Jump to content

தகவல் அறியும் உரிமை அனைத்து பிரிவுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும் : ஜனாதிபதி


Recommended Posts

தகவல் அறியும் உரிமை அனைத்து பிரிவுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும் : ஜனாதிபதி

 

sri-lanka-president-maithripala-sirisena

ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

'சர்வதேச தகவல் அறியும் நாள்' தொடர்பில் இன்று கொழும்பு ஜெய்க் ஹில்ரன் ஹோட்டலில் ஆரம்பமான சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். 

தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமை உறுதிப்படுத்துதல் தொடர்பாக நீண்ட காலமாக அரசியல் மேடைகளிலும், சிவில் அமைப்புக்களாலும், பொதுமக்களிடையேயும் விவாதிக்கப்பட்டிருந்த போதிலும் கடந்தகால அரசுகள் நிறைவேற்றத் தவறிய அச்செயற்பாட்டை தற்போதய அரசினால் நிறைவேற்ற முடிந்திருப்பதாக தெரிவித்தார்.

அரச செலவினங்களுக்காக பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்தும்போதும் அதனை முகாமைத்துவம் செய்யும்போதும் ஏற்படும் முறைகேடான பயன்பாடுகள் மற்றும் தவறான நிதி முகாமைத்துவம் காரணமாக நாட்டு மக்களுக்கு ஏற்படும் அநீதி மற்றும் நாட்டின் முன்நோக்கிய பயணத்துக்கு ஏற்படும் தடைகளும் தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தப்படுத்துவதால் நீங்கிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடக சுதந்திர சட்டம், அரசியலமைப்பு, உரிமைகள் ஆகியன எவ்வளவுதான் உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இன்று பெரும்பாலன ஊடகங்கள் அவற்றின் உரிமையாளர்களினதும் முகாமைத்துவத்தினதும் விருப்புவெறுப்புகளுக்கமையவே செயற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊடக சுதந்திர உரிமைகளுக்கான வாய்ப்புகளை வழங்குவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகுமெனவும், அரச அலுவலர்கள் அதனை முறைமைப்படுத்துவதுடன் நாட்டு மக்களின் நலனுக்காக ஊடக சுதந்தித்தைப் பயன்படுத்துவது அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினதும் பொறுப்பாகுமெனவும் தெரிவித்தார்.

அரசு சாரா நிறுவனங்கள் பற்றிய தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பெரும்பாலான அரசு சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட விடயங்களுக்கு புறம்பாக செயற்படுவது உலகின் பல அரசாங்கங்களின் இருப்புக்கு சவாலாக அமைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

ஆரம்ப நிகழ்வின் முதன்மை விரிவுரை இந்திய சட்ட ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் டில்லி மற்றும் மதுரை மேல் நீதிமன்றங்களின் முன்னாள் நீதியரசருமான அஜித் பிரகாஷ் ஷா அவர்களால் நிகழ்த்தப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் கரு பரணவிதாண ஆகியோர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் பங்குபற்றினார்கள்.

http://www.virakesari.lk/article/11855

Link to comment
Share on other sites

9 hours ago, நவீனன் said:

தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

சிங்கள-பௌத்த அரசுகள் பயங்கரவாத அரசுகள் என்பதை இவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

நினைத்தபோது அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்துவதும், நினைத்தபோது நடைமுறைப்படுத்தாது விடுவதும் பயங்கரவாத அரசுகளின் குணாதிசயங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
    • இன்னும் ரெண்டு ஓவர் குடுத்திருந்தால் 50 அடித்திருப்பார்கள் ..... அவ்வளவு வெறியோடு களத்தில் நின்றவர்கள்.......!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.