Jump to content

கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை சாம்சங் தற்காலிக நிறுத்தம்?


Recommended Posts

கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை சாம்சங் தற்காலிக நிறுத்தம்?

 

 
Galaxy_3040433f_3040455f.jpg
 

பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை அடுத்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் வெளியிடாத ஒரு சப்ளையரை மேற்கோள் காட்டி, நுகர்வோர் பாதுகாப்புக்காக எதிர்பாராத இந்த தற்காலிக உற்பத்தி நடவடிக்கை நிறுத்தம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாம்சங் நோட் 7 ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதால் சாம்சங் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை இந்த தற்காலிக உற்பத்தி நிறுத்த செய்தி குறித்து அசோசியேட் பிரஸ் நிறுவனம் அணுகிய போது பதில் அளிக்கவில்லை.

http://tamil.thehindu.com/business/கேலக்ஸி-நோட்-7-உற்பத்தியை-சாம்சங்-தற்காலிக-நிறுத்தம்/article9206555.ece?homepage=true

Link to comment
Share on other sites

நெருப்புடா நோட் 7... தொடரும் சாம்சங் சோகம்!

samsung.jpg

நெருப்புடா...நெருங்குடா பார்ப்போம்....இந்த பாட்டு ஹிட் ஆன அளவுக்கு ஹிட் ஆனது சமீபத்தில் வெளியான‌ சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்.  சுமார் 2.5 மில்லியன் எஸ் 7 போன்களைத் தயாரித்த சாம்சங் நிறுவனம் அதில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மொபைல்போன்களை விற்பனை செய்தது. ஆனால் இந்த சாம்சங் நோட் 7 மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் இந்த வார வைரல்..

சாம்சங் கேலக்ஸி நோட் 7  சார்ஜில் இருக்கும் வேளையில் தீடீரென தீப்பற்றி எரிகிறது என்பது தான் குற்றச்சாட்டு...மீம்ஸ்கள் வரை சென்று ஆன்லைனில் பரவியது சாம்சங் பிரச்னை.

 சாம்சங் நோட் 7 தீப்பற்றுவது ஏன்?

பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் லித்தியத்தால் ஆனவை. அவற்றுள் இரண்டு எலக்ட்ரோடுகள் எதிரெதிர் திசையில் வைக்கப்பட்டிருக்கும். சார்ஜ் செய்யும்போது லித்தியம் அணுக்கள்  நகரும். ஆனால் ஒருபோதும் இந்த இரண்டு எலக்ட்ரோடுகளும் ஒன்றை ஒன்று தொட்டுவிடக்கூடாது. அப்படி நடந்துவிடாமல் தடுக்க அதில் செப்பரேட்டர் வைக்கப்படும். நோட் 7-ல் இந்த செப்பரேட்டருக்கான இடைவெளி  மிகவும் சிறியதாக அமைந்ததே அது வெடிப்பதற்கான காரணம். 

சாம்சங் கூறும் காரணம் என்ன?

வாடிக்கையாளர்கள் மொபைலை நீண்ட நேரம் சார்ஜ் செய்வதும், பரிந்துரைக்கப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்தாததுமே நோட் 7 வெடித்துச் சிதறக் காரணம் என்கிறது சாம்சங் நிறுவனம். 

rtsmk3e_559_090216062229.jpg

சாம்சங்குக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்ன?

உலகமெங்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 7  வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அதற்கான தொகை திருப்பித் தரப்படும் அல்லது அந்த மொபைலைக் கொடுத்து வேறு சாம்சங் மொபைலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை விட்டிருந்தது சாம்சங் நிறுவனம். இதனால் இந்த நிறுவனத்துக்கு 18 பில்லியர் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், இதுபோன்ற நஷ்டத்தை ஒரு உலகளாவிய மொபைல் நிறுவனம் ஈடுகட்டுவது மிகமிகக் கடினம் என்றும் வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரச்னையால் ஆப்பிளுக்கு லாபமா? 

சாம்சங், ஆப்பிள் என இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேதான் மொபைல் வர்த்தகத்தில் பலத்த போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இந்த இழப்பு, ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரிதும் சாதகமாக அமைந்துள்ளது.  

பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்டையும் தன் வாடிக்கையாளர்களையும் எப்போதும் தன் கைவசம் வைத்திருக்கும். இப்போது, உலகின் பெருவாரியான வாடிக்கையாளர்களை கைப்பற்றுவதற்கும் விற்பனை விகிதத்தில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கும் ஆப்பிள், சாம்சங்குக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னையை தனக்கான வாய்ப்பாகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளது. ஆப்பிள் சமீபகாலமாக விலைகளை சற்று தளர்த்தி அனைவருக்கும் உள்ள ஆப்பிள் மோகத்தை சரியாக பயன்படுத்தி வருகிறது. 

_91005160_samsung.note.7.g.jpg

சாம்சங் மொபைல்கள் வாங்கிய சிறிது நாட்களில் சரிவர‌ செயல்படாமல் ஹேங் ஆகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உண்டு. அவை ஆப்பிள் போன்களை காப்பி அடிக்கின்றன என்ற வழக்கும் பிரபலம். இந்நிலையில்  இதுபோன்ற சூழலை சாம்சங் எப்படி சமாளிக்கும்? பெரிய இழப்பை ஈடுகட்ட சாம்சங்கால் முடியுமா? விட்ட இடத்தை மீண்டும் சாம்சங் பிடிக்குமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் சாம்சங் உள்ளது. 

http://www.vikatan.com/news/information-technology/69490-galaxy-note-7-explosions-worries-continues-for-samsung.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

samsung.jpg

காதாவடியிலை ரெலிபோனை வைச்சு கதைக்கவே பயமாய்க்கிடக்கு..:grin:

Link to comment
Share on other sites

Galaxy Note 7 பிரச்சினைகள்: திணறுகிறது சம்சுங்
 
 

article_1476274902-LEAD---Samsung-Struggசம்சுங்கின் Galaxy Note 7 திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்குள்ளேயே, Galaxy Note 7 தயாரிப்புகளை நிரந்தரமாக நிறுத்துவதாக, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (11), குறுகிய அறிக்கையொன்றில் சம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தீப்பற்றாத பெட்டிகளில், Galaxy Note 7கள், சம்சுங் நிறுவனத்துக்குச் செல்லவுள்ள நிலையில், என்ன காரணத்தால், Galaxy Note 7-இல் பிரச்சினை தோன்றியது என்பதற்கு இன்னும் விடைகாணப்படாமலேயே உள்ளது.

Galaxy Note 7கள் தீப்பற்றுகின்றன என்ற அறிக்கைகைகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் மாத ஆரம்பத்தில், 2.5 மில்லியன் கணக்கான Galaxy Note 7களை மீளப்பெறுவதாக, சம்சுங் அறிவித்திருந்தது. அந்நேரத்தில், தாங்கள் விசாரணையொன்றை மேற்கொண்டதாகவும், மின்கலப் பிரச்சினையொன்று இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக சம்சுங் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, 882 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான Galaxy Note 7ஐ முழுமையாக மீளப்பெறுவதாக செவ்வாய்க்கிழமை, சம்சுங் அறிவித்துள்ள நிலையில், தொழில்நுட்ப வரலாற்றில், நிகழ்ந்த, மிகவும் பெறுமதி வாய்ந்த பாதுகாப்புக் குறைபாடாக மாறியுள்ளது.

பதிலீடு செய்யப்பட்ட Galaxy Note 7-களும் தீப்பற்றுவதாக அறிக்கைகள் கிடைக்கப் பெற்ற நிலையில், ஒழுங்குபடுத்துநர்கள், சேவை வழங்குநர்கள், விமான சேவை நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து புதிய எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையிலேயே, Galaxy Note 7 தயாரிப்பை நிறுத்தும் முடிவை சம்சுங் எடுத்துள்ளது.

தமது நுகர்வோரின் பாதுகாப்பே முதன்மையானது மற்றும் முக்கியமானது என்பதை கருத்திற் கொண்டு, Galaxy Note 7 தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்தத் தீர்மானித்ததாக, சியோல் பங்கு பரிவர்த்தனையில், தென்கொரிய நிறுவனமான சம்சுங் தெரிவித்திருந்தது. எவ்வாறெனினும் என்ன பிரச்சினை என்பது பற்றி ஒரு சொல்லும் தெரிவித்திருக்கவில்லை.

முன்னதாக, பிரச்சினை தொடர்பில் விசாரணை செய்வதற்கு, ஒழுங்குபடுத்துநர்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், Galaxy Note 7-இன் விற்பனையை நிறுத்துமாறும் அசல் Galaxy Note 7 திறன்பேசிகளுக்காக பிரதியீடுகளை வழங்குவதை நிறுத்துமாறும், பூகோளத்திலுள்ள அனைத்து சேவை வழங்குநர்களையும் கேட்டிருந்தது. தற்போது, Galaxy Note 7-க்கு பதிலாக வேறு சாதனங்களை அல்லது பணத்தை மீள, சம்சுங் வழங்குகின்றது.

இந்த நிலையில், Galaxy Note 7 விற்பனையை நிரந்தரமாக நிறுத்துவதால், 17 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்ததுடன், சம்சுங்கின் ஏனைய அலைபேசி தயாரிப்புகள் தொடர்பில், நுகர்வோர் மற்றும் சேவை வழங்குநர்களின் மனங்களில் குழப்பமான நிலையை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே, நூற்றுக்கணக்கான பணியாளர்களை, சம்சுங் பணிக்கமர்த்தியபோதும், பல வாடிக்கையாளர்கள் உணர்ந்தது போன்ற, அதீத வெப்பமுடைய, தீப்பற்றுகின்றவாறான Galaxy Note 7 சோதனையை நிகழ்த்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

முன்னர் மீளப்பெறப்பட்ட Galaxy Note 7களில், சம்சுங்கின் உபநிறுவனமான எஸ்.டி.ஐ-ஆல் தயாரிக்கப்பட்ட மின்கலங்களே கவனம் பெற்ற நிலையில், அவை பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்ற]துடன், USB-C கேபிள்களோ அல்லது விரைவாக மின்னேற்றுதலோ பிரச்சினையாகக் காணப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகின்ற நிலையிலும் என்ன பிரச்சினை என்று இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.

சம்சுங்கின் அறிவிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகியமையைத் தொடர்ந்து, சம்சுங் நிறுவனத்தின் சந்தை மதிப்பை, ஏறத்தாழ 20 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களால், முதலீட்டாளர்கள் குறைத்த நிலையில், அன்று, சம்சுங்கின் பங்குகள், ஒரேநாளில், எட்டு சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தன. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒரே நாளில் இவ்வளவு வீழ்ச்சியடைவது, இதுவே ஆகும்.

http://www.tamilmirror.lk/183806/Galaxy-Note-ப-ரச-ச-ன-கள-த-ணற-க-றத-சம-ச-ங-

4 hours ago, குமாரசாமி said:

samsung.jpg

காதாவடியிலை ரெலிபோனை வைச்சு கதைக்கவே பயமாய்க்கிடக்கு..:grin:

earphone  போட்டு கதையுங்கோ..:grin:

http://d57avc95tvxyg.cloudfront.net/images/detailed/1086/earphone-for-lenovo-vibe-p1m-handsfree-in-ear-headphone-3-5mm-white-maxbhi-7-7-1.jpg?t=1453896488

Link to comment
Share on other sites

Galaxy Note 7 முடிந்தது: பிரதியீடு என்ன?
 
 

article_1476275099-LGv20.jpgகடந்த ஓகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சம்சுங்கின் Galaxy Note 7 திறன்பேசிகள், தீப்பிடித்த அறிக்கைகள் வெளியாகி, கடந்த செப்டெம்பர் மாதம், Galaxy Note 7 மீளப் பெறப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக பிரதியீடுகள் வழங்கப்பட்டன.

தற்போது பிரதியீடுகளும் தீப்பிடித்த அறிக்கைகளைத் தொடர்ந்து, Galaxy Note 7, பூகோள விற்பனைகளை நிறுத்திய சம்சுங், பின்னர், அதன் தயாரிப்புகளையும் முற்றாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், மில்லியன் கணக்கான Galaxy Note 7 பாவனையாளர்கள், தமது திறன்பேசிகளை உடனடியாக, மீளக் கையளிக்கவேண்டியுள்ள நிலையில், அவர்கள், Galaxy Note 7ஐ வாங்கவிருந்தவர்களுக்கு, Galaxy Note 7 திறன்பேசிகளுக்கான என்ன பிரதியீடுகள் இருக்கின்றன என்பதை நோக்குவோம்.

சம்சுங் வணிக நாமத்தையே நீங்கள் விரும்புவராக இருந்தால், பெரும்பலானவர்களுக்கு பொருத்தமான தெரிவாக Galaxy S7 edge இருக்கலாம். இதில், Galaxy Note 7-இல் காணப்படுகின்ற பெரும்பான்மையான அனுபவங்களை வழங்குவதோடு, அதே மென்பொருளினையும் வழங்குகின்றது. இதன் விலை, 770 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

அடுத்து, உங்களது பிரதியீட்டு திறன்பேசியை வாங்குவதற்கு, நீங்கள் சிறிது காலம் பொறுமையாக இருப்பீர்களானால், எதிர்வரும் 28ஆம் திகதி, சந்தைக்கு வரவுள்ள LG V20 திறன்பேசியை நீங்கள் வாங்கலாம். Galaxy Note 7ஐப் போன்றே 5.7 அங்குல திரையைக் கொண்டிருப்பதுடன், Snapdragon 820 processorஐ கொண்டமைந்துள்ளதுடன், Galaxy Note 7 இல் இல்லாத, அன்ட்ரொயிட்டின் 7.0 பதிப்பான Nougatஐயும் வழங்குகின்றது. இதன் விலை, 830 ஐக்கிய அமெரிக்க டொலர்களாலும்.

இதேவேளை, அன்ட்ரொயிட்டில் சிறந்த வசதிகளுக்காகவே சம்சுங்கை பலர் தெரிவு செய்கையில், Galaxy Note 7-இன் முடிவு, பெரியளவில், அன்ட்ரொயிட் உருவாக்குநரான கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள Pixel XL திறன்பேசிகளுக்கே பாரிய சந்தையை வழங்கியுள்ளது எனக் கருதப்படுகிறது. Galaxy Note 7ஐ போன்ற RAMஐக் கொண்டிருக்கின்ற Pixel XL, அன்ட்ரொயிட்ட Nougat உடன் வரவுள்ளதோடு, Snapdragon 821 processorஐ கொண்டமைகின்றதுடன், தற்போதுள்ள, சிறந்த திறன்பேசிக் கமெராவையும் மேலதிகமாக வழங்குகின்றது. எதிர்வரும் 20ஆம் திகதி சந்தைக்கு வரவுள்ள Pixel XLஇன் விலை, 770 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

இறுதியாக, நீங்கள், Galaxy Note 7-இன் வசதிகளுக்காகவே, அதை விரும்பியிருந்தால், அன்ட்ரொயிட்டிலிருந்து iOSக்கு மாற நீங்கள் தயாராக இருந்தால், உங்களுக்கான மிகச்சிறந்த தெரிவாக, அப்பிளின் ஐபோன் 7 Plus இருக்கும். சந்தையில் இருக்கும் மிகப்பெரிய திறன்பேசியான இதன் விலை 770 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

http://www.tamilmirror.lk/183809/Galaxy-Note-ம-ட-ந-தத-ப-ரத-ய-ட-என-ன-

Link to comment
Share on other sites

கேலக்ஸி நோட்7 திறன்பேசியை திரும்பப் பெற்றுக்கொள்ள சாம்சங்கை நிர்பந்தித்த காரணங்கள்

 

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட்7 திறன்பேசியை திரும்பப் பெற்றுக்கொள்ள இரண்டாவது முறையாக செய்த அறிவிப்பு அந்த நிறுவனத்திற்கும் பரந்துபட்ட அளவில் மொபைல் போன் துறைக்கும் முன்னுதாரணமற்ற பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்)

இதற்கு முன்பு, பெரிய அளவில் பேட்டரியில் உள்ள பிரச்சனைகளுக்காக மொபைல் போன்கள் திரும்பப் பெறப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றன.

2007ல் நோக்கியா நிறுவனம்,பேட்டரிகள் அதிகமாக சூடாகின்றன என்ற அச்சத்தால் 46 மில்லியன் பேட்டரிகளை திரும்பப் பெற்றது.

ஆனால் அந்த சம்பவங்களில் எல்லாம், பேட்டரிகள் மாற்றப்படக்கூடிய வகையில் இருந்ததால், நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு பிரபலமான போன், சந்தையில் இருந்து அகற்றப்படவேண்டிய நிலை ஏற்படவில்லை.

''உங்கள் செல்பேசியை பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அதில் உள்ள உங்களது தகவல்களை வேறொரு கருவியில் சேமித்து வைத்துவிட்டு, போனை நிறுத்தி வையுங்கள், '' என்று கேலக்ஸி நோட் 7 பயன்பாட்டாளர்களிடம், சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. பேட்டரியில் தீ பிடிப்பதை உறுதி செய்த அடுத்த நாள் சாம்சங் இவ்வாறு தெரிவித்தது. அது மேலும், நோட் 7 தயாரிப்பு பணிகளை நிறுத்தியது.

ஒரு இழப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்கள் தங்களது பணத்தை முழுவதுமாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது சாம்சங்கின் ''பேப்லட்'' சாதனத்தை, பழைய சிறிய திரை கொண்ட கேலக்ஸி எஸ் 7 அல்லது எஸ் 7 எட்ஜ் போனும் பாதியளவு பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அந்தத் திட்டம்.

கேலக்ஸி நோட்7 திறன்பேசி விளமபரம் (கோப்புப்படம்)

 

அலைபேசிகள் வெடிக்கக் காரணம் என்ன ?

கடந்த மாதம் சாம்சங் , இந்த போன்களைத் திரும்பப் பெறத் தொடங்கிய போது, "பேட்டரி செல் பிரச்சினை" காரணம் என்று சுட்டிக்காட்டியது.

அலைபேசித் துறை கட்டுப்பாட்டாளர்களுக்கு, சாம்சங் நிறுவனம் அனுப்பிய ஒரு அறிக்கை அந்தக் குறைபாடு பற்றி மேலும் விவரமளித்தது. அதில், உற்பத்தியின்போது நேர்ந்த தவறால், பேட்டரி சற்று பெரியதாகத் தயாரிக்கப்பட்டது என்றும், இதனால், பேட்டரியை போனில் பொருத்துவதில், சிக்கல் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டிருந்ததாக கசிந்த செய்தியை வெளியிட்டது ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம்.

இந்தப் பிரச்சனைக்கு காரணம், போனின் பாகங்களைத் தயாரிக்கும் 'உற்பத்தியாளர் சாம்சங் எஸ்.டிஐ (Samsung SDI) என்று கூறப்பட்டது. இதனால், ஏ.டி.எல். ( ATL) என்ற மற்றொரு நிறுவனம் தயாரித்துள்ள பேட்டரிகளை பொருத்தி பிரச்சனையைத் தீர்த்தனர் என்று கூறப்பட்டது..

சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்) 

தற்போது இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட போன்கள் பலவும் அதிகமாக சூடாகும் நிலையில், உண்மையான பிரச்சனை, தவறாகக் கண்டறியப்பட்டுள்ளதா என்பது தெளிவாவில்லை.

சாம்சங் பொறியாளர்கள் போன்களில் பிரச்சினையை உருவாக்கி, வெடிக்க வைக்க முயன்ற போது, அவை வெடிக்கவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

''கேலக்ஸி நோட் 7 குறித்து சமீபகாலத்தில் எழுந்துள்ள பிரச்சனைகளை விசாரிக்க, இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒழுங்கு நிறுவனங்களோடு வேலைசெய்து வருகிறோம், '' என்ற இந்தக் கருத்தை மட்டும் தான் தற்போது சாம்சங் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறினார்.

எத்தனை நோட் 7 திறன்பேசிகள் தயாரிக்கப்பட்டன ? எத்தனை வெடித்தன ?

சாம்சங் செவ்வாய்க்கிழமை அன்று இந்த திறன்பேசி தயாரிப்பை நிறுத்துவதாக அறிவிக்குமுன்வரை , எத்தனை கேலக்ஸி நோட் 7 திறன்பேசிகளை அது தயாரித்துள்ளது என்று செய்தியை இதுவரை வெளியிடவில்லை.

செப்டம்பர் 2 ம் தேதி, இந்த தென் கொரிய நிறுவனம் முதல் கட்டமாக 2.5 மில்லியன் சாதனங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.

செப்டம்பர் 27ம் தேதியன்று, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் விற்கப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 7 திறன்பேசிகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவைக்கு பதிலாக, புதிய சாதனங்கள் தரப்பட்டுள்ளன என்று அது தெரிவித்தது.

சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்)

 

இந்த இரு நாடுகளில் தான் அதிக அளவில் கேலக்ஸி நோட் 7 திறன்பேசிகள் விற்பனை செய்யப்பட்டன. வெறும் சுமார் 50,000 சாதனங்கள் தான் ஐரோப்பாவில் விற்கப்பட்டன.

தென் கொரியாவில் , கடந்த வாரம், சிறிது நாட்கள் மட்டும் புதிய வாடிக்கையாளர்களுக்கு நோட் 7 விற்கப்பட்டது.

இவை எல்லாவற்றிலும் சேர்த்து, சுமார், நான்கு மில்லியன் போன்கள் விற்கப்பட்டதாக தோராயமாகக் கணக்கிடமுடிகிறது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்திருந்தால், இந்த கால கட்டம் வரை , சாம்சங் சுமார் ஆறு மில்லியன் நோட் 7 திறன் பேசிகளைத் தயாரித்திருக்கும் என்று ஐ.எச்.எஸ்(IHS) கணித்திருந்தது. ஆனால் எத்தனை திறன்பேசிகள் அதிகமாக சூடாகின என்பது தெளிவாகவில்லை.

சாம்சங் முதல் முறையாக போன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்த நேரத்தில், தன்னிடம் ''35 புகார்கள்'' வந்திருந்ததாகக் கூறியது. மற்றும், போன்களுக்கு மாற்றாக அளிக்கப்பட்ட சாதனங்களும் பாதிப்படைந்த ஏழு சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகியது.

சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்) 

இப்போது விற்கப்பட்ட கைபேசிகளுக்கு என்ன ஆகும் ?

சாம்சங் இந்த கேலெக்ஸி நோட் 7 போன்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ''எல்லா நடவடிக்கைகளையும்'' எடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

தற்போதைக்கு, பதிவு செய்த பயன்பாட்டாளர்களுக்கு ஈமெயில் அனுப்புவது மற்றும் அறிவிப்புகளை அனுப்புவது ஆகியவை இந்த ``நடவடிக்கைகளில்` அடங்கும்.

முதலில் போன்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறியபோது, சில பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் ஆவதைத் தடுக்கும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் ஒன்றையும் சாம்சங் அளித்தது. பயனாளர்கள் தாங்கள் வாங்கிய போன்களை திரும்பத் தர மறுக்கும் பட்சத்தில் அந்த போன்களை முடக்குவது போன்ற மற்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என்ற யூகமும் நிலவியது.

இதில் இன்னொரு விஷயம் -- மலை போல திரும்பப் பெறப்பட்ட மொபைல்களை சாம்சங் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி.

இந்த போன்கள் முழுவதுமாக பிரிக்கப்பட்டு, அதில் உள்ள பொருட்கள் மற்ற புதிய கருவிகளில் பயன்படுத்தப்படுமா என்பது பற்றி பேச சாம்சங் நிறுவத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

ஆனால் ஒரு சுற்றுச்சூழல் குழு, இந்த விவகாரத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.

சாம்சங் நிறுவனம் (கோப்புப்படம்)

 

மொபைல் போன்களில் மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பான பொருட்கள் உள்ளன. இதற்காகத் தோண்டும் போது, அது சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில், வளரும் நாடுகளில், மோசமான சூழல்களில் வேலைகள் நடக்கும்,'' என ப்ரென்ஸ் ஆஃப் தெ எர்த் ( Friends of the Earth) என்ற அமைப்பின் கொள்கை இயக்குநர் மைக் சைல்ட்ஸ் கூறியுள்ளார்.

எல்லா போன்களும் 100 சதவீதம் அதனுடைய முழுமையான பயன்பாட்டிற்கு பிறகும் அல்லது குறைபாடுகள் காரணமாக நிறுவனத்திடம் திரும்பத் தரப்படும்போது, மறுசுழற்சி செய்யப்பட வேண்டும்.,'' என்றார் அவர்.

மொபைல் நிறுவனங்களின் தவறுகளுக்காக, இந்தச் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது,'' என்றார் அவர்.

மொபைல் போனுடன் , உதிரிக்கருவிகளை வாங்கிவர்களுக்கு இழப்பீடு உண்டா ?

பல வாடிக்கையாளர்கள், இந்த நோட் 7 போனுக்காக, கவர்கள், ப்ளாக்பெரி பாணியிலான தட்டச்சுப்பலகை, வைட் ஆங்கிள் லென்ஸ் இணைப்பு மற்றும் எழுதும் கருவி மற்றும் பவர் பேக் போன்றவற்றை வாங்கியுள்ளனர்.

சாம்சங் செய்தித் தொடர்பாளர், இந்த செலவினங்களை எவ்வாறு ஈடுசெய்வது என விற்பனையாளர்களோடு பேசி வருவதாக கூறியுள்ளார்.

சிலர் இந்த போனை வாங்க முன்பதிவு செய்தபோது, அதோடு பெறப்பட்ட இரண்டாம் தலைமுறை கியர் மெய்நிகர் உலக ஹெட்செட்(second-generation Gear VR virtual reality headset) கருவியை கொடுத்தால், அதிக பணம் கொடுக்கப்படுமா என்றும் கேட்கிறார்கள்..

இதை தனியாக வாங்க 100 பவுண்ட்கள் செலவாகும்.

அந்த ஹெட்செட் கருவியை ஒரு "பரிசு" பொருளாக எண்ண சாம்சங் கருதியது, ஆனால் கூடுதல் இழப்பீடு கொடுக்கும் சாத்தியக்கூறை அது நிராகரிக்கவில்லை என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    சாம்சங் கேலக்ஸி நோட்7 திறன்பேசி (கோப்புப்படம்)

அகற்றக்கூடிய பேட்டரிகளை சாம்சங் மீண்டும் அறிமுகப்படுத்துமா?

சாம்சங் கேலக்சி தயாரிப்புகளில், பயன்பாட்டாளர்கள் தங்களது போனின் பின் பகுதியை கழற்றவும் , பேட்டரியை மாற்றவும் வசதி செய்ததன் மூலம், அந்த போன்களை ஆப்பிள் ஐ போன்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள சாம்சங்கால் முடிந்தது..

ஆனால்,எஸ் 6 மற்றும் நோட் 5 போன்கள் இந்த நிலையை மாற்றி, மிகவும் கச்சிதமான வடிவமைப்புகள் மற்றும் தண்ணீரில் விழுந்தால் பாதிப்படையாத அம்சங்களை தர சாம்சங்குக்கு உதவின.

சிலர், சாம்சங் இதைச் செய்யாமல், இருந்திருந்தால், அது தற்போது சந்தித்துள்ள பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும், உள்நாட்டு அளவில் அதன் போட்டி நிறுவனமான எல்.ஜி. கழற்றக் கூடிய பேட்டரிகள் உள்ள வசதியைத் தனது இரண்டு உயர் ரக போன்களில் சேர்த்துள்ளது.

இந்த சூழலில் , சாம்சங் அதன் எதிர்கால வடிவமைப்புகளைப் பற்றிய கருத்துக்களை வெளியிடவில்லை என்பதில் பெரிய ஆச்சரியமில்லை.

ஆனால் ஒரு நிபுணர், இந்த சம்பவம் காரணமாக, எல்லா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும், தங்கள் தயாரிப்புத் திட்டங்களை மீளாய்வு செய்து கொண்டிருப்பார்கள் என்று தெரிவித்தார்.

சாம்சங் நிறுவனம் (கோப்புப்படம்)

 

பெரிய அளவிலான திரை, படங்களை மேலும் துல்லியமாகக் காட்டும் திரைகள், வேகமாகச் செயல்படுத்த பரோசெஸர்கள் மற்றும் 4ஜி தகவல் வசதி, ஆகியவற்றைக் கொண்டதாகவும், அதிக ஆற்றல் கொண்டதாகவும் நவீன ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்,''

என ஐ.எச்.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த ஐயன் ஃபாக் கூறியுள்ளார். ''அவை ஒன்றுடன் ஒன்று போட்டிபோடும் கோரிக்கைகள்,'' என்றார் அவர்

''எல்லா கைத்தொலைபேசி நிறுவனங்களும் எதிர்வரும் தங்கள் ஸ்மார்ட்போன் அறிமுகங்களுக்காக காத்திருக்கின்றனர். தங்களது, பொறியியல் குழுக்களிடம், பேட்டரிகளை சார்ஜ் செய்வது மற்றும் பேட்டரிகள் வேலை செய்யும் விதம் குறித்து சோதனை செய்யுமாறும், சாம்சங் சந்தித்துள்ள பிரச்சனைகள் போன்ற எதுவும் ஏற்படாமல் இருக்க உறுதிசெய்யுமாறும் கூறியுள்ளனர், '' என்றார் அவர்.

மேலும், சாம்சங் தனது எதிர்வரும் போன்களை இந்த விவகாரத்தைக் குறிப்பாக கவனிப்பார்கள். ஏனென்றால் அந்த புதிய மாடல்களும், நோட்7 கொண்டுள்ள அம்சங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளதாக இருக்கும் என்ற சாத்தியம் உள்ளது, '' என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/science-37652818

Link to comment
Share on other sites

அமெரிக்க விமானங்களில் சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களுக்குத் தடை

Samsung%20Galaxy%20Note%207_13245.jpg

அமெரிக்க விமானங்களில் பயணிகளோ, விமான பணியாளர்களோ சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரிகள் திடீர், திடீரென தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளிலும் இந்த போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. தடையை மீறி இந்த போன்களை யாரேனும் எடுத்துச் சென்றால்  அபராதம் விதிக்கப்படுவதுடன், அந்த போனும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில், அமெரிக்க விமானம் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட சாம்சங் கேலக்சி நோட் 7 போனிலிருந்து தீப்பொறிகள் ஏற்பட்டதை அடுத்து, இந்தத் தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/information-technology/69695-samsung-galaxy-note-7-banned-on-all-us-flights.art

Link to comment
Share on other sites

Note 7-இன் அம்சங்களை S7-க்கு கொண்டு வருகிறது சம்சுங்
 
 

article_1476873805-Samsung.jpgபிரச்சினையைச் சந்தித்த, தனது Galaxy Note 7 திறன்பேசியின் சில அம்சங்களை, தனது, S7 மற்றும் S7 Edge சாதனங்களில் கொண்டு வருவதற்கு சம்சுங் பணியாற்றுகின்றது.

சில Galaxy Note 7-கள் தீப்பற்றுவதாகக் கிடைத்த அறிக்கைகளைத் தொடர்ந்து, Galaxy Note 7-களை மீள அழைத்ததுடன், அதன் தயாரிப்பை நிறுத்துவதாக, கடந்த வார ஆரம்பத்தில், சம்சுங் அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, கருத்துத் தெரிவித்துள்ள சம்சுங், தனது, S7 மற்றும் S7 Edgeஐ, புதிய வசதிகளுடன் மேம்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமது Galaxy Note 7-ஐ திருப்பி அளிப்பவர்கள், சந்தையிலுள்ள, வேறு போட்டி நிறுவனங்களின் திறன்பேசிகளிடம் செல்லாமல், சம்சுங் திறன்பேசி ஒன்றுடன் தொடர்வார்கள் என எதிர்பார்க்கிறது.

தனது மீச்சிறப்பு திறன்பேசியொன்றை, வருடத்தில் இரண்டு தடவையே, வழமையாக வெளியிடுகின்ற நிலையில், அடுத்த Galaxy S8 திறன்பேசி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதியே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகையில், அதுவரைக்கும், சம்சுங்கின் மீச்சிறப்பு திறன்பேசியாக S7 Edge விளங்கவுள்ளது. ஆகையால், தனது புதிய போட்டி வரவுகளான, iPhone 7 மற்றும் Google Pixel ஆகியவனற்றுடன் போட்டியிடுவதற்கு, தன்னால் முடிந்த அனைத்தையும் சம்சுங் செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, Galaxy Note 7-இன் செயற்பாடுகளை, மேலும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் பொருட்டு, “always-on screen” அம்சத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. “always-on screen” அம்சத்தின் மூலம், செயற்பாடற்ற நிலையில் திறன்பேசி இருக்கும் போதும், திரையில், புகைப்படங்கள், கடிகாரம், அறிவித்தல்களை பார்வையிட முடியும். இந்த வசதிக்காக, ஒரு மணித்தியாலத்தில், ஒரு சதவீதமான மின்னே செலவளியும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/184292/Note-இன-அம-சங-கள-S-க-க-க-ண-ட-வர-க-றத-சம-ச-ங-

Link to comment
Share on other sites

கேலக்சி நோட் 7 க்கு பதிலாக புதிய கேலக்சி நோட் 8!

கேலக்சி நோட் 7 க்கு பதிலாக புதிய கேலக்சி நோட் 8!

 
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ‘கேலக்சி நோட் 7’ மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதை லட்சக்கணக்கான மக்கள் வாங்கினார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்கு போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்ட கேலக்சி நோட் 7 ரீசார்ஜ் செய்யும்போது தீப்பற்றி எரிவதாக புகார் எழுந்தது.

தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து எழுந்ததால் சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக சமீபத்தில் அந்நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு புதியதொரு சலுகையை வழங்குவதாக சாம்சங் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

அதாவது சாம்சங் கேலக்சி நோட் 7 வாடிக்கையாளர்களுக்கு பாதி விலைக்கு சாம்சங் கேலக்சி நோட் 8 போன் வழங்குவதாக கூறியுள்ளது. இதன் மூலம் சாம்சங் கேலக்சி நோட் 7 மாடலால் வாடிக்கையாளர்களிடம் இழந்த மதிப்பை திரும்பப் பெற சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சாம்சங் கேலக்சி நோட் 7 போனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 88.39 டாலர் இழப்பீட்டுத் தொகையை அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=84745

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.