Jump to content

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது! இரா.சம்பந்தன்!


Recommended Posts

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. யாரும் யாரிடமும் ஏமாறப் போவதுமில்லை. யாரையும் யாரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாது என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பாரியளவு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பகிர்வதன் மூலமே மாகாண அமைச்சுக்கள் தங்கள் அதிகாரங்களுக்கு உட்பட்ட மக்களுக்கான சேவைகளை பூரணமாகச் செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஏற்பட இருக்கின்ற அரசியல் தீர்வு இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் எல்லா இன மதத்தவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.

எவரையும் எவரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை நாம் பெற முடியாது. சுருக்கமாகச் சொல்வதென்றால் எவரும் எவரையும் ஏமாற்றவில்லை. எவரும் எவரையும் ஏமாற்றுவதன் மூலமாக ஒரு திருப்திகரமான நியாயமான நிரந்தரமான நிதானமான அரசியல் தீர்வை நாம் அடைய முடியாது.

உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வு மக்கள் முன் சர்வசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அரசியல் சாசனம் மக்களின் ஆணையைப் பெற்ற பின்பு தான் அமுலுக்கு வரும். நிறைவேற்றப்படும்.

இத்தகைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் பக்குவமாகவும் நிதானமாகவும் நடக்க வேண்டிய காலத்தின் தேவை காணப்படுகின்றது என்றார்.

http://www.tamilwin.com/politics/01/118748?ref=home

Link to comment
Share on other sites

3 hours ago, போல் said:

உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வு மக்கள் முன் சர்வசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அரசியல் சாசனம் மக்களின் ஆணையைப் பெற்ற பின்பு தான் அமுலுக்கு வரும். நிறைவேற்றப்படும்.

இலங்கையில் தற்போது சர்வசனம் என்பது பெரும்பாலும் இனவாதிகளாக மாற்றப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களையே குறிக்கும். அவர்களின் முடிவே அமுலாக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

இத்தகைய சூழ்நிலையில் நாம் எல்லோரும் பக்குவமாகவும் நிதானமாகவும் நடக்க வேண்டிய காலத்தின் தேவை காணப்படுகின்றது என்றார்.

 இப்படியே சொல்லிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய, ஒரு சூழலும் உருவாகுவதாகவோ, முடிவேதும் வருவதாகவோ தெரியவில்லை முதலமைச்சர் ஏதாவது சொன்னால், செய்தால் இந்தப் போதனையை  தூக்கிக்கொண்டு ஓடி வருவினம். பிற்பாடு ஒரு சத்தமும் இராது. . நல்லிணக்கம் என்கிற ஏமாற்று வசனத்துக்குள் எஜமானர்களுக்கு நன்றி என்ற பொருள் மறைந்திருக்கிறதோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25.9.2016 at 8:51 AM, போல் said:

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. யாரும் யாரிடமும் ஏமாறப் போவதுமில்லை. யாரையும் யாரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாது என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

pogkoi_zpssad3matf.jpg

Link to comment
Share on other sites

On 25/9/2016 at 0:21 PM, போல் said:

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது. யாரும் யாரிடமும் ஏமாறப் போவதுமில்லை. யாரையும் யாரும் ஏமாற்றி ஒரு முறையான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியாது என்று எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இப்படி சொல்வதன் மூலம் சம்பந்தன் தான் சிறைக் கைதிகளையும், காணி உரிமையாளர்களையும், இன்னமும் பலருக்கு வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியதை மறைக்க முடியாது.

குறிப்பாக 2016 க்குள் தமிழர் ஏற்றுக்கொள்ளும் தீர்வு கிடைக்கும் என்று ஏமாற்றியதை மறைக்க முடியாது.  

Link to comment
Share on other sites

Quote

உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வு மக்கள் முன் சர்வசன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும். அந்த அரசியல் சாசனம் மக்களின் ஆணையைப் பெற்ற பின்பு தான் அமுலுக்கு வரும். நிறைவேற்றப்படும்.

 

13895294_580971098758007_1134677550522412720_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது! இரா.சம்பந்தன்!

 

 

எங்கெ நல்ல அடி

படாத இடத்தில விழுந்துவிட்டுது போல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது 

எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது! .. 

நான் இவர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் வரையில்... (சொல்லாமல் போனது...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு சாணக்கியன் இவர். 60 வருஷமாய் தோத்துப் போகாமல்   மேய்க்கிறார். லேசில ஏமாற்றிப்போடுவோமா? அல்லது அவர்தான் ஏமாந்து போவாரோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.