக்கு வெற்றி நம்பிக்கை அளிக்கும் ஒரு முன்னிலையை உறுதி செய்தனர். ஷாகிப் அல் ஹசன் அருமையாக வீசி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

221/5 என்று இன்று காலை தொடங்கிய வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் (31), 2-வது பந்திலேயே மொயின் அலி (3/75) பந்தை மேலேறி வந்து விளாச முயன்று ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார்.

அடில் ரஷித் (2/58) இரவுக்காவலன் ஷபியுல் இஸ்லாம் (2) விக்கெட்டை வீழ்த்த பிறகு ஸ்டோக்ஸ் இன்னிங்ஸை முடித்து வைத்தார். மெஹதி ஹசனை ஸ்டோக்ஸ் எல்.பி.செய்தார். சபிர் ரஹ்மான் (19) அலிஸ்டர் குக்கின் கேட்சிற்கு ஆட்டமிழந்தார். பிறகு கடைசி விக்கெட்டாக கம்ருல் இஸ்லாம், ஸ்டோக்ஸ் பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆக ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வங்கதேசம் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

45 ரன்கள் என்ற எதிர்பாராத முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் அலிஸ்டர் குக், டக்கெட் ஆகியோர் தொடக்கத்திலேயே இருமுனைகளிலும் ஸ்பின் சோதனையை எதிர்கொள்ள நேரிட்டதில் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டனர். அலிஸ்டர் குக் மெஹதி ஹசன் பந்தை எட்ஜ் செய்ய மஹமுதுல்லா கேட்ச். குக் 12 ரன்களில் அதிர்ச்சி வெளியேற்றம் கண்டார். ஜோ ரூட் 1 ரன் எடுத்து மேலும் அதிர்ச்சிகரமாக ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆன பந்தை முன் கூட்டியே ஸ்வீப் செய்ய தயாராகி ஆடியதால் ஷாகிபிடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.

உணவு இடைவேளைக்கு முன்னதாக டக்கெட் (15), ஷாகிப் பந்தை ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 29/3 என்று தடுமாறியது. உணவு இடைவேளைக்குப் பிறகு உடனேயே கேரி பாலன்ஸ் (9) தைஜுல் இஸ்லாம் பந்தை ஸ்வீப் செய்து இம்ருல் கயேஸிடம் லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதே ஸ்வீப் ஷாட்தான் ஷாகிப் பந்தில் மொயின் அலியையும் காவு வாங்கியது. முஷ்பிகுர் ரஹிம் நன்றாக அதனைப் பிடித்தார். 62/5 என்ற நிலையில் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ இணைந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி தேநீர் இடைவேளையின் போது மேலும் சேதமில்லாமல் 108/5 என்று ஸ்கோரை உயர்த்தினர். அதன் பிறகு வங்கதேச பவுலர்கள் நெருக்கடியை ஏற்படுத்தவில்லை, இதனால் ஸ்டோக்ஸ் தனது அரைசதத்தை மிட்விக்கெட்டில் அடித்த புல்ஷாட் சிக்ஸ் மூலம் கிராண்டாக எட்டினார்.

உறுதுணையாக ஆடிய விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஒரு காலண்டர் ஆண்டில் விக்கெட் கீப்பராக அதிக ரன்களை எட்டிய சாதனையை நிகழ்த்தினார். இவர் 47 ரன்களில் இருந்த போது வங்கதேச சீம் பவுலர் கம்ருல் பந்தில் பிளேய்ட் ஆன் ஆனார். ஸ்டோக்ஸ் ஸ்வீப் ஷாட்டிற்கு ஷாகிபிடம் சற்று நேரம் கழித்து வெளியேறினார். ரஷீத்தையும் ஷாகிப் எல்.பியில் வீழ்த்தினார். ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்ஸ் 11 ரன்களுடனும் பிராட் 10 ரன்களுடனும் களத்தில் இருக்க இங்கிலாந்து 228/8 என்று 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஷாகிப் அல் ஹசன் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/விறுவிறுப்பான-கட்டத்தில்-வங்கதேசம்இங்கிலாந்து-டெஸ்ட்/article9256117.ece

Link to comment
Share on other sites

#BANvENG பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே இதுவரை நடந்த டெஸ்ட் தொடர்களின் பார்வை – நாளை வரலாறு படைப்பார்களா வங்கப் புலிகள் ?

FB_IMG_1477232709291.jpg

#BANvENG  பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே இதுவரை நடந்த டெஸ்ட் தொடர்களின் பார்வை – நாளை வரலாறு படைப்பார்களா வங்கப் புலிகள் ?

இதுவரை இரு அணிகளுக்கிடையும்  4 டெஸ்ட்  தொடர்கள் (இரு தொடர் இங்கிலாந்திலும் இரு தொடர் பங்களாதேஷிலுமாக) நடந்தேறியுள்ளன. 2003/04 பருவகாலத்திலேயே முதல் முறையாக  டெஸ்ட் அரங்கில் இரு அணிகளும் ஒன்றை ஒன்று சந்தித்தனர். இது இரு அணிகளிடையேயான ஐந்தாவது டெஸ்ட் தொடராகும்.

மொத்தமாக நான்கு தொடரிலும் நடந்த எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் கிரிக்கெட்டின் தாயகம் வென்றுள்ளதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளிடையேயான டெஸ்ட் தொடரில் ஒரு அணி, ஒரு இன்னிங்சில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இங்கிலாந்து 2010 ம் ஆண்டு பகுளாதேஷின் சிட்டகொங் நகரில் ஆறு இலக்குகளை இழந்து குவித்த 599 ஓட்டங்கள் காணப்படுகிறது. பங்களாதேஷ் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற அதிக ஓட்ட எண்ணிக்கையாக 2010 ம் ஆண்டில் டாக்காவில் பெற்ற 419 ஓட்டங்கள் காணப்படுகிறது.

குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் பங்களாதேஷின் 104 ஓட்டங்கள் காணப்படுகையில் வங்கப் புலிகளுக்கு எதிரான இங்கிலாந்தின் குறைந்த ஓட்டமாக 295 காணப்படுகிறது.

fb_img_1477232640403

மிகப்பெரிய வெற்றியாக, இன்னிங்ஸ் அடிப்படையில் 2005 இல் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து பெற்ற இன்னிங்ஸ் மற்றும் 261 ஓட்டங்களான வெற்றியும் ஓட்டங்கள் அடிப்படையில் 2003 இல் சிட்டகொங்கில் இங்கிலாந்து பெற்ற 329 ஓட்டங்களான வெற்றியும் இலக்குகள் அடிப்படையில் இங்கிலாந்தின் 9 இலக்குகளாக வெற்றியும் காணப்படுகிறது.

இரு அணிகளிடையேயான டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் குவித்தவராக, இங்கிலாந்து சார்பில் இயன் பெல் ஆறு  போட்டிகளில் பங்கெடுத்து வெறுமனே 7 இன்னிங்சில் 633 ஓட்டங்களையும் பங்களாதேஷ் சார்பில் தமீம் இக்பால் ஐந்து போட்டிகளில் (8 இன்னிங்ஸ்களில்) 505 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இதுவரையான போட்டிகளில் இரு அணி வீரர்களுமாக 14 சதங்களை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சை பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் ஹொக்கர்ட் என்ற பந்து வீச்சாளர் 4 போட்டிகளில் பங்கெடுத்து 23 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். பங்களாதேஷ் சார்பில் பங்களாதேஷின் சகலதுறைவீரர் சாகிப் அல் ஹசன் அதிக படியாக 19 இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.

253892

இதுவரை, 11 தடவைகள் (ஒரு இன்னிங்ஸில்) ஐந்து இலக்கு பெறுதிகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் ட்ரெஸ்கோதிக் அதிக பிடியெடுப்புகளை (8 பிடியெடுப்புக்கள்) மேற்கொண்டுள்ளார்.

ME ட்ரெஸ்கோதிக், MP வாகன் ஆகியோர் லார்ட்ஸில் 2005 ம் ஆண்டில் தங்களிடையே பகிர்ந்து கொண்ட 255 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக இருக்கிறது. ஆனால் வெறுமனே 8 போட்டிகளில் 22 சத இணைப்பாட்டங்கள் இரு அணிகளிடையேயான டெஸ்ட் போடடிகளில் பெறப்பட்டுள்ளது.

(தரவுகள் யாவும் இந்த தொடருக்கு முந்தைய போட்டிகளின் படியாகும்)

இரு அணிகளிடையே கடந்த 20ம் திகதி ஆரம்பமான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி  சிட்டகொங்கில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது போட்டி மிர்பூரில் நடைபெறும்.

இப் போட்டியில் பங்களாதேஷ் சார்பில் மூன்று வீரர்கள் (சப்பிர், மெஹெடி, கம்ருல்) அறிமுகமாகி இருந்தனர். ஆனால் பங்களாதேஷுக்கு அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிகுர் ரஹ்மான், காயம் காரணமாக போட்டிகளில் பங்கெடுக்காது வருகின்றமை பெரும் இழப்பே.

இங்கிலாந்து சார்பிலும் பென் டக்கெட் என்ற இளம் நட்சத்திரம் அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் தன் சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் ஒருநாள் சர்வதேச தொடரை இழந்து இருந்தாலும் அண்மைக்காலமாக இளம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி அடைந்து வரும் வளர்ச்சி, (அதுவும் தன்  சொந்த மண்ணில் ஆடுவதால்) இங்கிலாந்துக்கு மிகப் பெரிய ஒரு போராட்டத்தை வழங்கும். அல்லது ஒருபடி மேல் சென்று இங்கிலாந்திற்கு அதிர்ச்சியை கொடுத்து வெற்றி பெற்று வரலாறு படைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

fb_img_1477232689975

இந்நிலையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இறுதி நாளான நாளை பங்களாதேஷ் வெற்றி பெற்று வரலாறு படைக்க இரு விக்கெட் கைவசமுள்ள நிலையில் 33 ஓட்டங்கள் தேவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் இத்தொடர் விறு விறுப்பான நல்ல தொடராக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

fb_img_1477232640403 fb_img_1477232668641 fb_img_1477232689975 fb_img_1477232701173 fb_img_1477232709291

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/banveng-பங்களாதேஷ்-மற்றும்-இங்/

Link to comment
Share on other sites



பங்களாதேஷை வென்றது இங்கிலாந்து
 

article_1477303676-TamileedeLEAD_2410201பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், மிகவும் இறுக்கமான போட்டியில், சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், பங்களாதேஷ் அணி 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சிட்டகொங்கில் இடம்பெற்ற இப்போட்டியில், 5ஆவது நாளான இன்று, 2 விக்கெட்டுகள் கைவசமிருக்க, 33 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, மேலதிகமாக 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, இறுதி 2 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. அவ்வணிக்காகத் தனித்துப் போராடிய அறிமுக வீரர் சபீர் ரஹ்மான், ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களுடன், மைதானத்தில் கவலையுடன் நின்ற காட்சி, அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இங்கிலாந்து அணிக்காக சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியதோடல்லாமல், இன்று வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ், இப்போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்...

இங்கிலாந்து 293/10 (துடுப்பாட்டம்: மொய்ன் அலி 68, ஜொனி பெயர்ஸ்டோ 52, ஜோ றூட் 40, கிறிஸ் வோக்ஸ் 36. பந்துவீச்சு: மெஹெடி ஹஸன் மிராஸ் 6, ஷகிப் அல் ஹஸன் 2, தைஜுல் இஸ்லாம் 2 விக்.)

பங்களாதேஷ் 248/10 (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 78, முஷ்பிக்கூர் ரஹீம் 48, மகமதுல்லா 38, ஷகிப் அல் ஹஸன் 31. பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 4, மொய்ன் அலி 3, அடில் றஷீட் 2 விக்.)

இங்கிலாந்து 240/10 (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 85, ஜொனி பெயர்ஸ்டோ 47. பந்துவீச்சு: ஷகிப் அல் ஹஸன் 5, தைஜுல் இஸ்லாம் 2 விக்.)

பங்களாதேஷ் 263/10 (துடுப்பாட்டம்: சபீர் ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 64, இம்ருல் கைஸ் 43, முஷ்பிக்கூர் ரஹீம் 39. பந்துவீச்சு: கரித் பற்றி 3, பென் ஸ்டோக்ஸ் 2, மொய்ன் அலி 2, ஸ்டுவேர்ட் ப்ரோட் 2 விக்.

http://www.tamilmirror.lk/184617/பங-கள-த-ஷ-வ-ன-றத-இங-க-ல-ந-த-

Link to comment
Share on other sites

வரலாற்று வெற்றிக்கு அருகில் வந்து தோற்ற வங்கதேசம்

 

 
64 ரன்களில் ஒரு முனையில் தேங்கிய சபீர் ரஹ்மான் சோகம். ஆறுதல் கூறும் ஸ்டூவர்ட் பிராட். | படம்: ஏ.பி.
64 ரன்களில் ஒரு முனையில் தேங்கிய சபீர் ரஹ்மான் சோகம். ஆறுதல் கூறும் ஸ்டூவர்ட் பிராட். | படம்: ஏ.பி.

சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 22 ரன்கள் வித்தியாசத்தில் நெருக்கமான தோல்வி தழுவி ஏமாற்றமடைந்துள்ளது வங்கதேசம்.

வெற்றிக்குத் தேவையான 286 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம் இம்ருல் கயேஸ் (43), சபீர் ரஹ்மான் (64), முஷ்பிகுர் (39) ஆகியோர் பங்களிப்பின் மூலம் போராடி 4-ம் நாள் ஆட்ட முடிவில் நேற்று 258/8 என்று இருந்தது. சபீர் ரஹ்மான் 59 ரன்களுடனும் தைஜுல் இஸ்லாம் 11 ரன்களுடனும் நேற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆனால் இன்று சபீர் 64 ரன்களில் நிற்க, எதிர்முனையில் தைஜுல் இஸ்லாம் மற்றும் ஷபியுல் இஸ்லாம் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் எல்.பி.முறையில் கைப்பற்றி கனவைத் தகர்த்தார்.

263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இன்று இழந்து சபீர் ரஹ்மானின் கடும் அதிருப்திக்கு மத்தியில் வரலாற்று வெற்றி வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்து கடைசி வரை தனது உறுதியை விட்டுக்கொடுக்காமல் ஆடியது.

94 டெஸ்ட் போட்டிகளில் தங்களது 8-வது டெஸ்ட் வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 9 டெஸ்ட்களில் முதல் வெற்றி என்ற கனவுகளை தன்னகத்தே கொண்டு ஆடிய வங்கதேசம் உண்மையில் அபாரமாக இங்கிலாந்தை தோல்வி அச்சுறுத்தலுக்குள்ளாக்கியது.

வெற்றி பெற 33 ரன்கள் என்று தொடங்கிய வங்கதேச வீரர்களில் சபீர் முதலில் கவர் திசையில் 2 ரன்களை எடுக்க, தைஜுல் இஸ்லாம் ஸ்டோக்ஸின் ஷார்டிபிட்ச் பந்தை கீப்பர் தலைக்கு மேல் பவுண்டரி அடித்தார். புதிய பந்து எடுக்கலாம் என்ற நிலையில் அலிஸ்ட குக் பழைய பந்திலேயே தொடர்ந்தார், ஏனெனில் ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்சில் பழைய பந்தில் அபாரமாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்.

இந்தப் போட்டியில் மொத்தம் 26 முறை டி.ஆர்.எஸ். முறையினால் தீர்ப்பு வழங்கவோ அல்லது வழங்கிய தீர்ப்பை மாற்றி அமைக்கவோ முடிந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

81-வது ஓவரை வீசிய பிராடின் கடைசி பந்தில் தைஜுல் சிங்கிள் எடுத்தார். இதுவே முடிவுக்கு வழி வகுத்தது, 82-வது ஓவரில் ஸ்டோக்ஸ் சம்பிரதாயத்தை முடித்து வைத்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ஸ்டோக்ஸ் கைப்பற்ற கையாலாகாத்தனத்துடனும், வேதனையுடனும் சபீர் 64 ரன்களில் ஒரு முனையில் நின்றார் வியர்த்தமாக. அந்த சிங்கிளை எடுக்காமல் இருந்திருக்கலாம். ஒரு சிறிய முடிவு ஆட்டத்தின் விதியையே மாற்றுவது என்பதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு சிறப்பு வாய்ந்த குணாம்சம்.

இன்னும் ஒரு போட்டி இருக்கும் நிலையில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணியில் பாட்டீ 3 விக்கெட்டுகளையும் மொயின் அலி, பிராட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். வோக்ஸ், ரஷீத் ஆகியோர் முறையே ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/வரலாற்று-வெற்றிக்கு-அருகில்-வந்து-தோற்ற-வங்கதேசம்/article9261865.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.