Jump to content

நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது - சீமான் ஆவேசம்


Recommended Posts

நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது - சீமான் ஆவேசம்
 
நான்  முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது - சீமான் ஆவேசம்
எதிர்காலத்தில் நான் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார் .
 
 தமிழ் நாட்டில் நடந்த கூட்டமொன்றில் பேசும் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது ,
 
தமிழ் நாட்டில் தற்போது சுமுகமற்ற சுழ்நிலை நிலவி வரும் நிலையில் கவேரி தொடர்பான பிரச்சனை இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு இருக்கையில் நான் முதல்வர் ஆகுவதே சரியான தீர்வு ஆகும் அப்பொழுதுதான் தமிழ் நாட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என சீமான் தெரிவித்தார்.
 
 
எனினும் இந்தியாவில் மக்கள் வாக்கெடுப்பு முலமே முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழன் முதல்வராகத்தேவையில்லை

முதல்வராக வரப்போறான் என்றாலே அநேக பிரச்சினைகள் முடிவுக்கு வந்திடும்

(ஈழம் உட்பட)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் தடுக்க முயலவேமாட்டார்கள். அவர் ஏற்கனவே தனது செயல்களாலும், பேச்சுக்களாலும் தன்னைத் தடுத்துவிட்டார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துட்டகைமுனுக்களும் காக்கைவன்னியர்களும் நிறைந்த உலகமிது.
அத்துடன் நல்லதுக்கு காலமில்லை என்ற முதுமொழியையும் கவனத்தில் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உதாரணத்திற்கு கம்பேர்க்கர் சீஸ்பேர்க்கர் கோலா எல்லாம் உடல் நலத்திற்கு கேடு என சொல்கிறார்கள். ஆனால் அவைகள் தான் இன்று கொடிகட்டி பறக்கின்றன.

அது போலத்தான் இதுவும்.....
நல்லது தின்ன ----- தெரியாது என்று ஒரு பேச்சு வழக்கு வசனமும் இருக்கின்றது.:cool:

Link to comment
Share on other sites

12 minutes ago, குமாரசாமி said:

துட்டகைமுனுக்களும் காக்கைவன்னியர்களும் நிறைந்த உலகமிது.
அத்துடன் நல்லதுக்கு காலமில்லை என்ற முதுமொழியையும் கவனத்தில் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உதாரணத்திற்கு கம்பேர்க்கர் சீஸ்பேர்க்கர் கோலா எல்லாம் உடல் நலத்திற்கு கேடு என சொல்கிறார்கள். ஆனால் அவைகள் தான் இன்று கொடிகட்டி பறக்கின்றன.

அது போலத்தான் இதுவும்.....
நல்லது தின்ன ----- தெரியாது என்று ஒரு பேச்சு வழக்கு வசனமும் இருக்கின்றது.:cool:

இது எங்கள் வால்களுக்கு  புரியவில்லையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் வளர்ந்து அறியவேண்டியதை அறிந்து அதன்படி தமது அரசியல் தெரிவுகளை மேற்கொள்ளும்போதும், இன்னும் விசிலடிச்சான் குஞ்சுகள் தனது சொல்லைக் கேட்க இருக்கின்றார்கள் என்று நம்புபவர் அரசியலில் அழிந்துதான் போவார்.

:cool:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலை  குஞ்சியம்மா கிலாரியும் குஞ்சியப்பு ரம்பும் விடிய விடிய பன்னாடை கதையள் கதைச்சு சனத்தை பேய்ப்பட்டம் காட்டினால்.....வாவ்  அது அரசியல்.

ஆனால் எங்கடை சனம் உள்ளதை உணர்வாக சொன்னால் அது விசிலடிச்சான் கூட்டமாம்.....விசர்க்கூட்டமாம்.

எல்லா இடத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இருக்கத்தான் செய்யும். அதை சரிசெய்து முன் நகர்வதுதான் ஒரு இனவிடுதலை விரும்பிக்கு அழகும் அறிவுபூர்வமான செயலுமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் ஆமைதான் இந்த உலகத்தில் அதிக காலம் வாழ்வது அதாவது 276 ஆண்டும் மேல்..... அதைவிட பெரிய ஜந்துக்கள்..  எல்லாம் தலைவர்கள் என்ற போர்வையில் இங்கிட்டு உலவிட்டு இருக்கு .. இவுங்களெல்லாம் மேல போனால் .. தமிழனுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும்.!!!.ஆனா இதெல்லாம் நடக்குற வேலையா ? எமனே இவனுங்கள பார்த்து பயந்து ஓடி ஒளிந்து கொண்டு இருக்கான்.. !!!!

டிஸ்கி:

கடவுள் நல்ல ஆன்மாக்களை எல்லாம் ஏன் இன்னும் கலியுகத்தில் கஸ்டபடவேண்டும் ? என்று விரைவாகவே தம்மோடு அழைத்து கொள்கிறார்... என்ற பேச்சு உள்ளது ... அது உண்மையா..? நல்லவன் எல்லாம் சீக்கிரம்  மேல போய்டே இருக்கான்..? நேர்மை காரணமாக  மேல  போனவர்களாவது ... உங்களின்ட உண்மை நிலைமைய நேர்ல வேண்டாம் கனவிலாது வந்து சொல்லுங்க.. பிளிஸ்..

Link to comment
Share on other sites

On 9/29/2016 at 2:26 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கடல் ஆமைதான் இந்த உலகத்தில் அதிக காலம் வாழ்வது அதாவது 276 ஆண்டும் மேல்..... அதைவிட பெரிய ஜந்துக்கள்..  எல்லாம் தலைவர்கள் என்ற போர்வையில் இங்கிட்டு உலவிட்டு இருக்கு .. இவுங்களெல்லாம் மேல போனால் .. தமிழனுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும்.!!!.ஆனா இதெல்லாம் நடக்குற வேலையா ? எமனே இவனுங்கள பார்த்து பயந்து ஓடி ஒளிந்து கொண்டு இருக்கான்.. !!!!

டிஸ்கி:

கடவுள் நல்ல ஆன்மாக்களை எல்லாம் ஏன் இன்னும் கலியுகத்தில் கஸ்டபடவேண்டும் ? என்று விரைவாகவே தம்மோடு அழைத்து கொள்கிறார்... என்ற பேச்சு உள்ளது ... அது உண்மையா..? நல்லவன் எல்லாம் சீக்கிரம்  மேல போய்டே இருக்கான்..? நேர்மை காரணமாக  மேல  போனவர்களாவது ... உங்களின்ட உண்மை நிலைமைய நேர்ல வேண்டாம் கனவிலாது வந்து சொல்லுங்க.. பிளிஸ்..

யாரை மேலே போக சொல்லுகிறார் இவர்??? நேரடியாக தெளிவாக சொல்லலாமே ??? நல்லவர்கள் எல்லாம் சீக்கிரம் செத்து விடுவார்கள் எனவும் கூறுகிறார் ... அப்ப யாரை நல்லவர்னு சொல்றார் அல்லது யார் சீக்கிரம் போகணும்னு விரும்புறார் ??? ஒண்ணுமே புரியலையே ??? அதுக்குத்தான் நான் அதிகம் யாழ் களம் வருவதில்லை . 

எழுதும் எழுத்தில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கும் . பொருள் ஒன்னும் விளங்காது . இல்லைன்னா அரைத்த மாவா இருக்கும் . ஏதாவது சொல்ல போனா கிடைச்சாண்டா கேனையான்னு எல்லாரும் சேர்ந்து தாளிச்சு எடுத்திருவாங்க . தாளித்த பின் தின்னு தண்ணிய குடிக்க வேண்டியது தானே . அதையும் பண்ண மாட்டார்கள். தண்ணியில ஊற போடுவார்கள் .. தாளிச்ச பொருளை தண்ணியில போட்டா உருப்படுமா என்ன ???

இது என் உயிர் நண்பர் புரட்சிகர தமிழ் தேசியனை விமர்சித்து எழுதவில்லை. பொதுவா யாழ் காலத்தின் பெரும்பாலான உறுப்பினர்களை கூறுகிறேன் . 

அப்புறம் நண்பர்களே... எப்படி போகுது பொழுது ??? இப்ப புலியும் இல்ல மகிந்தாவும் ஆட்சியில இல்ல . இந்தியாவில காங்கிரஸ் இல்ல . தமிழ் நாட்டில திமுக இல்லை.  ரொம்ப போர் அடிக்குமே . ஆமா இந்த நிலைமை வந்தா  நடந்தா ஈழம் வரும்னு சொன்னீங்களே ??? எங்க காணோம் ???

Link to comment
Share on other sites

On 9/28/2016 at 9:43 PM, விசுகு said:

 

தமிழன் முதல்வராகத்தேவையில்லை

முதல்வராக வரப்போறான் என்றாலே அநேக பிரச்சினைகள் முடிவுக்கு வந்திடும்

(ஈழம் உட்பட)

இப்படி நினச்சுகிட்டே இல்லன்னா சொல்லிகிட்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் . வேறு வழி???

On 9/29/2016 at 1:38 AM, குமாரசாமி said:

அமெரிக்காவிலை  குஞ்சியம்மா கிலாரியும் குஞ்சியப்பு ரம்பும் விடிய விடிய பன்னாடை கதையள் கதைச்சு சனத்தை பேய்ப்பட்டம் காட்டினால்.....வாவ்  அது அரசியல்.

ஆனால் எங்கடை சனம் உள்ளதை உணர்வாக சொன்னால் அது விசிலடிச்சான் கூட்டமாம்.....விசர்க்கூட்டமாம்.

எல்லா இடத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இருக்கத்தான் செய்யும். அதை சரிசெய்து முன் நகர்வதுதான் ஒரு இனவிடுதலை விரும்பிக்கு அழகும் அறிவுபூர்வமான செயலுமாகும்.

நீங்க சொல்றது சிங்கள இனத்தையா இல்ல தமிழ் இனத்தையா அல்ல முஸ்லீம் இனத்தையா ?!%^ $#

On 9/29/2016 at 1:17 AM, கிருபன் said:

விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் வளர்ந்து அறியவேண்டியதை அறிந்து அதன்படி தமது அரசியல் தெரிவுகளை மேற்கொள்ளும்போதும், இன்னும் விசிலடிச்சான் குஞ்சுகள் தனது சொல்லைக் கேட்க இருக்கின்றார்கள் என்று நம்புபவர் அரசியலில் அழிந்துதான் போவார்.

:cool:tw_blush:

அப்ப தமிழ் நாட்டில நாம் தமிழருக்கு ஒட்டு போட்டவன்லாம் ( ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் ) விசிலடிச்சான் குஞ்சுகளா ??? தமிழ் உணர்வை இதை விட கேவலப்படுத்த யாராலும் முடியாது . ஜாதி தாண்டி, கட்சி தாண்டி, சுய விருப்பு வெறுப்பு தாண்டி, நம்ம கழகங்கள் கொட்டி கொடுத்த பணம், குவார்ட்டர், பிரியாணி தாண்டி ஒட்டு போட்டவனெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகள் என்றால் தமிழ் உணர்வாளர்கள் யாரோ ???

On 9/29/2016 at 0:13 AM, கிருபன் said:

ஒருவரும் தடுக்க முயலவேமாட்டார்கள். அவர் ஏற்கனவே தனது செயல்களாலும், பேச்சுக்களாலும் தன்னைத் தடுத்துவிட்டார்!

இவரது ஒரே தவறான செயல் யாசின் மாலிக்கை அழைத்தது . பேசுனது எல்லாம் கொஞ்சம் ஓவரா தெரிஞ்சாலும் உண்மையா தான் பேசுனார் 

On 9/28/2016 at 8:02 PM, நவீனன் said:
தமிழ் நாட்டில் தற்போது சுமுகமற்ற சுழ்நிலை நிலவி வரும் நிலையில் கவேரி தொடர்பான பிரச்சனை இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு இருக்கையில் நான் முதல்வர் ஆகுவதே சரியான தீர்வு ஆகும் அப்பொழுதுதான் தமிழ் நாட்டிற்கு விமோசனம் கிடைக்கும் என சீமான் தெரிவித்தார்.
 

நைசா சந்துல சிந்து பாடுறாரே ??? இவர் முதல்வரா இருந்திருந்தா கண்டிப்பா தண்ணி கிடைச்சிருக்காது . ஆனா கர்நாடகவில தமிழனுக்கு கொஞ்சம் அதிகமா ஆதி வேணும்னா கிடைச்சு இருக்கும் 

ஆதின்னா அடின்னு அர்த்தம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.