Jump to content

அதிசய உணவுகள் - 13: தேன் கலந்த கிரேக்க தயிர்!


Recommended Posts

அதிசய உணவுகள் - 13: தேன் கலந்த கிரேக்க தயிர்!

சாந்தகுமாரி சிவகடாட்சம்

 

 
தேன் கலந்த கிரேக்கத் தயிர் (Yogurt)
தேன் கலந்த கிரேக்கத் தயிர் (Yogurt)

‘‘நன்றாக விரும்பி சாப்பிடும் மனிதர்களே எப்போதும் மிகச் சிறந்த மனிதர்களாக இருக்கிறார்கள்!’’- ஜூலியா சைல்ட்

பழைய கிரேக்க நாட்டின் மரபு வழி கதை ஒன்று உண்டு. அதாவது கடவுள், உலகை படைக்க தொடங் கியபோது ஒரு சல்லடை வழியாக மண்ணைச் சலித்து பூமியின் மீது விழச் செய்தார். ஒவ்வொரு நாட்டுக்கும் நல்ல மண் கிடைத்த பின், சல்லடையில் கரடுமுரடான கற்களே மிஞ்சி இருந்தன. இவற்றை கடவுள் தன் தோளுக்கு மேலே வீச, அது பூமியில் விழுந்தது, உடனே கிரேக்க நாடு தோன்றியதாம்.

எங்கள் விமானம் வட்டமடித்து கிரேக்கத் தீவு ஒன்றில் தரையிறங்கத் தொடங்கியபோது, ஜன்னல் இருக்கை களுக்கு அருகே அமர்ந்திருந்த எனக்கு அந்தப் பழங்கதை நூற்றுக்கு நூறு உண்மையாகத்தான் சொல்லப்பட்டிருக் கிறது என்று தோன்றியது. கிரேக்க நாட்டுக்குச் சொந்தமான இரண்டாயிரத் துக்கும் சற்று அதிகமான தீவுகள், அதில் 170 தீவுகளில் கிரேக்க மக்கள் வாழ்கிறார்கள். கிரேக்கத் தீவுகள், அழகில் பார்ப்போரை அசர வைக்கும் என்று கேள்விபட்டிருந்ததால், அவற்றில் மூன்று தீவுகளைத் தேர்ந்தெடுத்தேன். முதலில் மைக்கோனஸ் தீவில் கால் பதிக்கும்முன் கிரேக்கத் தீவுகளை அரவணைத்து செல்லும் ஏஜியன் கடலின் மீது கொலுவிருந்த தீவுகளின் தோற்றங்களும், வடிவங்களும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தின.

நீண்டு படுத்திருக்கும் முதலையைப் போன்று ஒன்று, ஆமை தோற்றத்தில் மற்றொன்று, சதுரம், வட்டம், ஸ்டார் மீனைப் போல, இறக்கை விரித்து பறக்கும் பறவையோடு... அம்மம்மா! கற்பனா சக்தியை மீறிய தோற்றங்களை கொண்ட தீவுகளை முடிந்தவரை எண்ணி, பிறகு ஓய்ந்து போனேன்.

கிரேக்க மண்ணில் என் முதல் காலடியை எடுத்து வைத்ததுமே உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்த்துக் கொண்டது. எப்படிப்பட்ட, காலத்தால் அழியாத சரித்திரம் படைத்த மகா புருஷர்கள் வாழ்ந்த பூமி!

பிளாட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ர டீஸ், டெமோகிரடஸ் போன்ற தத்துவ ஞானிகள்; இலியட், ஒடிசியை இயற் றிய காவிய கவிஞர் ஹோமர்; கணித மேதை பிதாகரஸ்; மருத்துவ மேதை ஹிப்போகிரடஸ்; இயற்பியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், வானிய லாளர் என்ற பல பெருமைகளுக்கு உரித்தான ஆர்க்கிமெடிஸ்; உலகின் பெருவாரியான நாடுகளை தன் ஆட்சிக் குக் கீழ் கொண்டுவந்த அலெக்ஸாண்டர் தி கிரேட் என்று பட்டியலிட்டு மாளாத... பெருமக்கள். இவர்கள் எல்லோருமே கிரேக்க நாடு ஈன்றெடுத்த மாணிக்கங்கள்!

பெருமைவாய்ந்த மக்களோடு ஜன நாயகம், மேற்கத்திய தத்துவம், ஒலிம்பிக் விளையாட்டு, அரசியல் அறிவியல், வரலாற்றியல், முக்கிய கணிதக் கோட்பாடுகள், மேற்கத்திய இலக்கியம், சோகம் மற்றும் நகைச்சுவை சம்பந்தமான மேற்கத்திய கோட்பாடுகள் என்று அத்துனைக்கும் பிறப்பிடம் கிரேக்க நாடுதான்!

இப்படிப்பட்ட உன்னதமான நாட்டில் 10 நாட்களுக்கு மேலாக வலம் வந்து கண்ணாறக் கண்ட காட்சிகளும், பெற்ற அனுபவங்களும் உண்ட உணவுகளும் என்றைக்கும் என்னுள் நிலைத்து நிற்கும். மைக்கோனஸில் நாங்கள் தங்க இருந்த ஹோட்டலை நோக்கி, எங்களை சுமந்துக்கொண்டு அந்த கார் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அந்தத் தீவில் இருந்த எல்லா கட்டிடங்களும் வெள்ளை வெளேர் என்று வண்ணம் அடிக்கப்பட்டிருந்தன. ஜன்னல்கள், கதவுகள் மற்றும் தேவாலயங்களின் கூரைகளுக்கும் நீலநிறம் அடிக்கப் பட்டிருந்தன. சைகிலேடஸ் என்றழைக் கப்படும் ஏஜியன் கடலில் இருக்கும் தீவுகளில் வாழும் கிரேக்க மக்களுக்கு, தீயசக்திகளை நீலநிறம் விரட்டும் என்ற நம்பிக்கை இருப்பதால் இந்தத் தீவுகளில் எல்லா வீடுகளுமே இப்படியான வண்ணத்தில்தான் மின்னுமாம்!

சிறிதுநேரத்தில் ஹோட்டலை அடைந்தோம். இயற்கை சூழ்நிலையில், ஏஜியன் கடலைப் பார்த்தாற்போல எங்கள் அறை இருந்தது. சூரியன் அஸ்தமனம் என்பது சைகிலேடஸ் தீவுகளில் கிடைக்கும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. தங்கத் தட்டாக, கடலுக்குள் சிறிது சிறிதாக மறையும் சூரியனைக் கண்டு மகிழ்ந்தோம்!

yogurt1_3021323a.jpg

மைக்கோனஸ் தீவில் உள்ள காற்றாலைகளுக்கு அருகில் சாந்தகுமாரி

மைக்கோனஸ் தீவை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிகிற வகையில்... பல ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களில் நாயகன் - நாயகி டூயட் பாடும் காட்சிகளின் பின்னணியில் கொலுவிருக்கிற காற்றாலைகளைப் (wind mill) பார்க்கப் புறப்பட்டோம்.

வெகுதொலைவு நடந்து தூங்கா தீவான மைகோனஸின் குறுகிய தெருக் களையும், கடைகளையும் கடந்து காற்றாலைகளைப் பார்த்துவிட்டு திரும் பும்போது பசித்தது. ஒரு உணவகத்தில் இருந்த பலகையில் பலவித உணவு வகைகளைப் பற்றி எழுதியிருந்தனர். அதில் ஓர் உணவின் பெயர் வெகுவாக கவர்ந்தது. இங்கே கிரேக்க தயிர் (yogurt) தேனோடு கிடைக்கும் என்பதுதான் அது!

பல நாடுகளுக்குப் பயணப்பட்ட நான், வாழைப்பழச் சுவையோடு கூடிய தயிர்; செர்ரி, திராட்சை, மாம்பழச் சுவையோடு கூடிய தயிர் என்று பல வகை தயிர்களைச் சாப்பிட்டுள்ளேன். நம் நாட்டில் மோர், தயிர், லஸ்ஸி என சாப்பிட்டுள்ளேன். ஆனால் தயிரும் தேனுமாக சாப்பிட்டது இல்லை.

ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந் திருந்தோம். என் கணவருக்கு ஃபுரூட் சாலட்டும், எனக்குத் தயிரும் தேனும் கிண்ணங்களில் வந்து சேர்ந்தன. வெண்ணெய்யின் திடத்துடன் ஐஸ்கிரீம் கட்டியைப் போல காட்சி அளித்த அதனுடைய மேல் பாகத்த்தில் நம்ம ஊர் தேனைப் போல பத்து மடங்கு திடத்துடன் தேன் வழிந்துகொண்டிருந்தது.

ஸ்பூனால் தேனோடு சேர்த்து கிரேக்கத் தயிரை ஒரு விழுது எடுத்து வாயில் போட்டேன். அம்மம்மா... அதன் சுவையை எப்படி சொல்வேன்! அமிர்தம் என்று சொல்வார்களே... அது இதுபோன்றுதான் இருக்குமோ!

என் மனம் இஷ்ட தெய்வமான கிருஷ்ணரை நினைத்தது. ‘அப்பனே! உனக்குத் தயிர் என்றால் உயிராச்சே... இந்தக் கிரேக்கத் தயிரை உனக்குப் படைக்கிறேன்’ என்று மனதார அர்ப்பணம் செய்தேன். பிரபஞ்சத்தின் தலைவனுக்கு கிடைக்காத தயிரா... என உள்மனம் அறிவுறுத்தியது. ஆனாலும் உதடுகள் ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்றது.

அன்றுமுதல் கிரேக்க நாட்டில் இருந்த அத்தனை நாட்களிலும் மூன்று வேளையும் என் முக்கிய உணவாக ‘யோகர்ட் வித் ஹனியே’ ஆனது. மீண்டும் கிரேக்கம் செல்லத் துடிக்கிறேன். கிரேக்கத் தயிரோடு கிரேக்கத் தேனையும் சுவைக்க!

- பயணிப்போம்...

http://tamil.thehindu.com/opinion/blogs/அதிசய-உணவுகள்-13-தேன்-கலந்த-கிரேக்க-தயிர்/article9142234.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.