Jump to content
  • 0

பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள், அதனை... பிள்ளையிடம் சொல்லலாமா?


தமிழ் சிறி

Question

  • கருத்துக்கள உறவுகள்

 

110.jpg

 பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள்,

அதனை... பிள்ளையிடம்,  சொல்லலாமா?   

எனது நண்பர் ஒருவர்.... தனது பிள்ளைக்கு  திருமணம் செய்து வைப்பதற்காக... அந்தப் பிள்ளைக்கு தெரியாமல்,  
அதற்கான... முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். (சாதகம் பார்ப்பது... போன்ற விடயங்கள்.)

இவ்வளவிற்கும்... அந்தப் பிள்ளை, மேற் படிப்பு  படிக்க வேண்டும் என்ற... ஆர்வத்தில், உள்ளது.
இப்படியான சூழ் நிலையில்.... இதனை, எப்படிக் கையாள வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

Link to comment
Share on other sites

  • Answers 51
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

தானும்... தன்ரை படிப்பும்...என்ற சிந்தனைகளில் இருக்கும்  பிள்ளைகளுக்கு, 
நீயும்...  "லவ்"  பண்ணு என்று, இலங்கைத் தமிழ்  அப்பன்  சொல்ல முடியுமா?

தானும் தன் படிப்பும் என்று இருக்கும் நேரத்தில் சொல்லணும் என்றில்லை

திருமணம் பற்றிய கதை வந்தால் சொல்லத்தான் வேண்டும்

நாம 4 அடி பாய்ந்தால் அவர்கள் 16அடி பாய்வார்கள் சிறி.

அவர்கள் கதையை தொடங்குகிறார்கள் என்றால் மீற்றர் பார்க்கிறார்கள் என்று அர்த்தம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/21/2017 at 7:26 PM, குமாரசாமி said:

உங்கள் பிள்ளை நாளைக்கு வேற்று இனத்தவரை....உதாரணத்திற்கு ஆபிரிக்கரையோ அல்லது அரேபியரையோ  மணம் முடிக்க விருப்பம் தெரிவித்தால் உங்கள் பதில் என்ன?

 

நிச்சயமாக மறுப்பு தெரிவிக்கமாட்டேன் ஏனெனில் திருமணம் என்பது இருமனம் சம்பந்தப்பட்டது. மனம் கொண்டதுதான் மாளிகை. வரலாறு, பாரம்பரியம் என்பது பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வுக்கு அவர்களின் வாழ்க்கைத்துணையின் தெரிவுக்கு குறுக்காக நின்று நஞ்சு குடிப்பேன் நாம் சொல்லும் பெண்ணையோ அல்லது பிள்ளையையோதான் மணக்கவேண்டும் என்று அச்சுறுத்தி பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வை நாசமாக்குவதல்ல.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வல்வை சகாறா said:

நிச்சயமாக மறுப்பு தெரிவிக்கமாட்டேன் ஏனெனில் திருமணம் என்பது இருமனம் சம்பந்தப்பட்டது. மனம் கொண்டதுதான் மாளிகை. வரலாறு, பாரம்பரியம் என்பது பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வுக்கு அவர்களின் வாழ்க்கைத்துணையின் தெரிவுக்கு குறுக்காக நின்று நஞ்சு குடிப்பேன் நாம் சொல்லும் பெண்ணையோ அல்லது பிள்ளையையோதான் மணக்கவேண்டும் என்று அச்சுறுத்தி பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வை நாசமாக்குவதல்ல.  

பட்டிக்காட்டுத்தனமான நஞ்சு குடிப்பன் என்ற கருத்து அநாகரிகமானதுதான்.
ஆனாலும் நாம் நமது இனம் பாராம்பரியம் பழக்கவழக்கத்தை ஊட்டி வளர்ப்பதன் மூலம் எமது இனத்தை தக்க வைக்கலாம்.

இனிவரும் காலங்களில் தமிழ் தமிழினம் தனி நாடு என்று புலம்பாமல் அலம்பாமல் எமது உலகம் ஓரினம் என்று கதை விடுங்கள் .நோபல் பரிசாவது கிடைக்கும்.
 

11 minutes ago, வல்வை சகாறா said:

மனம் கொண்டதுதான் மாளிகை. வரலாறு, பாரம்பரியம் என்பது பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வுக்கு அவர்களின் வாழ்க்கைத்துணையின் தெரிவுக்கு குறுக்காக நின்று நஞ்சு குடிப்பேன் நாம் சொல்லும் பெண்ணையோ அல்லது பிள்ளையையோதான் மணக்கவேண்டும் என்று அச்சுறுத்தி பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வை நாசமாக்குவதல்ல.  

இதற்கு தானா பாடுபட்டு மண்ணை கவ்வினாய் பிரபாகரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

பட்டிக்காட்டுத்தனமான நஞ்சு குடிப்பன் என்ற கருத்து அநாகரிகமானதுதான்.
ஆனாலும் நாம் நமது இனம் பாராம்பரியம் பழக்கவழக்கத்தை ஊட்டி வளர்ப்பதன் மூலம் எமது இனத்தை தக்க வைக்கலாம்.

இனிவரும் காலங்களில் தமிழ் தமிழினம் தனி நாடு என்று புலம்பாமல் அலம்பாமல் எமது உலகம் ஓரினம் என்று கதை விடுங்கள் .நோபல் பரிசாவது கிடைக்கும்.
 

 

கு.சா அண்ணை நாங்கள் வாழ்வது பல்லின சமூகம் கலந்து வாழும் கனடா நாட்டில் இந்நாட்டில் பிறந்து அல்லது சிறு பிராயத்திலே இருந்தே பல்லின சமூகத்தவர்களோடு பழகும் எமது பிள்ளைகள் இச்சூழலுக்கு இசைவாக்கம் அடைந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. விடாப்பிடியாக பெற்றோர்களாக இருக்கும் நாம்தான் இன்னும் மாற்றமடையாமல் பிள்ளைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களால் அவர்களை மீள எமது தனித்துவமான சூழலுக்கு இட்டுவரமுடியாது. அப்படியான முயற்சிகளும் இன்றைய சூழலில் வெற்றி அளிக்காது. இங்கு பிள்ளைகளின் திருமணவிடயமாக பெற்றோர் வரன் பார்க்கமுயற்சிக்கும்போது அவர்களுக்கு அதை தெரிவிக்கவேண்டுமா இல்லையா என்பதுதான்  கேள்வியே..... திருமண விடயம் தொடர்பாக பிள்ளைகளுக்குத் தெரியாமல் பெற்றோர் முடிவெடுப்பது மிகவும் தவறானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று இரண்டிற்கும் ஆசைப்படாதீர்கள்.

புத்திசாலித்தனமாக நடப்பதாக நினைத்து வெறும் உரலை இடிக்காதீர்கள்.
இனிவரும் காலங்களிலாவது தமிழ் தனிநாடு என்று புலம்பாமல் இருங்கள்.
சந்ததியை தொலைத்து விட்டு சொந்தவீடு தேடாதீர்கள்.tw_blush:

பிள்ளைகளுக்கு சொல்லி வளருங்கள்...சாதியை அல்ல...நாங்கள் தமிழர்கள்....தமிழர்களின் அவலங்களை.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நான் எனது பிள்ளைகளுக்கும் என்  நண்பர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லியது இதுதான்..
இளவயதில் திருமணம் செய்யுங்கள். தமிழரை துணையாக தேடுங்கள். இளவயதில் பிள்ளைகளை பெற்றெடுங்கள். சொந்த வீடு வாசல்களை வைத்திருங்கள்.வீட்டில் தமிழில் கதையுங்கள்..உங்கள் தெய்வ வழிபாட்டை தினம்தோறும் கடைப்பிடியுங்கள்.

எனக்கு மிக பிடித்த  ஒன்று கு.சாமியண்ணை  அதேயே நீங்கள் சொல்லி இருக்குறீர்கள்   வாழ்க்கையை சொல்லி கொடுப்பதில் என்ன பிழை இனம் இனத்தை சேர வேண்டும்  அடுத்தவனும் மனிதன் தான் ஆசைகள் ,பாசங்கள் இருக்கலாம்  ஆனால் நாம் தமிழர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14470489_746287878858033_3358638563549774925_n.jpg?oh=573e24c2cf530d4b3588a318b1d07a0b&oe=5876D87E

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்தது என்டாலும் சின்ன வயதில் இருந்து பிள்ளைகளுக்கு தங்கட மொழி,இனப் பற்றை சொல்லி வளர்க்கா விட்டால் வேற்றினத்தில் தான் திருமணம் செய்வார்கள். இது யார் குற்றம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.10.2016 at 2:32 PM, விசுகு said:

இன்றைக்குத்தான் கண்ணில  அம்புட்டுது...

இதெல்லாம் நடக்கா இப்பவும்......

 

நான் பிள்ளைகள் என்னுடன்  கதைக்கத்தொடங்கும்போதே  சொல்லிவிட்டேன்

திருமணம் உங்க விருப்பப்படி தான் என்று.

சிறி

உங்களது நண்பருக்கு ஏதாவது நன்மை செய்வதாக இருந்தால்

உடனே இந்த மாதிரி மூடநம்பிக்கைளிலிருந்து வெளியில் வரச்சொல்லுங்கள்.

 

எமது நாளைய சமுதாயம் துருக்கி,ஈராக்,துனேசியன் என நடு வீட்டுக்குள் அழைத்து வருகின்றார்கள். உங்களைப் பொறுத்தவரைக்கும் இது பற்றிய கருத்து என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்தது என்டாலும் சின்ன வயதில் இருந்து பிள்ளைகளுக்கு தங்கட மொழி,இனப் பற்றை சொல்லி வளர்க்கா விட்டால் வேற்றினத்தில் தான் திருமணம் செய்வார்கள். இது யார் குற்றம்?

ரதி எனக்கு மூனறு பிள்ளைகள் இருவர் இலங்கையில் பிறந்தவர்கள்.ஒருவர் இங்கு பிறந்தவர். 

மூவரும் தமிழ் கதைத்தால் இப்போது தான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறார் என்று தான் தெரியாதவர்கள் யோசிப்பார்கள்.எத்தனையோ பேர் கேட்டும் இருக்கிறார்கள்.

இருந்தும் பல்கலையில் இருந்து 8-9 வருடங்களாக வேற்று நாட்டவரையே விரும்பி இருந்தபடியால் வேறு வழியின்றி இருவருக்கும் மருமக்களின் தாய் தந்தையரின் சம்மதத்துடன் மணமுடித்து கொடுத்துள்ளோம்.

இப்போ தவறு எங்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் பிள்ளைகளுடன் கலந்தாலோசித்து செய்ய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.1.2017 at 8:56 PM, ரதி said:

திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்தது என்டாலும் சின்ன வயதில் இருந்து பிள்ளைகளுக்கு தங்கட மொழி,இனப் பற்றை சொல்லி வளர்க்கா விட்டால் வேற்றினத்தில் தான் திருமணம் செய்வார்கள். இது யார் குற்றம்?

எனக்குத்தெரிந்து பல இடங்களில் சோறு,சோத்துக்கூட்டம் என்ற நக்கல் நளினங்கள் போய்......

தமிழன் , தமிழச்சி என்று பகிடிவதை பண்ணத்தொடங்கியிருக்கிறர்கள். நல்ல சகுனமாகவே பார்க்கின்றேன்.


எனக்கு தெரிந்த தமிழ் சமுதாயம் தமிழராகவே வாழ்கின்றார்கள்.

பிள்ளைகளை முடிந்த அளவிற்கு தமிழ்மணம் வீச வைக்கின்றார்கள்.(கலியாண சாமத்திய வீடு அல்ல)

வீட்டில் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் ஊர் நினைவலைகளை மீள வைக்கின்றார்கள்.

திருமண விடயத்தில் என்னவிட அகங்காரத்துடன் அந்த பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

 

புலம் பெயர்ந்த நாடுகளில் வேலை படிப்பு விடயத்தில் அவர்களுக்கு அதிகம் தெரியும்....

ஆனால்....


வருங்கால வாழ்க்கை விடயத்தில் எனக்கு இன்னும் அதிகம் தெரியும்...


சொல்ல வேண்டியது என் பொறுப்பு...

சொல்லி திருத்த வேண்டியது என் கடமை.


மீறியவர்களின் கதையும் எனக்குத்தெரியும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ரதி எனக்கு மூனறு பிள்ளைகள் இருவர் இலங்கையில் பிறந்தவர்கள்.ஒருவர் இங்கு பிறந்தவர். 

மூவரும் தமிழ் கதைத்தால் இப்போது தான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறார் என்று தான் தெரியாதவர்கள் யோசிப்பார்கள்.எத்தனையோ பேர் கேட்டும் இருக்கிறார்கள்.

இருந்தும் பல்கலையில் இருந்து 8-9 வருடங்களாக வேற்று நாட்டவரையே விரும்பி இருந்தபடியால் வேறு வழியின்றி இருவருக்கும் மருமக்களின் தாய் தந்தையரின் சம்மதத்துடன் மணமுடித்து கொடுத்துள்ளோம்.

இப்போ தவறு எங்கே?

வணக்கம் ஈழப்பிரியன்!
தவறுகள் எங்கும் எதிலும் இருக்கும்.

இது நியதி.


உங்களிடம் ஒரு சிறிய கேள்வி?.
எமது பிள்ளைகளின் இரண்டும் கெட்டான் வாழ்க்கை முறையால் திருமணங்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போய்க்கொண்டிருக்கின்றது. இது சந்தர்ப்ப சூழ்நிலை.:(


எமது பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளின் வாழ்க்கை எப்படியிருக்கும் என நினைக்கின்றீர்கள்? அல்லது எப்படியிருக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்?

இது விதண்டாவாதத்திற்கல்ல.....நாலு நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2016 at 5:36 AM, நந்தன் said:

எங்களை மாட்டிவிட்டதுக்கு,பிள்ளைகளை பழிவாங்ககூடாது

ஆசைப்பட்டால் அனுபவிக்க தான் வேணும் சொன்னால் கேட்டால் தானே கிகிகிகி

சிறியர் ஒருநாள் வாழ்ந்துவிட்டு போவது இல்லை வாழ்க்க்கை இருமணம் இணைய திருமணம் கூடவேண்டும் பிள்ளை படிக்க ஆசைப்படுதல்லவா பிறகு என்னத்திற்கு கல்யாணம் அதுவா அமையும் சில காலம் பொறுத்து  பார்க்கலாம் அவளுக்கும் அவள் மனதிற்கும் பிடித்த வாழ்க்கை இயற்கையாக கூட அமையலாம் அது பல ஆண்டுகள் வரைச் செல்லும் அது வாழ்க்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில சமயம் பிள்ளை சொல்லக்கூடும் நான் ஏற்கனவே எனது துணையை தெரிவு செய்து விட்டேன் என்று.....ஆகவே பிள்ளையிடம்  அனுமதி கேட்ட பின்பு பார்ப்பது நல்லம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.9.2016 at 8:04 PM, தமிழ் சிறி said:

 

110.jpg

 பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள்,

அதனை... பிள்ளையிடம்,  சொல்லலாமா?   

எனது நண்பர் ஒருவர்.... தனது பிள்ளைக்கு  திருமணம் செய்து வைப்பதற்காக... அந்தப் பிள்ளைக்கு தெரியாமல்,  
அதற்கான... முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். (சாதகம் பார்ப்பது... போன்ற விடயங்கள்.)

இவ்வளவிற்கும்... அந்தப் பிள்ளை, மேற் படிப்பு  படிக்க வேண்டும் என்ற... ஆர்வத்தில், உள்ளது.
இப்படியான சூழ் நிலையில்.... இதனை, எப்படிக் கையாள வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

இன்றைய காலகட்டத்தின் நல்லதொரு சமுதாய சிந்தனை திரி.....
நேரமும் மனமும் ஒருங்கிணைந்தால் எழுதலாம் என நினைக்கின்றேன்.

சிறித்தம்பி! சேம் பிளட்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் எல்லாரும் ஊருக்கு போனால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.நில அகபரிப்ரிப்பு  உட்பட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்குத்தான் கண்ணில  அம்புட்டுது...

இதெல்லாம் நடக்கா இப்பவும்......

 

நான் பிள்ளைகள் என்னுடன்  கதைக்கத்தொடங்கும்போதே  சொல்லிவிட்டேன்

திருமணம் உங்க விருப்பப்படி தான் என்று.

சிறி

உங்களது நண்பருக்கு ஏதாவது நன்மை செய்வதாக இருந்தால்

உடனே இந்த மாதிரி மூடநம்பிக்கைளிலிருந்து வெளியில் வரச்சொல்லுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎31‎/‎01‎/‎2017 at 4:44 PM, ஈழப்பிரியன் said:

எமது பிள்ளைகள்  இரு தோணியில் பயணிக்கிறார்கள்.ஆனால் அவர்கள் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு தேவை இருக்காது. 

பேரப்பிள்ளைகள் எனும் போது பெரியதொரு கேள்விக்குறி தொக்கி நிற்கிறது.பிள்ளைகள் தங்களை எப்படி வளர்தோமோ அதே மாதிரி தங்கள் பிள்ளைகயையும் நாங்களே வளர்க்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

வயது போக போக குளிர் ரொம்ப தான் உலுப்பி எடுக்குது.இந்த நிலையில் அடுத்த அடி எங்கே வைப்பது.இது தான் உண்மை நிலமை.

உங்கள் மீது தான் பிழை ஈழப்பிரியன்...நீங்கள்,உங்கள் பிள்ளைகளுக்கு  மொழியை சொல்லிக் கொடுத்த அளவிற்கு இனப் பற்றை என் ஊட்டி வளர்க்கவில்லை?...தமிழ்ரகளோடு பழக விடாமல் தனித்து வளர்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு மூன்று பிள்ளைகள் .இருவர் தானே விரும்பி இருந்தனர்.சுலபமாக முடித்து விட்டோம்.எப்போ கடைக்குட்டி (பொண்ணு) என்னம்மா உனக்கும் அக்கா அண்ணனுக்கு செய்த மாதிரி நாம் சுகமாக இருக்கும் போதே செய்து பார்க்க வேண்டும்.உன் மனதில் யாராவது இருந்தா எதையும் யோசிக்காமல் சொல்லு.எப்படி எதுவும் இல்லை நீங்களே பாருங்கோ என்று எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று பரு லிஸ்ரோ தந்திருக்கிறா.

உனக்கு விருப்பமில்லாமல் இதில் எதுவும் இருக்காது என்ற உத்தரவாதத்தையும் கொடுத்துள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஏன் தமிழர்களையே திருமணம் செய்ய வேண்டும்?

 

அரசியல், பொருளாதாரம் போன்ற  காரணங்களால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்  தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழர்களின் பூர்வீக நிலங்களை விட்டு தொடர்ந்து  இடம்பெயரும் இக்காலகட்டத்தில் தமிழர்களிடையே நடைபெறும் வேற்றினக் கலப்பு மணங்களால், அந்த தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் மொழியையும்  கலாச்சாரத்தையும் இழப்பது மட்டுமல்ல, தமது அடையாளத்தையும் இழந்து இரண்டும் கெட்ட நிலையில் இருப்பதை பல மேலை நாடுகளில் நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதை நாகரீகத்தின் வளர்ச்சியின் அடையாளமாக, இனம், மதம் போன்ற குறுகிய கண்ணோட்டங்களிலிருந்து விடுபட்ட உயர்ந்த மனிதர்களின் அடையாளமாக சிலர் நினைத்துக் கொள்வதுமுண்டு.

 
tamilmarriage1smallest3bigger-620x414.jpg
ஆனால் மொழி, இன அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிலும், இன அடிப்படையில் சட்டங்களும், சலுகைகளும் இயற்றப்படுவதுடன்,  இன அடிப்படையில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் பெரும்பான்மையினரைக் குடியேற்றி தமிழர்களை தமது சொந்தக் கிராமங்களிலேயே சிறுபான்மையினராக திட்டமிட்டுச் செயல்படும் இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளில்  எண்ணிக்கையில் மிகவும் குறைவான நிலையில் வாழும் தமிழர்களின் மத்தியிலும், வேற்றினக் கலப்பு மணங்கள், இன்னும் சில தலைமுறைகளில் தமிழர்களை தமிழ் அடையாளமற்ற கலப்பினமாக மாற்றி விடும் என்பதில் ஐயமில்லை.
 
தமிழர்களுக்கிடையே குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் மத்தியில் அகமணமுறை அருகி வருகிறது, அது மேலும்  ஊக்குவிக்கப்பட வேண்டும்.   தமிழர்கள் தமிழர்களையே திருமணம் செய்ய வேண்டும் அதாவது தமிழர்கள தமிழரல்லாதவர்களை மணப்பதை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. தமிழர்களிடையே மறைந்து வரும் அகமண முறை அதாவது தமிழர்கள் சாதியில் அக்கறை காட்டாமல் தமது சாதியை விட்டு மற்ற சாதி தமிழர்களை மணக்கும் முறை ஊக்குவிக்கப்பட வேண்டும், ஏனெனில் அது தமிழினத்தை ஒன்றிணைத்து பலப்படுத்தும். அதே வேளையில் தமிழரல்லாத வேற்றினக் கலப்பு  மணங்களின் மூலம்  தமிழர்களின் வாரிசுகள் தமது தமிழ் அடையாளத்தை இழப்பதால், அது தமிழினத்தை மேலும் நலிவடையச் செய்யும்.
 
வெளிநாடுகளில் நடைபெறும் தமிழர்- தமிழரல்லாதோர் கலப்பினத் திருமணங்களுக்கு காதல் காரணமாகக் கூறப்பட்டாலும் அந்தக் காதலின் பின்னணியில் தமிழர்களின் வெள்ளைத்தோல் ஆசையும் ஒரு காரணமாக இருக்கிறது  என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கையில் கறுப்பு அல்லது மண்ணிறமுடைய தமிழர்களின் சுயவெறுப்பும்,  வெள்ளைத்தோல் ஆசையும் எந்தளவுக்கு தமிழினத்தை சீர் கெடுத்தது,  அது எவ்வாறு தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் ஏற்பட வழிவகுத்தது என்பதை யாவருமறிவர்.

 
பெரும்பான்மை கலப்பினத் திருமணங்கள் வெள்ளைத் தோலைக் கொண்ட வேற்றினத்தவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலேயே நடைபெறுவதை நாம் காணலாம். காலனித்துவ மூளைச்சலவையால் வெள்ளைத்தோல் தான் அழகு என்ற மனப்பான்மையும், யாராவது வெள்ளைக்காரப் பெண்ணை அல்லது ஆணை மணந்தால் சமுதாயத்தில் அவர்களின் அந்தஸ்து உயர்வதாக சில தமிழர்கள் நினைத்துக் கொள்வதும் இதற்கு காரணமாகும். 
 
அப்படி வெள்ளை இனத்தவர்களை தமது “காதலினால்” வீழ்த்த முடியாதவர்கள்பலர் அதற்கு மாற்றாக சீனப் பெண்களை அல்லது பிலிப்பைன் நாட்டுப் பெண்களை மணந்து தமது ஆசையைத் தீர்த்துக் கொள்வதை நாம் மேலை நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியிலும் காணலாம். அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி அல்லது மருத்துவத் துறையில்  கல்வி கற்கும் ஈழத்தமிழ் மாணவர்களின் வெள்ளைத் தோலாசையைச் சாதகமாகப் பயன்படுத்தி படிப்பறிவு குறைந்த ஆனால் புத்திசாலித்தனம் மிகுந்த தாய்லாந்து, அல்லது பிலிப்பைன் நாட்டுப் பெண்கள் தமது வலையில் வீழ்த்துவதுமுண்டு.  

ஆசையோடு தமது மகன்களை உயர்கல்வி கற்க வைத்து,  ஊரிலுள்ள  தங்களை விட நல்ல குடும்பத்தைச் சேர்ந்த  பெண்ணைக் கட்டி வைத்து இலங்கையில் தாமிருந்த ஏழ்மையை மறைப்பதற்கு திட்டம் போட்டிருந்த பெற்றோர்களும் கடைசியில் சம்மதம் தெரிவித்து விட்டு, தமது ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் மறைப்பதும் புலம்பெயர்ந்த நாடுகளில் சாதாரணமாக நடைபெறுகிறது. அதே வேளையில் அவர்களின் மகன் ஒரு கறுப்பு இனப்பெண்ணைக் காதலித்திருந்தால் (அப்படி நடைபெறுவது அரிது), அந்தப் பெண் அழகாகவும், கல்வித்தகைமைகளுடன்  இருந்தாலும் கூட பெற்றோர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் ஏனென்றால் கறுப்பர் இனத்தையும் அவர்களின் தோலின் நிறத்தையும் தமிழர்கள் விரும்புவதில்லை.
 

Why I Believe Tamils Should Marry Tamils?

 
 தமிழர்கள் ஏன் தமிழர்களைத் தான் திருமணம் செய்ய வேண்டுமென நான் நம்புகிறேன் (Why I Believe Tamils Should Marry Tamils) ? http://www.tamilculture.ca/why-i-believe-tamils-should-marry-tamils/  என்ற தலைப்பில்,  கனடாவில் வாழும்  வினோத்குமார் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தை கீழே காணலாம்.  இந்தக் கட்டுரை தான் இந்தப் பதிவை எழுத என்னைத் தூண்டியது.
 
"என்னுடைய இந்தக் கட்டுரைக்கு குறுகிய மனம்படைத்த, இனவாதம் மிக்க, 21ம் நுற்றாண்டுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட முட்டாள் என என்னைச் சாடிப் பலரும் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

தமது வாழ்க்கைத் துணையைத் தமக்கேற்றவாறு ஒவ்வொருவரும் தெரிவு செய்ய வேண்டுமென்பதில் எனக்கும் நம்பிக்கையுண்டு. கலப்புத் திருமணத்தை தெரிவு செய்யும் தமிழர்களை நான் இழிவுபடுத்தவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. ஆனால் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் பாதுகாக்கப்படவும் அவை  பெரும்பான்மை கலாச்சாரத்துடன் கலந்து காணாமல் போகாமலிருக்கும்  உலகத்தை உருவாக்க ஒவ்வொரு இனக்குழுவினரும் தமது இனத்துடன் திருமண பந்தத்தை தொடர்தல் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
 
maxresdefault.jpgதமிழர்களாகிய நாங்கள் அனைவரும் ஒரு பொதுவான அடையாளம், மொழி, நம்பிக்கைகள் என்பவற்றைக் கொண்டுள்ளோம். திருமணம் என்பது எமது முன்னோர்கள் ஆயிரமாயிரமாண்டுகள் கட்டிக்காத்த தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் தொடர்வதற்காக நாம் எடுக்கும் உறுதிமொழியாகும்.

திருமணம் என்பது வெறுமனே ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கும் அப்பாற்பட்டது,  அது பல தலைமுறை, தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த  பண்பாட்டிலும், பழக்க வழககங்களினதும், நம்பிக்கைகளினதும்  அடிப்படையில் இரண்டு குடும்பங்கள்  இணையும் பாரம்பரியமாகும். எங்களின் இனத்துக்குள் நடைபெறும்  திருமணம் எமது பண்பாட்டையும், கலாச்சார பாரம்பரியங்களையும் பாதுகாக்க உதவுகின்றது, ஏனென்றால் மணமகனும், மணமகளும் அவர்கள் இருவருக்கும் பொதுவான அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் மதிப்பவர்களாக இருப்பர். 
 
புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள், தொழில் வாய்ப்புக்களுக்காவும், எமக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகவும் எமது சொந்த மண்ணை விட்டு ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் வெளிநாடுகளில் வாழ்கிறோம்.  வெளிநாடுகளை எமது சொந்த நாட்டைப் போன்றே ஏற்றுக் கொண்டோம், எமது வழிபாட்டுத்தலங்களையும், எமது கலாச்சார நிலையங்களையும், நிறுவனங்களையும் எமது அடையாளத்தைப் பேணிப்பாதுகாப்பதற்காக அமைத்துக் கொண்டோம். எமது ஒருங்கிணைந்த தமிழ் அடையாளம், தமிழ்ப் பாரம்பரியத்துடன் எமது பெற்றோர்களால் எமக்கு அளிக்கப்பட்ட– மூத்தோரை மதித்தல், நம்பிக்கை, பண்பாட்டுப் பழக்க, வழக்கங்கள், கல்வி, திருமணம், குடும்பம்- என்பன இன்று புலம்பெயர்ந்த (வெளிநாடுகளில் வாழும்) தமிழர்களின் வெற்றிக்கு அத்திவாரமிட்டவையாகும். ஒரு திருமணத்தில் மணமகளும், மணமகனும் தமிழர்களாக இருக்கும் போது எமது முன்னோர்களின் உயரிய பண்புகளையும், பாரம்பரியங்களையும் பாதுகாக்கவும், அவற்றை எமது குழந்தைகளுக்கு இலகுவாக கையளிக்கக் கூடிய நிலையிலும் நாமிருப்போம். 
மேலும், இனம் என்பது ஒரு சமுதாயக்கட்டமைப்பு, இனங்களுக்கிடையிலான கலப்பு மணங்களை  ஊக்குவிப்பது இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதை நானும் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், தென்னமெரிக்காவில் பலவின கலப்பின மக்களைக் கொண்ட நாடாகிய பிரேசிலில், வெள்ளைத் தோலைக் கொண்ட, ஐரோப்பியர்களின் தலைமுறையில் வந்தவர்கள் செல்வாக்கு மிக்க மேட்டுக் குடியினராக வாழ்வதையும், கருப்பு அல்லது பழுப்பு நிறம் கொண்ட கலப்பின முலாட்டோக்களும், கறுப்பின ஆபிரிக்க – பிரேசிலியர்களும் அடிப்படை  சமூக. பொருளாதார வசதிகளற்றவர்களாகவும், பல இனப்பாகுபாடுகளுக்கும் உள்ளாகின்றனர். இதே நிலை தான் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், அங்கும் இன ஏற்றத் தாழ்வு காணப்படுகிறது, ஐரோப்பியர்களின் தலைமுறையினர் மேல்மட்டத்திலும் ஏனைய இனக் குழுவினர்களாகிய மெஸ்டீசோக்களும், முலாட்டோக்களும், பூர்விககுடிகளின் பரம்பரையினரும் அடிமட்டத்திலுள்ள குழுவினர்களாகவும் காணப்படுகின்றனர். 

images?q=tbn:ANd9GcSFBKwH1C4nQhR04yshwM4S3Mc6I4Epjts3Gfn4lbecsA-kLvvyNAநான் இளமையில் பல்லின மக்களைக் கொண்ட சிங்கப்பூரில் வாழும் போது,  பழுப்பு நிறத்தைக்  கொண்ட சிந்தியன்CHINDIANS (தமிழர் – சீனர் கலப்பின திருமணங்களின் குழந்தைகள்) தமிழ் அடையாளத்துக்குப் பதிலாக தம்மை பெரும்பான்மை சீனர்களுடன் அடையாளப்படுத்துவதை நான் அவதானித்திருக்கிறேன். அநேகமாக எல்லா கலப்பினச் சிந்தியன்களும் மன்டறினைத் (Mandarin) தமது இரண்டாவது மொழியாகக் கற்பதுடன், ஒரு சீனப் பெண்ணை மணந்து கொண்டு, அவர்களின் மதத்தையும் இழந்து விடுவர். சிந்தியன் ஒரு தமிழ் ஆணை அல்லது பெண்ணை மணப்பது என்பது கிடையாது என்றே கூறலாம். இவ்வாறு வெளிப்படையாகக் கூறுவது, இக்காலத்துக்குப் பொருந்தாதது ஆயினும், எண்ணிக்கையும், பொருளாதார பலமும் உள்ள இனம் எப்பொழுதும் ஒரு கலப்பினக் குழந்தையின் அடையாளத்தைத்  தீர்மானிப்பதில் முன்னிலை வகிக்கும். புலம்பெயர்ந்த தமிழர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதால், அடுத்த தலைமுறைகளில் தமது தமிழ் அடையாளத்தை முற்றாக இழந்து விடுவர். 
கனடா பல சமூகங்களால் அமைக்கப்பட்ட ஒரு சமூகம் என்றார் (“Canada is a community made up of communities.”) கனடாவின் பதினாறாவது பிரதமர் ஜோ கிளார்க்.  Charlottetown  மாநாடு தொடக்கம் தென்மேற்குப் புரட்சியிலிருந்து  Meech Lake ஆவணம் வரை கனடாவின் ஒவ்வொரு இனக்குழுவின் அடையாளமும் தான் கனடாவின் வரலாற்றை உருவமைத்தது. மேலும், கனடாவில் தமிழர்களின் அரசியல் பலம் எமது மக்களின் பலம் வாய்ந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தான் தங்கியுள்ளது. கனடாவில் தமிழ் கனேடியன் பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதற்கு  அவரது தொகுதியில் கணிசமான தொகையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை தான் காரணமாகும். எங்களின் எண்ணிக்கை குறைவடையும் போது எமது நாட்டில் எங்களின் அரசியல் பலமும் இல்லாமல் போய்விடும்.   
எமது இனத்தை விட்டு வெளியே திருமணம் செய்பவர்களை நாம் இழிவு படுத்தக் கூடாது, அதே வேளையில்  எமது இனத்துக்குள்ளேயே காதலிப்பதையும், திருமணங்களையும்   ஊக்குவிக்க எம்மாலானவரை நாம் முயற்சிக்க வேண்டும்."

 

http://viyaasan.blogspot.qa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.2.2017 at 8:45 PM, விசுகு said:

குமாரசாயண்ணை மற்றும் ரதியின் கருத்துக்களின் தென்படும் ஆதங்கமும் விருப்பங்களும் தேவையான  ஒன்று தான்.

ஆனால் நாம் அதற்கு முன்  சிலவற்றை கணக்கில் எடுக்கவேண்டும்

1- எமது பிள்ளைகள் படிக்கும் நாடு எது?

2- அவர்கள் படிக்கும் முதல் மொழி எது?

3- அவர்கள் பழகும் பாடசாலை மற்றும் வேலையிடத்து  நண்பர்கள் உறவுகள் யார்??

4- அவர்கள் வாழப்போகும் தேசம் எது?

இவ்வளவையும் சேர்த்து பார்த்தால் இதில் தமிழும் தமிழர்களும் 1 வீதம் கூட வரமாட்டார்கள்

எனவே உண்மை கசக்கும்.

ஆனால்.......???

வணக்கம் விசுகர்!

எனது இனத்திற்குள் கட்டாய , வற்புறுத்தல் , நிர்ப்பந்திக்கப்பட்ட திருமணங்களை முதல் வரிசையில் நின்று எதிர்க்கின்றேன்.

ஆனால் தமிழன் என்ற அடையாளத்திற்குள் வரும் போது......எனது கலாச்சாரம்...எனது மண் என்ற உணர்வு வரும் போது குறுகிய வட்டத்திற்குள்ளேயே நிற்பேன். நிற்க வேண்டும்.

இதுதான் இன்றைய காலகட்டம்.


அங்கிருப்பவர்கள் சிங்களமயமாக்கலை எதிர்க்க வேண்டும். நாமோ எமது பிள்ளைகள் விருப்பப்படி நடக்க வேண்டும். இது என்ன நியாயம்?.

நீங்கள் உங்கள் நியாயப்படுத்தை முன்னிலைப்படுத்த முனைகின்றீர்களே தவிர நியாயத்தை கதைக்க முன்வரவில்லை.

 

காலம், நாடு ,உலக சூழ்நிலைகளை பற்றி சிந்தித்து கதைக்க வேண்டும் என யோசித்தால்.....

நாடு இனம் மக்கள் அழிவுகளை மறந்து மனிதம் என்ற கோட்டில் நின்றும்  கதைக்கலாம்.

நான் எனது பிள்ளைகளுக்கும் என்  நண்பர்களின் பிள்ளைகளுக்கும் சொல்லியது இதுதான்..
இளவயதில் திருமணம் செய்யுங்கள். தமிழரை துணையாக தேடுங்கள். இளவயதில் பிள்ளைகளை பெற்றெடுங்கள். சொந்த வீடு வாசல்களை வைத்திருங்கள்.வீட்டில் தமிழில் கதையுங்கள்..உங்கள் தெய்வ வழிபாட்டை தினம்தோறும் கடைப்பிடியுங்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் நண்பர் மிகவும் முட்டாள்தனமான செயலில் இறங்கியுள்ளார். இதனை எப்படி உங்கள் நண்பருக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி, தமிழ்சிறி ?:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

உங்கள் நண்பர் மிகவும் முட்டாள்தனமான செயலில் இறங்கியுள்ளார். இதனை எப்படி உங்கள் நண்பருக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி, தமிழ்சிறி ?:rolleyes:

ஆம்... இணையவன். 
நான், ஏதாவது சொல்லப் போக... வில்லங்கமாக வந்திடுமோ என்று தான், யாழ். கள உறவுகளின் அபிப்பிராயத்தை, பார்த்து விட்டு, 
அவருக்கு... ஏதாவது, சொல்லலாம் என்று, யோசிக்கின்றேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.