Jump to content

“உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்”


Recommended Posts

“உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்”

 

 

sorryrrr.jpg

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் தெற்கின் இனவாதத்தை மேலும் பலபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.  அதேபோல் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உருப்பினரும் அமைச்சருமான நிலம் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். 

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்கவும் முதலமைச்சர்களின் அதிகாரங்கள் ஒரு எல்லைக்கும் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் நல்ல உதாரணமாகும். ஆகவே உடனடியாக அவர்களின் அதிகாரங்களை வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/11901

Link to comment
Share on other sites

கூற்றுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு விக்னேஸ்வரனிடம் சுதந்திரக் கட்சி கோரிக்கை

 

கூற்றுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு விக்னேஸ்வரனிடம் சுதந்திரக் கட்சி கோரிக்கை


கூற்றுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக எழுக தமி;ழ் போராட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.


இந்த விடயம் குறித்து விக்னேஸ்வரனுக்கு எதிராக சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


விக்னேஸ்வரனின் கருத்துக்கள் மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குதல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்பில் கேள்வியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


புதிய அரசியல் சானத்தை அமைக்கும் போது இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


விக்னேஸ்வரன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை பிழையாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது வடக்கிலும் தெற்கிலும் இனவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


நாட்டை பிளவுபடுத்த எந்த வகையிலும் இடமளிக்கப்படாது எனவும் அவ்வாறான சமஸ்டி முறையிலான ஓர் அரசியல் சாசனம் அமைக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136479/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் கதஈகிற கதைக்கு எப்ப மன்னிப்பு கேட்பியள்>..

Link to comment
Share on other sites

article_1475208730-1.jpg

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரும்புவதைப் பெற்றுக்கொடுக்க முடியாது. அவர் விரும்பும் தமிழீழமோ சமஷ்டி முறையிலான ஆட்சியையோ, புதிய அரசியலமைப்பில் உருவாக்கிவிட முடியாது” என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கூறினார்.   

இவ்வாறானவர்களின் கருத்துக்களைக் கண்டு அஞ்சி, கலவரமடைய வேண்டாமென, தெற்கு வாழ் மக்களிடம் கேட்டுக்கொள்வதாகக் கூறிய அமைச்சர், புதிய அரசியலமைப்புக்கான அங்கிகாரத்தைப் பெற, மக்களிடமே வரவேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினார்.   

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில், நேற்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,   

“எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டு விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தானது, சிறுபிள்ளைத் தனமானது. ஒரு முதலமைச்சராக இருக்கவேண்டியவர் தெரிவிக்கக்கூடிய பொறுப்பான கருத்தல்ல அது.  ஜனாதிபதியின் தலைமையில், இந்நாட்டின் இனங்களுக்கு இடையே, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு சூழலில், இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதானது, தெற்கில் இனவாத அரசியலைப் பயன்படுத்துபவர்களுக்கு சாதகமாகிவிடும். அரசியலமைப்புச் சீர்திருத்தமானது, இன்னமும் உருவாக்கப்படவில்லை.

அதற்கு நீண்டதொரு படிமுறையொன்று உள்ளது. அதனைப் பிரயோகிக்காமல், அரசியலமைப்பினை உருவாக்க முடியாது. விக்னேஸ்வரனோ, சம்பந்தனோ, பிரதமரோ அல்லது நானோ விரும்பினாற்போல், அரசியலமைப்பொன்றை உருவாக்கிவிட முடியாது. சமஷ்டிக் கோரிக்கையோ, தமிழீழக் கோரிக்கை கொண்டோ, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமானால், இவ்விரண்டையும் நாங்கள் நீக்குவதற்கான முயற்சியை முன்னெடுப்போம். எவ்வாறாயினும், அரசியலமைப்பு விடயத்தின் இறுதியில், மக்கள் தீர்ப்பெற்றதொன்று உண்டு. அது, மக்களின் அபிலாஷைப்படியே நிறைவேற்றப்படும். அதனால், இவ்வாறானவர்களின் கருத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை.   

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் இரண்டு பிளவுபட்ட கருத்துநிலை காணப்படுகின்றது. ஒரு தரப்பு, நடுநிலையுடன், நாட்டின் நிலைவரங்களை அறிந்து, அதற்கேற்றாற்போல் நடுநிலையுடன் செயற்படுகின்றது. மற்றைய தரப்பு, பிரபாகரனின் தமிழீழம் என்ற இனவாதக் கருத்தினைக் கொண்டு செயற்படுகின்றது. விக்னேஸ்வரனின் கருத்தானது, இரண்டாந்தரப்பினரை மாத்திரமே திருப்திப்படுத்தும். விக்னேஸ்வரனுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கட்சி என்ற வகையில் உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்” என, வலியுறுத்தினார்.  

http://www.tamilmirror.lk/182882/-வ-க-ன-ஸ-வரன-க-ட-பத-க-ட-க-க-த-ந-மல-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.