Jump to content

இந்திய - அமெரிக்க ஊடுருவலால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! - புலம்புகிறார் பீரிஸ் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய - அமெரிக்க ஊடுருவலால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! - புலம்புகிறார் பீரிஸ் 
[Wednesday 2016-09-28 08:00]
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் மீதான அமெரிக்க மற்றும் இந்திய ஊடுருவல்களால் பாதுகாப்பு உள்ளிட்ட அரசின் உள்ளக இரகசியங்கள் அம்பலமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பை மிகவும் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய பொருளாதாரத்தின் மீதான அமெரிக்க மற்றும் இந்திய ஊடுருவல்களால் பாதுகாப்பு உள்ளிட்ட அரசின் உள்ளக இரகசியங்கள் அம்பலமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பை மிகவும் மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

   

இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி கொண்டு வரப்பட்டால் பாரிய சவால்களையே எதிர் கொள்ள நேரிடும். ஆகவே அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான பொருளாதாரத்தை மையப்படுத்திய ஒப்பந்தங்களை அரசாங்கம் மறுபரிசீலணை செய்ய வேண்டும்.

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் எதிர்பார்ப்புடன் அரசாங்கம் செயற்படுகின்றது. பொருட்கள் கொள்வனவில் மாத்திரம் இதுவரைக் காலமும் இருந்த இந்தியா தற்போது சேவை துறையை நோக்கி வியாபிக்கின்றது. இதனால் உள்ளுர் பொறியியல் உள்ளிட்ட பல துறைகளின் தரம் கேள்விக்குறியாவதுடன் இலங்கையர்களுக்கு தொழிலின்மையும் ஏற்பட போகின்றது. 30 ஆயிரம் பட்டதாரிகள் இதுவரையில் நாட்டில் உள்ளனர். எட்கா ஒப்பந்தம் ஊடாக இலங்கை இந்தியாவின் பொருளாதார பிராந்தியமாகும் நிலையே காணப்படுகின்றது. இதற்கு முன்னர் இந்தியாவுடன் செய்துக் கொள்ளப்பட்ட சுதந்திர பொருளாதார ஒப்பந்தங்களில் இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்த்தினால் எவ்விதமான நன்மையும் இலங்கைக்கு கிடையாது. மாறாக இந்தியா முழு அளவில் பலனை அடைகின்றது.

உள் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தியாவின் அவசர சிகிச்சை சேவை தென் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? இரகசிய தகவல்களை திருடும் பொருட்டே இவ்வாறான சேவைகளை இலங்கையில் அறிமுகம் செய்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் மற்றுமொரு ஆபத்தான ஒப்பந்தத்தை செய்துக் கொள்வதன ஊடாக நிலைமை மோசமடையும்.

மேலும் உள் நாட்டு இறைவரி தினைக்களத்தின் வரி சேகரிப்பு பிரிவை அமெரிக்காவின் மெகன்ஸி என்ற நிறுவனத்திற்கு கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது மிகவும் ஆபத்தான விடயமாகும். உள் நாட்டு பாதுகாப்பு மற்றும் அரச இரகசியங்கள் வெளிநாடுகளுக்கு தெரிய கூடிய நிலையே இதில் காணப்படுகின்றது. இதனால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.http://www.seithy.com/breifNews.php?newsID=166366&category=TamilNews&language=tamil

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.