Jump to content

இலங்கையை பல்லின சமூக ஜனநாயகமாக மறுசீரமைப்புச் செய்வது சாத்தியமானதா ?


Recommended Posts

இலங்கையை பல்லின சமூக ஜனநாயகமாக மறுசீரமைப்புச் செய்வது சாத்தியமானதா ?

 

இலங்கை வெளியுறவு அமைச்சின் ஆலோசகராக இருக்கும் ஹரிம் பீரிஸ்  அண்மையில் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் ‘ஐக்கிய தேசியக்கட்சியினதும் மகாநாடுகளும் தேசிய அரசாங்கக் கோட்பாடும்’ (The SLFP and UNP Conventions and ideology  of National government)  என்ற தலைப்பில் எழுதிய  கட்டுரையொன்று கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்தது. அதில் அவர் தற்போது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில்  இயங்கும் ஜனாதிபதியின் தேசிய  ஐக்கியம் மற்றும்  நல்லிணக்க அலுவலகத்தின் (President’s office of National unity and Reconciliation)  உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் கலாநிதி ராம் மாணிக்கலிங்கம்  இலங்கையில் ஒன்றுடன்  ஒன்று  தொடர்புபட்ட மூன்று முரண் நிலைகள் பற்றி கடந்த காலத்தில் தெரிவித்த கருத்துக்களை நினைவுபடுத்தியிருந்தார்.head-2.jpg

அரச ஆயுதப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான   இராணுவ முரண் நிலை, ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான அதிகார முரண் நிலை, சிங்கள  இனத்துவ தேசிய  வாதத்துக்கும் தமிழ் இனத்துவ  தேசிய வாதத்துக்கும் இடையிலான அரசியல் முரண் நிலை ஆகியவையே கலாநிதி மாணிக்கலிங்கம் அடையாளம் காட்டிய  முரண் நிலைகளாகும். 2009 மே மாதத்தில்  விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து மேற்கூறிய இராணுவ முரண் நிலை முடிவுக்கு  வந்ததாகவும் 2015 ஜனவரிக்குப் பிறகு  ஐக்கிய  தேசியக் கட்சியும் சுதந்திரக்கட்சியும் நிறைவேற்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் இணக்கப்போக்குடைய அணுகுமுறையைக்  கடைப்பிடிக்க  ஆரம்பித்ததையடுத்து அவ்விரு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான அதிகார முரண் நிலை முடிவுக்கு வந்ததாகவும் பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளை முன்னெடுக்கக்கூடியதாக இருப்பதாகவும் ஹரிம் பீரிஸ்  குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரசு அதன் சமுதாயத்தில் உள்ள முழுமையான பல்வகைமைக்கு (Full Diversity) அல்லது பல்லினத் தன்மைக்கு இடங்கொடுக்கக்கூடிய அரச சீர்திருத்தங்களை செய்வதன் மூலமாக இனத்துவ தேசியவாதங்களுக்கிடையிலான  முரண் நிலையையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். காலஞ்சென்ற  அரசியலமைப்பு  நிபுணர் கலாநிதி நீலன் திருச்செல்வம் பல்லின  அரசியல் சமுதாயம் ஒன்றின் மீது ஓரினத்துவ அரசு திணிக்கப்படுகின்ற ஒழுங்கற்ற முறைமையைக் கொண்டதாக (Anomaly of imposing a mono ethric state  on a multi ethnic polity)  இலங்கை இருக்கிறது என்று முன்வைத்த விளக்கத்தையும் ஹரிம் பீரிஸ் தனது கட்டுரையின் இறுதியில் நினைவுப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. அவருடைய கருத்துக்களின் அடிப்படையில் நோக்கும் போது சிங்கள  இனத்துவ தேசியவாதத்துக்கும் தமிழ் இனத்துவ தேசியவாதத்துக்கும் இடையிலான முரண்  நிலையை முடிவுக்குக் கொண்டுவர இயலாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் இலங்கைச் சமுதாயத்தின் பல்லினத்தன்மையை அங்கீகரிப்பதற்கு அரசு தயாரில்லாமல் இருப்பதே என்பதை அவர் ஒத்துக்கொள்கிறார் என்று புரிந்து கொள்ளக்கூடியதாக  இருக்கிறது. முழுமையான பல்லினத்தன்மைக்கு இலங்கை அரசு  இடங்கொடுக்கக் கூடியதாக அரசு சீர்திருத்த ஏற்பாடுகளை  (State Reforms)  உள்ளடக்கிய ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தால் மாத்திரமே இரு தேசியவாதங்களுக்கும் இடையிலான  தீராத முரண் நிலைக்கு முடிவு கிட்டும் என்பதே  ஹரிம் பீரிஸின் நம்பிக்கையாகவும் இருக்கிறது. ஆனால், அத்தகைய ஆரோக்கியமான அரச சீர்திருத்தங்களுக்கு வழிவிடக்கூடியதாக    தென்னிலங்கை அரசியல் சமுதாயம் இருக்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும். அதாவது, பல்லின அரசியல்  சமுதாயம் ஒன்றின் மீது ஒரு இனத்துவ அரசு திணிக்கப்பட்டிருக்கின்ற ஒழுங்கற்ற முறைமை  மாற்றியமைக்கப்படுவதை சிங்களத் தேசியவாதம் அனுமதிக்குமா?

இத்தகைய  கேள்வியின் பின்புலத்தின் இலங்கை அரசின் (Srilanka state) உண்மையான குணாதிசயம் பற்றி ஆழமாகப்  புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எழுகிறது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின்  முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜெயதேவ உயன் கொடவின் “இலங்கையில் பின்காலனித்துவ அரசு”  (Post Colonial state in Srilanka)   என்ற தலைப்பிலான ஆய்வைப் போன்று இலங்கை அரசின் தன்மையை மிகவும் தெளிவாகவும்  ஆழமாகவும் அரசியல் நுண்ணறிவுத்திறத்துடன் வரலாற்றுப் பின்புலத்தில் விளக்குகின்ற வேறு ஆய்வு அண்மைக்காலத்தில் செய்யப்பட்டிருப்பதாக நம்புவதற்கில்லை. தற்போது நோர்வேயில் வசிக்கும் இலங்கையரான அரசியல்-சமூக ஆய்வாளரும் புத்தி ஜீவியுமான பேராசிரியர்  நடராஜா சண்முகரத்தினத்தின்  சேவைகளைப் பாராட்டி கொழும்பில் அமைந்துள்ள சமூக விஞ்ஞானிகள் சங்கம் 2012 ஆம் ஆண்டில் வெளியிட்ட  (The Political  Economy of Environment and Development  in a Globalised world-Exploring Frontiers )என்ற நூலில் பேராசிரியர் உயன் கொடவின் மேற்கூறிய ஆய்வுக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. இக்கட்டுரையை  இலங்கை நிருவாக சேவையின்  முன்னாள் உயரதிகாரியும் அரசியல்– சமூகவியல்  ஆய்வாளருமான  கந்தையா  சண்முகலிங்கம் தமிழில் மொழிபெயர்த்து சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு  தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவமொன்றில்  வெளியிட்டிருந்தார். அந்த நூலுக்கு  சண்முகலிங்கம்  எழுதிய அறிமுகக் குறிப்பில் பேராசிரியர் உயன் கொடவின்  ஆய்வு முடிவுகள்  தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைகளைப் புதிய கண்ணோட்டத்தில் விளக்கவும்  புரிந்துகொள்ளவும் உதவக்கூடியன என்ற காரணத்தினாலேயே இந்நூலைத் தமிழாக்கம்  செய்திருக்கிறேன் என்று பிரத்தியேகமாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

உள்நாட்டுப் போரின்  முடிவுக்குப் பின்னரான  இன்றைய கால கட்டத்தில் தங்களது உரிமைப்  போராட்டத்தின்  எதிர்கால அணுகுமுறைகளை தமிழர் அரசியல் சமுதாயம் கடந்த  காலத்தைய போராட்டங்களின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு வகுத்துக் கொள்ளவேண்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையிலும் இலங்கை அரசு பற்றிய பேராசிரியர்  உயன் கொடவின் ஆய்வின் அடிப்படையில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.  அந்த நோக்கத்துக்கான ஒரு பங்களிப்பாகவே சண்முகலிங்கம் இந்த  நூலை வெளியிட்டிருக்கிறார். “ இலங்கையில் உள்நாட்டுப்  போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் நீண்டகாலம் பேராசிரியர் சண்முகரத்தினம்  இலங்கைக்கு  வெளியிலேயே வாழ்ந்து வந்தார்.  என்றாலும், ஒரு ஆய்வாளர் என்ற  வகையில் இலங்கையின் இனத்துவ முரண்பாட்டை பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வின் வழியிலேயே முடிவுக்குக்  கொண்டு வரவேண்டும் என்பது அவரது வேணவாவாக இருந்தது.

D0021550.jpgஅவரது எழுத்துக்களில் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இலங்கையின்  சமூகத்தையும் அரசையும் இனவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். மீட்க வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.  ஒரு  அரசியல் தீர்வு  வெற்றியடைவதற்கு  இவ்வாறாக சமூகமும்  அரசும் இனவாதத்தில் இருந்து  சுத்திகரிக்கப்பட்டு  மீட்கப்படவேண்டும் என்ற கருத்தை அவர் அழுத்திக் கூறினார்.  சமூகத்தை  இனவாதத்திலிருந்து மீட்டலும் அரசை மதசார்பற்றதாக்கலும்  (De–communalizing  Society and Secularising the state)  என்ற ஒரு பெரிய வேலைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று அவர் கூறினார். இலங்கையைப் பல்லின மக்கள் சமூகங்களின் ஜனநாயகமாக  (Multi ethnic People's democracy)  மீள் கட்டமைப்புச் செய்தலே இவ்வேலைத்  திட்டமாகும் என்று  சண்முகரத்தினம் கருதினார்”. -இவ்வாறு தனது கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் பேராசிரியர் உயன் கொட அதன் வாயிலாக இலங்கையின் பின்காலனித்துவ அரசு பற்றிய தனது இந்த ஆய்வுக்கான நோக்கத்தை விளங்க வைக்கிறார். அதாவது காலனித்துவ ஆட்சியின் முடிவுக்குப் பின்னர்  இலங்கையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் அரசு நாட்டை பல்லின மக்கள் சமூகங்களின் ஜனநாயகமாக மாற்றியமைப்பதற்கான எந்தவொரு முயற்சிக்கும் இடந்தரக் கூடியதா இல்லையா என்ற விவாதத்துக்கு இட்டுச் செல்லக்கூடியதாக பேராசிரியர் உயன் கொடவின்  ஆய்வு அமைந்திருக்கிறது. 1947 தொடக்கம் பதவியில் இருந்த அரசாங்கங்கள் இலங்கை அரசை எவ்வாறு அவற்றின் அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்றமுறையில் கட்டமைத்து வந்திருக்கின்றன என்பதை பேராசிரியர் உயன் கொட தெளிவாக  விளக்கியிருக்கிறார்.  அவரின்  ஆய்வின் விளைவான அவதானிப்புக்களையும் கண்டுபிடிப்புக்களையும் முழுமையாக இங்கு தருவது சாத்தியமானதல்ல. ஆனால், அவற்றில் சில குறிப்புக்களே  இலங்கை அரசு பற்றிய கணிசமான புரிதலைத் தரக்கூடியன என்று நம்பலாம்.

அவையாவன ;

  • இலங்கையின் பின்காலனித்துவ அரசை  நன்கு புரிந்து கொள்வதற்கு நாம் அரசு, அரசாங்கம் என்ற இரண்டையும் பிரித்துப் பார்க்கவேண்டும். நடைமுறை அரசியல் செயன்முறைகளில் அரசு வேறு, அரசாங்கம் வேறு என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை. நடைமுறையில் வெளிப்பட்டுத் தெரியாத இவற்றைப் பகுப்பாய்வுத் தேவைக்காக நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். அரசாங்கம் எவ்வாறு அரசை ஊடுருவி நிற்கிறது என்பதையும் அரசு அரசாங்கத்தின் மீது தங்கியிருப்பதாக  மாறுகிறது என்பதையும் அலசிப்பார்க்க வேண்டும். இதன் மூலமே அரசாங்கத்தின் கொள்கைகளும் முன்னுரிமைகளும் அரசு அதிகாரத்தின் செயற்பாட்டை வரையறை செய்வதையும் மறுவரையறை செய்வதையும்   அதன் மூலம் அரசை  மறு உற்பத்தி செய்வதையும்  கண்டு கொள்ளலாம். 
  • அரசு உருவாக்கம் என்பது சமூக வர்க்கங்களிடையிலும் இனக்குழுமங்களுக்கிடையிலும் ஏற்படும் அரசியல்  போராட்டங்களின் விளைவாக  அமைவது. உண்மையில் இந்த அரசியல் போராட்டங்கள் நடைபெறும் களமாகவும்  அரசு விளங்குகிறது. 1950 களின் நடுப்பகுதியில் இலங்கையின் பின்காலனித்துவ அரசின் வர்க்க உறவுப் பின்னணி மாறியது. இம்மாற்றம் வர்க்கம், இனக்குழுமம் என்ற இரண்டு விடயங்கள் அரசியல் அதிகாரம்  என்ற தளத்தில்  இடைவினை புரிந்ததன் விளைவே  என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1956 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. இது ஐக்கிய தேசியக்கட்சி என்ற கட்சியில் இருந்து அரசியல் அதிகாரம்  மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கட்சிக்கு மாறியதை மட்டும் குறித்து நிற்கவில்லை.  குறிப்பிட்ட வகை வர்க்க உறவுகளைக் கொண்ட  அதிகாரக் கூட்டு  (Power Block)  உருவானதையும்  இதில் இணைந்த வர்க்கங்கள் பொதுவான கருத்தியலைக் கொண்டிருந்ததையும்  காணலாம். 
  • இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம்  பெற்றதன் பின்னரான 20  ஆண்டு  காலத்தின் பின் காலனித்துவக் கட்டத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று இலங்கை அரசு  பாராளுமன்ற  ஜனநாயக  நிறுவன அமைப்புகளை வலுப்படுத்திய அரசு உருவாக்கமாக வளர்ச்சி  பெற்றதாகும். 
  • சுதந்திரத்துக்குப் பின்னரான பத்து ஆண்டுகாலத்தில் அரசு இனவாதக் கலப்புடையதாகி இனவாத  அரசாக மாறியது. அல்லது இனக்குழுமப் பெரும்பான்மைவாதம்  (Ethnic majoritarianism)  தலைதூக்கியது என்றும் கூறலாம். 
  • சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் ஆளும் வகுப்பு என்ற  தகுதியைப் பெற்றுக்கொண்ட சிங்களத் தலைமை இனக்குழுமப் பெரும்பான்மை வாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு ஒன்றை நிறுவும் பணியில் முனைப்புடன் செயற்பட்டது. 1956 இல் பதவிக்குவந்த அரசாங்கம் இலங்கை அரசின் இனக்குழுமப் பெரும்பான்மைவாதப் பார்வையை  மேலும் அதிகரிக்கச் செய்தது.  அரசு அதிகாரத்தில் தாமும் சம பங்காளிகளாக  இருக்க வேண்டும் என்றும் சிங்களத் தலைமைக்கு  கீழ்ப்பட்டவர்களாக இருக்கக் கூடாது என்றும் தமிழ்த்தலைமை  கருதியது.  இவ்வாறு  அரசு அதிகாரத்தில் பங்கு என்ற விடயமே  பிற்காலத்தில்  சிங்கள–தமிழ் முரண்பாட்டுக்குக்கு காரணமா  அமைந்தது. 
  • சுதந்திரத்துக்குப் பின்னரான பத்தாண்டு காலத்தில் இலங்கையின் பின்காலனித்துவ அரசு இரு இயல்புகளைக் கொண்டதாக இருந்தது. முதலாவதாக அது ஒற்றையாட்சி மாதிரியில் ஜனநாயக  நிறுவனங்களைக்   கட்டமைத்துச் சென்றது. இரண்டாவதாக இலங்கையின்  பின் காலனித்துவ அரசின்  ஆதார அடித்தளம் சிங்களப் பெரும்பான்மை இனம் என்பதாகச் சுருங்கியது. சிங்களத் தேசியவாதத்தின் அரசியல் பண்பாட்டு  நிகழ்ச்சித்  திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான கருவிதான் அரசு என்ற  சிந்தனை வேரூன்றியது. இப்பின்னணியில் இலங்கை அரசின் லிபரல் ஜனநாயகப் பண்புகளை இல்லாதொழிக்கும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத்  தாராண்மையற்ற அரசாக  மாற்றும் (De liberalization)  செயல் திட்டம் என்று கூறலாம். 
  • சர்வாதிகாரம் இலங்கை அரசியலில் ஒரு முக்கிய அம்சமாகவும் இயல்பாகவும் உள்ளது.  பாராளுமன்ற ஜனநாயகமும் அரசியல்  யாப்புச் சர்வாதிகாரமும் ஒருங்குறையும் இயல்புடையதாக இலங்கை அரசு உருவாக்கம் பெற்றது. பாராளுமன்ற  ஜனநாயகம் சர்வாதிகாரம் முன்வைத்த  அனைத்துத் திட்டங்களையும் தனக்குள் உள்வாங்கிக் கொள்ளச் சம்மதம்  அளித்தது. இதன் மூலம் ஜனநாயகமும் சர்வாதிகாரமும் தமது  பரஸ்பர உறவுகளை முரண்பாடுகள் இல்லாத வகையில் மீள்வரையறை செய்து கொண்டன.  இலங்கையில் பாராளுமன்ற  ஜனநாயகத்துடன் சர்வாதிகாரம்  ஒன்றிணைந்து ஜீவிக்கலாம் என்ற உடன்பாட்டை  நடைமுறைப்படுத்தின. இதனை  வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையில்  பாராளுமன்ற ஜனநாயகம் சர்வாதிகாரத்தை தனக்குள் ஏற்று உள்வாங்கிக் கொள்வதான நெகிழ்ச்சிப் போக்கைக் கடைப்பிடித்தது. அத்தோடு சர்வாதிகாரமும்  பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சட்டகத்திற்குள் இயங்குவதில் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று கூறிக் கொண்டு ஜனநாயகத்தோடு சேர்ந்து வாழப்பழகிக் கொண்டது. இலங்கையின் பின் காலனித்துவ அரசு உருவாக்கத்தின் (Post colonical state formation)  பிரதான இயல்பாக இது அமைந்தது. 

 

http://www.virakesari.lk/article/11773

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.