Jump to content

முதல் ஒருநாள் போட்டி ; ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷ் அதிர்ச்சி தோல்வி (படங்கள் இணைப்பு)


Recommended Posts

முதல் ஒருநாள்  போட்டி ; ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷ் அதிர்ச்சி தோல்வி (படங்கள் இணைப்பு)

 

 

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

252768.3.jpg

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் மொஷ்டைக் ஹுசைன் 45 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்கார் ஸ்டனிக்ஷாய் 57 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

252784.5.jpg252783.3.jpg252773.3.jpg

http://www.virakesari.lk/article/11876

Link to comment
Share on other sites

 

2-வது ஒருநாள்: வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான் வெற்றி

 

 
வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்த ஆப்கான். | படம்: ஏ.பி.
வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்த ஆப்கான். | படம்: ஏ.பி.

மிர்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமன் செய்துள்ளது.

டாஸ் வென்ற ஆப்கன் கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸய் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார், அந்த அணி 49.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கான் அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனையடுத்து வங்கதேச ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸாய் (57), மொகமது நபி (49) ஆகியோர் 5-வது விக்கெட்டுக்காக 107 ரன்களைச் சேர்த்ததே வங்கதேச தோல்விக்குக் காரணம். இருவரும் ஆட்டமிழந்த போது 174/6 என்று ஆப்கான் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது, அப்போது 40.3 ஓவர்களே ஆகியிருந்தது. ஆனால் நஜிபுல்லா சத்ரான் பின்கள வீரர்களைக் கொண்டு இலக்கை எட்ட உதவினார். கடைசி 35 வெற்றி ரன்களை எடுக்க ஆப்கான் அணி 9 ஓவர்கள் போராட வேண்டியிருந்தது.

மொகமது ஷசாத், 35 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்களை எடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தில் பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறும்போது ஆப்கான் அணி 63/4 என்று இருந்தது. அப்போது நபி, ஸ்டானிக்சாய் இணைந்தனர், ஷசாத் அவுட் ஆன அதே ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் விளாசப்பட்டாலும் அடுத்த பவுண்டரி வருவதற்கு போராட வேண்டியதாயிற்று.

ஆனால் இருவரும் பொறுமையுடனும் நிதானத்துடன் ஆடினர், ஸ்டானிக்சாய் தனது 6-வது ஒருநாள் அரைசதத்தை எடுக்க, மொகமது நபி 49 ரன்களில் மஷ்ரபே பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே ஸ்டானிக்சாயும் மொசாடெக் ஹுசைனிடம் வீழ்ந்தார், லெக் திசையில் டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷாகிப் உல் ஹசன் 4 விக்கெட்டுகளை 47 ரன்களுக்குக் கைப்பற்றினார். மஷ்ரபே அடுத்த ஓவரை வீச நஜிபுல்லா, அஷ்ரப் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ள மஷ்ரபே ஓவரும் முடிவுக்கு வந்தது.

கடைசியில் 13 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் முஷ்பிகுர் ரஹிம் ஸ்டம்பிங் ஒன்றை ஸத்ரானுக்கு நழுவ விட்டார். கடைசி ஓவரில் ஸ்கோர்கள் சமமான போது நஜிபுல்லா ஆட்டமிழக்க கடைசியில் தவ்லத் ஸத்ரான் பவுண்டரி அடித்து ஆப்கானுக்கு ஒரு அரிய சர்வதேச வெற்றி கிட்டியது.

முன்னதாக வங்கதேசம் 111/2 என்ற நிலையிலிருந்து ஆட்டத்தை கோட்டை விட்டது. காரணம் ரஷித் கான், இவர் 3 விக்கெட்டுகளை 35 ரன்களுக்குக் கைப்பற்றினார். தமிம் இக்பால், சவுமியா சர்க்கார் ஆகியோர் தலா 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மஹமுதுல்லா 25 ரன்களில் பவுல்டு ஆனார். முஷ்பிகுர் ரஹின் 38 ரன்களையும், மொசாடெக் ஹுசைன் 45 பந்துகளில் 45 ரன்களையும் எடுக்க, கடைசியில் இவர் ரூபல் ஹுசைனுடன் சேர்ந்து 43 ரன்களைச் சேர்த்திருக்கா விட்டால் வங்கதேசம் 165 ரன்களிலேயே முடிந்திருக்கும். கடைசி 7 விக்கெட்டுகளை 86 ரன்களில் வங்கதேசம் இழந்ததே ஆப்கான் வெற்றிக்கு திருப்பு முனை ஏற்படுத்தியது.

ஆட்ட நாயகனாக மொகமது நபி தேர்வு செய்யப்பட்டார், காரணம் இவர் பேட்டிங்கில் 49 முக்கிய ரன்களை எடுத்ததோடு, பவுலிங்கில் ஷாகிப் உல் ஹசன் (17), மோர்டசா (2) ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி 10 ஓவர்கள் 3 மெய்டன் 16 ரன்கள் 2 விக்கெட் என்று அபாரமாக செயல்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/2வது-ஒருநாள்-வங்கதேசத்துக்கு-அதிர்ச்சியளித்த-ஆப்கானிஸ்தான்-வெற்றி/article9162724.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.