Jump to content

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான தெற்கின் அதிருப்தி


Recommended Posts

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்­பான தெற்கின் அதி­ருப்தி
 

யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேர­ணி­யானது தென்­ப­கு­தியில் பெரும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யிருக்­கின்­றது. அர­சாங்க அமைச்­சர்கள் மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உட்­பட அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் எழுக தமிழ் தொடர்­பான தமது எச்­ச­ரிக்­கை­க­ளையும், அதி­ருப்­தி­களையும் வெளிப்­ப­டுத்­தி­யிருக்­கின்­றனர்.

தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்ற இந்த எழுக தமிழ் பேர­ணி­யா­னது தென்­ப­கு­தியில் பெரும் சர்ச்­சையை கிளப்­பி­யி­ருக்­கின்­றது. எழுக தமிழ் பேர­ணியைத் தொடர்ந்து கருத்து தெரி­வித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, இந்த எழுச்சிப் பேரணி தொடர்பில் தெற்கு மக்கள் விழிப்­பாக இருக்­க­வேண்டும். போர் வெற்­றிக்குப் பின்னர் உரு­வாக்­கப்­பட்ட இலங்­கையின் ஒரு­மைப்­பாட்­டுக்கு தற்­போது அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. தமிழ் தலை­மைகள் தங்­க­ளுக்கு என்ன வேண்டும் என்­பது தொடர்­பிலும் என்­னென்ன விட­யங்­களை நீக்­க­வேண்டும் என்­பது குறித்தும் பேசி­வ­ரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு அதி­காரப் பகிர்வே தேவை­யாக உள்­ளது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இதேபோல் எழுக தமிழ் பேரணி தொடர்பில் கருத்து வெளி­யிட்­டுள்ள அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க, வடக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட எழுக தமிழ் பேர­ணி­யா­னது அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கு தடை­யா­கவே உள்­ளது. எவ்­வா­றான தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் எமது முயற்­சியில் நாம் ஒரு­போதும் பின்­னிற்­க­மாட்டோம். எமது அர­சாங்­க­மா­னது வடக்கு, கிழக்குப் பிரச்­சி­னையைத் தீர்த்து நாட்டில் நிரந்­த­ர­மான தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களில் ஒரு­போதும் பின்­னிற்­கப்­போ­வ­தில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இவரைப் போல் எழுக தமிழ் குறித்து கருத்து தெரி­வித்­துள்ள பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன, வடக்கில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியைக் கண்டு அர­சாங்கம் அச்­ச­ம­டை­யப்­போ­வ­தில்லை. வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரனின் கோரிக்­கைக்­கி­ணங்க வடக்­கி­லி­ருக்கும் இரா­ணுவ முகாம்­களை அகற்­று­வ­தற்கு ஒரு­போதும் அர­சாங்கம் இணங்­கப்­போ­வ­தில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­பின்­னர்தான் இன, மத ஐக்­கி­யத்­திற்­கான வேலைத்­திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் இன­வா­த­மான இத்­த­கைய செயற்­பா­டு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முத­ல­மைச்சர் மற்றும் ஒரு சில இன­வாதக் குழுக்­களால் நடத்­தப்­பட்ட இந்தப் பேர­ணியில் வடக்­கி­லி­ருக்கும் இரா­ணுவ முகாம்­களை அகற்­று­மாறும் வெளி­யாட்­களை அந்தப் பிர­தே­சத்தில் குடி­யேற்­ற­வேண்­டா­மென்றும் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இவர்­க­ளது கோரிக்­கைக்­கி­ணங்க இரா­ணுவ முகாம்­களை அகற்­ற­வேண்­டிய தேவை எமக்­கில்லை என்று கூறி­யி­ருக்­கின்றார்.

பிரதி அமைச்சர் எரான் விக்­கி­ர­ம­ரட்ண எழுக தமிழ் பேரணி குறித்து கருத்­துக்­கூ­று­கையில், வடக்­கிலும் தெற்­கிலும் இன­வாதம் தூண்­டப்­ப­டு­வதை முழு­மை­யாக தோல்­வி­ய­டை­யச் ­செய்­ய­வேண்டும். வார்த்தைப் பிர­யோகம் செய்து மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும் சந்­தே­கங்­க­ளையும் உரு­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கக்­கூ­டா­து. புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அனைத்து இனத்­த­வர்­க­ளுக்கும் சம­மான அதி­கா­ரங்­களை வழங்­குவோம். வட­மா­காண முத­ல­மைச்சர் தலை­மையில் தமிழ் மக்கள் பேரவை நடத்­திய எழுக தமிழ் பேரணி மூலம் அர­சாங்கம் அச்­சப்­ப­டப்­போ­வ­தில்லை. நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்­னர்தான் இன, மத ஐக்­கி­யத்­திற்­கான வேலைத்­திட்­டங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் இன­வா­த­மான இத்­த­கைய செயற்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

இந்த விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீரவும் கருத்­துக்­ கூ­றி­யி­ருக்­கின்றார். வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டு­களும் கருத்­துக்­களும் அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கு தடை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. அவரின் இந்த நட­வ­டிக்­கைகள் கண்­டிக்­கத்­தக்­கவை. இவர் யாரு­டை­யதோ சூழ்ச்­சியின் பங்­கு­தா­ர­ரா­கவே இருக்­கிறார். இவரின் செயற்­பா­டு­க­ளினால் தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்­க­வுள்­ளதும் கிடைக்­காது போகலாம் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இவ்­வாறு எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமது அதி­ருப்­தி­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜபக் ஷவும் அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இவர்­களை விட எழுக தமிழ் பேர­ணியை ஜே.வி.பி.யும் கண்­டித்­தி­ருக்­கின்­றது. வட­மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வினர் தமது அர­சியல் சுய­ந­ல­னுக்­காக இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இவர்­க­ளுக்கு இன­வாதம் இல்­லாது அர­சியல் செய்ய முடி­யா­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற எழுச்சிப் பேர­ணியும் இதை வலி­யு­றுத்­து­வ­தா­கவே உள்­ளது. விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லா­ன­வர்­க­ளுக்கு தற்­போது தேவை­யா­னது சமஷ்டித் தீர்­வல்ல. அதற்கு மாறாக தெற்கில் வாழும் சிங்­கள மக்கள் மத்­தியில் இன­வா­தத்தை தூண்­டு­வ­தே­யாகும் என்று ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன்­னெத்தி குற்­றம் ­சாட்­டி­யி­ருக்­கின்றார்.

தென்­ப­கு­தியைப் பொறுத்­த­வ­ரையில் எழுக தமிழ் பேரணி தொடர்பில் விமர்­சனங்­களே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய எழுச்சிப் பேரணி நடத்­தப்­பட்­ட­தனை அர­சாங்­கத்­த­ரப்­பினால் கூட ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை என்­பது அமைச்­சர்­களின் கருத்­துக்­க­ளி­லி­ருந்து புலப்­ப­டு­கின்­றது. உண்மையிலேயே எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடத்­த­வேண்டிய சூழல் ஏன் ஏற்­பட்­டது என்­பதை நாம் எண்­ணிப்­பார்க்­க­வேண்­டி­யுள்ளது.

யுத்­தத்­தினால் தமிழ் மக்கள் தமது உயிர்­க­ளையும் உட­மை­க­ளையும் இழந்து நிர்க்­க­தி­யாக்­கப்­பட்­டனர். யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு ஏழு வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும், இன்­னமும் தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­ப­ட­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் காலத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இதன் பின்­ன­ரா­வது தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்த போதிலும் முன்­னைய அர­சாங்க காலத்தில் அவர்கள் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்­கப்­படும் நிலை உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது.

முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் தமிழ் மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணு­மாறு கோரி போராட்­டங்­களைக் கூட சுதந்­தி­ரமாக நடத்த முடி­யாத இக்­கட்­டான நிலை நில­வி­வந்­தது. இவ்­வாறு அடக்கி ஒடுக்­கப்­பட்­டி­ருந்த மக்கள் கடந்த வருடம் ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு பேரா­தர­வினை வழங்­கி­யி­ருந்­தனர். புதிய ஆட்­சியில் தமது பிரச்­சி­னை­களுக்கு தீர்வு காணப்­ப­டு­மென்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தனர்.

புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­வி­யேற்­றது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் மீளவும் நல்­லாட்சி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இவ்­வா­றான நிலையில் தமது அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கா­வது தீர்வு கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்­பி­யி­ருந்­தனர். ஆனால் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று ஒன்­றரை வரு­டங்கள் ஆகி­விட்ட போதிலும் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை என்ற ஆதங்­கமும் அதி­ருப்­தியும் தமிழ் மக்கள் மத்­தியில் மேலோங்­கி­யுள்­ளது. இத்­த­கைய ஆதங்­கமும் அதி­ருப்­தி­யுமே எழுக தமி­ழாக எழுச்சி பெற்­றுள்­ளது.

தமிழ் மக்­களின் இந்த உணர்­வெ­ழுச்­சியை அர­சாங்­க­மா­னது புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு தமிழ் மக்கள் கிளர்ந்தெழும் நிலையில் உள்ள போதிலும் நல்லிணக்க முயற்சியில் தொடர்ந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையானது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. தென்பகுதியில் இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அச்சப்பட்டு வரும் நிலையில் வடக்கு, கிழக்கிலும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் அந்த அதிருப்தியானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக மாறிவருகின்றது என்பதையும் அரசாங்கமானது உணர்ந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறான இக்கட்டுக்களுக்கு மத்தியிலும் இவ்வருட இறுதிக்­குள் அரசியல் தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்பதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்­பத்தை அரசாங்கம் பயன்படுத்தி உண்மையானதும் உறுதியானதுமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=27/09/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.