Jump to content

"உல்லாசப் பறவை" சர்வதேச போட்டியில் இலங்கைக்கு எட்டுமா முதலிடம்!


Recommended Posts

"உல்லாசப் பறவை" சர்வதேச போட்டியில் இலங்கைக்கு எட்டுமா முதலிடம்!
 
 
"உல்லாசப் பறவை" சர்வதேச போட்டியில் இலங்கைக்கு எட்டுமா முதலிடம்!
இன்று முழு உலகமும் உல்லாசப் பயணத்துறையை நினைவுகூர்கின்றது. இயந்திரம் போல கடுமையாக உழைத்து களைத்து, உற்சாகமாக சில வாரங்களைக் கழிப்போம் என்ற நோக்கோடு, விமானத்தில் பறந்தோ, கப்பலில் மிதந்தோ, ரயில் பயணங்களை மேற்கொண்டோ அல்லது தமது சொந்த வாகனங்களில் பயணித்தோ உல்லாசமாக இருந்து விட்டு வருவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் அறியாத ஒன்றல்ல.
 
thumbnail_lanka2.jpg
 
 
பறவைகள் இடம்பெயர்ந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணித்துச் செல்வது போல, கூட்டம் கூட்டமாக காட்டுவிலங்குகள் புதிதாக பயிர்பச்சைகள் உள்ள இடங்கள் நாடிச் செல்வதுபோல, நாட்டுக்கு நாடு மக்கள் பயணித்து வருகின்றார்கள்.
 
இந்தப் பயணங்களால் இன்று பல உலகநாடுகள் பெருமளவு சம்பாதித்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. உல்லாசப் பயணத்துறையில் உலக நாடுகளை ஆய்வு செய்த மாஸ்டர் கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனம், கடுகதி வளர்ச்சிப் பாதையில் இலங்கை நான்காவது இடத்தில் நிற்கின்றது என்று அறிவித்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. 
 
அதிலும் 132 உலக நாடுகளோடு போட்டிபோட்டுக் கொண்டு, இந்த நான்காம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விடயந்தான். போர்வடுக்களை இனனமும் சுமந்து கொண்டு நிற்கும் ஒரு குட்டி நாட்டுக்கு இந்த அந்தஸ்து ஒரு வரப்பிரசாதமே! 
 
1475046493_thumbnail_Sri-Lanka-tourism.jpg
 
இலங்கையை விடுத்து இந்த உல்லாசப் பயணத்துறை சர்வதேசரீதியாக என்ன நிலையில் இருக்கின்றது?
 
உல்லாசப்பயணத் துறை 2015 இல் 4.6 வீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. உலகெங்கும் பயணிக்கும் உல்லாசப் பயணிகள் தொகையானது 1,184 மில்லியனைத் தொட்டுள்ளது என்கிறார்கள்.  
 
இந்தச் சுற்றுலாத் துறை சர்வதேசரீயில் ஒப்பிடும் போது ஏற்றுமதி வருவாயாக ரூபா 1.5 ரிறில்லியன் தொகையை சம்பாதித்துள்ளது. 
 
2030ம் ஆண்டளவில் உலக நாடுகளுக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் தொகை 1.8 பில்லியனைத் தொடும் என்று ஆருடம் சொல்கிறது.
 
thumbnail_lanka1.jpg
கணிசமான வளர்ச்சிதான்.
உல்லாசப் பயணிகளை எதிர்பார்க்கும் நாடுகளுக்கு இது உற்சாகமான செய்திதான். பணம் காய்க்கும் மரம் நாட்டுக்குள் முளைவிடுவதை எந்த அரசுதான் விரும்பாது?
 
தேர்ந்தெடுத்த 132 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ள தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில்தான் இந்த வருட உல்லாசப் பயணத்துறை நாள் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் இடம்பெறப் போகின்றன.
 
உல்லாசப் பயணத்துறை வளர்ச்சி ஒருபுறமிருக்க இந்தத் துறை தரும் சௌகர்யங்களையும் அசௌகர்யங்களையும் சற்று நோக்க வேண்டியுள்ளது.
 
பல வேலை வாய்ப்புகளை நேரிடையாகவும் மறைமுகமாகவும் வழங்குவது இதிலுள்ள பெரிய சௌகர்யம். இந்த உல்லாசப் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சாதனங்கள் மறைமுகமாக வருவாய் தேடிக்கொள்கின்றன. 
 
இவர்கள் தங்க இடம்கொடுக்கும் விடுதிகள் பணம் சம்பாதிக்கின்றன. இப்படி ஒன்றைத் தொட்டு இன்னொன்று என்ற கதையாக உல்லாசப் பயணிகள் வருகை பலருக்கு பல வழிகளில் உழைப்பைத் தேட வழி சமைக்கின்றன.
 
இவை மட்டுமின்றி பரம்பரை பரம்பரையாகத் தொடரும் கலைநிகழ்வுகளைத் தொடர்ந்து பேண இந்த உல்லாசப் பயணத்துறை உதவி வருகின்றது என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். 
 
1475046510_thumbnail_tourists.jpg
தன் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பயணித்து வருபவர், அந்த நாட்டுக்கே தனித்துவமாக விளங்கும் மொழி, உடைக் கலாச்சாரம், உணவு முறை, நாட்டியங்கள், தேசிய விழாக்கள் போன்றவற்றையே பார்த்து, ரசித்து, சுவைக்க விரும்புகின்றார். 
 
இலங்கை வருபவருக்கு மேற்கத்தைய நடனங்களில் நாட்டம் இருப்பதில்லை. மாறாக இங்குள்ள கிராமப்புற நடனங்களே அவர்களைக் கவர்கின்றன. இங்குள்ள பாராம்பரிய திருவிழாக்களே அவர்களைக் கவர்ந்திழுக்கின்றன. எனவே பலராலும் கைவிடப்பட்ட பல பாரம்பரியக் கலை நிகழ்வுகளுக்கு இந்த உல்லாசப் பயணத்துறை உயிர் கொடுக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. 
 
கத்தி இருந்தால் கழுத்தை அறுக்கலாம் கத்தரியையும் அறுக்கலாம் என்ற அந்தப் பழைய உதாரணத்தைத்தான் மீண்டும் சொல்லவேண்டியள்ளது. 
 
உல்லாசப் பயணத்துறை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உயிர்நாடியாக இருப்பினும், சில நெருடல்களையும் இங்கே சொல்லாமல் இருக்க முடியாது.
 
சனநெரிசல் என்பது முக்கியம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. கொழும்பு போன்ற பெரிய நகரங்கள் வாகனங்கள், பொதுமக்கள் என்று நெரிசல் மிகுந்த நகரங்களாகி இருக்கின்றன. 
இந்த நெரிசலை அதிகப்படுத்துவது போல உல்லாசப் பயணிகளின் வருகையும் சில சமயங்களில் அமைந்து விடுகின்றது. போதை வஸ்துகள் புழங்குவதற்கும் இந்த உல்லாசப் பயணிகளே காரணிகளாகி விடுகின்றார்கள். 
 
விபச்சாரம் அதிகரிக்க, மதுபாவனை உயர இதே உல்லாசப் பயணிகள் ஒரு காரணமாக அமைவதில் ஆச்சரியமேதும் இல்லை. வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க புதிதாக எழும்பும் பல கட்டடங்கள், பல ஏழைமக்களின் குடிமனைகளை பாதிக்கவும் தவறவில்லை. 
 
இயற்கையாகவே ஒரு நாட்டிற்கு கிடைக்கும் மூலவளங்கள் கூட உல்லாசப் பயணிகள் வருகையால் பாதிப்பு அடைய வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக தண்ணீர் விநியோகம் தடைப்படுதல், பாரம்பரிய இடங்கள் பாதிப்படைதல், சூழலை மாசுபடுத்தும் அதிக கழிவுகள், அதிக வாகனங்களால் வெளிக்கிளம்பும் புகை,  மாசுபடும் கடற்கரையோரங்கள், பவளப் பாறைகள் என்று பட்டியல் நீள்கின்றது.
 
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த உல்லாசப் பயணத்துறையில் சாதகங்கள் அதிகம் போல் தோன்றும். அரசு கடுமையான சட்டதிட்டங்களை வகுத்து கெடுபிடியாக இருந்தால், உல்லாசப் பயணத்துறையின் சாதகங்களே மிகையாக இருக்கும் என்பது திண்ணம்.
 
thumbnail_lanka.jpg
சரி இலங்கை இத்துறையில் கிடுகிடு வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. சந்தோஷந்தான் நான்காம் இடத்தில்தானே இருக்கின்றது? முதலாம் இடத்தைப் பிடிக்க வேண்டாமா?
 
உல்லாசப் பயணத்துறை என்பது எல்லா வயதினருக்கும் உரியது. ஆனால் உல்லாசப் பயணம் என்பது இளம் வயதினருக்கு உரியது என்றொரு மாயை நிலவுகின்றது. 
 
இருப்பினும் 2030இல் வயதாளிகள் தொகை பெருமளவு அதிகரிக்கப் போகின்றது என்று புள்ளி விபரங்கள் சொல்லும்போது, வருவாய் ஈட்டும் இந்தத் துறை வயதாளிகளைக் குறிவைத்து செயற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றவில்லையா?
 
2030இல் ஐ.நா.சபையின் புள்ளி விபரங்களின்படி, உலக ஜனத்தொகையில் அறுவரை எடுத்துக் கொண்டால் அதில் ஒருவர் 60 வயதைத் தாண்டிய முதியவராக இருப்பாராம்.
2015ம் ஆண்டில் இலங்கை வருகை தந்த உல்லாசப் பயணிகள் தொகையை நோக்கினால் இதில் 11.4 வீதமானவர்கள் 60 வயதைத் தாண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
 
எனவே ஏனையவர்களை விட அதிக ஓய்வு நேரமும், நிரந்தர ஓய்வூதிய வருமானமும் கொண்ட இவர்களை நன்கு ஆதரிக்கும் நாடு என்ற பெயரைத் தட்டிக் கொண்டால், இந்தப் பதினொரு வீதம் இரண்டு மடங்காகவோ, மூன்று மடங்காகவோ அதிகரிக்க வாய்ப்புண்டல்லவா?
 
விமான இருக்கைகளில் சக்கர நாற்காலிகளுடன் கூடிய வசதி என்று தொடங்கி, இவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் அவர்களை கவனிப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் அவர்களின் மொழி தெரிந்த நபர், மற்றும் அவர்களுக்கான துரித மருத்துவ சேவை, வினைத்திறனான பணப்பரிமாற்று சேவை, அவர்களை கவரும் பொழுதுபோக்குகள் வரை வசதிகள் செய்து கொடுக்கப்படுமாயின் இந்த ஓய்வு பெற்றவர்கள் இங்கு அதிக தொகையில் வரலாம் அல்லவா?
 
இந்த வசதிகளை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல், இணையப் பிரச்சாரங்கள் மூலம் இவற்றறை உலகறியச் செய்யும்போது, வாய்ப்புகள் விரிகின்றன என்று சொல்லவும் வேண்டுமா?
 
ஒரு நாட்டிற்கு வருகை தருபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக வருகை தருகின்றனர். நாம் இவர்கள் எல்லோரையும் ஒட்டு மொத்தமாக உல்லாசப் பயணிகள் என்று முத்திரை குத்தி விடுகின்றோம். 
 
1475046530_thumbnail_tourists-at-the-maha-oya-river-.jpg
தமது வேலைத் தலங்களில் ஆற்றிய சேவைக்காகக் ளெரவிக்கப்பட்டோ, அல்லது பாராட்டப்பட்டோ பரிசாக ஒரு பயணத்தைப் பெற்று உல்லாசப் பயணிகளாக நாடு விட்டு நாடு செல்பவர்கள் ஒரு சாரார். 
 
தங்கள் உடல்நிலை அசௌகர்யம் காரணமாக ஒரு வாரமோ ஒரு மாதமோ தங்கியிருந்து நல்ல சிகிச்சை பெற்று சொந்த நாடு திரும்புபவர்களும் உல்லாசப் பயணிகளே. தமது வர்த்கப் பரிமாற்றத்திற்காக, பேச்சுவார்த்தைக்காக எனப் புறப்பட்டு ஒரு வார காலம் நின்று திரும்புவோரும் உல்லாசப் பயணிகள்தான். சில வருடங்கள் தங்கியிருந்து பல்கலைக் கழகப் படிப்பை முடிக்கவோ, அல்லது மேற்படிப்பை முடிக்க ஒரு குறிப்பிட்ட காலம் தங்கியிருப்பவர்களையும் நாம் உல்லாசப் பயணிகள் என்றே அழைக்கின்றோம்.
 
ஆபத்தானவைகளாக இருந்தாலும், அதை நேசிப்பவர்கள் (உதாரணத்திற்கு மலையேறுவது) சாகசங்களை விரும்பி உல்லாசப் பயணிகளாக இன்னொரு நாட்டிற்கு போய் வருகின்றார்கள். சமய அனுஷ்டானங்களுக்காக, யாத்திரை மேற்கொள்பவர்களும் உல்லாசப் பயணிகளே.
 
வேலைப் பளு கொஞ்சம் குறையட்டும் என்று மனைவி பிள்ளைகளோடு, பாடசாலை விடுதலை நாட்களில் இன்னொரு நாட்டிலுள்ள உறவினர் வீடு சென்று அங்கு தங்கி நாட்டையும் சுற்றிப் பார்த்து வீடு திரும்புபவர்கள் இன்னொரு ரக சுற்றுலாப் பயணிகள்.
 தனியனாக தோளில் பொதிகளுடன் எந்த விடுதிகளையும் நம்பாமல் பாதையோரங்களில் படுத்துறங்கி நடையில் பலதையும் பார்த்து ரசிக்கும் உல்லாசப் பயணிகளும் இருக்கின்றார்கள். விளையாட்டு விழாக்களில் போட்டியாளர்களாகப் பங்கேற்க வந்து, மேலதிகமாக ஒரு வாரத்தையும் கழித்து விட்டு செல்லும் உல்லாசப் பயணிகளையும் நீங்கள் காணலாம்.
 
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல, உல்லாசப் பயணிகள் என்றால் அதில் கூட பலரகம் என்பதை நீங்கள் இப்பொழுது நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள்.
 
அது எந்த ரகமாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அதே உல்லாசப் பயணியை இருட்டில் மடக்கி வல்லுறவு கொள்ள முயல்வதோ அல்லது, அவர்களது விலையுயர்ந்த கைப்பேசியை திருட எத்தனிப்பதோ, அல்லது அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபடுவதோ ஒரு நாட்டின் உல்லாசப் பயணத்துறையை வளர்க்க என்றுமே உதவப் போவதில்லை..
 
வளர்சிப் பாதையை நோக்கி வீறுநடைபோட்டு நடக்க வேண்டுமானால் அரசு மட்டுமல்ல நாட்டு மக்களினன் கணிசமான பங்களிப்பும் இருந்தால்தான், இந்தத் துறை வளரும், முதலாம் இடத்தைப் பிடிக்கும்.
 

http://onlineuthayan.com/article/253

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.