Jump to content

மகாவலி – சாரங்கன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகாவலி – சாரங்கன்

2016-04-07 20.16.27 (1)

நித்திரையில் மனைவி கேவி கேவி அழும் சத்தம் கேட்டு

“இஞ்சேரும் இஞ்சேரும்”  என்று மனைவி திலகவதியின்  தோளை தட்டி  எழுப்பினார் ராஜதுரை

“இவன் தம்பி சுபன் கூப்பிட்டமாதிரி கிடந்தது ”

“அது கனவு சும்மா படும் ”

மனைவியை படுக்கவைத்தாலும் ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு  வந்தவர்களுக்கு  புது இடமும் அதன் சூழலும் மகள் மருமகன்  பேரப்பிள்ளைகள் என்ற உறவுகளாலும்  மனதில் இருந்து ஓரளவு மறந்திருந்த அந்த மகாவலி போனவாரம் அவர்கள்  சென்றிருந்த ஒரு உறவினரின்  கலியாண வீட்டு நிகழ்வு ஒன்றில்  மீண்டும் கிளறப்பட்டுவிட்டது .

“நீங்கள் சுபனின் பெற்றோர் தானே”  உங்களை எனக்கு தெரியும் நான் சுபனின் நண்பன் என்று தன்னை அறிமுகம் செய்துவிட்டு இன்னுமொரு விடயத்தையும் அவன் சொல்லி விட்டு சென்றுவிட்டான்.

அன்றில் இருந்தது  மனைவி  திலகவதி பகலில் சந்தோசம் இழந்து அடிக்கடி ஏக்கபெருமூச்சுடன் அலைவதும் இரவில் கனவில் நித்திரை கலைந்து  அழுவதும் வாடிக்கையாகிவிட்டது .

பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவது ,அவர்களுக்கு தமிழ் சொல்லிகொடுப்பது, டிவியில் சீரியல் பார்ப்பது என்று எல்லாம் வழக்கம்போல  தொடர்ந்தாலும் முன்னர் மாதிரி  சந்தோசம் இல்லாமல் மனைவி அவஸ்தைப்படுவதை  ராசதுரையால் உணர முடிந்தது .

மகளும் மருமகனும் கூட மனைவியில் ஏற்பட்டிருக்கும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கவேண்டும் இல்லாவிடில் நேற்று அவர்களுடன் காரில் செல்லும்போது”உங்களுக்குள் ஏதும் பிரச்சனையோ ,அம்மா முகத்தில்  வாட்டம் தெரியுது  ” என்று மகள் கேட்டிருக்கமாட்டாள் .ராசதுரை கலியாண வீட்டில் சுபனின் நண்பனை சந்தித்ததை அவர்களுக்கு சொல்லவிரும்பவில்லை .

“அவா இப்படித்தான் சுபனின் நினைவு வரும்போது கொஞ்சம் நிலை தடுமாறுவதும் பின்னர் பேரப்பிள்ளைகளுடன் விளையாட அதை மறப்பதுமாக இருக்கின்றா, .பாழாய் போன  விதி யாரை விட்டது .நீங்கள் ஒன்றும் யோசிக்காதையுங்கோ பிள்ளையள் “என்று சொல்லி சமாளித்துவிட்டார் .

ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை .”பரத் கனடாவில் தான் இருக்கின்றான் என்று சுபனின் நண்பன் சொன்னது உண்மையா ?  இந்தியன் ஆமியுடனான யுத்தத்தில் இறந்துவிட்டான் என்று தான் கேள்விப்பட்டது பொய்யா ? கல்யாணம் செய்து குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கின்றான்  , இங்கும் அவர்கள் அமைப்பில் ஒரு நல்ல பொறுப்பில் அவனை வைத்திருக்கின்றார்கள்.

இவ்வளவு வருடங்களுக்கு பிறகு தாங்கள் ஏன் சுபனின் நண்பனை சந்தித்திருக்க வேண்டும்.  அவன் ஏன் இப்படி ஒரு செய்தியை சொல்லியிருக்கவேண்டும்.  ராசதுரை மண்டையை போட்டு குழப்புகின்றார். அருகில் மனைவி திடுக்கிட்டு திடுக்கிட்டு உடலை அசைத்து புரண்டு புரண்டு படுப்பது தெரியுது . தானும் ஒரு தேனீர் குடித்து மனைவிக்கும் கொடுப்பம் என்று கட்டிலை விட்டு இறங்கி குசினிக்கு செல்கின்றார் .

மாகாவலி  .அந்த நாளை எப்படி மறப்பது ?

000

தாவடிச்சந்தியில் இருந்து மானிப்பாயை நோக்கிச்செல்லும் வீதியில் அமைந்துள்ள  பிள்ளையார் கோவிலுக்கு முன்புறம் தான்   இராசதுரையின் வீடு  .யாழ் கச்சேரியில் அரசாங்கவேலை. காலை எழுந்து ஸ்கூட்டரில் வேலைக்கு போய் மாலை வீடு திரும்பினால் அருகில் இருக்கும் சனசமூகநிலையத்தில் போய் பத்திரிகைகள் வாசிப்பது அல்லது வீட்டு தோட்டம் தான் அவர் பொழுது போக்கு  . மனைவி திலகவதி வீடும் கோயிலும்  கணவனும் பிள்ளைகளும் என்று உயிர் வாழ்பவள் . மகன் சுபன் யாழ் இந்து கல்லூரியில் ஏ எல் படிக்கின்றான் ,வீட்டிற்கு அடங்கிய பெடியன் . எப்போதும் அவனது கையில் ஒரு புத்தகம் இருக்கும் இல்லாவிடில் பாட் இருக்கும். படிப்பு கிரிக்கெட் இரண்டுமே  அவனது உலகம்.   .இரண்டிலும் அவன் மிக பிரகாசமாகவும்  இருந்தான் .தங்கை வேணுகா  கொக்குவில் இந்து கல்லூரியில்  ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள் .ராஜதுரையர் கச்சேரிக்கு போகும்போது மகளை பாடாசாலையில் இறக்கிவிடுவார் .பாடசாலை முடிய பஸ் எடுத்தால் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவாள் . மிக சந்தோசமாக ராசதுரையரின் குடும்பம் வாழ்ந்து  கொண்டிருந்த காலங்கள் அவை

83 கலவரத்தின் பின் வந்த அரசியல் மாற்றத்தால் நாட்டில் மக்களின் சகஜ வாழ்வு சற்று மாறியிருப்பதும் விடுதலை இயக்கங்களுக்கு மாணவர்கள் இணைவதும் ராஜதுரைக்கு  மனதில் சற்று  பயத்தை உண்டு பண்ணியிருந்தாலும்  மகன் சுபன் படிப்பில் முழு கவனத்துடன்  இருப்பது அவன் வேறு திசையில் பயணிக்கமாட்டான் என்ற நம்பிக்கையை அவருக்கு  கொடுத்திருந்தது. சில மாதங்களில் நடந்த  ஏ எல் பரீட்சையை எழுதிவிட்டு தனக்கு எப்படியும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று சொல்லியிருந்தான் .

பரீட்சை முடிவுகள் வரும்வரை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது ,வீடியோவில் சினிமா பார்ப்பது என்று பொழுதை போக்கிக்கொண்டிருந்த சுபன் ஒருநாள் கோவிலடியில்  படம் போடுகின்றார்கள் என்று நண்பர்களுடன் சேர்ந்து சென்றவன்  நள்ளிரவாகியும் வீடு திரும்பாதது போலிஸ் அவனை  பிடித்திருக்குமோ என்ற ஒரு பயத்தை ராஜதுரைக்கு  ஏற்படுத்த தனது ஸ்க்கூடரை எடுத்துக்கொண்டு மகனை தேடி கோயிலடிக்கு செல்கின்றார் .  கோவிலடியில் எவரும் இல்லாது மேலும் பயத்தை கொடுக்க கொக்குவிலில்  இருக்கும் சுபனின் நெருங்கிய நண்பன் வீட்டிற்கு செல்கின்றார் .

சுபன் சில மாதங்களாக ஒரு விடுதலை அமைப்புடன் சேர்ந்த பெடியன்களுடன் தொடர்பு  கொண்டிருந்ததாகவும்   நேற்று எங்கே போனான் என்று தனக்கு தெரியாது என்று நண்பன்  சொல்லிவிட்டான் . வீடு திரும்பிய ராஜதுரை  மனைவியிடம் நாளை காலை எப்படியும் சுபன் எங்கே என்று அறிந்துவிடுகின்றேன், இந்த நள்ளிரவில்  அவனது நண்பர்கள் வீடுகளுக்கு அலைந்துகொண்டிருக்கமுடியாது என்று மனைவிக்கு சொன்னாலும் மனம் ஏதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது போலே உணர்ந்தார் .

மகாவலி

காலை ராஜதுரை வீடு வந்த ஒரு இளைஞன் தமது அமைப்பில் பயிற்சி பெற சுபன் நேற்றிரவு இந்தியா சென்றுவிட்டதாக சொல்லிவிட்டு ஒரு கடித்தையும் கொடுத்துவிட்டு செல்கின்றான் . ராஜதுரையருக்கு உலகமே பிரண்டுவிட்டது போலிருந்தது . மனைவி திலகவதி தலையில் அடித்து கத்தி குளறி ஒப்பாரி வைக்க  தொடங்கிவிட்டார்  .ஒரே பெடியன் எவ்வளவு செல்லமாக சுதந்திரம் கொடுத்து வளர்த்தோம் இப்படி  செய்துவிட்டானே என்ற ஆதங்கம் தான் அவர்களுக்கு  .

சில வாரங்களுக்கு  முன்புதான் மானிப்பாய் வீதியில் பஸ்ஸில் செல்லும்போது பல பாடசாலை மாணவர்களை இலங்கை இராணுவம் சுட்டுகொன்றிருந்தது  .அதில் ஒருவனாக சுபன் இல்லாமல் கடைசி உயிருடன் இந்தியாவில்  இருப்பதே பெரியவிடயம் என்று மனைவியை ஆறுதல் படுத்துகின்றார் .

பழையபடி ராஜதுரை குடும்பம் பழைய சீரான வாழ்விற்கு திரும்பினாலும்  மகன் சுபன் இல்லாத குறை அவர்களை  வாட்டிக்கொண்டே  இருந்தது .

சுபன்   முகாமில் பயிற்சி முடித்து இப்போ  சென்னையில் தொலைத்தொடர்புகள்  வகுப்புகள்  எடுப்பதாக தமிழ் நாட்டில் பயிற்சி முடிந்து நாடு திரும்பிய சுபனின் நண்பன்   வந்து சொன்னது சிறு ஆறுதலை அவர்களுக்கு கொடுத்தது .

அன்று பாடசாலையால் திரும்பிய மகள் வேணுகா   தன்னுடன் படிக்கும் மாணவர்கள் சுபன் இணைந்த புளொட் அமைப்பின்உள்ளே கருத்து முரண்பாடுகளால் பிரச்சனை  தோன்றி  அமைப்பின் உள்ளே பலர் கொலை செய்யப்படிருப்பதாகவும்   இங்கும் அவர்கள் பலரை தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னது அவர்களுக்கு மீண்டும் மிகுந்த கலக்கத்தை கொடுத்தது. பத்திரிகை வாசிக்க சனசமூக நிலையத்திற்கு ராசதுரையர் செல்லும் போதெல்லாம் கேள்விப்படும் செய்திகள் அவர்களை மேலும் மேலும்  மகனை நினைத்து ஏங்கி தவிக்க வைத்தது

சில வாரங்கள் சென்றிருக்கும்  கொக்குவிலில் இருந்த புளொட் அமைப்பின்  பொறுப்பாளர் சுபன் அனுப்பியதாக ஒரு கடிதம் கொண்டுவந்தார்  அதில் தான் நலமே இருப்பதாகவும் சில மாதங்களில்  நாடு திரும்ப இருப்பதகாவும் இருந்தது .கடிதம் கிடைத்த அன்று ராசதுரை நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று பூசை செய்துவிட்டு வந்தார் .

நாட்டில் தினமும் அரசியல் நிலைமைகள் மாறுவதும் இலங்கை அரசிற்கு எதிராக போராட புறப்பட்ட தமிழ் அமைப்புகள் தமக்குள்ளேயே முரண்பட்டு  கைகளில் ஆயுதங்களுடன் அடுத்து என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மக்களை கிலியூட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த நிலைமைகளை பார்த்து இராசதுரை குடும்பமும் அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்று வேண்டாத தெய்வம் இல்லை

0000

முதலில் கல்வியங்காட்டில் புலிகளுக்கும் டெலோவிற்கும் சண்டையாம் என்று ஒரு செய்தி வந்தது ,பின்னர் இரண்டு நாட்களில் டெலோ தலைவர் சிறி கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியும் வந்து சேர   மக்கள் என்ன நடக்குது ஏது நடக்குது என்று புரியாமல் பயத்தில் மௌனமாக  இருக்க, அடுத்து சில மாதங்களில்  விடுதலைப்புலிகள்  அனைத்து இயக்கங்களையும் தடை செய்து விட்ட செய்தியும்  வந்து சேர்ந்தது .கொலை செய்யபட்டவர்கள் ,சரணடைந்தவர்கள் போக எஞ்சிய  மாற்று இயக்கத்தவர்கள் வடக்கு கிழக்கை விட்டு பிற மாகாணங்களுக்கும் ஓடி பின்னர்  இந்தியா ,வெளிநாடு என்றும் செல்ல தொடங்கிவிட்டார்கள்.இப்போதைக்கு சுபன் நாடு திரும்பாமல் நிலைமை சீராக மட்டும் இந்தியாவில் இருப்பதே அவனுக்கு பாதுகாப்பு என்று மீண்டும் ராஜதுரையர் குடும்பம்  நினைக்க தொடங்கிவிட்டார்கள் .

ஒரு நாள் அதிகாலை யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு ராஜதுரையர் போய் கதவை  திறந்தால் நீண்டு வளர்ந்த முடி, சவரம் செய்யாது முகத்தில் தாடியுடன்  காய்ந்து கறுத்து மெலிந்து  கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் , மிக்சர் பாக்குடனும் சுபன் .   மகனை கண்ட சந்தோசத்தில் அவனை  கட்டிபிடித்து கொஞ்சி திலகவதி அழத்தொடங்கிவிட்டார். வேணுகாவிற்கும்  அண்ணாவை கண்டது சந்தோசத்திலும் சந்தோசம் .

தனது அமைப்பின் உள்ளே பெரிய பிரச்சனை நடந்தது, பலர் அமைப்பை விட்டு ஓடிவிட்டார்கள் , தானும் சந்தர்ப்பம் பார்த்து வெளியேறி வேதாரணியம் கரைக்கு வந்தால் புலிகள் மற்ற அமைப்புகளை தடை செய்த செய்தி வருகின்றது .கரையில் சிலமாதங்கள் தங்கிவிட்டு கடத்தல்காரர்களின் உதவியுடன் அவர்களின்  படகில் இலங்கை திரும்பியதாக சொன்னான் .இப்போது இங்கு தனது அமைப்பு இல்லை எனவே எவருக்கும் பயப்படதேவையில்லை தான் மீண்டும் படிக்க போவதாத சுபன் சொன்னது அவர்கள் மனதில் பாலை வார்த்தது .

சுபன் அடுத்தநாள் தான் கல்வி கற்ற யாழ் இந்து கல்லூரிக்கு சென்று இரண்டு வருடங்களுக்கு முதல் எடுத்த ஏ எல் பரிட்சை முடிவுகளை பார்த்தால் நாலு பாடங்களும் முறையே A,B,B, C என்று வந்திருக்கின்றது . அதிபரிடம்  உண்மையை சொல்லி தனக்கு உதவும்படி கேட்டான் .சில வாரங்களில் யாழ் மருத்துவபீடத்தில் இருந்து அடுத்த தவணைக்கான அனுமதிக்கடிதம் வந்து சேர்ந்தது .கடிதத்தை வாசித்ததும் ராசதுரையர் குடும்பத்திற்கு அவர்கள் கண்களையே  நம்பமுடியாமல் இருந்தது .பேரதேனியா சென்றால் இயக்கங்களால் எதுவித பிரச்சனையும் இல்லாமல் மகன் படிக்கலாம் ,ஆனால் அங்கும் சிங்களவர்களால் பிரச்சனைகள் வரலாம், அனுமதி யாழ் மருத்துவபீடத்தில் இருந்து வந்திருக்கு இனி மாற்றம் எதுவும் கேட்டு பிரச்சனை பட விரும்பாமல் அந்த அனுமதிப்பத்திரத்தை நிரப்பி அனுப்பிவிட்டான் .திலகவதிக்கு மகன் தங்களுடன் இருந்து பல்கலைகழகம் செல்வதுதான் பிடித்திருந்தது .

சுபனுக்கு பல்கலைகழகம் தொடங்க  இரண்டு நாட்களே இருக்கும் போது ஒரு  நாள் மாலை  கார் ஒன்று  ராசதுரை வீட்டிற்கு முன் வந்து நிற்கின்றது .துவக்குகள் சகிதம் நாலு இளைஞர்கள் உள்ளே வருகின்றார்கள் .ராஜதுரை என்ன விடயம்  என்று அந்த இளைஞர்களை  கேட்க தன்னை  விடுதலை புலிகளின் ஆனைக்கோட்டை பொறுப்பாளர் பரத் என்று அறிமுகம் செய்துவிட்டு

“ சுபன் என்பவர் உங்கள் மகனா? அவரை நாங்கள் பார்க்கவேண்டும்”

உள்ளேயிருந்து வந்த சுபன் என்ன விடயம் என்று கேட்க

“உம்மிடம் சில விடையங்கள் கதைக்கவேண்டியிருக்கு  எமது ஆனைக்கோட்டை  அலுவலகத்திற்கு  மாலை ஆறு மணிக்கு வரவும் .வராவிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும்”

இதற்குள் ராஜதுரையர் குறுக்கிட்டு”தம்பிமாரே மகனுக்கு மருத்துவகல்லூரி அனுமதி கிடைத்து படிக்க போகின்றார். இனிமேல் அவர் எதுவித அரசியலும் செய்யாது பார்த்துகொள்வது எனது பொறுப்பு ”

“உங்கட மகன் புளொட் அமைப்பில் இருந்திருக்கிறார்.அவர்கள் இப்பவும் இந்தியாவில் இயங்குகின்றார்கள் எனவே அவரை நாங்கள் ஒருக்கா விசாரணை செய்யவேண்டும் ”

“அண்ணை நான் புளொட் அமைப்பில் பயிற்சி எடுக்க போனது உண்மை ,பின்னர் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்து பல தோழார்கள் அமைப்பை விட்டு வெளியேறிவிட்டார்கள் .அப்படி   வெளியேறியவர்களில் நானும் ஒருவன். அவர்களுக்கு பயந்து ஓடிவந்து வேதாரணியத்தில் மூன்று மாதங்கள் ஒழித்திருந்து இப்போ கடத்தல்காரர்களின் படகில் நாடு திரும்பினேன் .இனி அவர்களுக்கும் எனக்கும் எதுவித தொடர்புமில்லை .நான் இனி படிக்க போகின்றேன் ”

“  நீ தோழர் என்று கதைக்கும் போதே நீ யாரென்று தெரியுது மாலை ஆறு மணிக்கு வா அல்லது வந்து கொண்டுபோவோம் ”

எச்சரித்தபடியே நால்வரும் காரில் ஏறி சென்றுவிட்டார்கள் .

ராசதுரை குடும்பம் முற்றத்தில் விக்கித்து நிற்கின்றது,  அயலவர்கள் வந்து அவர்களுடன் பிரச்சனை படாமல் தம்பி அவர்களின் அலுவலகத்திற்கு செல்வதுதான் நல்லது இல்லாவிட்டால் தொடர்ந்தும் பிரச்சனை தருவார்கள் என்று  தாங்களும் ஏதோ அனுபவபட்டவர்கள் போலே சொல்லுகின்றார்கள் .

மாலை ஆறுமணிக்கு மாட்டேன் என்று ஒரேயடியாக மறுத்த மகன் சுபனையும் தனது ஸ்க்கூட்டரில் ஏற்றிக்கொண்டு ரசதுரையர் புலிகள் அலுவலத்திற்கு ஆனைகோட்டைக்கு செல்கின்றார் .

ராஜதுரையரை வெளியில் ஒரு வாங்கில் இருந்திவிட்டு சுபனை உள்ளே அழைத்துசெல்கின்றார்கள் .

“வாரும் தோழர் ” என்றபடியே நக்கலாக சிரித்தபடி வந்த  பரத்  நாம் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல்  உண்மைகளை சொன்னால் உமக்கும் நல்லது எமக்கும் நல்லது இல்லாவிட்டால் எமது விசாரணை பற்றி கேள்வி பட்டிருப்பீர் என்று நம்புகின்றேன் .நீர் சொல்லும் விடயங்கள் உண்மை என்று உறுதியாகமட்டும், உம்மை பற்றிய விடயங்களை நாங்கள் அறியமட்டும்   கிழமைக்கு ஒருக்கா இந்தஅலுவலகத்திற்கு வந்து கையெழுத்து வைக்கவேண்டும் .இது அனைத்து மாற்று இயக்கத்தவர்களுக்கும் நாம் வைத்திருக்கும் விதி ”

“அண்ணை நான் இயக்கத்திற்கு போனது உண்மை, பின்னர் அதிலிருந்து விலகி வந்துவிட்டேன் இனியும் நான்  வந்து கையெழுத்து இடுவதாயின் நான் இப்பவும் அந்த அமைப்பில் இருப்பதுபோலாகிவிடும். அவர்களுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று எழுதித்தருகின்றேன். ஒவ்வொரு கிழமையும் வந்து கையெழுத்து இட என்னால் முடியாது ”

“டேய் எங்கட அலுவலத்திற்குள் வந்து எங்களுக்கே கதை சொல்லுகின்றாயா , நீ கடைசியில் படிப்பையும் தொலைத்து கூண்டிக்குள்ள போக போறாய் ”

“அண்ணை உங்களோட இனி எனக்கு கதையில்லை ,யாரும் பெரிய பொறுப்பாளர்களுடன் எனது படிப்பு பற்றி  கதைக்க விரும்புகின்றன் ”

“ என்னடா கதைகின்றாய் தலைவரை அல்லது பாலசிங்கத்தை கூட்டி வரோட்டோ உன்னோட கதைக்க ,நீ அவ்வளவு பெரிய ஆளோ .உன்ரை படிப்பு பற்றி எனக்கு தெரியாது என்ற நக்கல் வேறாடா நாயே .கொப்பரோடை வந்திருகின்றாய் இப்ப போட்டு வா ஆனால் அடுத்த முறை இப்படி இருக்காது ”

பரத்தின் கண்களில் தெரியும் கொடூரம்  சுபனுக்கு தெரிந்தாலும் எமது அமைப்பில் இப்படி எத்தனை பேரை பார்த்தேன் என்ற எண்ணமும் வந்துபோனது .இவர்களுக்கு பயப்படகூடாது என்ற  வன்மமும் எழுந்தது .

அப்பா வாங்கோ போவோம் என்று சுபன் ஸ்கூட்டரில் இருவரும் புறப்படுகினார்கள்

“என்ன ராசா கேட்டார்கள் ” என்று ராஜதுரை மகனை பார்த்து கேட்டார் .

“ இனி ஒரு தொடர்பும் புளோட்டுடன் வைக்ககூடாது என்று எச்சரித்துவிட்டு அனுப்பிவிட்டார்கள்” என்று ஒரு  பொய்யை   சொல்லுகின்றான், நடந்த  உண்மையை சொன்னால் வீட்டில்  ஒருத்தரும் நித்திரையே கொள்ளமாட்டர்கள் என்று சுபனுக்கு தெரியும் .

“நடந்தது எல்லாவாற்றையும் ஒரு கெட்ட கனவாக மறந்துவிட்டு இனி கவனமாக படி ராசா ,அப்படி ஏதும் பிரச்சனை என்றால் சொல்லு வெளிநாடு அனுப்பிவிடுகின்றன்” .

“இனி எதுவும் அப்படி  நடக்காது நீங்கள் ஒண்டும் யோசிக்கவேண்டாம் .அப்பா ”

இருவரும் வெவ்வேறு மனவோட்டங்களுடன்  வீடு வந்து சேர்ந்துவிட்டார்கள்

சுபனுக்கு மருத்துவக்கல்லூரி படிப்பு தொடங்கிவிட்டது. இலங்கை -இந்திய ஒப்பந்தம் கை சாத்திடப்பட்டு  புலிகள் இந்திய அரசின் மேல் கோபத்தில் இருந்த காலம் .இந்தியாவில் இருந்த மாற்று இயக்கங்களும் இந்திய அரசின் அனுசரணையுடன் கொழும்பின் ஊடாக இலங்கைக்குள் கால் பதிகின்றார்கள் .

தின்னவேலி சந்தியில் இருக்கும் தேநீர் கடையொன்றில் சுபன் நண்பர்களுடன் தேனீர் அருந்திகொண்டிருக்கும் போது   பிக்கப் வானில் வந்த புலிகள் சுபனை கைது செய்து ஆனைக்கோட்டை அலுவலகத்திற்கு கொண்டுபோகின்றார்கள்.

ஏற்கனவே ஆறு பேர்கள் இருக்கும் ஒரு அறையில் அவனையும் தள்ளுகின்றார்கள். அதில் இருவரை சுபனுக்கு ஏற்கனவே தெரியும் .ஒருவன் அவனது அமைப்பின் தமிழ்நாட்டு பயிற்சி முகாம் பொறுப்பாளர  சுந்தர் . ஜெர்மனில் இருந்து பலஸ்தினத்திற்கு  பயிற்சிக்கு சென்று பின்னர் இந்தியா வந்தவன் .மற்றவனையும் அவர்களின் அமைப்பின்வேறு முகாமில் சந்தித்ததாக  நினைவு .

சுந்தரே முதலில் சுபனுடன் பேசுகின்றான்.

“என்ன நடந்தது என்று தெரியவில்லை இருந்தால் போல வந்து கைது  செய்திருகின்றார்கள்  .தான் பாலஸ்தின பயிற்சி என்று அறிந்து  மாத்தையாவே விசாரணை வைத்து பின்னர் விடுதலை செய்துவிட்டார் , இப்ப ஏன் மீண்டும்  பிடித்தார்கள் என்று தெரியவில்லை .அடுத்த அறையில் ஒரு பெண்ணும் இருப்பதாக சொன்னார் . மற்ற மூன்று பேர்கள் ஈ பி, ஒருவர்  என் எல் எஒப் டி .அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் நிசப்தமாக நேரம் ஓடிகொண்டிருந்தது .

இரவு பரத்  இன்னும் மூன்று பேர்களுடன் வந்தான். எல்லோரது கண்ணையும் கட்டிவிட்டு பிக்கப் வாகனத்தில் ஏற்றினார்கள்

பிக்அப் வேகம் எடுத்தது பறக்கின்றது.  எந்த இடம் என்று தெரியவில்லை ஆனால் வாகனத்தால் இறக்கும் போது கால் மணலில் புதைவதாக உணர்கின்றார்கள்.

அனைவரையும் மணலில் குப்புற பிரட்டிவிட்டு சுபனிடம்  பரத் சொன்னான் மூன்று பேர்கள் எமது அமைப்பிற்கு எதிராக கையேழுத்து பிரதி வெளிவிட்டது உறுதி செய்யபட்டு  சுட உத்தரவு  வந்திருக்கு,  மற்றவர்கள் நால்வரும் குற்றம் அற்றவர்கள் என்று  விடுதலை செய்ய சொல்லிவிட்டார்கள் ஆனால் நான் மூன்றை நாலு ஆக்கி உன்னை சுடப்போகின்றேன். கிட்டரிடம் கேட்டு அதற்கான உத்தரவையும் வாங்கிவிட்டேன், “அவனுக்கு புலி என்ன செய்யும் என்று ஒருக்கா காட்டு என்று சொன்னார்” என்றவன் சுபனின் முகத்தில் தனது நகங்களால் ஒரு கீறு கீறி சிரித்தான்

” நீ அலுவலத்தில் என்னுடன் கதைக்கும் போதே உன்னை எப்படியும் ஒரு நாள் கொல்லவேண்டும் என்ற  முடிவை எடுத்துவிட்டேன் . என்னை பார்த்து நக்கலாக படிப்பு என்று ஒரு சொல்லு இழுத்தாய் அதனால் தான் உனது சாவு .நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு நாட்டிற்காக போராட நீ மருத்துவராக போறாய் .இந்தா போய் துலை .

நான்கு வெடிசத்தங்கள் கேட்டது .

சுபன் கடத்தப்பட்ட செய்தி கேட்டு ராசதுரை அருகில் உள்ள அனைத்து புலிகள் அலுவலங்களிலும் சென்று விசாரித்துவிட்டார்.  எல்லோருமே தமக்கு தெரியாது என்று கையை விரித்துவிட்டார்கள் .ஆனைக்கோட்டை அலுவலகத்தில் சுபனை இனி விசாரிக்கவேண்டாம் என்று மேலிட்டத்தில் இருந்து ஏற்கனவே உத்தரவு வந்திருந்ததாக சொன்னார்கள் .

இரவு மணி பத்தை தாண்டுகின்றது. வாகனம் வந்து  நிற்கும் சத்தம் கேட்டு ராசதுரை குடும்பம் முற்றத்திற்கு ஓடிவந்தால் சுபனின் உயிரற்ற உடலை வாகனத்தில்  இருந்து இழுத்து வீசிவிட்டு வாகனம் பறக்கின்றது .மண்டை பிளந்து  உடலெங்கும் இரத்தம் தோய்ந்திருக்க  சுபனின் உடல் அவர்களின் நடுமுற்றத்தில் கிடக்கின்றது .ஓடிவந்த திலகவதி  உடலை மடியில் வைத்து மரண  ஓலம் எழுப்புகின்றார்  .   மதிலில் கைகளை ஊண்டி சாய்ந்த  ராசதுரையின்  காலுடன் பயத்தில் நடுங்கியபடி வேணுகா.

சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் பேச வார்த்தைகள் எதுவுமின்றிய  நிலையில்  மௌனமாக  கலைகின்றார்கள் .

அந்த மகாவலியை மறக்க முடியாமல் ராஜதுரை குடும்பம்  தினமும் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது  .

மகள் கல்யாணம் முடித்து கனடா சென்றதும் பின்னர் தங்களையும்  கனடா கூப்பிட்ட பின்னர்  சற்று மறந்திருந்த அந்த மகாவலி மீண்டும் இப்போ தினமும் தங்களை  வதைப்பதை அவரால் பொறுக்கமுடியவில்லை .

தேனீர் போட்டு கொண்டிருந்த ராஜதுரையின் மனதில் திரும்ப திரும்ப பிக்அப் வானில் இருந்து வீசப்பட்ட  மண்டை பிளந்த அந்த  சுபனின் உருவம்  வந்து  வந்து போகுது

தேனீரை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்கு சென்றவர் கட்டிலில் இருந்தபடியே கண்களில் நீர் வழிய திலகவதி

“இஞ்சருங்கோ அப்பா நான்  ஒரு கனவு கண்டனான் ,

மார்க்கத்தில் ஒரு பெரிய மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்குது .பரத் தனது குடும்பத்துடன்  முன்னின்று அங்கு நிகழ்வுகளை நடத்துகின்றான்  .சரியான சனம் வரிசையில் மாவீரர்களுக்கு பூ போட நிற்கின்றார்கள்  .அந்த வரிசையில் நீங்களும் வெள்ளை வேட்டி சேர்ட்டுடன் நெற்றியில் திருநீறு சந்தனபொட்டு,   கையில் ஒரு மஞ்சள் பை. அதற்குள் பூமாலைகள் தெரியுது .நீங்கள் ஏன் அங்கு நிற்கீன்றீர்கள் என்று நினைக்க எனக்கு வியர்த்து கொண்டு வருகின்றது .

திடீரென்று மாலையை எடுப்பது போல மஞ்சள்பையிற்குள் கையை விட்டு ஒரு கத்தியை எடுத்து  மகனே என்று கத்தியபடியே பரத்தின் நெஞ்சில் மாறி மாறி குத்துகின்றீர்கள் .பரத் இரத்த வெள்ளத்துடன் சாய்கின்றான் .

கனவிலும் எனக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம் வரக்கூடாது .அந்த நாட்களில்  நாடு இருந்த நிலையில் எல்லோரும் தான் பிழை விட்டார்கள் ஆனால் எனது மனதில் மகனை கொன்றவனை பழிக்குபழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் என்றுமே  இருந்ததில்லை .

சுபன் கொலை செய்யப்பட்ட அன்று சேகர்  தானும் அந்த கொலைகளத்திற்கு கூட்டிகொண்டு செல்லப்பட்டு பின்னர் விடுதலையானதும்,அன்று  அங்கு நடந்த விடயங்கள் அனைத்தையும் சேகர்  சொல்ல சொல்ல  என்ரை பிள்ளையை இவன் பரத் அநியாயமாக கொன்றுவிட்டானே என்ற கோபம் தான் இப்படி ஒரு கனவை   காண வைத்துவிட்டது” ..

கடவுளே யார் பெத்த பிள்ளையோ அவனுக்கு ஒண்டும் வரக்கூடாது

கண்களில் கண்ணீர் வழிந்தபடியே நடுங்கும் உடம்புடன் இன்னமும் அந்த மகாவலியில் இருந்து விடுபடமுடியாமல் திலகவதி கணவனிடம் இருந்து தேனீரை வாங்குகின்றார் .

 

http://eathuvarai.net/?p=5485

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை அதிகாரதுஷ்பிரயோகங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/14/2016 at 1:12 AM, MEERA said:

இப்படி எத்தனை அதிகாரதுஷ்பிரயோகங்கள்

.................................................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில் அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகம் தான்.
இந்தல் கதையின் ஹலைட் என்னன்டால் புலி செய்ததை புளட்டின் பெற்றோர் மன்னித்து விட்டது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவின் கதை இது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 25/12/2016 at 4:50 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அர்ஜுன் அண்ணாவின் கதை இது

அவராக தான் இருக்குமென்று நினைத்தேன் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.