Jump to content

சுவிஸர்லாந்தில் தமிழர்களை சந்தித்த தலைலாமா


Recommended Posts

5827_1476359102_PhototasticCollage-2016-10-13-13-39-51.jpg

திபேத்திய ஆன்மீகத் தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும் திபேத்திய இனத் தலைவருமான 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன் அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று நேற்று சுவிஸர்லாந்திற்கு வருகைதந்துள்ளார்.

அவருக்கான அரச வரவேற்பு பல்சமய இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 07.00 மணி முதல் புலம்பெயர்ந்து வாழும் பலநூறு திபேத்தியர்கள் அவரின் வருகைக்காக பல்சமய இல்லத்தின் முன்றலில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

பல இளவயதினரும், சிறியோர்களும் தமது திபேத் பாரம்பரிய உடையுடன் வருகைதந்திருந்தனர். பல்பண்பாட்டு நிகழ்வுகளையும் முன்றலில் ஆற்றினர். 12.30 மணிக்கு தலைலாமா வருகைதந்தார்.

சுவிஸ் அரசின் சிறப்புக் காவற்துறையினரும், தனியார் பாதுகாப்பு நிறுவனமும் பாதுகாப்பு அளிக்க உள்நுழைந்தார். சீனப்பேரரசின் அறிவிக்கப்படாத முதல் எதிராய் தலைலாமா விளங்குகிறார். ஆகவே இவருக்கான சிறப்புப் பாதுகாப்பு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வழங்கப்படுகிறது
உள்நுழைந்த தலைலாமா அவர்களை எட்டு சமயத் தலைவர்களும், பேர்ன் மாநில அரச தலைவரும், நடுவன் அரசின் பிரதிநிதிகளும் வரவேற்றனர்.

சைவநெறிக்கூடம் - அருள் ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட் சுனையர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

தலைலாமா அவர்களுக்கான விருந்தளிப்பினை சைவ நெறிக்கூடம் பொறுப்பேற்றிருந்தது. ஈழத் தமிழ்ச் சைவ உணவு சைவ நெறிக்கூடத்தால் சமைக்கபட்டடிருந்தது இவ்விருந்தோம்பலின் சிறப்பாகவும், யாவரையும் கவர்ந்த விடயமாகவும் அமைந்தது.
உணவினை வழங்கிய யாவரும் ஈழத் தமிழ்ப் பெண்களா இருந்தனர். இவர்கள் தமிழ்ப் பாரம்பரிய உடையணிந்து உணவு வழங்கினர். சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 150 விருந்தினர்கள் இவ்விருந்தோம்பலில் பங்கெடுத்திருந்தனர்.

குறிப்பாக சுவிஸ் அரசியல் பிரமுகர்களும் சுவிஸ் அதிகாரிகளும், பல்சமயத் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்த விருந்தாளிகளில் அடங்குவர்.

விருந்தோம்பலிற்கு அடுத்து பேராளர் உரையரங்கு நடைபெற்றது. அதற்கு மேலும் 150 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

விருந்தோம்பலை அடுத்து வரவேற்பு உரையினை பேர்ன் அரசதலைவர் சப்பேர் அவர்கள் ஆற்றினார்கள். பல்சமய இல்லத்தின் அறக்கட்டளைத் தலைவியாக விளங்கும் கேர்டா கௌவுக் அவர்கள் பல்சமயத்தின் பெயரில் வரவேற்புரை ஆற்றினார்.அடுத்த நிகழ்வாக தலைலாமா அவர்கள் அருள் ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்குள் நுழைந்தார். செந்தமிழ்த் திருமறை வழிபாடு கருவறையில் நடைபெறும் திருக்கோவில் இதுவாகும்.

கோவிலுக்குள் வருகையளித்த தலைலாமா அவர்களை செந்தமிழருட்சுனையர்கள் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், திருநிறை. திருச்செல்வம் முரளிதரன், திருநிறை. சிவலிங்கம் சுரேஸ்குமார், திருநிறை. குழந்தை விக்னேஸ்வரன், திருநிறை. இராஜேந்திரன் கிரிதரன், திருநிறை. நடராஜா தர்மசீலன், திருநிறை. காராளசிங்கம் விஜயசுரேஸ், திருநிறை. நாகராச ஜெயக்குமார், திருநிறை. தர்மசீலன் கலாமதி, திருநிறை. வசந்தமால ஜெயக்குமார், திருநிறை. தர்னன் செல்லையா மற்றும் சைவநெறிக்கூடுத்தின் மதியுரைஞர்கள் திருநிறை. சிவயோகநாதன் ஐயா (நடராஜா யோகேந்திரன்), திருநிறை. வினாசித்தம்பி தில்லையம்பலம் மற்றும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அடியார்கள், குழந்தைகள் முன்வந்து வரவேற்றனர்.

ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த திருநிறை. மதுசூதனன் குழுவினர் மங்கள இசைவழங்க, தலைலாமா அவர்கள் தமிழ்ச் செல்வங்கள் சூழ்ந்து பூங்கொத்து அளிக்க, திருக்கோவிலை வலம் வந்து ஞானலிங்கேச்சுரத்தில் ஈழத்தின் வடிவத்தி அமையப்பெற்றிருக்கும் ஈகைலிங்கத்திற்கு சிறப்பு வழிபாட்டினை செந்தமிழ் முறையில் ஆற்றினார்.

சூழந்திருந்த குழந்தைகளும், அருட்சுனையர்களும் செந்தமிழ்த் திருமறை ஓதினர். இதற்கடுத்து கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஞானலிங்கேச்சுரருக்கு சிறப்பு வழிபாட்டினை செய்தார்.

மலர்களை அர்ச்சித்தும், நிறைவில் தீபவழிபாடு ஆற்றியும் தலைலாமா எம்பெருமானை வலம்வந்தார். வழிபாட்டின் நிறைவில் சைவநெறிக்கூடத்தின் சார்பில் தலைலாமா அவர்களுக்கும், பேர்ன்மாநில அரசதலைவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு பூமாலை அணிவித்தும், சைவநெறிக்கூடத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட பொன்னாடைபோர்த்தியும் மதிப்பளித்தனர்.

அதி உச்ச பாதுகாப்பினை சுவிஸர்லாந்து காவல்துறை வழங்கியதுடன் திபேத் நாட்டிலிருந்து சுவிஸர்லாந்தில் அரசில் தஞ்சம் கோரியுள்ள பல நுாற்றுக்கணக்கான மக்கள் பல்சமய இல்லத்திற்கு முன்னால் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மிக குறைவானவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

5827_1476359102_t.jpg

5827_1476359102_t1.jpg

5827_1476359102_t3.jpg

 

5827_1476359102_t4.jpg

 

5827_1476359102_t5.jpg

http://battinaatham.com/description.php?art=5827

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஆதவன் .....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.