Jump to content

தமிழர் தாயகத்தில் நடக்கும் பௌத்த மயமாக்கல்! ஐ நா வில் அம்பலம்


Recommended Posts

unnamed-3-24-450x338.jpg

ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழக (UNHRC) கூட்டத் தொடரில் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பசுமை தாயகம் மற்றும் அமெரிக்காவினை தளமாகக் கொண்டியங்கும் USTPAC இணைந்து இந் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.

தமிழர் பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் பௌத்த விகாரைகள் மற்றும் சிறிலங்கா படையினர் நடாத்தும் தொழில் முயற்சிகள் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய புத்தக பிரதி கடந்த வாரம் நடைபெற்ற 33 வது மனித உரிமை மாநாட்டில் அனைத்து நாட்டு பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் நில அபகரிப்பு தொடர்பில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து புகைப்பட ஆதாரங்கள் மூலமாக சர்வதேச நாட்டு பிரதிநிதிகளுக்கு மேற்படி “பக்க” நிகழ்வில் (Parallel event) விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

8 மாதங்களாக நடாத்திய ஆய்வின் அடிப்படையில் இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்ட தமிழர் தாயகத்தின் மூலை முடுக்கெல்லாம் சத்தமில்லாமல் கட்டியெழுப்பட்டு வந்த சிறிய பெரிய பௌத்த கட்டுமானங்கள் மற்றும் இராணுவம் நடாத்தும் பொருளாதார நிறுவனங்கள் குறித்த ஆதாரபூர்வமான புகைப்படங்கள் மற்றும் தரவுகள் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந் நிகழ்வில் முக்கிய அதிதிகளாக உலகளாவிய ரீதியில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஓக்லாண்ட் நிறுவனத்தின் அனுராதா மிட்டல் (Executive Director, The Oakland Institute, USA), வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Member of Parliament, Vice Chair of All Party Parliamentary Group for Tamils) மற்றும் போல் ஸ்கல்லி (Member of Parliament, Vice Chair of All Party Parliamentary Group for Tamils) போன்றோர் இணைந்து இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு தொடர்பில் தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

இலங்கையில் தமிழர் பகுதியில் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்பு மற்றும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக பல தொடர்ச்சியான காத்திரமான செயற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த பல வருடங்களாக மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 2014 ம் ஆண்டு லண்டனில் பல நாட்டு பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் , வெவ்வேறு நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் எனப் பலரை உள்ளடக்கி, இலங்கையில் நடைபெறும் நில அபகரிப்பு மற்றும் அது தொடர்பான இலங்கை அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை வெளிக்கொணரும் முகமாக சர்வதேச மாநாடு ஒன்று ஒழுங்கு செய்திருந்தனர். இதன் காரணமாக கடந்த கால அரசாங்கம் பல முனைகளில் இருந்து பல அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.

சர்வதேச அழுத்தம் காரணமாக இலங்கை அரசு தான் ஆக்கிரமித்த சொற்ப அளவான நிலப் பகுதியினை விடுவித்து சர்வதேச நாடுகளை ஏமாற்றும் செயற்படுகளை மேற்கொண்டது.

எனினும் பிரித்தானிய தமிழர் பேரவை இவ் வருட மார்ச் மாதத்தில் அபகரிக்கப்படட மற்றும் விடுவிக்கப்படட நிலம் தொடர்பில் தான் திரட்டிய விரிவான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றினை தயாரித்து சர்வதேச நாடுகளிடம் சமர்ப்பித்திருந்தது.

குறிப்பாக வட மாகாணத்தில் அபகரிக்கப்படட 70,000 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2500 ஏக்கர் நிலப்பகுதி மட்டுமே விடுக்கப்பட்டிருந்ததமை அம்பலப்படுத்தப்பட்டது.

http://www.tamilkingdom.com/2016/09/428_79.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.