Jump to content

Recommended Posts

அரசியலும், தமிழர்கள் மீதான அடக்கு முறையும் தலை விரித்தாடிய காலப்பகுதியில் முழு உலகத்தையும் தமிழர் பக்கம் பார்க்க வைத்த ஒரு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்தது.

அதுதான், தமிழர்களுக்கான ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகத் தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்.

தொடர்ந்து 12 நாட்கள் தமிழர்களுக்காக உண்ணா விரதமிருந்து தன்னுயிரை நீத்த மாவீரனின் நினைவை சற்றே மீட்டுப்பார்ப்பதில் ஒவ்வொரு தமிழனும் பெருமையடைய வேண்டும்.

 

http://www.tamilwin.com/history/01/118914?ref=home

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலி திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

பதினோரு நாட்கள் நீர்கூட அருந்தாமல் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவு தினம்

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சியினரால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தமிழர் விடுதலைக் கூட்டணியச் சேர்ந்த ஆனந்தசங்கரி, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திலீபனின் நினைவு சின்னத்திற்கு தியாகச் சுடரேற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்; வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பாடசாலைகள், கல்லூரி கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த காவல்துறையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து இந்த உண்ணாவிரதத்தை திலீபன் மேற்கொண்டிருந்தார்.

இந்திய அமைதிப்படையினர், இலங்கையில் நிலைகொண்டிருந்த போது, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய வளவில் ஆரம்பித்த இந்த உண்ணாவிரதம் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி திலீபன் உயிர் நீத்ததுடன் முடிவடைந்தது.

ஆயினும் திலீபனுடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; இராசையா பார்த்திபன் என்பது அவருடைய இயற்பெயராகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுவந்தபோது, 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த திலீபன், யாழ் மாவட்டத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தபோதே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

விடுதலைப்புலிகள் செல்வாக்குடன் இருந்த காலப்பகுதியில் திலீபனின் நினைவு தினம் சிறப்பாக அனுட்டிக்கபட்டு வந்தது.

ஆயினும் கடும் யுத்த மோதல்கள் இடம்பெற்றதன் பின்னர் கடந்த பல வருடங்களாக இந்த நினைவுதினம் கைவிடப்பட்டிருந்தது.

http://www.bbc.com/tamil/sri-lanka-37473004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் அரசாங்கத்துக்கும் நன்றீ செலுத்தினவர்...வீடியோ பார்த்தியளோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

ஒரு பெண் அரசாங்கத்துக்கும் நன்றீ செலுத்தினவர்...வீடியோ பார்த்தியளோ

இராசதந்திரம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.