Jump to content

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணைக்கு உத்தரவு


Recommended Posts

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணைக்கு உத்தரவு

 

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனந்தி சசிதரன் (கோப்புப்படம்)
அனந்தி சசிதரன் (கோப்புப்படம்)

விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவியான அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் என கூறப்படுபவர்கள் தொடர்பில் பொய்யான ஆவணம் ஒன்றை அரச சட்டத்தரணியும், இராணுவத்தினரும் அடுத்த தவணைக்குக் கொண்டு வருவார்கள் என்றார்.

மேலும் அவர், நீதிமன்ற விசாரணையில் நம்பிக்கையில்லை என, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தமை தொடர்பில் அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என உதவி அரசு வழக்கறிஞர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அனந்தி சசிதரன் இந்தக் கருத்தைக் கூறியிருந்தார் என அதற்கான இறுவட்டு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபற்று வருகின்றன.

இந்த நிலையிலேயே இந்த வழக்கு விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு அனந்தி சசிதரன் வருவதாக ஊடக பேட்டியில் தெரிவித்துள்ளதாகவும், அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என அரச தரப்பில் உதவி அரசு வழக்கறிஞர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37506362

Link to comment
Share on other sites

3 இலட்சம் தமிழ் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் முடக்கி முள்ளுவேலிக்குள் அடைத்த போது,
1983 தமிழர் சொத்துக்களை சூறையாடிய போது,  
1980 களில் தமிழரின் நூலகங்கள்  எரிக்கப்படும் போது,
2009 இன் பின்னர் தமிழரின் சொத்துக்கள் ஆலயங்கள் சிங்கள-பௌத்த ராணுவப் பயங்கரவாதிகளால் சூறையாடி அழிக்கப்பட்ட போது, நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரைகள் தமிழர் காணிகளில் அமைக்கப்படும் போது,
இது போன்ற பல்லாயிரம் சந்தர்ப்பங்களில்,
மூடிக் கொண்டிருந்த பௌத்த பயங்கரவாத அரசுகளின் தமிழின அழிப்புக்கு பெரும்துணை போன சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் கூடாராமே சட்டமா அதிபர் திணைக்கள பயங்கரவாதிகள்   

தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசின் (அ) நீதித்துறையால் இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

சுயாதீனமாக தமிழரிடம் ஒருவாக்கெடுப்பு நடத்தினால் இலங்கை நீதிமன்ற செயற்பாடுகள் மீது தமிழருக்கு நம்பிக்கை இல்லை என்ற மாபெரும் உண்மை வெளிவரும்.

குறிப்பாக சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசுகளின் தமிழின அழிப்புக்கு பெரும்துணை போன சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் கூடாராமே சட்டமா அதிபர் திணைக்களம் எனப்படும் இடம்.

இதை ஒரு சர்வதேச நீதிமன்றில் மிக சுலபமாக நிரூபிக்க முடியும். தைரியம் இருந்தால் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசின் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் கூடாராமான சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள பயங்கரவாதிகள் சர்வதேச நீதிமன்றில் அனந்தி சசிதரனின் மீது வழக்கு தொடரட்டும் பார்க்கலாம்.  

சிங்கள-அரச நீதித்துறைப்  பயங்கரவாதிகளின் அராஜகத்தை எதிர்த்து அனந்தி சசிதரன் உடனடியாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யவேண்டும்.

 

Link to comment
Share on other sites

14 minutes ago, போல் said:

சிங்கள-அரச நீதித்துறைப்  பயங்கரவாதிகளின் அராஜகத்தை எதிர்த்து அனந்தி சசிதரன் உடனடியாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யவேண்டும்.

நல்ல விடயம், மற்றவர்களை எதிர்பாக்காமல் நீங்களே முன்னின்று செய்யுங்கள். உங்களுக்கு ஏதாவது உதவி தேவையாயின் நிச்சயமா நானும் கள உறவுகளும் செய்வார்கள் என்று நம்புகின்றேன்.

 

19 minutes ago, போல் said:

1980  தமிழரின் நூலகங்கள்  எரிக்கப்படும் போது

மற்றது நூலகம் எரிக்கப்பட்டது 1 ம் திகதி ஜூன் மாதம் 1981.

Link to comment
Share on other sites

1 minute ago, ஜீவன் சிவா said:

நல்ல விடயம், மற்றவர்களை எதிர்பாக்காமல் நீங்களே முன்னின்று செய்யுங்கள். உங்களுக்கு ஏதாவது உதவி தேவையாயின் நிச்சயமா நானும் கள உறவுகளும் செய்வார்கள் என்று நம்புகின்றேன்.

 

மற்றது நூலகம் எரிக்கப்பட்டது 1 ம் திகதி ஜூன் மாதம் 1981.

நன்றி!
1980 களில் என திருத்த வேண்டும்.

எரிக்கப்பட்டது ஒரு நூலகம் மட்டுமல்ல. 

Link to comment
Share on other sites

Just now, போல் said:

நன்றி!
1980 களில் என திருத்த வேண்டும்.

எரிக்கப்பட்டது ஒரு நூலகம் மட்டுமல்ல. 

அது ஒருகாலத்தில் எனது வீடு.

பாடசாலை விடுமுறைகளில் நான் வீட்டில் முழித்திருந்ததைவிட இங்கு விழித்திருந்து அதிகம்.

Link to comment
Share on other sites

நாட்டில் இரண்டு விதமான பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது பொலிஸ் பயங்கரவாதம். இரண்டாவது நீதிமன்றமயப்படுத்திய பயங்கரவாதமாகும் என்று தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகமாக மாறியுள்ளதாகவும் தேசப்பற்றுள்ள பெங்கமுவே நாலக்க தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.