Jump to content

அரசியல் கைதிகளின் போராட்டம்


Recommended Posts

 

showImageInStory?imageid=299704:mr

 

 

தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­காரம் மீண்டும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­துடன் பல­ரு­டைய கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் 21 அர­சியல் கைதிகள் கடந்த ஒரு வார காலத்­திற்கு மேலாக உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்தி வரு­கின்­றார்கள். 

தங்­க­ளுக்கு எதி­ராக வழக்கு விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­டுத்த வேண்டும். சிங்­களப் பிர­தேச நீதி­மன்­றங்­களில் உள்ள தமது வழக்­கு­களை வவு­னியா அல்­லது யாழ்ப்­பா­ணத்­திற்கு மாற்ற வேண்டும் என்­பது அவர்­க­ளு­டைய கோரிக்­கை­யாகும். 

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து, அதற்­காக உண்­ணா­வி­ர­த­மி­ருந்து நடத்­தப்­ப­டு­கின்ற போராட்டம் 29 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே மிகவும் வலு­வான முறையில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

விடு­த­லைப்­பு­லி­களின் யாழ். மாவட்ட அர­சியல் துறை பொறுப்­பா­ள­ராக இருந்து, இந்­திய அர­சாங்­கத்­திடம் ஐந்து கோரிக்­கை­களை முன்­வைத்து திலீபன் (இரா­சையா பார்த்­திபன்) நடத்­திய கடும் உண்­ணா­வி­ரதப் போராட்­டமே, தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான முன்­னோடி போராட்டம் என்று குறிப்­பி­டலாம். 

திலீபன் மேற்­கொண்­டி­ருந்த உண்­ணா­வி­ரதம் ஒப்­பற்­றது. தன்­னையே ஒறுத்து தனது உயி­ரையே தியாகம் செய்த உன்­ன­த­மா­னது. இதன் கார­ண­மா­கவே தியாக தீபம் என்று திலீ­பனைக் குறிப்­பி­டு­கின்­றார்கள்.

திலீ­ப­னு­டைய உண்­ணா­வி­ரதம், உல­குக்கு அஹிம்­சையை அறி­மு­கப்­ப­டுத்தி, சாத்­வீகப் போராட்­டத்தை ஆங்­கி­லேய சாம்­ராஜ்ஜி­யத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுத்­தி­ருந்த இந்­தியத் துணைக்­கண்­டத்தின் அர­சாங்­கத்­திடம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரி நடத்­தப்­பட்­டது. 

அஹிம்சைப் போராட்­டத்தின் தந்­தை­யா­கிய மகாத்மா காந்­தியை தேச­பி­தா­வாகக் கொண்­டி­ருந்த பாரதத் தேசத்­திற்கே அந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தின், சாத்­வீகப் போராட்­டத்தின் வலி­மையை திலீ­ப­னு­டைய போராட்டம் எடுத்துக் காட்­டி­யி­ருந்­தது.

பதி­னொரு தினங்கள் உணவும் இல்லை. நீரும் இல்லை. வெறும் காற்றை மட்­டுமே சுவா­சித்து, அணு அணு­வாக திலீபன் தன்­னையே ஆகு­தி­யாக்கிக் கொண்ட மிகவும் உயர்ந்த நிலை­யி­லான போராட்­ட­மாக திலீ­பனின் உண்­ணா­வி­ரதப் போராட்டம் வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. 

உன்­னதம் மிக்க திலீ­பனின் உண்­ணா­வி­ரதப் போராட்டம் பாரதப் பேர­ர­சினால் உதா­சீனம் செய்­யப்­பட்­டது. இலங்கை அர­சாங்­கத்­தினால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சியல் கைதி­கள் உட­ன­டி­யாக விடு­தலை செய்யப்பட வேண்டும் என்­பது அந்தப் போராட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்ட ஐந்து கோரிக்­கை­களில் மிக முக்­கி­ய­மான கோரிக்­கை­யாக அமைந்­தி­ருந்­தது.

இந்த கோரிக்­கை­களை நிறை­வேற்ற இந்­திய அரசு முன்­வ­ராத போதிலும், பாரத தேசத்தின் அப்­போ­தைய இலங்­கைக்­கான தூது­வ­ராக – அந்த அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யாக இருந்த டிக் ஷித் உண்­ணா­வி­ரதம் இருந்த திலீ­பனை சென்று பார்ப்­ப­தற்கு மறுத்­து­விட்டார். 

திலீ­பனைச் சென்று தான் பார்­வை­யிட்டால், திலீ­பனின் உண்­ணா­வி­ரதம் கைவி­டப்­ப­டுமா என்ற எதிர்க் கேள்­வியை அவர் அப்­போது, விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ர­னிடம் வின­வி­யி­ருந்தார். 

இந்­தியத் தூதுவர் திலீ­பனைப் பார்த்தார் என்­ப­தற்­காக உண்­ணா­வி­ரதப் போராட்டம் கைவி­டப்­ப­ட­மாட்­டாது. கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்­பது முக்­கியம் என்று அவ­ருக்குத் தெளி­வாகக் கூறப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அவர் திலீ­பனின் உண்­ணா­வி­ர­தத்தைக் கண்டு கொள்­ள­வு­மில்லை. அந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தின் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வு­மில்லை. 

மாறு­பட்ட சூழல் 

கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். இல்­லையேல் சாகும் வரை உண்­ணா­வி­ரதம் இருப்பேன் எனக் கூறி, அந்தக் கூற்றை மெய்ப்­பிக்கும் வகையில் 1987 ஆம் ஆண்டு, செப்­டெம்பர்  மாதம் 26 ஆம் திகதி திலீ­பனின் உயிர் பிரிந்­தது. இதனால் அஹிம்­சையின் பிறப்­பி­ட­மா­கிய பாரத தேசத்தின் அன்­றைய நிலைப்­பாடு பல­ராலும் விமர்­சிக்­கப்­பட்­டது, கண்­ட­னத்­திற்கு உள்­ளா­கி­யது.

இந்த வகை­யில்தான் 29 வரு­டங்­க­ளுக்குப் பின்­னரும் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து உண்­ணா­வி­ரதப் போராட்­டங்கள் தமிழ் அர­சியல் கைதி­க­ளினால் சிறைச்­சா­லை­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம், அவ­ச­ர­காலச் சட்டம் என்­ப­வற்றின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்­கா­கவே திலீ­ப­னு­டைய குரல் ஒலித்­தது. 

அதே சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணை­க­ளின்­றியும், ஏனோ­தானோ என்ற ரீதியில் மந்த கதி­யி­லான நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக, விடு­த­லை­யின்­றியும் பல வரு­டங்­க­ளாக சிறையில் வாடு­கின்ற தங்­களை விடு­தலை செய்ய வேண்டும் என்று தமிழ் அர­சியல் கைதிகள் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை அவ்­வப்­போது மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். 

திலீபன் கொள்கை மீது இறுக்­க­மான பிடிப்பைக் கொண்­டி­ருந்த ஒரு போராளி. அந்த உண்­ணா­வி­ர­தத்தின் தளமும், களமும் வித்­தி­யா­ச­மா­னது. 

ஆனால், இப்­போ­தைய தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரதப் போராட்ட தளமும், களமும் முற்­றிலும் மாறு­பட்­டது. பல­த­ரப்­பட்ட நம்­பிக்­கை­க­ளுக்கு மத்­தியில் வித்­தி­யா­ச­மா­னதொரு அர­சியல் சூழலில் இது மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இருப்­பினும், தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கைகள் இன்னும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.  

உண்­ணா­வி­ரதம் இருக்­கின்ற தமிழ் அர­சியல் கைதி­களை தமிழ் அர­சியல் தலை­வர்கள், தமிழ் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள், அர­சாங்கத் தரப்பு அமைச்­சர்­க­ளும்­கூட சென்று பார்­வை­யிட்­டி­ருக்­கின்­றார்கள். எல்­லோரும் அவர்­க­ளு­டைய கோரிக்­கை­களை நேர­டி­யாகக் கேட்­ட­றிந்­தி­ருக்­கின்­றார்கள். அந்தக் கோரிக்­கை­களில் உள்ள நியா­யத்தை, நியாயத் தன்­மையை அவர்கள் ஏற்­றுக்­கொண்டு அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று எத்­த­னையோ தட­வை­கள் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்­றார்கள். 

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் தமிழ் அர­சியல் கைதிகள் நாடெங்­கிலும் உள்ள சிறைக்­கூ­டங்­களில் ஒரு தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். ஜனா­தி­பதி இந்த விட­யத்தில் தலை­யிட்டு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரி­யி­ருந்­தார்கள். 

ஜனா­தி­ப­தியின் உறு­தி­மொ­ழியும்

நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை

அதற்­கேற்ற வகையில் அந்த விட­யத்தில் தலை­யிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திக­திக்கு முன்­ன­தாக இது குறித்து தீர்க்­க­மான ஒரு முடிவு எடுக்­கப்­படும் என்று எழுத்து மூல­மாக தமிழ்த்­தே­சிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன், புனர்­வாழ்வு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் சுவா­மி­நாதன், அப்­போ­தைய சிறைச்­சா­லைகள் ஆணை­யாளர் ரோஹண புஷ்­ப­கு­மார ஆகியோர் ஊடாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். 

ஆனால் அந்த உறு­தி­மொ­ழியும் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டது. கைதி­களை விடு­தலை செய்­வ­தற்கு உறு­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு­சில கைதி­களை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்தி விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­ட­போ­திலும், அந்த நட­வ­டிக்­கையும் பிசு­பி­சுத்துப் போனது. 

அர­சாங்­கத்தின் உயர் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியும் ஏமாற்று வித்­தை­யா­கிப்­போ­னது. 

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான் யாழ்ப்­பாணம், கொக்­குவில் இந்துக் கல்­லூ­ரியில் கல்விப் பொதுத் தரா­தர உயர்­தர வகுப்பில் பயின்று கொண்­டி­ருந்த இரா­ஜேஸ்­வரன் செந்­தூரன் என்ற மாணவன் கோண்­டாவில் ரயில் நிலை­யத்­துக்கு அருகில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை ரயில் முன்னால் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

அந்த மாணவன்; ஓடும் ரயில் முன்னால் பாய்­வ­தற்கு முன்னர், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எழு­தி­யி­ருந்த ஒரு கடி­தத்தில் அர­சியல் கைதிகள் என எவரும் சிறைச்­சா­லை­களில் இருக்­கக்­கூ­டாது என தெரி­வித்து, தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் உட­ன­டி­யாக விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என கோரி­யி­ருந்தார். 

அந்த நேரம் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பான கோரிக்­கையும் கைதிகள் முன்­னெ­டுத்­தி­ருந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டமும் மக்கள் மத்­தியில் உள்­ளு­ரிலும், சர்­வ­தேச மட்­டத்­திலும் உணர்வு பூர்­வ­மாக எழுச்சி பெற்­றி­ருந்­தன.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காகத் தனது இன்­னு­யிரை மாய்த்துக் கொண்ட மாணவன் செந்­தூ­ர­னுக்கு தமிழ் அர­சியல் கைதி­க­ளாக உற­வி­னர்கள் எவரும் இருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தமிழ் அர­சியல் கைதி­க­ளுடன் எந்த வகை­யிலும் தொடர்­புகள் இல்­லாத அந்த மாணவன் அவர்­க­ளு­டைய விடு­த­லையில் அக்­க­றையும் கவ­லையும் கரி­ச­னையும் கொண்டு தனது உயி­ரையே மாய்த்துக் கொள்ளும் அள­வுக்கு, அவரை இட்டுச் சென்­றி­ருந்­த­தையே அவ­ரு­டைய மரணம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்த நிலை­யில்தான் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லையும் அவர்­க­ளு­டைய வழக்கு விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­டுத்தும் விட­யமும் உரிய கவ­னிப்­பின்றி மந்­த­மாகிக் கிடக்­கின்­றது. 

தமிழ் அர­சியல் கைதிகள் சிறைச்­சா­லை­களில் உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்­தும்­போது, தலை­வர்கள் அவர்­களைச் சென்று பார்ப்­பதும் ஆறுதல் கூறு­வதும், உறு­தி­மொழி வழங்கி அவர்­க­ளு­டைய போராட்­டத்தை இடை­நி­றுத்­து­வதும் தொடர்ந்து நடை­பெ­று­கின்­றதே தவிர அவர்­க­ளு­டைய பிரச்­சி­னைக்கு முழு­மை­யாகத் தீர்வு காண்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­த­பா­டாக இல்லை.

பொலிஸார் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பா­கவே ஆட்­களைக் கைது செய்­கின்­றார்கள். இது சாதா­ரண நடை­முறை. குற்றச் செயல்கள் இல்­லா­விட்டால் எவ­ரையும் பொலிஸார் கைது செய்­வ­தில்லை. 

ஆனால் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டம் மற்றும் அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் ஒருவர் குற்றம் செய்­தி­ருக்­கலாம் அல்­லது குற்றம் செய்ய முயற்­சித்­தி­ருக்­கின்றார் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் ஆட்­களைக் கைது செய்­வ­தற்குப் பொலிஸார் உட்­பட முப்­ப­டை­யி­ன­ருக்கும் அதி­காரம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. 

சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை நீண்ட காலத்­திற்குத் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யவும், அந்த விசா­ர­ணை­யின்­போது அவர்கள் தெரி­விக்­கின்ற தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு, ஒப்­புதல் வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் அவர்களுக்கு எதி­ராகக் குற்­றங்­களைச் சுமத்தி நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­வ­தற்கும் பொலி­ஸா­ருக்கும் முப்­ப­டை­யி­ன­ருக்கும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. 

புலன் விசா­ர­ணை­க­ளிலும், வழக்கு விசா­ர­ணை­க­ளிலும் ஒருவர் குற்­ற­வா­ளி­யாக நிரூ­பிக்­கப்­பட்டால், அவ­ருக்கு சிறைத் தண்­டனை உள்­ளிட்ட தண்­டனை வழங்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் கைது செய்­யப்­பட்ட ஒருவர் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­படும் வரையில் பல வரு­டங்கள் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். தண்­டனை அனு­ப­விக்­கின்­றார்கள். 

இந்தத் தண்­டனை நீதி விசா­ர­ணை­க­ளின்­போது பெரும்­பான்­மை­யான வழக்­கு­களில் கவ­னத்திற் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. குற்­ற­வா­ளி­யாகக் காணப்­ப­டு­கின்ற ஒருவர் அதற்கு முன்னர் அவர் அனு­ப­வித்த தண்­டனை வெறும் தண்­ட­னை­யா­கவே இருக்க குற்றச் செய­லுக்­கான சிறைத் தண்­டனை முழு­வ­தையும் நீதி­மன்றத் தீர்ப்பின் பின்னர் அவர் அனு­ப­விக்க நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­கின்றார். 

அதே­நேரம் வழக்கு விசா­ர­ணையில் ஒருவர் நிர­ப­ரா­தி­யாகக் காணப்­பட்டால், அது வரையில் அவர் பல வரு­டங்­க­ளாகத் தடுத்து வைக்­கப்­பட்­டதன் மூலம் குற்றம் செய்­யா­ம­லேயே அனு­ப­வித்த தண்­ட­னைக்கு எந்­த­வித நிவா­ர­ணமும் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

குற்­றச்­சாட்­டுக்­களைக் குறைப்­ப­தற்கு நட­வ­டிக்­கையாம் 

இத்­த­கைய பின்­ன­ணி­யில்தான், புனர்­வாழ்வு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் சுவா­மி­நாதன், சிறைக் கைதி­களை விடு­தலை செய்­வது நீதி­மன்­றங்­களின் கட­மை­யென்றும் சிறைச்­சா­லைகள் அமைச்­ச­ரா­கிய தனக்கும் அதற்கும் எந்­த­வி­த­மான பொறுப்பும் கிடை­யாது என்றும் ஒரு முறை கைவி­ரித்­தி­ருந்தார். அதே அமைச்­சர்தான் அண்­மையில் 23 அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்கு சட்­டமா அதி­ப­ருடன் இணைந்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

அது மட்­டு­மல்­லாமல் பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள கைதி­களின் குற்­றச்­சாட்­டுக்­களைக் குறைத்து அவர்­களை விடு­தலை செய்­வ­தற்­கான முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­யி­ருக்­கின்றார். 

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களே தமிழ் அர­சியல் கைதிகள் ஆவர். அவர்கள் அர­சியல் கார­ணங்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­றங்­களைப் புரிந்­தார்கள் என்ற கார­ணத்­திற்­கா­கவும், அத்­த­கைய குற்­றங்கள் புரிந்­தி­ருப்பார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரிலுமே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். ஆனால் அர­சாங்கம் அவர்­களை அர­சியல் கைதி­க­ளாக ஏற்­றுக்­கொள்ள மறுக்­கின்­றது. அவர்கள் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள். அவர்கள் பயங்­க­ர­வா­திகள், பயங்­கரக் குற்­ற­வா­ளிகள் என்று அரச தரப்பில் வியாக்­கி­யானம் செய்­யப்­ப­டு­கின்­றது.

இப்­ப­டி­யான நிலையில் சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றங்­களின் எண்­ணிக்­கையைக் குறைப்­ப­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது, நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது என்­பது குற்ற நட­வடிக்கை முறை­களை அர­சாங்கம் தனக்கு ஏற்ற வகையில் மாற்­றிக்­கொள்­வ­தற்­கான வழி­மு­றை­க­ளா­கவே நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

குற்றம் செய்­யாத ஒருவர் மீது குற்றம் சுமத்த முடி­யாது. குற்றம் சுமத்­து­வ­தற்குக் கார­ணங்கள் இருக்க வேண்டும். சந்­தேகச் சூழலில் ஒருவர் மீது குற்றம் சுமத்­தி­னாலும், அவர் குற்­ற­வாளி என நிரூ­பிக்­கப்­படும் வரையில் அவரை நிரபாராதி என்றே கருத வேண்டும் என்பது நீதித்துறையின் நடைமுறையாகும். 

ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படுபவர்களை குற்றவாளிகளாகவே அரசாங்கம் கருதிச் செயற்படுகின்றது. அதன் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக முறையான நீதி விசாரணைகளின்றியும், விடுதலை செய்யப்படாமலும் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்.

தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக, அரசியல் காரணங்களுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களையும், அவர்களுக்கு உதவினார்கள், ஒத்துழைத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களையும் அரசியல் கைதிகளாக ஏற்க மறுத்து, அவர்களைப் பயங்கரவாதிகளாக நோக்கி நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானமாக மாட்டாது. 

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பயங்கரவாதச் சூழல் நாட்டில் இப்போது இல்லை. பயங்கரவாதம் தலையெடுப்பதற்கான சூழலும் கிடையாது என அரசாங்கமே கூறி வருகின்றது. இந்த நிலையில் சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை இழுத்தடித்து, அவர்களை வேண்டுமென்றே தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவது நல்லதல்ல. 

நல்லாட்சி அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என கூறிக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி நடைமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காமலும், மனிதாபிமானமற்ற முறையிலும் நடந்து கொள்வது உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் உதவமாட்டாது என்பதை மறந்துவிடலாகாது.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=28/09/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.