Jump to content

ஓய்வு விடுதியில் உல்லாசம் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயலால் விசனம்.


Recommended Posts

ஓய்வு விடுதியில் உல்லாசம் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயலால் விசனம்.
 
 
ஓய்வு விடுதியில் உல்லாசம் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயலால் விசனம்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் பெண்களுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பிரபல சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது
 
யாழ்ப்பாணத்தின் பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி ஒருவரும் அப் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் விடுமுறையில் கதிர்காமம் சென்றுள்ளனர். கதிர்காமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸாருக்கான ஓய்வு விடுதியில் இவர்கள் தங்கிருந்தனர். 
 
பொலிஸாருக்கான ஓய்வு விடுதியில் பொலிஸார், மற்றும் அவரது குடும்பத்தினர் மாத்திரமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். இந் நிலையில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி  இவ் விடுதியினுள் மதுபான போத்தல்களுடன் இரு  இளம் பெண்களையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இதை அவதானித்த அதிகாரிகள் அப் பகுதி சிரேஸ்ட உதவிப் பொலிஸ் மா அதிபரிடம் தகவல் வழங்கினர். இதன்போது குறித்த விடுதியில் பொலிஸ் பொறுப்பதிகாரியும் உதவிப் பொலிஸ் பரிசோதகரும் மதுபோதையில் இரு இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியின்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி உதவிப் பொலிஸ் மாஅதிபர் யாழ்ப்பாண உதவிப் பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 
 
சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரி இவ்வாறு முறைகேடாக நடந்துகொண்டமைக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொள்வார்களென மக்கள் வினா எழுப்பியுள்ளார்கள். 

http://onlineuthayan.com/news/18292

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.