Jump to content

மலரினும் மெல்லிது காமம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலரினும் மெல்லிது காமம்

ஆர். அபிலாஷ்

 

மலரினும் மெல்லிது காமம்

சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்

 

நண்பர் ஹமீர் முஸ்தபா பார்க்க கோபமான மார்க்ஸியவாதி போல் தோன்றினாலும் அவர் ஒரு தமிழ் பேராசிரியரும் கூட. அவர் தான் மேற்குறிப்பிட்ட குறளை எனக்கு அறிமுகப்படுத்தினார். விளக்கினார். எனக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். “வள்ளுவன் கூறுவது போல் காதல் அப்படி புலப்படாத ஒரு சூட்சுமப் பொருளா என்ன?” எனக்குத் தோன்றியது. அழகான பெண்களை பார்த்தால் காதல் வருகிறது. ஆக காதல் அழகான பெண்ணுடலில் இருக்கிறது. இப்படித் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். முஸ்தபா எனக்கு விளக்கினார். “அப்படி இல்லப்போ. மலரின் மென்மை மலரில் இல்லை. காதலின் அழகு மலரின் மென்மையை விட மாயமானது.”

மாநகரம் வந்த பின் தம்மை சுலபத்தில் அழகாய் காட்டத் தெரிந்த ஏகப்பட்ட பெண்களை கண்டேன். ஒருவரோடு ஒப்பிடுகையில் இன்னொருவர் அழகில்லை எனத் தோன்றும். பிறகு மொத்தமாய் பார்க்கையில் யாருமே அழகில்லை எனத் தோன்றும்.

 சில பெண்கள் தூரத்தில் இருந்து பார்த்தால் அழகு. சிலர் சிரித்தால் மட்டுமே அழகு. சிலர் அமர்ந்திருக்கும் நெளிவில் மட்டும், சிலர் நடக்கும் விதத்தில், சிலருக்கு குரலில், சிலருக்கு கண்களின் ஒளியில், சிலருக்கு மச்சத்தில்… இப்படி அழகு துண்டுபட்டு தெரிந்தது. இதில் ஒன்றை பெரிது படுத்தி பார்த்தால் அப்பெண் அழகி என ஆணுக்கு படுகிறது. தனியாக பார்த்தால் தோன்றாது. கல்லூரியில் படிக்கையில் ஒருமுறை விளையாட்டு தினம் நடந்தது. நானும் ஒரு நண்பனுமாய் போய்க் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் யாரையோ சீட்டியடித்து அழைத்தாள். நண்பன் சட்டென திரும்பி அவளிடம் சென்றான். அவள் அப்படி சீட்டியடித்ததில் அவன் மயங்கி விட்டான். ஆறு மாதங்கள் அவள் பின்னால் அதற்காகவே திரிந்தான்.

 நிரந்தர அழகிகள் தமக்குள் உள்ள துண்டு துண்டான அழகை அவ்வப்போது மட்டும் வெளிப்படுத்துவார்கள். எப்போதும் ஆணை வியப்பிலாழ்ந்த ஒரு புது விசயத்தை வைத்திருப்பார்கள். ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த பெண்ணை அழகி என நினைத்தது தன் பார்வைக் கோளாறினால் தான் என ஆண் புரிந்து கொள்வான். இது காதல் முறிவில் கொண்டு போகும். புத்திசாலி ஆண்கள் கற்பனை மூலம் இந்த வறட்சி நிலையை தவிர்ப்பார்கள். அவர்களால் ஒரு பெண்ணின் அழகை பெருக்கி கொண்டே போக முடியும்.

ஆக பெண்ணின் அழகு முழுக்க ஆணின் பார்வையில், கற்பனையில் இருந்து தான் வருகிறது. இது ஒரு கருத்துமுதல்வாதம், அகவயபார்வை. திருவள்ளுவர் காமத்துப்பாலில் மீளமீள இதையே முன்வைக்கிறார்.

எனக்கு “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் “நாணமோ” பாடலில் இந்த வரிகளை கேட்டதும் மேற்சொன்ன விசயங்கள் நினைவு வந்தன:

“தோட்டத்து பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது

ஆடையில் ஆடுது வாடையில் வாடுது

ஆனந்த வெள்ளத்தில் நீராடுது”

 

அந்த ”அது” அதைக் கண்டு வியப்பவரின் மனதில் தான் இருக்கிறது. அது எது என அவருக்கு முழுக்க புலப்படாதவரையில் ”அது” இருந்து கொண்டே இருக்கும்.

 

http://thiruttusavi.blogspot.co.uk/2016/09/blog-post_26.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.