Jump to content

கிளிநொச்சியில் டிரக்டர் சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்


Recommended Posts

கிளிநொச்சியில் டிரக்டர் சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்

 

 

கிளிநொச்சியில்  டிரக்டர்  சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்

கிளிநொச்சியில் டிரக்டர் சாரதி ஒருவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்படும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

ஏ9 வீதியில் 156 ஆம் மைல்கல் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் காட்சிகளைப் பதிவு செய்ததாக சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, வாகன விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யவே பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

வேன் ஒன்றை மோதிவிட்டு டிரக்டர் சாரதி ஒருவர் தப்பிச் செல்வதாக தமக்கு முறைப்பாடு கிடைத்திருந்ததாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரான சாரதியிடம் இருந்த இரும்புச்சங்கிலியை பொலிஸ் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர் பறித்தெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாகவும், அவர் சங்கிலியால் தாக்கியதன் காரணமாக சிலருக்கு காயமேற்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எவ்வாறாயினும், தாக்குதலில் காயமடைந்த டிரக்டர் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2016/09/கிளிநொச்சியில்-டிப்பர்-ச/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியான செய்திகள் சிங்கள பகுதிகளில் ஏன் வெளி வருவதில்லை ?

நாய்க்கும் மாட்டுக்கும் கோசம் போடும் எருமைகூட்டம்களுக்கு இதுகள் கண்ணில படவில்லையா ?

இப்படி ஒரு கஞ்சா கடதுபவனுக்கு அடிச்சால் நியாயம் அவங்களை அடிக்கமாட்டங்கள் கஞ்சா பிடிபடுமே தவிர ஆக்கள் தப்பும் மர்மம் தெரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.9.2016 at 4:20 PM, நவீனன் said:

 

 

பொலிஸ் செய்தது சரி எண்டு சொல்ல எங்களிட்டை ஒரு கூட்டம் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

பொலிஸ் செய்தது சரி எண்டு சொல்ல எங்களிட்டை ஒரு கூட்டம் இருக்கு.

இவர்  பொத்திக்கொண்டிருந்திருந்தால்....?

அது தானே அண்ணை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.9.2016 at 8:22 PM, விசுகு said:

இவர்  பொத்திக்கொண்டிருந்திருந்தால்....?

அது தானே அண்ணை...

கணணிக்கு முன்னாலை இருந்து போராடுற கோஷ்டி எண்டு சொல்லுற கூட்டம் இப்ப எந்த வடலிக்கு பின்னாலை ஒதுங்கியிருக்குதுகள் எண்டு தெரியேல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

கணணிக்கு முன்னாலை இருந்து போராடுற கோஷ்டி எண்டு சொல்லுற கூட்டம் இப்ப எந்த வடலிக்கு பின்னாலை ஒதுங்கியிருக்குதுகள் எண்டு தெரியேல்லை

இப்ப  அவங்க தான் சரியானவர்களாம் அண்ணை..

நாம் பிரபாகரன் காலத்து ஆட்கள்..

பிழையென்றால்

எவனெண்டாலும் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் இலங்கை பொலிஸ். ஒரு ஆணியும் புடுங்க முடியாது.

ஏற்கனவே தெல்லிப்பளை பொலிசாருக்கு எதிராகவும் சுண்ணாகம் பொலிசாருக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குகள் உள்ளது. அப்படியிருந்தும் இன்று கிளிநொச்சி பொலிசார் இப்படி நடந்து கொண்டுள்ளனர்.

ஏன் அவர்களுக்கு தெல்லிப்பளையிலும் சுண்ணாகத்திலும் நடந்தது தெரியாதா? 

Link to comment
Share on other sites

இந்த சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளுக்கு வெள்ளையடிக்க புனை கதைகளுடன் ஒருசிலர் திரியினம்.

Link to comment
Share on other sites

கிளிநொச்சி இளைஞன் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்

கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று ஏ9 வீதியில் வைத்து உழவு இயந்திரமொன்றை செலுத்தி வந்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினை விளக்குவதற்கு பொலிஸார் இளைஞன் மீது நடத்தியுள்ளார்.

எனினும் குறித்த இளைஞன் தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க முற்பட்டதாகவும், மது போதையில் வீதியில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தாக்குதலில் இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

மேலும் குறித்த இளைஞன் தவறு செய்திருப்பினும் கூட முரட்டுத்தனமாக தாக்கியுள்ளமை பாரிய குற்றம் என அப்பகுதிமக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/119139?ref=home

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடி போதையில் உழவு இயந்திரம் செலுத்தியது சரியா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

குடி போதையில் உழவு இயந்திரம் செலுத்தியது சரியா? 

 அதற்காக சங்கிலியால் அடித்தது நியாயமாகப்படவில்லை தோழரே. நீதியை நிலை நாட்டவேண்டியவர் இப்படி நடந்தால், இவர்கள் மட்டும் குடிபோதையில் என்ன செய்தாலும் சரி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றிய பூரணமான விசாரணை இன்னும் முடியவில்லை  விசாரணையை முடிந்ததும் தான் முக்கியமான தகவல்கள் பெற்று கொள்ளலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

குடி போதையில் உழவு இயந்திரம் செலுத்தியது சரியா? 

குடி வகைகளை வித்து பிளைப்பது யாருங்க நண்பரே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

 அதற்காக சங்கிலியால் அடித்தது நியாயமாகப்படவில்லை தோழரே. நீதியை நிலை நாட்டவேண்டியவர் இப்படி நடந்தால், இவர்கள் மட்டும் குடிபோதையில் என்ன செய்தாலும் சரி. 

தோழர் பொலிஸ் அடித்தது சரி என்று சொல்லவில்லை. முற்றிலும் பிழையான செயல்.

 

எந்த நாட்டிலும் சரி பொலிஸ் பயிற்சியின் போது சொல்லிக் கொடுப்பது தான்

" Subject உங்கள் கட்டளையை ஏற்காவிடின் உங்கள் பலத்தை பிரயோகிக்கலாம்".

4 hours ago, பெருமாள் said:

குடி வகைகளை வித்து பிளைப்பது யாருங்க நண்பரே ?

நண்பர் இதெல்லாம் நீதிமன்றில் எடுபடுமா? 

Link to comment
Share on other sites

22 hours ago, பெருமாள் said:

குடி வகைகளை வித்து பிளைப்பது யாருங்க நண்பரே ?

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வடிசாலையை மூடி விட்டால் சாராயம் குடித்து குழப்பம் செய்பவர்களை தவிர்க்க முடியும் என்று அவர்களின் தலைமை செயலகத்தில் இருந்தவர்களுக்கு எனது புத்தி சாதுரியத்தை காட்டினேன்.:11_blush:

அவர்களும் ஒரு சிரிப்புடன் சொன்னார்கள் வடிசாலையை மூடி விட்டால் கள்ளமாக கசிப்பு காய்ச்சுவது கூடிவிடும். அதானால் தான் செய்ய முடியவில்லை. ஆனால் வரி வசூலிக்கிறோம். அது பாவனையை குறைக்கும் என்றார்கள்.  சிறி லங்கா அரசும் அவர்களின் முன்மாதிரியை பின்பற்றுகிறார்கள் போல தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் யாழ்ப்பாண வடிசாலையை மூடி விட்டால் சாராயம் குடித்து குழப்பம் செய்பவர்களை தவிர்க்க முடியும் என்று அவர்களின் தலைமை செயலகத்தில் இருந்தவர்களுக்கு எனது புத்தி சாதுரியத்தை காட்டினேன்.:11_blush:

அவர்களும் ஒரு சிரிப்புடன் சொன்னார்கள் வடிசாலையை மூடி விட்டால் கள்ளமாக கசிப்பு காய்ச்சுவது கூடிவிடும். அதானால் தான் செய்ய முடியவில்லை. ஆனால் வரி வசூலிக்கிறோம். அது பாவனையை குறைக்கும் என்றார்கள்.  சிறி லங்கா அரசும் அவர்களின் முன்மாதிரியை பின்பற்றுகிறார்கள் போல தெரிகிறது. 

95 இல் யார் தலைமைச் செயலகத்தில் இருந்தார்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.