Jump to content

இனி ஃபேஸ்புக் தான் உங்கள் அலுவலகம் #FacebookWorkPlace


Recommended Posts

இனி ஃபேஸ்புக் தான் உங்கள் அலுவலகம் #FacebookWorkPlace

fb5.JPG

அலுவலகத்தில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டு வேலை செய்பவர்களை வேலை நேரத்தில் எப்ப பாரு ஃபேஸ்புக் என்று கலாய்ப்பவது வழக்கம். அவர்கள் இனி கெத்தாக பெருமை கொள்ள வந்துவிட்டது ஃபேஸ்புக் வொர்க்ப்ளேஸ். இனி அலுவலக வேலைகளை ஃபேஸ்புக்கிலேயே செய்து கொள்ளலாம் என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக் ஒரு சமூக வலைதளம், வர்த்தக பக்கம் என்ற விஷயங்களை தாண்டி அலுவலகம் என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஒரே பக்கத்தின் கீழ் இணைத்தும், அலுவலக வேலைகளை 100% வெளிப்படைத் தன்மையுடனும் செய்து முடிக்க இந்த பக்கம் எளிதாக இருக்கும். 

உதாரணமாக ஒரு அலுவலகத்தில் விற்பனை பிரிவு இருக்கிறது என்றால் அதன் பணியாளர்கள் அனைவரும் தங்களுக்குள் வேலைகளை பகிர்ந்து கொண்டு வேலைகளை முடிக்க முடியும்,  மற்ற பிரிவுகளில் உள்ள வர்களுடன் தனியாகவும், மற்ற குழுக்களுடனும் கருத்துக்களை புகைப்படங்களை, ஃபைல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

fb.jpg

கிட்டத்தட்ட மொத்த அலுவலகமும் ஃபேஸ்புக் பக்கத்துக்குள் சுருங்கிவிடும் என்பது தான் மார்க்கின் புதிய திட்டம்.  விர்ச்சுவல் அலுவலகங்கள் கான்செஃப்ட்டை நேரடி அலுவலகங்களுக்குள்ளும் கொண்டு வந்துள்ளது ஃபேஸ்புக். இதன் மூலம் பணியாளர்களின் வேலைத்திறன் கூடுவதுடன். அவர்கள் நிபுணத்துவம் பெறவும் இது உதவுகிறது.

வெளிப்படைத்தன்மையுடன் இயங்கும் நிறுவனங்களுக்கு இந்த அமைப்பு பெரிதும் உதவிகரமாக இருக்கும். துறைகளுக்கு இடையேயான தொடர்புக்கும், உயர் அதிகாரிகள் குறிபிட்ட நபருக்கு டாஸ்க் வழங்கவும் வொர்க் ப்ளேஸ் எளிமையான அமைப்பாக இருக்கும்.  இதில் விளம்பரங்கள் இருக்காது. மேலும் பர்சனல் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும். இதன் மூலம் உங்கள் அலுவலக பணியாளர்களோடு மட்டும் தொடர்பில் இருக்க முடியும். 

fb4.JPG

இதனை முதற்கட்டமாக 3 மாத இலவச சேவையாக ஃபேஸ்புக் வழங்கியுள்ளது. இதில் குறிபிட்ட அளவு உறுப்பினர்கள், குறிபிட்ட அளவு நினைவக வசதி என வழங்குகிறது. இந்த சேவை பிடித்து போனால் இதனை பிரீமியம் கணக்காக‌ இணைத்து கொள்ள முடியும். அதற்கு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது ஃபேஸ்புக். 

 

 

 

 

ஆயிரம் பணியாளர்கள் வரை மாதத்திற்கு ஒரு பணியாளருக்கு சுமார் 200 ரூபாயும் ($3), 1000 முதல் 10 ஆயிரம் பணியாளர்களுக்கு  ஒரு பணியாளருக்கு சுமார் 140 ரூபாயும் ($2), 10 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனத்தில்  ஒரு பணியாளருக்கு சுமார் 70 ரூபாயும் ($1), கட்டணமாக வசூலிக்கிறது. இவை அனைத்தும் ஆக்டிவ் யூசர் எனப்படும் பயன்படுத்தும் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும், உதாரணமாக ஒரு பணியாளர் ஒரு மாதம் விடுப்பில் சென்றுள்ளார். அவரது கணக்கில் எந்த பதிவும் இல்லை என்றால் அவருக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் ஃபேஸ்புக்கில் உள்ள அனைத்து சேவைகளும் இதனுள்ளம் இருக்கும். இதனை ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்கள் மூலம் அலுவலகத்துக்கு வெளியிலிருந்தும் அலுவலகத்தோடு தொடர்பில் இருக்க முடியும்.

fb1.JPG

இத்தனை நாட்கள் பர்சனல் பக்கமாக இருந்த ஃபேஸ்புக் இப்போது ப்ரோஃபஷனல் பக்கமாகவும் இருக்கும். இதுவரை இந்த வொர்க் ப்ளேஸ் பக்கத்தில் 1000 நிறுவனங்கள் இணைந்துள்ளதாம். யாருக்கு தெரியும் நாளைக்கு இங்கேயே வேலைக்கு ஆட்கள் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஃபேஸ்புக் இந்த பக்கங்களை சிறப்பாக கையாளுவதாக இதனோடு தொடர்பில் இருக்கும் நிறுவனங்களின் ரிவியூக்கள் தெரிவிக்கின்றன. கமான் இனிமே 24*7 ஃபேஸ்புக்லயே இருங்க யாராவது கேட்டா வேலை பாக்குறத அங்க தான்னு கெத்தா சொல்லிக்கலாம்.

http://www.vikatan.com/news/information-technology/69333-facebook-launches-new-service-workplace-by-facebook.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.