Jump to content

அதே டெய்லர்... அதே வாடகை... புது டீமில் என்ன சொல்ல வருகிறான் செவன் சாமுராய். #The Magnificent Seven படம் எப்படி?


Recommended Posts

அதே டெய்லர்... அதே வாடகை... புது டீமில் என்ன சொல்ல வருகிறான் செவன் சாமுராய். #The Magnificent Seven படம் எப்படி?

giphy.gif

அகிரா குரோசவா இயக்கத்தில் 1954ல் ஜப்பானிய மொழியில் வெளியான “செவன் சாமுராய்”  1960-ஆண்டு வெஸ்டெர்ன் சினிமாவாக மறு ஆக்கம் செய்தது ஹாலிவுட். தற்போது அதை மீண்டும் மறு ஆக்கம் செய்து இருக்கிறார்கள்.அது தான் இந்த வாரம் வெளியாகி இருக்கும் “தி மெக்னிபிசென்ட் செவன்”.   

கதை 1879களில் நடக்கிறது. கைகளில் துப்பாக்கி, தலையில் வட்டத்தொப்பி என்று, அமெரிக்காவில் “கவ் பாய் “ கலாச்சாரம் இருந்த நேரம். ஒட்டு மொத்த கிராமத்தையும் அடிமையாக தன் கைக்குள் வைத்திருக்கிறார் பாகி. இவனின் அராஜகத்தால் தன் தன் கணவனை இழக்கும் எம்மா , பக்கத்து கிராமத்திலிருந்து உதவிக்கு யாரையாவது அழைத்துவர செல்கிறார். அந்த நேரத்தில் தப்பு செஞ்சா சுட்டுத்தள்ளும் சாமை சந்திக்கிறார். அவரிடம் உதவி கேட்க, சாம், தன்னுடன் ஆறு பேரைச் சேர்த்துக்கொண்டு இந்த கிராமத்திற்கு வருகிறார். இந்த ஏழு சூப்பர் ஹீரோக்களூம் சேர்ந்து, கிராம மக்கள் உதவியுடன் வில்லன் பாகியைக் கொன்று கிராமத்தை மீட்டார்களா என்பதே தி மெக்னிபிசென்ட் செவன். 

செவன் சாமுராய் படத்தில், கிராமத்திற்கு வந்து கொள்ளையடித்து, விவசாயிகளின் பொருளை சுரண்டும் கொள்ளை கூட்டத்தை ஒழிக்க, ஏழு பேர் சண்டையிடவதாக கதை நகரும். 207 நிமிடம் கொண்ட மிக நீளமான சினிமாவை, கதையை மட்டும் மையமாக கொண்டு 133 நிமிடத்தில் சுறுங்க சொல்லி சிக்ஸர் அடித்து இருக்கிறது இப்படம். 

The-Magnificent-Seven-1-600x450.jpg

செவன் சாமுராய் படத்தில் கையாளப்பட்ட பின்னணி இசையுடன், மார்டன் இசையையும் கலந்து கொடுத்திருப்பது படத்திற்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் தனித்தனியே பின்னணி இசையில் மிரளவைக்கும் ஜேம்ஸ் ஹார்னர் (James Horner), சிமோன் (Simon Franglen) இசை படத்திற்கு பக்கா மேட்ச். படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இசைக்குறிப்புகளை படத்திற்காக எழுத ஆரம்பித்துவிட்டாராம் படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர். பின்பு அவர் இறந்துவிட, சைமன் ஃப்ராங்க்லென் மீதி படத்துக்காக இசையமைத்து இருக்கிறார்.வெஸ்டர் கலாச்சாரத்தை படத்தில் ஒரிஜினலாக கொண்டு வந்திருக்கும் விதத்திலும், மேக்கிங்கிலும் ஸ்கோர் செய்கிறார் இயக்குநர் Antoine Fuqua.  

இந்த ஏழு பேருக்கும் தலைவனாக சாம் கேரக்டரில் நடித்திருப்பவர் டென்செல் வாஷிங்டன்.எதற்கும் கவலைப்படாமல் ஜாலியாக சுட்டுத்தள்ளும் கிறிஸ் பிராட். எவ்வளவு தொலைவென்றாலும் சுட்டுத்தள்ளும் குட்நைட். இவர்களுடன் இன்னும் நான்கு பேர்.... இவர்களே மெக்னிபிசென்ட் செவன் ஹீரோஸ். ஒவ்வொருவரும் தனக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக சுடுகிறார்கள்.

துப்பாக்கி சண்டை, மேற்கத்திய கலாச்சாரம் என்று கமர்ஷியல் படமாக ஆச்சரியப்படுத்தினாலும், செவன் சாமுராய் போன்ற கிளாசிக் படங்களை ரீமேக் செய்யும் போது அதீத கவனமும் தேவை. அந்த இடத்தில் சமயங்களில் குறி தப்பிவிட்டதோ என்று தோன்றுகிறது 
செவன் சாமுராய் படத்தின் முதல் ரீமேக் வெர்ஷன் 1960களில் வெளியானது. அதற்கும் இந்தப் படத்திற்கும் எந்த வித்தியாசமும் பெரிதாக தெரியவில்லை. தவிர, இப்படத்தில் புதிதாக எதுவும் சொல்லவில்லை என்பது படத்திற்கு மைனஸ். விஷூவல் ட்ரீட் கிடைக்கும் என்று நம்பிச்செல்லும் ரசிகர்களை ப்ச்ச்ச்... சொல்ல வைக்கிறது. 

723318.jpg

இப்படம் பக்கா கமர்ஷியல் பாக்கேஜ். ஜாலியா கவ் பாய் சண்டையை பார்க்கவேண்டும் என்று நினைத்தால் தாராளமாக செல்லலாம். இல்லையென்றால் குழந்தைகளை டெலிவரி செய்துவரும் ஸ்டார்க்ஸ் அனிமேஷன் படத்திற்குள் நுழையலாம். 

தி மெக்னிபிசென்ட் செவன் டிரெய்லருக்கு: 

 

http://www.vikatan.com/cinema/movie-review/68813-the-magnificent-seven-movie-review.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.