Jump to content

ஜெ. உடல்நிலை ரகசியம் என்ன? ஜனாதிபதிக்குச் சென்ற மனு


Recommended Posts

ஜெ. உடல்நிலை ரகசியம் என்ன? ஜனாதிபதிக்குச் சென்ற மனு

jaya%20latter%20long.jpg

எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுவரை அவர், அங்கு சிகிச்சையில் இருக்கிறார். ஆனால், அவருடைய உடலுக்கு என்ன பாதிப்பு, அவருடைய சிகிச்சை எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி முறையான தகவல்கள் இதுவரை இல்லை. மேலும், அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட யாரும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்றும் தகவல்கள் பரவுகின்றன.

இந்தநிலையில், அரசாங்கமும் அதுபற்றி எந்த முறையான அறிவிப்பும் வெளியிடாமல் அமைதியாக இருக்கிறது. இதுவரை, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளிவந்த அறிக்கைகள் எல்லாம் அப்போலோ மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்டவையே. இந்நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

law1.jpg

law2.jpg

law3.jpg

அதில், "எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பணியாற்றும் செயல்திறனோடு உள்ளாரா என்பதை தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகளில், ஜெயலலிதா செயல்படும் நிலையில் இல்லை என்று தெரியவந்தால், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/69045-letter-to-the-president-to-know-about-jayalalithaas-health.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.