Jump to content

நெடுந்தீவு மரபுரிமை குதிரைகள் இராணுவத்தினரால் கடத்தல் ?


Recommended Posts

நெடுந்தீவு மரபுரிமை குதிரைகள் இராணுவத்தினரால் கடத்தல் ?

 

நெடுந்தீவு மரபுரிமை குதிரைகள் இராணுவத்தினரால் கடத்தல் ?


வலி.வடக்கில் கடந்த 26 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட காங்கேசன்துறை பகுதிகளில் நான்கு குதிரைகள் கட்டாகாலிகளாக அலைந்து திரிகின்றன.

இந்த குதிரைகளை இராணுவத்தினரே வளர்ப்பதாக தெரிய வருகின்றது. குறித்த நான்கு குதிரைகளில் ஒரு குதிரை நெடுந்தீவில் வாழும் நபர் ஒருவரின் வளர்ப்பு குதிரை என கண்டறியப்பட்டு உள்ளது. குறித்த குதிரையில் காணப்படும் சூல குறியீடு மூலமே குதிரை அடையாளம் காணப்பட்டு உள்ளது.



இந்த குதிரைகள் எவ்வாறு வலி.வடக்கு பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது என்பது தெரியவரவில்லை. இராணுவத்தினரால் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் எனவும் , அதற்கு உடந்தையாக கடற்படையினர் செயற்பட்டு இருக்கலாம் எனவும் நம்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேசத்திலையே குதிரைகளும் கோவேறு கழுதைகளும் உள்ளன இவை 1660 ம் ஆண்டு முதல் 1675ம ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுனராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருந்தார்.



19 ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன. அன்றில் இருந்து  இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.

தற்போது அக் குதிரைகள் மரபுரிமை சொத்தாக அறிவிக்கப்பட்டு , குதிரைகள் நெடுந்தீவை விட்டு கடத்தப்படுவது தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையிலையே இந்த குதிரைகள் கடத்தி வரப்பட்டு வலி.வடக்கு பிரதேசத்தில் வளர்க்கப்படுகின்றது.


 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136427/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்களும், தண்டனைகளும் தமிழர்களுக்கு மட்டுமே. இராணுவத்துக்கல்ல 

Link to comment
Share on other sites

நெடுந்தீவு குதிரைகள் கடத்தல்! காங்கேசன்துறை படை முகாம்களில் கண்டுபிடிப்பு!

நெடுந்தீவில் மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குதிரைகள் சட்டவிரோதமாக அங்கிருந்து கடத்தப்பட்டு காங்கேசன்துறை பகுதியில் உள்ள படைமுகாம்களில் வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இக்குதிரைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்வதுசட்டவிரோதமாகும். இந்நிலையில் இவை கடத்தப்பட்டு காங்கேசன்துறை படை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. படைத்தரப்பினரால் இவை கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

காங்கேசன்துறை படை முகாம்களில் உள்ள குதிரைகளில் காணப்படும் குறிகள் நெடுந்தீவில் குதிரை வளர்ப்போரால் பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வரும் குறிகள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்த போது நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள ஒருவரால்பாரமரிக்கப்பட்டு வந்த குதிரைகள் சில இவற்றில் அடங்கியுள்ளமையும் தெரியவந்தது.

இவரது குதிரையின் இடதுகாலில் மேல் நோக்கிய சூலக் குறியீடு உள்ளது. கடந்த 50வருடத்துக்கும் மேலாக இந்தக் குறியீட்டை பேணி வருவதாக அக்குதிரைகளை பராமரித்து வந்தநபர் தெரிவித்தார்.

நெடுந்தீவுக்கே உரித்தான இவ்வாறான குதிரைகள் இவ்வாறு தொடர்ச்சியாக வேறுபகுதிகளுக்கும் கடத்தபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

கடந்j 2014ம் ஆண்டில் நெடுந்தீவில் இருந்து சில குதிரைகள் தென்பகுதிக்கு கடத்திச்செல்லப்பட்டன. இதனை யாழ்.தினக்குரல் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது.

இதனையடுத்து இக்குதிரைகளை கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர்விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டடார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைதொல்பொருள் திணைக்களத்தினரும், வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும்மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குதிரைகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை வடக்கு மாகாண சபையின் ஊடாகமேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இங்கிருந்து குதிரைகள் கடத்தப்பட்டு வருவது இம் முயற்சிக்குப் பாதிப்பைஏற்படுத்தக்கூடும் என நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/security/01/119159?ref=morenews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.