Jump to content

விசாவுக்காக பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் இலங்கை ஆண்கள்! உண்மை கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.

ஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற அப்பெண், தனது மனவலியை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை ஆண்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.

அப்பெண்ணின் காதல் கதை இதோ,

எங்களுடைய முதல் சந்திப்பின் போதே, அவன் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று உண்மையை என்னிடம் தெரிவித்தான். எங்கள் சந்திப்பிற்கு அச்சாரம் இட்ட இந்த விசா என்ற வார்தையை அன்று நாங்கள் பேசிக்கொண்டதோடு சரி அதன் பின்னர் நாங்கள் இருவரும் ஒருபோது பேசிகொண்டதில்லை.

அன்று தொடங்கிய எங்கள் சந்திப்பு நீடித்துக்கொண்ட சென்றது. இந்த சந்திப்பின் மூலம் நாங்கள் இருவரும் ஆழமாக ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினோம். அவரது இதயத்தில் எனக்காக ஒரு இடம் இருப்பதையும், எனது இதயத்தில் அவருக்காக ஒரு இடம் இருப்பதையும் எங்கள் இருவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

எனக்குள் இதுபோன்ற ஒருவித மாற்றம் எழுந்ததே இல்லை. அவனை நான் பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும். "கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்", "முன்பே வான் என் அன்பே வா" ஆகிய காதல் கீதங்கள் என் மனதுக்குள் ரீங்காரம் இசைத்து என்னை பரவசப்படுத்தும்.

என் மனதுக்கு அவன் எப்படி வந்தான் என்பதை நினைத்து கொண்டு படுக்கையில் இருக்கையில், வானத்து நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு எங்கள் இருவரின் உருவத்தை ஒன்றாக இணைத்து என் கண்களை கிரங்கடிக்கும்.

நாங்கள் இவருவரும் ஒருவரையொருவர் ஒன்றாக புரிந்துவைத்துக்கொண்டோம். அவன் ஒருபோதும் என் பெண்மையை பற்றி சந்தேகம் கொண்டது கிடையாது. அதுபோன்று எந்தவொரு செயலையும் செய்யவேண்டும் என என்னை கட்டாயப்படுத்தியது கிடையாது. எனது உணர்வுகளுக்கு மதிப்பளித்தான்.

எங்கள் இருவருக்குள்ளும் இணைபிரியாத ஒரு பந்தம் உருவானது. இதனால் எங்கள் இருவரையும் யாராலும் பிரிக்க முடியாது என்பதை உணர்ந்தேன்.

4 மாதங்கள் கடந்தது. ஒரு நாள் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினான். என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? இந்த கேள்வியை கேட்டதும் நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.

ஏனெனில், நாம் சந்தித்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதுவும் இல்லாமல் இதனை அறிந்தால் எனது பெற்றோர் என்ன சொல்வார்களோ என்று.

எனது வயது 19, அவனின் வயது 26. எந்த ஒரு தமிழ் தாயும் 19 வயதுடைய தனது மகளை தனியாக வெளியில் அனுப்ப அனுமதிக்கமாட்டார்கள். அதோடு எனக்கும் அவருக்கும் 7 வயது வித்தியாசம்.

ஆனால், "காதலுக்கு வயதில்லை" என்று சொல்வார்கள். அதுதான் என் வாழ்வில் நடந்தது. அவர் எந்த அளவுக்கு எனக்கு பொருத்தமாக இருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை.

அவன் மீதுள்ள அளவுகடந்த அன்பே, என்னை இப்படியெல்லாம் சிந்திக்க தூண்டிது. இருப்பினும் இந்த சிறுவயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்ற கேள்வி என் மனதுக்குள் எழுந்தது.

நான் பட்டப்படிப்பு முடிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்குள் இருந்தது. ஆனால் அவனின் நோக்கம் எல்லாம் ஒன்று தான், என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும், அதன் மூலம் அவனுக்கு விசா, பட்டப்படிப்பு, வேலை, பணம் ஆகிய அனைத்தும் கிடைக்க வேண்டும்.

சொல்லப்போனால், அவனின் கண்களுக்கு நான் Golden Ticket போன்று தெரிந்துள்ளேன். நாங்கள் இருவரும் காதலிப்பதை அவனது பெற்றோரிடம் சென்று, நான் தான் தெரிவிக்க என்று என்னிடம் கேட்டுக்கொண்டான். மேலும் எனது பெற்றோரிடமும் வந்து முறைப்படி என்னை பெண் கேட்பதிலும் அவன் பின்வாங்கினான்.

விசா என்ற போர்வையில் காதல் நாடகமாடிய அவனின் சுயரூபம் எனக்கு தெரியவந்தது. இவனுக்கு எப்போது விசா கிடைப்பது? எப்போது தொழில் கிடைப்பது? இவை இருந்தால் தான் எனது பெற்றோர் இவனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வார்கள்.

இவனின் விருப்பமும் இலங்கைக்கு செல்வதில்லை, மாறாக வெளிநாட்டிலேயே வசிக்க வேண்டும், அதற்கு என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான்.

அவனுக்கு உண்மையாக இருந்தேன், அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாத என்பதை உணர்ந்தேன், ஆனால் என்னுடைய உணர்வுகளோடு விளையாடிய அவனை மறப்பதை தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை. அதனால் அவனை கைவிட்டு எனது பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.

இந்த காதலின் மூலம் நேர்மறையான எண்ணங்களை கற்றுக்கொண்டேன். அந்த எண்ணங்களோடு பயணிப்பதால் எனது வாழ்க்கை தற்போது நன்றாக இருக்கிறது.

இதன் மூலம், விசா இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்களுக்கும் ஒன்று கூறிக்கொள்கிறேன், உங்களுக்கு எதிர்காலம் இங்கு இல்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் விசா கிடைக்க வேண்டும் என்பதற்காக, எந்தவொரு பெண்ணின் உணர்வுகளோடும் விளையாடதீர்கள். இலங்கையில் எவ்வளவோ அழகான பெண்கள் வசிக்கிறார்கள், அங்கு சென்று உங்களுக்கு பிடித்த பெண்களை திருமணம் செய்துகொள்ளுங்கள்.

ஆனால், அதற்கு பதிலாக என்னை போன்று பெண்களின் அழகான இதயத்தை நொறுக்காதீர்கள்.

எனது இந்த கதையினை வெளிநாட்டு பெண்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விசா இல்லாத ஆண்களின் காதல் வலையில் ஒருபோதும் விழுந்துவிடாதீர்கள், ஏனெனில் உங்களை பயன்படுத்தி அவர்கள் விசா பெற்றுவிட்டார்கள் என்றால் உங்களை விட்டு பிரிந்துசென்று விடுவார்கள். இறுதியில் நீங்கள் தான் மன நிம்மதி இழந்து தவிப்பீர்கள்

http://news.lankasri.com/women/03/110254?ref=lankasritop

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பம்மாத்துக் கதையள் சொல்லக் கூடாது.

நீங்கள் உறவை முறிக்க தேவையற்ற காரணத்தை கூறுகிறீர்கள்.

இமிகிரேசன் அதிகாரிகள் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள்... இந்த விசாவிற்கான கல்யாணம் இலுகுவானதல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சும்மா பம்மாத்துக் கதையள் சொல்லக் கூடாது.

நீங்கள் உறவை முறிக்க தேவையற்ற காரணத்தை கூறுகிறீர்கள்.

இமிகிரேசன் அதிகாரிகள் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள்... இந்த விசாவிற்கான கல்யாணம் இலுகுவானதல்ல.

நாத  முனி அண்ணே..... :206_cat:

சிலர்  இணைக்கும்... செய்திகளின் தலைப்பில் காரம் இருந்தாலும்...
உள்ளுக்கு, கச்சான் கோது, மாதிரி இருப்பதால்... எல்லா செய்திகளையும், வாசித்தால்....
விசர்,  கட்டாயம்...... வரும். :grin:

Link to comment
Share on other sites

காதல் என்றாலே ஒரு வலைதானே! இங்கே வீசா, வீடுவாசல், வேலை, சாதி என்றெல்லாம் ஏன் பிரித்துப்பார்ப்பான்? எல்லாரும் வலை வீசுகின்றார்கள். சிலருக்கு நல்ல மீனாய் மாட்டுகின்றது. இங்கே பெண்ணும் வலை வீசியே உள்ளார். நான்கு மாதங்கள் முன்பின் தெரியாத பையனுடன் டேட்டிங் செய்துவிட்டு இப்படி குறைகூறக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாத  முனி அண்ணே..... :206_cat:

சிலர்  இணைக்கும்... செய்திகளின் தலைப்பில் காரம் இருந்தாலும்...
உள்ளுக்கு, கச்சான் கோது, மாதிரி இருப்பதால்... எல்லா செய்திகளையும், வாசித்தால்....
விசர்,  கட்டாயம்...... வரும். :grin:

ஓம் சிறித்'தம்பி',

திருமண பதிவு அதிகாரிகள், பதிவுக்காக விண்ணப்பம் செய்யும் போதே, உசாராகி போலீசைக் கூப்பிடுகிற நிலையில், அதை தாண்டி, இமிக்கிறேசன் போய், விசா கேட்கிறது பேதி தான்.

உண்மையான காதலா? குறைந்தது இரண்டு வருசம் புரூவ் தேவை... 

விசாவை தாய்நாடு போய் தான் விண்ணப்பிக்க வேண்டும். அங்கே, தனியார் உளவு கம்பனி, மாப்பிளை / பொம்பிளை பின்புலத்தை அக்கு வேறு, ஆணி வேறா எடுத்துக் கொடுத்து விடும்.

பிறகென்ன.....

அவனவன், ITல 6 மாத கோஸ் ஒன்றை முடித்து, சிம்பிளா, வேக் பேர்மிட் எடுத்து செற்றிலாகிறான்...

உந்த 'விசா காதல்' வேலைக்காகாது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40 வருடத்திற்கு முதல் எங்கன்ட பெடியள் லண்டனுக்கு போய் வெள்ளைகளை கட்டி விசா எடுத்து சிட்டிசன் ஆனபிறகு விவாகரத்து செய்து போட்டு ஊரில் வந்து பொம்பிளை தேடினவையள் கண்டியளோ?:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

உந்த 'விசா காதல்' வேலைக்காகாது...

நானும் ஒன்றை றை பண்ணுறன் கெடுத்து விட்டியளே  நல்லா இருக்க மாட்டியள் பாவிகள்  :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே கதையில்... அவன் வாற இடத்தில் அவளை போட்டு எழுதினால் பல நூறு உண்மைக் கதைகள் வெளிவரும். வெளிநாட்டு மாப்பிள்ளைக்காகக் காத்திருக்கும்.. கன்னிகைகள்.. என்ன காதலோடா காத்திருக்கினம்.

வந்திட்டாளவ. சும்மா கலட்டி விடுறதுக்கு நொண்டிச்சாட்டு. விசா.. வயசு.. எல்லாம் அறிஞ்சு.. காதல் வயப்பட்டாவாம்.. ஆனால்.. அதுக்குப் பிறகு... 4 மாசம் முடியத்தான்.. அவை எல்லாம் பிரச்சனையா தெரிஞ்சு தாம். ஆருக்கடி அவிக்கிறியள். இன்னும் இந்த உலகம் உங்க கதையை நம்பும் என்றா. 

முதல்ல... உப்படியான பெட்டையளை.. சட்டத்தின் முன் நிறுத்தி.. உந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு உளவியல் சிகிச்சையும் அளிக்கனும். அப்ப தான் பல பையன்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வராமல் தவிர்க்கப்படும். 

லூசுங்க.. காதல்ல என்ற பெயரில் அலையுதுங்க.. டேட்டிங்.. அதுஇதென்னு. அப்புறம்.... காதலாம்... கத்தரிக்காயாம். :rolleyes:tw_blush:

2 hours ago, Nathamuni said:

அவனவன், ITல 6 மாத கோஸ் ஒன்றை முடித்து, சிம்பிளா, வேக் பேர்மிட் எடுத்து செற்றிலாகிறான்...

உந்த 'விசா காதல்' வேலைக்காகாது....

முனிண்ணே.. அந்தக் காலம் மலையேறிப் போய் கணகாலம் ஆச்சுண்ணோ. இப்ப.. HSMP யும் இல்லை. எல்லாம் PBS (Points based system) ஆகிட்டுது. 6 மாதக் கோஸை வைச்சுக் கொண்டு.. போதிய பொயின்ஸ் எடுக்கிறது முயற்கொம்பு. 

இப்பவும் அப்பவும் எப்பவும்.. விசா எடுக்க இலகுவான வழி.. உடல் உள களைப்பு இல்லாமல்.. விசா எடுக்க உள்ள இலகு வழி.. கல்யாணம் தான். அது பெட்டையளுக்கும் சரி.. பொடியளுக்கும் சரி. 

அடுத்தது... அகதி அந்தஸ்து. இதுக்கு கொஞ்ச உள உளைச்சல்களும் உடல் அலைச்சலும் அவசியம். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

முனிண்ணே.. அந்தக் காலம் மலையேறிப் போய் கணகாலம் ஆச்சுண்ணோ. இப்ப.. HSMP யும் இல்லை. எல்லாம் PBS (Points based system) ஆகிட்டுது. 6 மாதக் கோஸை வைச்சுக் கொண்டு.. போதிய பொயின்ஸ் எடுக்கிறது முயற்கொம்பு. 

ஆ, ஹா ஹா..

நெடுக்கர், 

நான் உந்த IT பக்கமா தான் இருக்கிறேன்.

நைஜீரியா, இந்தியா, சிம்பாவே... தென் ஆப்பிரிக்கா காரர்கள் என்று ஒவ்வொருவரையும் சந்திக்கிறேன்.

6 மாதக் கோசினை முடித்து, பல்லை இளித்துக் கொண்டு  விசா கேட்டு போய் நிண்டால் சரிவருமா?

ஒவ்வொருவரும் சொல்லும் வழிமுறைகள்.... காதால் போய், மூக்கால் வரும் வழிகள். 

படிக்க வந்த எத்தனை பேர் திரும்பி போயிருக்கிறார்கள்?

அதே  நேரம் கலியாண விசா நடக்கவில்லை என்று சொல்லவில்லையே. ஆனால் நாலு மாதத்தில்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

சும்மா பம்மாத்துக் கதையள் சொல்லக் கூடாது.

நீங்கள் உறவை முறிக்க தேவையற்ற காரணத்தை கூறுகிறீர்கள்.

இமிகிரேசன் அதிகாரிகள் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்கள்... இந்த விசாவிற்கான கல்யாணம் இலுகுவானதல்ல.

 

நாதம் அண்ணை

தெரிந்த ஒருவர் ஜெர்மனியில்  தரகர் மூலம் மாப்பிள்ளை தேடினார்
லண்டனில் எஞ்சினியராகப் படிக்கும் ஒருவரின் சாதகம் கிடைத்தது,
படமும் கிடைத்தது.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டது.இரு தரப்புப் பெற்றோருக்கும் சம்மதம்.
பெண் ஐரோப்பாவில் பிறந்தவர். மாப்பிள்ளை இலங்கையில் பிறந்து சிறுவயதிலேயே இந்தியாவிற்குச் சென்று அங்கேயே படித்தவர்.
இப்போது மாப்பிள்ளைக்கு லண்டன் விசா முடிகின்றது.
மாப்பிள்ளையின் படிப்பும் இன்னும் முடியவில்லை.
இவர் எப்படித் தனக்கான விசாவைப் புதுப்பிக்கலாம்?

இவர்கள் எப்படியான சவால்களை எதிர்கொள்ளவேண்டும்?

Link to comment
Share on other sites

3 hours ago, முனிவர் ஜீ said:

நானும் ஒன்றை றை பண்ணுறன் கெடுத்து விட்டியளே  நல்லா இருக்க மாட்டியள் பாவிகள்  :11_blush:

ஒன்றை றை பண்ணினால் நிஜமாகவே சாமியார் ஆகவேண்டியதுதான். :29_smirk: ஒரே நேரத்தில் ஐந்து ஆறுக்கு றை பண்ணினால்தான் அதில் ஒன்றாவது வேர்க் அவுட் ஆகும். குட் லக் முனிவர்! :17_heart_eyes: :17_heart_eyes:

Link to comment
Share on other sites

8 minutes ago, கரும்பு said:

ஒன்றை றை பண்ணினால் நிஜமாகவே சாமியார் ஆகவேண்டியதுதான். :29_smirk: ஒரே நேரத்தில் ஐந்து ஆறுக்கு றை பண்ணினால்தான் அதில் ஒன்றாவது வேர்க் அவுட் ஆகும். குட் லக் முனிவர்! :17_heart_eyes: :17_heart_eyes:

அந்த ஐஞ்சு ஆறும் வேர்க்கவுட் ஆகிட்டா முனிவர் மறுபடியும் ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

அந்த ஐஞ்சு ஆறும் வேர்க்கவுட் ஆகிட்டா முனிவர் மறுபடியும் ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.:grin:

ஒருத்தனால எழும்பியே நிக்கமுடியலயாம். அதுக்குள்ள அஞ்சாறு கேக்குதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

நானும் ஒன்றை றை பண்ணுறன் கெடுத்து விட்டியளே  நல்லா இருக்க மாட்டியள் பாவிகள்  :11_blush:

நீங்கள், தெற்கத்திப் பக்கமா சைற் அடிக்கிறாத சொன்னியளே...

இது என்ன புதுக்கதை..? tw_astonished:

1 hour ago, வாத்தியார் said:

நாதம் அண்ணை

தெரிந்த ஒருவர் ஜெர்மனியில்  தரகர் மூலம் மாப்பிள்ளை தேடினார்
லண்டனில் எஞ்சினியராகப் படிக்கும் ஒருவரின் சாதகம் கிடைத்தது,
படமும் கிடைத்தது.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டது.இரு தரப்புப் பெற்றோருக்கும் சம்மதம்.
பெண் ஐரோப்பாவில் பிறந்தவர். மாப்பிள்ளை இலங்கையில் பிறந்து சிறுவயதிலேயே இந்தியாவிற்குச் சென்று அங்கேயே படித்தவர்.
இப்போது மாப்பிள்ளைக்கு லண்டன் விசா முடிகின்றது.
மாப்பிள்ளையின் படிப்பும் இன்னும் முடியவில்லை.
இவர் எப்படித் தனக்கான விசாவைப் புதுப்பிக்கலாம்?

இவர்கள் எப்படியான சவால்களை எதிர்கொள்ளவேண்டும்?

வாத்தியார், 

மன்னிக்க வேண்டும்.... இது கலியாண, வாழ்க்கை விசயம்...

நா ஒன்று கிடக்க, ஒன்றை சொல்லக் கூடாது தானே.

தகுந்த ஆலோசனை, முன்னரே எடுத்திருப்பார்கள், மேலும் எடுக்கச் சொல்லுங்கள்.

36 minutes ago, நந்தன் said:

ஒருத்தனால எழும்பியே நிக்கமுடியலயாம். அதுக்குள்ள அஞ்சாறு கேக்குதோ

மிடுக்கா திரியிற முனிவருக்கு எழும்பி நிக்க முடியாது என்று எத வைச்சு சொல்லுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கரும்பு said:

ஒன்றை றை பண்ணினால் நிஜமாகவே சாமியார் ஆகவேண்டியதுதான். :29_smirk: ஒரே நேரத்தில் ஐந்து ஆறுக்கு றை பண்ணினால்தான் அதில் ஒன்றாவது வேர்க் அவுட் ஆகும். குட் லக் முனிவர்! :17_heart_eyes: :17_heart_eyes:

ம்கும் எங்க பாஸ் அது செட்டாகிறது இதுக்குள்ள குட் லக் வேறயா 

 

3 hours ago, ஜீவன் சிவா said:

அந்த ஐஞ்சு ஆறும் வேர்க்கவுட் ஆகிட்டா முனிவர் மறுபடியும் ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.:grin:

நல்ல சந்தோசம் போல ஜீவன் அண்ணை  நமக்கென்ன ஆரம்பிச்சா போச்சு க்ரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன சிங்கிச்சா சிங்கிச்சா மஞ்சள் கலரு சிங்கிச்சா 

 

2 hours ago, நந்தன் said:

ஒருத்தனால எழும்பியே நிக்கமுடியலயாம். அதுக்குள்ள அஞ்சாறு கேக்குதோ

என்ன ஒரு தத்துவம் ம்கும் நத்தண்ணை  நல்லா வரிவியள்tw_blush:

 

2 hours ago, Nathamuni said:

நீங்கள், தெற்கத்திப் பக்கமா சைற் அடிக்கிறாத சொன்னியளே...

இது என்ன புதுக்கதை..? tw_astonished:

மிடுக்கா திரியிற முனிவருக்கு எழும்பி நிக்க முடியாது என்று எத வைச்சு சொல்லுறியள்?

அப்படி ஒன்றும் இல்லை நாதா அது நண்பனுக்காக எழுதியது தெக்கத்தி பக்கம் நமக்கு கிழக்கு செவக்கையிலே அவ கீர அறுக்கையிலே மனம் லேசா பட்டு 
சிங்கனை பார்த்துமா நத்தன் அண்ணைக்கு தெரியல  நல்லா கேளுங்கள் நாதா மிடுக்கா திரியும் அழகன்னையா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.