Jump to content

'காமத்திபுராவில் நான் வன்புணரப்படவில்லை... பள்ளியில்தான்...!" அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு


Recommended Posts

'காமத்திபுராவில் நான் வன்புணரப்படவில்லை... பள்ளியில்தான்...!" அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு

kamathipura.jpg

மும்பையின் காமத்திபுரா ஆசியாவின் மிகப் பெரிய ரெட்லைட் ஏரியா. இங்கேயே பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் தான் இந்த சமூகத்தில் தான் சந்தித்த, சந்திக்கும் பிரச்னைகளை 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற  ஃபேஸ்புக்' பக்கத்தில் ஆதங்கமாக கொட்டியுள்ளார். அவரது பதிவு வைரல் ஆகியிருக்கிறது. இந்த பெண் சாதாரண ஆள் இல்லை. காமத்திபுராவில் பிறந்து சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற 'கேர்ள் ஆன் தி ரன்' என்ற மாநாடு வரை சென்று பெண்கள் உரிமை குறித்து பேசியவர். பெயர் குறிப்பிடப்படாத அவரது பதிவு நம்மை அதிரவும் வைக்கிறது. அதே வேளையில் சிந்திக்கவும் சொல்கிறது. 

'' கேரளாவில் இருந்து எனது தாயார் பாலியல் தொழிலுக்காக மும்பைக்கு அழைத்து வரப்பட்டவர்.  எனது தந்தை எனது தாயை சந்தித்த போது, தீவிர காதலில் விழுந்தார். அவரது காதல் கிறுக்குத்தனமாகவே எனது தாய்க்கும் தோன்றியுள்ளது. ஆனாலும் இருவரும் திருமணமும் புரிந்து கொண்டனர். விளைவு காமத்திபுராவிலேயே நான் பிறந்தேன். நான் பிறந்த பிறகும் எனது குடும்பம் காமத்திபுராவை விட்டு வெளியேறி விட முடியவில்லை. காமத்திபுராவுடனேயே அதன் பழக்க வழக்கங்களுடன்தான் நானும் வளர்ந்தேன்.  எனது தாயார் என்னை பள்ளியில் சேர்த்தார்.

வளர வளரத்தான்  இந்த சமூகத்தில் பல்வேறு பிரச்னைகளை நான் எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.  ஒவ்வோரு இடத்திலும்  தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்தேன். பள்ளிக்கு சென்றால் சக மாணவிகள் என்னிடம் பேச மாட்டார்கள். கறுப்பாக ரெட்லைட் ஏரியாவில் இருந்து ஒரு பெண் வந்தால் என்ன மரியாதை கிடைக்குமோ அதுதான் எனக்கு பள்ளியில் கிடைத்தது. விளையாடினால் என்னைச் சேர்க்க மாட்டார்கள். எனக்கு பின்னால் இருந்து 'காக்கா'  'எருமை மாடு' என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். பள்ளியின் நான் ஒரு தீண்டத் தகாதவளாகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் எல்லாமே எனக்கு எதிராகவே போய்க் கொண்டிருந்தது.

யாரும் என்னைச் சீண்ட மாட்டார்கள். இதனால், எப்போதும் நான் தனியாகவே இருப்பேன். இந்த சமயத்தை பயன்படுத்தி எனது ஆசிரியர் ஒருவர் என்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி கொண்டார். அப்போது எனக்கு வயது பத்துதான் ஆகியிருந்தது., ஆனால் நான் வன்புணரப்பட்டது கூட அப்போது எனக்குத் தெரியவில்லை. 'எது குட் டச்..' 'எது பேட் டச்... 'என அப்போது எனக்கு யாரும் சொல்லித் தரவவில்லை. நமது கல்வி முறையும் அப்படி. நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விஷயத்தைக் கூட 16 வயது வரை வெளியே சொல்லவில்லை. எனக்கு விபரம் தெரிந்த பிறகு,  காமத்திபுராவில் 'குட் டச் எது பேட் டச் எது எனத் தெருவோர நாடகங்கள் நடத்தத் தொடங்கினேன்.  மாதவிடாய் குறித்து சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுத்தேன். செக்ஸ் என்றால் என்னவென  விளக்கினேன். ஒரு கட்டத்தில் போலீசே கூட என்னைத் துரத்தியிருக்கிறது. வழக்கமாக இங்கே சிறுமிகள் அனுபவரீதியாக செக்ஸ்  பெறும் இடம் என்பது போலீசின் கண்மூடித்தனமான கருத்து.

எனது பெற்றோர்  கடந்த 2013ம் ஆண்டு கேரளாவுக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஆனால், நான் மும்பையை விட்டு நகரவில்லை. காமத்திபுராதான் எனக்கு வீடு. எனது அழகான வீடு. அன்பு சூழ் உலகம். என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் அன்பு நிறைந்தவர்கள். வெள்ளந்தி மனுஷிகள். அவர்களை விட்டு பிரிய எனக்கு மனம் இல்லை அவர்கள் என்னை மகளைப் போலவே பார்த்துக் கொள்கின்றனர். சில மாதத்திற்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. சாலையை கடந்த போது, ஒரு கார் டிரைவர் எனது காலில் காரை ஏற்றி விட்டார்.  அந்த டாக்சி  டிரைவருக்கு காமத்திபுரா உயிர்களை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் . இங்கே உலவுபவர்கள் அழுக்கு ஆத்மாக்கள் என்ற  எண்ணத்தில் அலட்சியமாக சிரித்தார். ஆனால், அந்த காரை மறித்து நிறுத்திய எங்கள் பெண்கள் , அந்த கார் ஓட்டுநரை கீழே இறங்கச் சொன்னார்கள். 'நீ எப்படி எனது மகள் காலில் காரை ஏற்றலாம் மரியாதையாக மன்னிப்பு கேள்'' என்று கெரோ செய்தார்கள். மன்னிப்பு கேட்க  மறுத்த அந்த ஓட்டுநர், என்னை பலமுறை ஏற இறங்கப் பார்த்தார். கீழ்த்தரமான சைககளை காட்டினார். ஆனால் அன்புசூழ் உலகம்தான் எனக்கு பாதுகாப்பாக இருக்கிறதே. மன்னிப்பு கேட்டுவிட்டுதான் அந்த இடத்தில் இருந்து அந்த ஓட்டுநரால் நகர முடிந்தது.  

என்னை பொறுத்தவரை காமத்திபுராதான் பாதுகாப்பான இடம். இங்கே என்னை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை. ஆனால், பள்ளியில்தான் என்னை ஆசிரியர் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டார். இங்கே என்னை ஆண்கள் அணுகினாலும் பாதுகாப்புக்கு ஏராளமான தாயார்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நான் இங்கு வசிக்கிறேன். வசிக்கப் போகிறேன். வசிப்பேன். சான்பிரான்சிஸ்கோவில் 'கேர்ள் ஆன் தி ரன் ' நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தேன். அங்கேயிருந்த மக்கள் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். எனது வர்ணத்தை ஏற்றுக கொண்டார்கள். எனது பின்புலத்தை ஆராயவில்லை. எனது கதையை ஆர்வத்துடன் காது கொடுத்துக் கேட்டார்கள்.

செக்ஸை பற்றி சுதந்திரமாக உரக்கப் பேசினேன். பாலியல் கல்வி பற்றி நிறையப் பேசினேன். செக்ஸ் பற்றி பேசியதற்காக என்னை  எந்த போலீசும்  அங்கே விரட்டவில்லை. அங்கே நான் நிறையக் கற்றுக் கொண்டேன். அங்கே கற்றதைவைத்து எனது அழகான இந்த வீட்டை வேதனைகள் இல்லாத சொர்க்கமாக மாற்றுவேன். சக மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும் இடமாக மாற்றுவேன். நீங்கள் வெள்ளையாக இருக்கலாம். நான் கருப்பாக இருக்கலாம். ஆனால் யாரையும் விட நான் அழகாக கருதுகிறேன். அழகுக்கும் வர்ணத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன?  மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல விஷயங்களை ஏன் பார்க்கக் கூடாது?. ஏன் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது? காமத்திபுரா வேண்டுமானால் பலருக்கு வேறு விஷயத்திற்கு சொர்க்கபூமியாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை தேவதைகள் வாழும் பூமி!

http://www.vikatan.com/news/india/68913-girl-from-mumbai-red-light-area-has-a-story-to-share.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் அபிலாசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.9.2016 at 1:37 PM, நவீனன் said:

'காமத்திபுராவில் நான் வன்புணரப்படவில்லை... பள்ளியில்தான்...!" அதிரவைக்கும் ஃபேஸ்புக் பதிவு

kamathipura.jpg

. சான்பிரான்சிஸ்கோவில் 'கேர்ள் ஆன் தி ரன் ' நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தேன். அங்கேயிருந்த மக்கள் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். எனது வர்ணத்தை ஏற்றுக கொண்டார்கள். எனது பின்புலத்தை ஆராயவில்லை. எனது கதையை ஆர்வத்துடன் காது கொடுத்துக் கேட்டார்கள்.

செக்ஸை பற்றி சுதந்திரமாக உரக்கப் பேசினேன். பாலியல் கல்வி பற்றி நிறையப் பேசினேன். செக்ஸ் பற்றி பேசியதற்காக என்னை  எந்த போலீசும்  அங்கே விரட்டவில்லை. அங்கே நான் நிறையக் கற்றுக் கொண்டேன். அங்கே கற்றதைவைத்து எனது அழகான இந்த வீட்டை வேதனைகள் இல்லாத சொர்க்கமாக மாற்றுவேன். சக மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும் இடமாக மாற்றுவேன். நீங்கள் வெள்ளையாக இருக்கலாம். நான் கருப்பாக இருக்கலாம். ஆனால் யாரையும் விட நான் அழகாக கருதுகிறேன். அழகுக்கும் வர்ணத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன?  மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல விஷயங்களை ஏன் பார்க்கக் கூடாது?. ஏன் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது? காமத்திபுரா வேண்டுமானால் பலருக்கு வேறு விஷயத்திற்கு சொர்க்கபூமியாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை தேவதைகள் வாழும் பூமி!

http://www.vikatan.com/news/india/68913-girl-from-mumbai-red-light-area-has-a-story-to-share.art

இந்தப்பொல்லாத உலகு தனது தேவைக்குப் பல்லிளிக்கும். தேவையில்லையெனில் காலால் உதைக்கும். நீ திருப்பி உதைக்காதவரை. கண்ணீர்தான் வந்தது இதைப்படித்தபோது. மும்பை; மகளிரைக் கண்ணாடிப் பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுடிருக்கும் நிலை. இந்தலட்சணத்தில் வல்லரசு. அதற்காக வல்லரசு நாடுகளில் இவையில்லையென்றில்லை. பாதுகாப்பு எள்ளல் அற்ற சூழல் இருக்கிறது. ஆனால் எங்கும் உழைப்பு உறுஞ்சப்படுகிறது. ஆனால்இந்தியாபோன்ற வறுமைநாடுகளில்(இந்திய விசுவாசிகள் மன்னிக்கவும்) பாவியானவர்கள். 

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்பது...பல சிந்தனையாளர்களும்..மகாத்மாக்களும் பிறந்த ஒரு தேசம் என்பதில் மறு கருத்துக்கு இடமில்லை என்றே கருதுகின்றேன்!

ஆனால் அந்தச் சிந்தனைகள்...முனைப்புடன் அழித்தொழித்தது வர்ணம்!

இந்த வர்ண சிந்தனை அழியும் வரை...இந்தியாவுக்கு விமோசனமேயில்லை! விடிவும் இல்லை!

 

சிங்கள தேசத்திற்கும் இது மிகவும் பொருந்தும்!

தமிழனைத் தூற்றுவதும்...துரத்துவதும் கூட இந்த வர்ண சிந்தனையின் விளைவே!

அமெரிக்கக் கருப்பனை... அண்ணார்ந்து பார்க்கும்...ஆப்பிரிக்கக் கறுப்பனைப் போல..அகதித் தமிழனை.சிங்களம் அண்ணார்ந்து பார்க்கும் காலம் நிச்சயம் வரும்!

 

நவீனன் ...மிகவும் அழகிய கட்டுரையொன்றை இணைத்துள்ளீர்கள்!

புறம் உன்னைப் புறக்கணிக்கும் போது...உனது 'அகம்' விழித்துக் கொள்ளும் என்பார்கள்! அதற்காகவே..முனிவர்கள் காடேகுவார்கள்! 

ஆனால் இந்தப் பெண்ணை ...அவளைச் சூழ்ந்திருந்த சுற்றம் புறக்கணித்தது!

இன்று அவளே...ஒரு முனியாகி...உலகத்துக்குப் பாடம் சொல்கிறாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமம் வழிந்தோடும் காமபுத்ராவில்  அவள் கற்பிளக்கவில்லை,  வக்கிரம் மிகுந்த  காமப்பேய்கள்  வெளியேதான் உள்ளன 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 4ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 3ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 1ம் இடம். 😎தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 3ம் இடம். 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 2ம் இடம். 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம். 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம்.   13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம்.   14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 1ம் இடம். 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம். 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 3ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 4ம் இடம். 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம். 19)எல் முருகன் (பிஜேபி) 4ம் இடம்.   20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம். 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 2ம் இடம். 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம். 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம். 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 0 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 6 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 31 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 01 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 5    
    • நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்- விமல் வீரவன்ச! ‘மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே’ நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அங்கு அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். “தீவிரமயமாக்கல் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக வன்முறையைப் பயன்படுத்துவதை ஆதரிப்பது அல்லது எளிதாக்குவது உட்பட, தீவிரவாத நம்பிக்கை முறையைப் பின்பற்றும் செயல்முறையாக பொதுவாக வரையறுக்கப்படுகிறது. சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் என்பது அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைவதற்காக பொதுமக்களை இலக்காகக் கொண்ட வன்முறை செயல்முறையாகும். அவர்களுக்கு மற்ற பிரிவினரோ, பிற மதத்தினரோ, பிற இனத்தவர்களோ நண்பர்கள் தேவையில்லை.. அந்த வகையில் தீவிரவாதிகளாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அத்துடன் இந்த தீவிரவாத செயல்களால் முதலில் பாதிக்கப்படுவது கத்தோலிக்கர்கள் அல்ல என்றும், முஸ்லிம்கள் மக்கள்தான் என்றும் அவர் சபையில் வலியுறுத்தினார். மேலும் முஸ்லிம்களை தாக்குவதைத் தடுக்கும் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, புலனாய்வு அமைப்புகளை நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற கொடூரமான படுகொலை நடந்திருக்காது என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1379920
    • இவ‌ர்க‌ள் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ மாட்டின‌ம் இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை தெரிவு செய்தாலும் க‌ர்விய‌ன் மைதான‌த்தில் இவ‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது வெஸ்சின்டீஸ் மைதான‌ங்க‌ளில் இங்லாந் அணி அதிக‌ம் தோற்று இருக்கு போன‌ வ‌ருட‌மும் 20ஓவ‌ர் தொட‌ரை வெஸ்சின்டீஸ் அணி இவ‌ர்க‌ளை வென்றார்க‌ள்   நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு சுனில் ந‌ர‌னை தேர்வு செய்தால் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருக்கும்..................ஜ‌பிஎல்ல தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ப‌ல‌ விளையாட்டில் அடிச்சு ஆடி அணிக்கு வெற்றிய‌ பெற்று கொடுத்த‌வ‌ர்...................................................... கோலி அன்மைக் கால‌மாய் அடிச்சு ஆடுகிறார் இல்லை அது உண்மை தான்  ஆனால் மைதான‌த்தில் 10ஓவ‌ர் வ‌ரை நின்று பிடித்தால் பிற‌க்கு மின்ன‌ல் வேக‌த்தில் ர‌ன் மிசின் த‌ன‌து விளையாட்டை காட்ட‌ தொட‌ங்கிடுவார்...........................ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர் இந்தியா அணியில் சேர்க்காம‌ விடுவ‌து கோலிக்கு ம‌ன‌ உளைச்ச‌ல‌ கொடுக்க‌ கூடும் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இதுவ‌ரை அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர்க‌ளில் கோலி தான் முத‌ல் இட‌ம் ஆனால் இவை பிலேஒவ்க்கு  போக‌ மாட்டின‌ம் ஆன‌ ப‌டியால் வேறு அணி வீர‌ர்க‌ளுக்கு கூடுத‌ல் விளையாட்டு இருக்கு அவ‌ர்க‌ள் சில‌து முத‌ல் இட‌த்தை பிடிக்க‌ முடியும்🙏🥰.............................................................. 
    • அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.
    • கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு வீர‌ர்க‌ளுக்கு ஓய்வில்லாம‌ போட்டிய‌ தொட‌ர்ந்து ந‌ட‌த்துகின‌ம் ஜ‌பிஎல் முடிந்த‌ கையோடு வீர‌ர்க‌ள் க‌ர்விய‌ன் தீவை நோக்கி ப‌ய‌ணிக்க‌னும்........................... நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டின‌ம் தொட‌ரையும் வென்று விட்டின‌ம்.................சென்னை அணிக்காக‌ விளையாடும் இர‌ண்டு நியுசிலாந் வீரர்க‌ள் இதுவ‌ரை அடிச்சு ஆட‌ வில்லை இவ‌ர்க‌ளுக்கு ப‌தில் பாக்கிஸ்தான் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.