Jump to content

மகாவலி – சாரங்கன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகாவலி – சாரங்கன்

2016-04-07 20.16.27 (1)

நித்திரையில் மனைவி கேவி கேவி அழும் சத்தம் கேட்டு

“இஞ்சேரும் இஞ்சேரும்”  என்று மனைவி திலகவதியின்  தோளை தட்டி  எழுப்பினார் ராஜதுரை

“இவன் தம்பி சுபன் கூப்பிட்டமாதிரி கிடந்தது ”

“அது கனவு சும்மா படும் ”

மனைவியை படுக்கவைத்தாலும் ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு  வந்தவர்களுக்கு  புது இடமும் அதன் சூழலும் மகள் மருமகன்  பேரப்பிள்ளைகள் என்ற உறவுகளாலும்  மனதில் இருந்து ஓரளவு மறந்திருந்த அந்த மகாவலி போனவாரம் அவர்கள்  சென்றிருந்த ஒரு உறவினரின்  கலியாண வீட்டு நிகழ்வு ஒன்றில்  மீண்டும் கிளறப்பட்டுவிட்டது .

“நீங்கள் சுபனின் பெற்றோர் தானே”  உங்களை எனக்கு தெரியும் நான் சுபனின் நண்பன் என்று தன்னை அறிமுகம் செய்துவிட்டு இன்னுமொரு விடயத்தையும் அவன் சொல்லி விட்டு சென்றுவிட்டான்.

அன்றில் இருந்தது  மனைவி  திலகவதி பகலில் சந்தோசம் இழந்து அடிக்கடி ஏக்கபெருமூச்சுடன் அலைவதும் இரவில் கனவில் நித்திரை கலைந்து  அழுவதும் வாடிக்கையாகிவிட்டது .

பேரப்பிள்ளைகளுடன் விளையாடுவது ,அவர்களுக்கு தமிழ் சொல்லிகொடுப்பது, டிவியில் சீரியல் பார்ப்பது என்று எல்லாம் வழக்கம்போல  தொடர்ந்தாலும் முன்னர் மாதிரி  சந்தோசம் இல்லாமல் மனைவி அவஸ்தைப்படுவதை  ராசதுரையால் உணர முடிந்தது .

மகளும் மருமகனும் கூட மனைவியில் ஏற்பட்டிருக்கும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கவேண்டும் இல்லாவிடில் நேற்று அவர்களுடன் காரில் செல்லும்போது”உங்களுக்குள் ஏதும் பிரச்சனையோ ,அம்மா முகத்தில்  வாட்டம் தெரியுது  ” என்று மகள் கேட்டிருக்கமாட்டாள் .ராசதுரை கலியாண வீட்டில் சுபனின் நண்பனை சந்தித்ததை அவர்களுக்கு சொல்லவிரும்பவில்லை .

“அவா இப்படித்தான் சுபனின் நினைவு வரும்போது கொஞ்சம் நிலை தடுமாறுவதும் பின்னர் பேரப்பிள்ளைகளுடன் விளையாட அதை மறப்பதுமாக இருக்கின்றா, .பாழாய் போன  விதி யாரை விட்டது .நீங்கள் ஒன்றும் யோசிக்காதையுங்கோ பிள்ளையள் “என்று சொல்லி சமாளித்துவிட்டார் .

ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை .”பரத் கனடாவில் தான் இருக்கின்றான் என்று சுபனின் நண்பன் சொன்னது உண்மையா ?  இந்தியன் ஆமியுடனான யுத்தத்தில் இறந்துவிட்டான் என்று தான் கேள்விப்பட்டது பொய்யா ? கல்யாணம் செய்து குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கின்றான்  , இங்கும் அவர்கள் அமைப்பில் ஒரு நல்ல பொறுப்பில் அவனை வைத்திருக்கின்றார்கள்.

இவ்வளவு வருடங்களுக்கு பிறகு தாங்கள் ஏன் சுபனின் நண்பனை சந்தித்திருக்க வேண்டும்.  அவன் ஏன் இப்படி ஒரு செய்தியை சொல்லியிருக்கவேண்டும்.  ராசதுரை மண்டையை போட்டு குழப்புகின்றார். அருகில் மனைவி திடுக்கிட்டு திடுக்கிட்டு உடலை அசைத்து புரண்டு புரண்டு படுப்பது தெரியுது . தானும் ஒரு தேனீர் குடித்து மனைவிக்கும் கொடுப்பம் என்று கட்டிலை விட்டு இறங்கி குசினிக்கு செல்கின்றார் .

மாகாவலி  .அந்த நாளை எப்படி மறப்பது ?

000

தாவடிச்சந்தியில் இருந்து மானிப்பாயை நோக்கிச்செல்லும் வீதியில் அமைந்துள்ள  பிள்ளையார் கோவிலுக்கு முன்புறம் தான்   இராசதுரையின் வீடு  .யாழ் கச்சேரியில் அரசாங்கவேலை. காலை எழுந்து ஸ்கூட்டரில் வேலைக்கு போய் மாலை வீடு திரும்பினால் அருகில் இருக்கும் சனசமூகநிலையத்தில் போய் பத்திரிகைகள் வாசிப்பது அல்லது வீட்டு தோட்டம் தான் அவர் பொழுது போக்கு  . மனைவி திலகவதி வீடும் கோயிலும்  கணவனும் பிள்ளைகளும் என்று உயிர் வாழ்பவள் . மகன் சுபன் யாழ் இந்து கல்லூரியில் ஏ எல் படிக்கின்றான் ,வீட்டிற்கு அடங்கிய பெடியன் . எப்போதும் அவனது கையில் ஒரு புத்தகம் இருக்கும் இல்லாவிடில் பாட் இருக்கும். படிப்பு கிரிக்கெட் இரண்டுமே  அவனது உலகம்.   .இரண்டிலும் அவன் மிக பிரகாசமாகவும்  இருந்தான் .தங்கை வேணுகா  கொக்குவில் இந்து கல்லூரியில்  ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள் .ராஜதுரையர் கச்சேரிக்கு போகும்போது மகளை பாடாசாலையில் இறக்கிவிடுவார் .பாடசாலை முடிய பஸ் எடுத்தால் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவாள் . மிக சந்தோசமாக ராசதுரையரின் குடும்பம் வாழ்ந்து  கொண்டிருந்த காலங்கள் அவை

83 கலவரத்தின் பின் வந்த அரசியல் மாற்றத்தால் நாட்டில் மக்களின் சகஜ வாழ்வு சற்று மாறியிருப்பதும் விடுதலை இயக்கங்களுக்கு மாணவர்கள் இணைவதும் ராஜதுரைக்கு  மனதில் சற்று  பயத்தை உண்டு பண்ணியிருந்தாலும்  மகன் சுபன் படிப்பில் முழு கவனத்துடன்  இருப்பது அவன் வேறு திசையில் பயணிக்கமாட்டான் என்ற நம்பிக்கையை அவருக்கு  கொடுத்திருந்தது. சில மாதங்களில் நடந்த  ஏ எல் பரீட்சையை எழுதிவிட்டு தனக்கு எப்படியும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று சொல்லியிருந்தான் .

பரீட்சை முடிவுகள் வரும்வரை நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது ,வீடியோவில் சினிமா பார்ப்பது என்று பொழுதை போக்கிக்கொண்டிருந்த சுபன் ஒருநாள் கோவிலடியில்  படம் போடுகின்றார்கள் என்று நண்பர்களுடன் சேர்ந்து சென்றவன்  நள்ளிரவாகியும் வீடு திரும்பாதது போலிஸ் அவனை  பிடித்திருக்குமோ என்ற ஒரு பயத்தை ராஜதுரைக்கு  ஏற்படுத்த தனது ஸ்க்கூடரை எடுத்துக்கொண்டு மகனை தேடி கோயிலடிக்கு செல்கின்றார் .  கோவிலடியில் எவரும் இல்லாது மேலும் பயத்தை கொடுக்க கொக்குவிலில்  இருக்கும் சுபனின் நெருங்கிய நண்பன் வீட்டிற்கு செல்கின்றார் .

சுபன் சில மாதங்களாக ஒரு விடுதலை அமைப்புடன் சேர்ந்த பெடியன்களுடன் தொடர்பு  கொண்டிருந்ததாகவும்   நேற்று எங்கே போனான் என்று தனக்கு தெரியாது என்று நண்பன்  சொல்லிவிட்டான் . வீடு திரும்பிய ராஜதுரை  மனைவியிடம் நாளை காலை எப்படியும் சுபன் எங்கே என்று அறிந்துவிடுகின்றேன், இந்த நள்ளிரவில்  அவனது நண்பர்கள் வீடுகளுக்கு அலைந்துகொண்டிருக்கமுடியாது என்று மனைவிக்கு சொன்னாலும் மனம் ஏதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது போலே உணர்ந்தார் .

மகாவலி

காலை ராஜதுரை வீடு வந்த ஒரு இளைஞன் தமது அமைப்பில் பயிற்சி பெற சுபன் நேற்றிரவு இந்தியா சென்றுவிட்டதாக சொல்லிவிட்டு ஒரு கடித்தையும் கொடுத்துவிட்டு செல்கின்றான் . ராஜதுரையருக்கு உலகமே பிரண்டுவிட்டது போலிருந்தது . மனைவி திலகவதி தலையில் அடித்து கத்தி குளறி ஒப்பாரி வைக்க  தொடங்கிவிட்டார்  .ஒரே பெடியன் எவ்வளவு செல்லமாக சுதந்திரம் கொடுத்து வளர்த்தோம் இப்படி  செய்துவிட்டானே என்ற ஆதங்கம் தான் அவர்களுக்கு  .

சில வாரங்களுக்கு  முன்புதான் மானிப்பாய் வீதியில் பஸ்ஸில் செல்லும்போது பல பாடசாலை மாணவர்களை இலங்கை இராணுவம் சுட்டுகொன்றிருந்தது  .அதில் ஒருவனாக சுபன் இல்லாமல் கடைசி உயிருடன் இந்தியாவில்  இருப்பதே பெரியவிடயம் என்று மனைவியை ஆறுதல் படுத்துகின்றார் .

பழையபடி ராஜதுரை குடும்பம் பழைய சீரான வாழ்விற்கு திரும்பினாலும்  மகன் சுபன் இல்லாத குறை அவர்களை  வாட்டிக்கொண்டே  இருந்தது .

சுபன்   முகாமில் பயிற்சி முடித்து இப்போ  சென்னையில் தொலைத்தொடர்புகள்  வகுப்புகள்  எடுப்பதாக தமிழ் நாட்டில் பயிற்சி முடிந்து நாடு திரும்பிய சுபனின் நண்பன்   வந்து சொன்னது சிறு ஆறுதலை அவர்களுக்கு கொடுத்தது .

அன்று பாடசாலையால் திரும்பிய மகள் வேணுகா   தன்னுடன் படிக்கும் மாணவர்கள் சுபன் இணைந்த புளொட் அமைப்பின்உள்ளே கருத்து முரண்பாடுகளால் பிரச்சனை  தோன்றி  அமைப்பின் உள்ளே பலர் கொலை செய்யப்படிருப்பதாகவும்   இங்கும் அவர்கள் பலரை தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னது அவர்களுக்கு மீண்டும் மிகுந்த கலக்கத்தை கொடுத்தது. பத்திரிகை வாசிக்க சனசமூக நிலையத்திற்கு ராசதுரையர் செல்லும் போதெல்லாம் கேள்விப்படும் செய்திகள் அவர்களை மேலும் மேலும்  மகனை நினைத்து ஏங்கி தவிக்க வைத்தது

சில வாரங்கள் சென்றிருக்கும்  கொக்குவிலில் இருந்த புளொட் அமைப்பின்  பொறுப்பாளர் சுபன் அனுப்பியதாக ஒரு கடிதம் கொண்டுவந்தார்  அதில் தான் நலமே இருப்பதாகவும் சில மாதங்களில்  நாடு திரும்ப இருப்பதகாவும் இருந்தது .கடிதம் கிடைத்த அன்று ராசதுரை நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று பூசை செய்துவிட்டு வந்தார் .

நாட்டில் தினமும் அரசியல் நிலைமைகள் மாறுவதும் இலங்கை அரசிற்கு எதிராக போராட புறப்பட்ட தமிழ் அமைப்புகள் தமக்குள்ளேயே முரண்பட்டு  கைகளில் ஆயுதங்களுடன் அடுத்து என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மக்களை கிலியூட்டிக்கொண்டு இருந்தார்கள். இந்த நிலைமைகளை பார்த்து இராசதுரை குடும்பமும் அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்று வேண்டாத தெய்வம் இல்லை

0000

முதலில் கல்வியங்காட்டில் புலிகளுக்கும் டெலோவிற்கும் சண்டையாம் என்று ஒரு செய்தி வந்தது ,பின்னர் இரண்டு நாட்களில் டெலோ தலைவர் சிறி கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியும் வந்து சேர   மக்கள் என்ன நடக்குது ஏது நடக்குது என்று புரியாமல் பயத்தில் மௌனமாக  இருக்க, அடுத்து சில மாதங்களில்  விடுதலைப்புலிகள்  அனைத்து இயக்கங்களையும் தடை செய்து விட்ட செய்தியும்  வந்து சேர்ந்தது .கொலை செய்யபட்டவர்கள் ,சரணடைந்தவர்கள் போக எஞ்சிய  மாற்று இயக்கத்தவர்கள் வடக்கு கிழக்கை விட்டு பிற மாகாணங்களுக்கும் ஓடி பின்னர்  இந்தியா ,வெளிநாடு என்றும் செல்ல தொடங்கிவிட்டார்கள்.இப்போதைக்கு சுபன் நாடு திரும்பாமல் நிலைமை சீராக மட்டும் இந்தியாவில் இருப்பதே அவனுக்கு பாதுகாப்பு என்று மீண்டும் ராஜதுரையர் குடும்பம்  நினைக்க தொடங்கிவிட்டார்கள் .

ஒரு நாள் அதிகாலை யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு ராஜதுரையர் போய் கதவை  திறந்தால் நீண்டு வளர்ந்த முடி, சவரம் செய்யாது முகத்தில் தாடியுடன்  காய்ந்து கறுத்து மெலிந்து  கையில் ஒரு சீப்பு வாழைப்பழம் , மிக்சர் பாக்குடனும் சுபன் .   மகனை கண்ட சந்தோசத்தில் அவனை  கட்டிபிடித்து கொஞ்சி திலகவதி அழத்தொடங்கிவிட்டார். வேணுகாவிற்கும்  அண்ணாவை கண்டது சந்தோசத்திலும் சந்தோசம் .

தனது அமைப்பின் உள்ளே பெரிய பிரச்சனை நடந்தது, பலர் அமைப்பை விட்டு ஓடிவிட்டார்கள் , தானும் சந்தர்ப்பம் பார்த்து வெளியேறி வேதாரணியம் கரைக்கு வந்தால் புலிகள் மற்ற அமைப்புகளை தடை செய்த செய்தி வருகின்றது .கரையில் சிலமாதங்கள் தங்கிவிட்டு கடத்தல்காரர்களின் உதவியுடன் அவர்களின்  படகில் இலங்கை திரும்பியதாக சொன்னான் .இப்போது இங்கு தனது அமைப்பு இல்லை எனவே எவருக்கும் பயப்படதேவையில்லை தான் மீண்டும் படிக்க போவதாத சுபன் சொன்னது அவர்கள் மனதில் பாலை வார்த்தது .

சுபன் அடுத்தநாள் தான் கல்வி கற்ற யாழ் இந்து கல்லூரிக்கு சென்று இரண்டு வருடங்களுக்கு முதல் எடுத்த ஏ எல் பரிட்சை முடிவுகளை பார்த்தால் நாலு பாடங்களும் முறையே A,B,B, C என்று வந்திருக்கின்றது . அதிபரிடம்  உண்மையை சொல்லி தனக்கு உதவும்படி கேட்டான் .சில வாரங்களில் யாழ் மருத்துவபீடத்தில் இருந்து அடுத்த தவணைக்கான அனுமதிக்கடிதம் வந்து சேர்ந்தது .கடிதத்தை வாசித்ததும் ராசதுரையர் குடும்பத்திற்கு அவர்கள் கண்களையே  நம்பமுடியாமல் இருந்தது .பேரதேனியா சென்றால் இயக்கங்களால் எதுவித பிரச்சனையும் இல்லாமல் மகன் படிக்கலாம் ,ஆனால் அங்கும் சிங்களவர்களால் பிரச்சனைகள் வரலாம், அனுமதி யாழ் மருத்துவபீடத்தில் இருந்து வந்திருக்கு இனி மாற்றம் எதுவும் கேட்டு பிரச்சனை பட விரும்பாமல் அந்த அனுமதிப்பத்திரத்தை நிரப்பி அனுப்பிவிட்டான் .திலகவதிக்கு மகன் தங்களுடன் இருந்து பல்கலைகழகம் செல்வதுதான் பிடித்திருந்தது .

சுபனுக்கு பல்கலைகழகம் தொடங்க  இரண்டு நாட்களே இருக்கும் போது ஒரு  நாள் மாலை  கார் ஒன்று  ராசதுரை வீட்டிற்கு முன் வந்து நிற்கின்றது .துவக்குகள் சகிதம் நாலு இளைஞர்கள் உள்ளே வருகின்றார்கள் .ராஜதுரை என்ன விடயம்  என்று அந்த இளைஞர்களை  கேட்க தன்னை  விடுதலை புலிகளின் ஆனைக்கோட்டை பொறுப்பாளர் பரத் என்று அறிமுகம் செய்துவிட்டு

“ சுபன் என்பவர் உங்கள் மகனா? அவரை நாங்கள் பார்க்கவேண்டும்”

உள்ளேயிருந்து வந்த சுபன் என்ன விடயம் என்று கேட்க

“உம்மிடம் சில விடையங்கள் கதைக்கவேண்டியிருக்கு  எமது ஆனைக்கோட்டை  அலுவலகத்திற்கு  மாலை ஆறு மணிக்கு வரவும் .வராவிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும்”

இதற்குள் ராஜதுரையர் குறுக்கிட்டு”தம்பிமாரே மகனுக்கு மருத்துவகல்லூரி அனுமதி கிடைத்து படிக்க போகின்றார். இனிமேல் அவர் எதுவித அரசியலும் செய்யாது பார்த்துகொள்வது எனது பொறுப்பு ”

“உங்கட மகன் புளொட் அமைப்பில் இருந்திருக்கிறார்.அவர்கள் இப்பவும் இந்தியாவில் இயங்குகின்றார்கள் எனவே அவரை நாங்கள் ஒருக்கா விசாரணை செய்யவேண்டும் ”

“அண்ணை நான் புளொட் அமைப்பில் பயிற்சி எடுக்க போனது உண்மை ,பின்னர் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்து பல தோழார்கள் அமைப்பை விட்டு வெளியேறிவிட்டார்கள் .அப்படி   வெளியேறியவர்களில் நானும் ஒருவன். அவர்களுக்கு பயந்து ஓடிவந்து வேதாரணியத்தில் மூன்று மாதங்கள் ஒழித்திருந்து இப்போ கடத்தல்காரர்களின் படகில் நாடு திரும்பினேன் .இனி அவர்களுக்கும் எனக்கும் எதுவித தொடர்புமில்லை .நான் இனி படிக்க போகின்றேன் ”

“  நீ தோழர் என்று கதைக்கும் போதே நீ யாரென்று தெரியுது மாலை ஆறு மணிக்கு வா அல்லது வந்து கொண்டுபோவோம் ”

எச்சரித்தபடியே நால்வரும் காரில் ஏறி சென்றுவிட்டார்கள் .

ராசதுரை குடும்பம் முற்றத்தில் விக்கித்து நிற்கின்றது,  அயலவர்கள் வந்து அவர்களுடன் பிரச்சனை படாமல் தம்பி அவர்களின் அலுவலகத்திற்கு செல்வதுதான் நல்லது இல்லாவிட்டால் தொடர்ந்தும் பிரச்சனை தருவார்கள் என்று  தாங்களும் ஏதோ அனுபவபட்டவர்கள் போலே சொல்லுகின்றார்கள் .

மாலை ஆறுமணிக்கு மாட்டேன் என்று ஒரேயடியாக மறுத்த மகன் சுபனையும் தனது ஸ்க்கூட்டரில் ஏற்றிக்கொண்டு ரசதுரையர் புலிகள் அலுவலத்திற்கு ஆனைகோட்டைக்கு செல்கின்றார் .

ராஜதுரையரை வெளியில் ஒரு வாங்கில் இருந்திவிட்டு சுபனை உள்ளே அழைத்துசெல்கின்றார்கள் .

“வாரும் தோழர் ” என்றபடியே நக்கலாக சிரித்தபடி வந்த  பரத்  நாம் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல்  உண்மைகளை சொன்னால் உமக்கும் நல்லது எமக்கும் நல்லது இல்லாவிட்டால் எமது விசாரணை பற்றி கேள்வி பட்டிருப்பீர் என்று நம்புகின்றேன் .நீர் சொல்லும் விடயங்கள் உண்மை என்று உறுதியாகமட்டும், உம்மை பற்றிய விடயங்களை நாங்கள் அறியமட்டும்   கிழமைக்கு ஒருக்கா இந்தஅலுவலகத்திற்கு வந்து கையெழுத்து வைக்கவேண்டும் .இது அனைத்து மாற்று இயக்கத்தவர்களுக்கும் நாம் வைத்திருக்கும் விதி ”

“அண்ணை நான் இயக்கத்திற்கு போனது உண்மை, பின்னர் அதிலிருந்து விலகி வந்துவிட்டேன் இனியும் நான்  வந்து கையெழுத்து இடுவதாயின் நான் இப்பவும் அந்த அமைப்பில் இருப்பதுபோலாகிவிடும். அவர்களுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று எழுதித்தருகின்றேன். ஒவ்வொரு கிழமையும் வந்து கையெழுத்து இட என்னால் முடியாது ”

“டேய் எங்கட அலுவலத்திற்குள் வந்து எங்களுக்கே கதை சொல்லுகின்றாயா , நீ கடைசியில் படிப்பையும் தொலைத்து கூண்டிக்குள்ள போக போறாய் ”

“அண்ணை உங்களோட இனி எனக்கு கதையில்லை ,யாரும் பெரிய பொறுப்பாளர்களுடன் எனது படிப்பு பற்றி  கதைக்க விரும்புகின்றன் ”

“ என்னடா கதைகின்றாய் தலைவரை அல்லது பாலசிங்கத்தை கூட்டி வரோட்டோ உன்னோட கதைக்க ,நீ அவ்வளவு பெரிய ஆளோ .உன்ரை படிப்பு பற்றி எனக்கு தெரியாது என்ற நக்கல் வேறாடா நாயே .கொப்பரோடை வந்திருகின்றாய் இப்ப போட்டு வா ஆனால் அடுத்த முறை இப்படி இருக்காது ”

பரத்தின் கண்களில் தெரியும் கொடூரம்  சுபனுக்கு தெரிந்தாலும் எமது அமைப்பில் இப்படி எத்தனை பேரை பார்த்தேன் என்ற எண்ணமும் வந்துபோனது .இவர்களுக்கு பயப்படகூடாது என்ற  வன்மமும் எழுந்தது .

அப்பா வாங்கோ போவோம் என்று சுபன் ஸ்கூட்டரில் இருவரும் புறப்படுகினார்கள்

“என்ன ராசா கேட்டார்கள் ” என்று ராஜதுரை மகனை பார்த்து கேட்டார் .

“ இனி ஒரு தொடர்பும் புளோட்டுடன் வைக்ககூடாது என்று எச்சரித்துவிட்டு அனுப்பிவிட்டார்கள்” என்று ஒரு  பொய்யை   சொல்லுகின்றான், நடந்த  உண்மையை சொன்னால் வீட்டில்  ஒருத்தரும் நித்திரையே கொள்ளமாட்டர்கள் என்று சுபனுக்கு தெரியும் .

“நடந்தது எல்லாவாற்றையும் ஒரு கெட்ட கனவாக மறந்துவிட்டு இனி கவனமாக படி ராசா ,அப்படி ஏதும் பிரச்சனை என்றால் சொல்லு வெளிநாடு அனுப்பிவிடுகின்றன்” .

“இனி எதுவும் அப்படி  நடக்காது நீங்கள் ஒண்டும் யோசிக்கவேண்டாம் .அப்பா ”

இருவரும் வெவ்வேறு மனவோட்டங்களுடன்  வீடு வந்து சேர்ந்துவிட்டார்கள்

சுபனுக்கு மருத்துவக்கல்லூரி படிப்பு தொடங்கிவிட்டது. இலங்கை -இந்திய ஒப்பந்தம் கை சாத்திடப்பட்டு  புலிகள் இந்திய அரசின் மேல் கோபத்தில் இருந்த காலம் .இந்தியாவில் இருந்த மாற்று இயக்கங்களும் இந்திய அரசின் அனுசரணையுடன் கொழும்பின் ஊடாக இலங்கைக்குள் கால் பதிகின்றார்கள் .

தின்னவேலி சந்தியில் இருக்கும் தேநீர் கடையொன்றில் சுபன் நண்பர்களுடன் தேனீர் அருந்திகொண்டிருக்கும் போது   பிக்கப் வானில் வந்த புலிகள் சுபனை கைது செய்து ஆனைக்கோட்டை அலுவலகத்திற்கு கொண்டுபோகின்றார்கள்.

ஏற்கனவே ஆறு பேர்கள் இருக்கும் ஒரு அறையில் அவனையும் தள்ளுகின்றார்கள். அதில் இருவரை சுபனுக்கு ஏற்கனவே தெரியும் .ஒருவன் அவனது அமைப்பின் தமிழ்நாட்டு பயிற்சி முகாம் பொறுப்பாளர  சுந்தர் . ஜெர்மனில் இருந்து பலஸ்தினத்திற்கு  பயிற்சிக்கு சென்று பின்னர் இந்தியா வந்தவன் .மற்றவனையும் அவர்களின் அமைப்பின்வேறு முகாமில் சந்தித்ததாக  நினைவு .

சுந்தரே முதலில் சுபனுடன் பேசுகின்றான்.

“என்ன நடந்தது என்று தெரியவில்லை இருந்தால் போல வந்து கைது  செய்திருகின்றார்கள்  .தான் பாலஸ்தின பயிற்சி என்று அறிந்து  மாத்தையாவே விசாரணை வைத்து பின்னர் விடுதலை செய்துவிட்டார் , இப்ப ஏன் மீண்டும்  பிடித்தார்கள் என்று தெரியவில்லை .அடுத்த அறையில் ஒரு பெண்ணும் இருப்பதாக சொன்னார் . மற்ற மூன்று பேர்கள் ஈ பி, ஒருவர்  என் எல் எஒப் டி .அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் நிசப்தமாக நேரம் ஓடிகொண்டிருந்தது .

இரவு பரத்  இன்னும் மூன்று பேர்களுடன் வந்தான். எல்லோரது கண்ணையும் கட்டிவிட்டு பிக்கப் வாகனத்தில் ஏற்றினார்கள்

பிக்அப் வேகம் எடுத்தது பறக்கின்றது.  எந்த இடம் என்று தெரியவில்லை ஆனால் வாகனத்தால் இறக்கும் போது கால் மணலில் புதைவதாக உணர்கின்றார்கள்.

அனைவரையும் மணலில் குப்புற பிரட்டிவிட்டு சுபனிடம்  பரத் சொன்னான் மூன்று பேர்கள் எமது அமைப்பிற்கு எதிராக கையேழுத்து பிரதி வெளிவிட்டது உறுதி செய்யபட்டு  சுட உத்தரவு  வந்திருக்கு,  மற்றவர்கள் நால்வரும் குற்றம் அற்றவர்கள் என்று  விடுதலை செய்ய சொல்லிவிட்டார்கள் ஆனால் நான் மூன்றை நாலு ஆக்கி உன்னை சுடப்போகின்றேன். கிட்டரிடம் கேட்டு அதற்கான உத்தரவையும் வாங்கிவிட்டேன், “அவனுக்கு புலி என்ன செய்யும் என்று ஒருக்கா காட்டு என்று சொன்னார்” என்றவன் சுபனின் முகத்தில் தனது நகங்களால் ஒரு கீறு கீறி சிரித்தான்

” நீ அலுவலத்தில் என்னுடன் கதைக்கும் போதே உன்னை எப்படியும் ஒரு நாள் கொல்லவேண்டும் என்ற  முடிவை எடுத்துவிட்டேன் . என்னை பார்த்து நக்கலாக படிப்பு என்று ஒரு சொல்லு இழுத்தாய் அதனால் தான் உனது சாவு .நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு நாட்டிற்காக போராட நீ மருத்துவராக போறாய் .இந்தா போய் துலை .

நான்கு வெடிசத்தங்கள் கேட்டது .

சுபன் கடத்தப்பட்ட செய்தி கேட்டு ராசதுரை அருகில் உள்ள அனைத்து புலிகள் அலுவலங்களிலும் சென்று விசாரித்துவிட்டார்.  எல்லோருமே தமக்கு தெரியாது என்று கையை விரித்துவிட்டார்கள் .ஆனைக்கோட்டை அலுவலகத்தில் சுபனை இனி விசாரிக்கவேண்டாம் என்று மேலிட்டத்தில் இருந்து ஏற்கனவே உத்தரவு வந்திருந்ததாக சொன்னார்கள் .

இரவு மணி பத்தை தாண்டுகின்றது. வாகனம் வந்து  நிற்கும் சத்தம் கேட்டு ராசதுரை குடும்பம் முற்றத்திற்கு ஓடிவந்தால் சுபனின் உயிரற்ற உடலை வாகனத்தில்  இருந்து இழுத்து வீசிவிட்டு வாகனம் பறக்கின்றது .மண்டை பிளந்து  உடலெங்கும் இரத்தம் தோய்ந்திருக்க  சுபனின் உடல் அவர்களின் நடுமுற்றத்தில் கிடக்கின்றது .ஓடிவந்த திலகவதி  உடலை மடியில் வைத்து மரண  ஓலம் எழுப்புகின்றார்  .   மதிலில் கைகளை ஊண்டி சாய்ந்த  ராசதுரையின்  காலுடன் பயத்தில் நடுங்கியபடி வேணுகா.

சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் பேச வார்த்தைகள் எதுவுமின்றிய  நிலையில்  மௌனமாக  கலைகின்றார்கள் .

அந்த மகாவலியை மறக்க முடியாமல் ராஜதுரை குடும்பம்  தினமும் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது  .

மகள் கல்யாணம் முடித்து கனடா சென்றதும் பின்னர் தங்களையும்  கனடா கூப்பிட்ட பின்னர்  சற்று மறந்திருந்த அந்த மகாவலி மீண்டும் இப்போ தினமும் தங்களை  வதைப்பதை அவரால் பொறுக்கமுடியவில்லை .

தேனீர் போட்டு கொண்டிருந்த ராஜதுரையின் மனதில் திரும்ப திரும்ப பிக்அப் வானில் இருந்து வீசப்பட்ட  மண்டை பிளந்த அந்த  சுபனின் உருவம்  வந்து  வந்து போகுது

தேனீரை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்கு சென்றவர் கட்டிலில் இருந்தபடியே கண்களில் நீர் வழிய திலகவதி

“இஞ்சருங்கோ அப்பா நான்  ஒரு கனவு கண்டனான் ,

மார்க்கத்தில் ஒரு பெரிய மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்குது .பரத் தனது குடும்பத்துடன்  முன்னின்று அங்கு நிகழ்வுகளை நடத்துகின்றான்  .சரியான சனம் வரிசையில் மாவீரர்களுக்கு பூ போட நிற்கின்றார்கள்  .அந்த வரிசையில் நீங்களும் வெள்ளை வேட்டி சேர்ட்டுடன் நெற்றியில் திருநீறு சந்தனபொட்டு,   கையில் ஒரு மஞ்சள் பை. அதற்குள் பூமாலைகள் தெரியுது .நீங்கள் ஏன் அங்கு நிற்கீன்றீர்கள் என்று நினைக்க எனக்கு வியர்த்து கொண்டு வருகின்றது .

திடீரென்று மாலையை எடுப்பது போல மஞ்சள்பையிற்குள் கையை விட்டு ஒரு கத்தியை எடுத்து  மகனே என்று கத்தியபடியே பரத்தின் நெஞ்சில் மாறி மாறி குத்துகின்றீர்கள் .பரத் இரத்த வெள்ளத்துடன் சாய்கின்றான் .

கனவிலும் எனக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம் வரக்கூடாது .அந்த நாட்களில்  நாடு இருந்த நிலையில் எல்லோரும் தான் பிழை விட்டார்கள் ஆனால் எனது மனதில் மகனை கொன்றவனை பழிக்குபழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் என்றுமே  இருந்ததில்லை .

சுபன் கொலை செய்யப்பட்ட அன்று சேகர்  தானும் அந்த கொலைகளத்திற்கு கூட்டிகொண்டு செல்லப்பட்டு பின்னர் விடுதலையானதும்,அன்று  அங்கு நடந்த விடயங்கள் அனைத்தையும் சேகர்  சொல்ல சொல்ல  என்ரை பிள்ளையை இவன் பரத் அநியாயமாக கொன்றுவிட்டானே என்ற கோபம் தான் இப்படி ஒரு கனவை   காண வைத்துவிட்டது” ..

கடவுளே யார் பெத்த பிள்ளையோ அவனுக்கு ஒண்டும் வரக்கூடாது

கண்களில் கண்ணீர் வழிந்தபடியே நடுங்கும் உடம்புடன் இன்னமும் அந்த மகாவலியில் இருந்து விடுபடமுடியாமல் திலகவதி கணவனிடம் இருந்து தேனீரை வாங்குகின்றார் .

 

http://eathuvarai.net/?p=5485

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனை அதிகாரதுஷ்பிரயோகங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/14/2016 at 1:12 AM, MEERA said:

இப்படி எத்தனை அதிகாரதுஷ்பிரயோகங்கள்

.................................................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில் அதிகார துஸ்பிரயோகங்கள் அதிகம் தான்.
இந்தல் கதையின் ஹலைட் என்னன்டால் புலி செய்ததை புளட்டின் பெற்றோர் மன்னித்து விட்டது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவின் கதை இது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 25/12/2016 at 4:50 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அர்ஜுன் அண்ணாவின் கதை இது

அவராக தான் இருக்குமென்று நினைத்தேன் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.