Jump to content

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு


Recommended Posts

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

 
 

 

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
 
 
 
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில்  அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட வலுவற்றது. எனவே, அந்த விதிகள் சட்ட வலுவற்றது என தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என விடுத்த வேண்டுகோளை பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இந்த வழக்கை நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
 
இறுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தினார் எனக் குற்றம் சுமத்தி தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு காலாவதியாகியுள்ள அவசரகால விதிகளின் கீழ் இந்த வழக்கில் பகிரப்பட்டுள்ள குற்றப்பத்திரம் சட்ட வலுவற்றது என வாதாடினார். 
 
அவர் தனது வாதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
 
அந்தக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றம் தொடர்பான செயல் உண்மையிலேயே சட்டப்படி குற்றச் செயலல்ல. 
 
இந்தக் குற்றச்சாட்டில் அவசரகால விதிமுறைகள் என தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் சட்ட ரீதியான விதிமுறைகள் அல்ல. 
 
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இந்த விதிமுறைகள் அப்பாற்பட்டவை. 
 
அது மட்டுமல்லாமல், அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவனவாகவும் இந்த விதிமுறைகள் அமைந்திருக்கின்றன. 
 
இயற்கை நீதியின்படி இந்த விதிமுறைகள் நியாயமற்றவை என்பதுடன் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன. 
எனவே, இந்தக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அவசரகால விதிகள் சட்ட வலுவற்றவை என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய வேண்டும்.
 
அதேவேளை, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 7 ஆம் பகுதியின் ஈ பிரிவின் கீழ் (7 (ஈ)) குற்றம் புரிந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. அதுவும் பிழையானது. 
 
அரச சட்டத்தரணி கூறுவது போன்று அது சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதே சரியானது என ஏற்க முடியாது. 
 
ஏனெனில் வடமாகாணத்தின் நிர்வாக மொழி தமிழ் மொழியாகும். ஆகவே நீதிமன்றத்;தின் மொழியும் நிர்வாக மொழியாகிய தமிழ் மொழியிலேயே குற்றப்பத்திரிகை வழங்கப்பட வேண்டும். 
 
அந்த வகையிலும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சட்ட வலுவற்றது. ஆனாலும் இந்தப் பிழையைத் தாங்கள் திருத்துவதாக அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கின்றார். அவர்கள் அவ்வாறு செய்யும்போது எங்களுடைய ஆட்சேபணையை நாங்கள் தெரிவிப்போம் என்றார் சட்டத்தரணி சுமந்திரன்.
 
ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பல்வேறு ஆதாரங்களை முன்வைத்தும், பல்வேறு மேற்கோள்களைக் காட்டியும் சட்டத்தரணி சுமந்திரன் செய்த வாதத்தை செவிமடுத்த நீதிபதி சசி மகேந்திரன், ஒரு குற்றப்பத்திரிகையில் ஆதாரம் காட்டப்பட்டுள்ள விதிமுறைகள் சட்ட வலுவற்றது என தீர்ப்பளிப்பதற்கு மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றதா என்பதை ஆராய வேண்டியுள்ளது என தெரிவித்தார். 
 
எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் எழுத்து மூலமாக தங்களுடைய சமர்ப்பணங்களை முன் வைக்க வேண்டும் எனக் கூறி இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
 
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராகிய தயா மாஸ்டர் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிரான் அங்கிட்டல் ஆகியோரும் அரச தரப்பில் இந்த வழக்குக்கென சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து வருகை தந்திருந்த அரச சட்டவாதி ஆசாத் நாவவியுடன் அரச சட்டத்தரணி ஸக்கி இஸ்மாயிலும் முன்னிலையாகியிருந்தனர். 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136437/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.