Jump to content

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி


Recommended Posts

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

Jayalalitha.jpgசென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக வியாழக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.


வியாழக்கிழமை இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. இந்த தகவலைத்தொடர்ந்து சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தோம். அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

Apollo.png


முதல்வர் ஜெயலலிதா, பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனை வந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய மருத்துவர்கள், “ஜெயலலிதா காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இப்போது நலமாக இருக்கிறார்,” என்றனர்.


தகவல் பரவியதையடுத்து அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத்துவங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவிரிப் பிரச்சினையை... அமுக்க, இதுகும் ஒரு வழியாக இருக்கலாம்.
முன்பு முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு, ஈழப் போர் உக்கிரமாக நடக்கும் போதெல்லாம்... 
முதுகு வலி வந்து,  ஆஸ்ப்பத்தியில் போய் படுத்து விடுவார்.

Link to comment
Share on other sites

முதல்வர் ஜெயலலிதாவின் காய்ச்சல் நிமிடங்கள்...!

Jayalalitha%20001.jpg

வியாழக்கிழமை இரவு போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள்,  துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே  9.30 மணியளவில் ஜெயலலிதாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

முதலில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர். ஒரு சிறிய ஆலோசனைக்கு பின், 10. 15 மணிக்கு அவரை கிரீம்ஸ் ரோடு  அப்போலோவில் அனுமதித்து இருக்கிறார்கள்.

 

முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால், நள்ளிரவு ஒரு மணி அளவில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், “திடீர் காய்ச்சலின் காரணமாகவும், உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

 

 

Jaya%20update.png

 Jayaupdate001.jpg

 

வியாழக்கிழமை இரவு 9 மணி: போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

9. 30 மணி: முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.

10. 15 :  ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடன் சசிகலா இருக்கிறார்.  சிறிது நேரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் வருகிறார்.

10.30 : கிரீம்ஸ் ரோடு சாலையில்  அதிகளவில் காவலர்கள் குவிக்கப்படுகிறார்கள்.

1. 00: அப்போலோ மருத்துவ நிர்வாகம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து செய்தி குறிப்பு வெளியிடுகிறது. 

1.05: முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

1:10: தொண்டர்கள் குவிகிறார்கள்.

1. 30 : கீரிம்ஸ் ரோடு சாலை மூடப்படுகிறது

1. 40 : சைதை துரைசாமி மருத்துவமனைக்கு வருகிறார்.

2.05: முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் வருகிறார்.

2.30:  அமைச்சர் ஜெயக்குமார் வருகிறார்.

3.00: தலைமைச் செயலாளர் ராம் மோக்ன் ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், காவல் துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன்  மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்த ஷீலா நாயர் மருத்துவமனைக்கு வந்தார்.

3.30: சாந்த ஷீலா நாயர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.

அதிகாலை 5 மணி : முன்னாள் அமைச்சர் சின்னய்யா, முன்னாள் காவல் துறை அதிகாரியும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான  நட்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு வந்தனர்.

7.30 மணி தகவல்: முதலமைச்சருக்கு நுரையீரலில் நீர் கோர்த்திருந்தது. அதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதன்பிறகு நுரையீரல் நீர் அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், அப்சர்வேசனுக்காக இன்று முழுவதும் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று தகவல் வெளியானது.

9.00 மணி: தற்போது கீரிம்ஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க.வினர் குவிந்துள்ளனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு கூட அனுமதி இல்லை.

10.00 மணி: இதுவரை மருத்துவமனை வெளியே காக்கவைக்கப்பட்ட  அமைச்சர்கள் தற்போது உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10.10 மணி: அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனை வந்தார்

http://www.vikatan.com/news/coverstory/68712-chief-minister-jayalalitha-admitted-in-hospital.art

Link to comment
Share on other sites

இன்று முழுவதும் மருத்துவமனையில் ஜெயலலிதா இருப்பார்'

 

18344_thumb.jpg

 

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, தற்போது கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சருக்கு நுரையீரலில் நீர் கோர்த்திருந்தது. அதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதன்பிறகு நுரையீரல் நீர் அகற்றப்பட்டுவிட்டது. தற்போது நலமாக உள்ளார் என்றும் ஆனால், அப்சர்வேசனுக்காக இன்று முழுவதும் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கீரிம்ஸ் சாலை முழுவதும் அதிமுகவினர் குவிந்துள்ளனர். போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரு சக்கர வாகனங்களுக்கு கூட அனுமதி இல்லை.

http://www.vikatan.com/news/flashnews/18344-jayalalithaa-will-be-under-observation-in-hospital-today.art

Link to comment
Share on other sites

முதல்வர் ஜெயலலிதா மயக்கமடைந்த 'அந்த' நிமிடங்கள்!  -கதிகலங்கிய கார்டன் ஊழியர்கள் 

jaya%20cab.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 'நேற்று இரவு கார்டனில் நடந்த ஆலோசனையின் விளைவாகவே, முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது' என்கின்றனர் கார்டன் உதவியாளர்கள். 

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று நள்ளிரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், திடீர் காய்ச்சலின் காரணமாகவும், உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள் எனத் தெரிவித்தது. இதையடுத்து, மருத்துவமனை வாயிலில் தொண்டர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். 

 

 

 

 

"முதல்வரின் உடல்நிலையில் எந்த ஒரு சிரமம் ஏற்பட்டாலும், டாக்டர் சிவகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் போயஸ் கார்டனிலேயே வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். வெளியில் சென்று சிகிச்சை அளிக்கும் அளவுக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதற்குக் காரணமே, நேற்று நடந்த விவாதங்கள்தான்" எனக் கலங்கினார் கார்டன் உதவியாளர் ஒருவர். அவர் நம்மிடம், "முதல்வருக்கு சர்க்கரை குறைபாடு, மூட்டு பிரச்னை என உடல்ரீதியாக பல பிரச்னைகள் உள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, அமெரிக்க மருத்துவர்கள் குழுவினர் முதல்வருக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். இதன்பின்னர், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பொது இடங்களுக்குச் செல்லும்போதெல்லாம், மிகுந்த கவனமாகவே இருப்பார். நேற்று மாலை கார்டனுக்குள் இருந்த முதல்வருக்கு, டெல்லியில் இருந்து சில தகவல்கள் வந்துள்ளன. 

appolollo.jpg

டெல்லி தகவலால் கவலையில் ஆழ்ந்தார் முதல்வர். அதன்பின்னர் சசிகலா மற்றும் அரசு செயலர்களுடன் தீவிரமாக விவாதித்தார். அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருந்தார். மிகுந்த மனஅழுத்தத்தோடு பேசிக் கொண்டிருந்தார். நீர்ச்சத்து குறைபாட்டோடு சர்க்கரை அளவும் குறைந்துவிட்டது. லேசான காய்ச்சலும் இருந்தது. தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை அறிந்த சசிகலா உள்ளிட்டவர்கள், பதறிப் போய் உடனடியாக அப்பல்லோ மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

வழக்கமாக, ஒவ்வொரு புதன்கிழமையும் சிறுநீரகம் தொடர்பான பரிசோதனையை முதல்வர் மேற்கொள்வது வழக்கம். தொடர்ச்சியான பணிகளின் காரணமாக, இந்த வாரம் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. அதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. உடல்ரீதியான அனைத்து பரிசோதனைகளும் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்ததால், தொண்டர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், முதல்வர் இப்போது நன்றாக இருக்கிறார். விரைவில் முழு நலத்தோடு இயல்புக்குத் திரும்புவார்!" என்றார் ஆசுவாசமாக. 

முதல்வர் விரைவில் நலம் பெறட்டும்!  

அமைச்சர்கள் அனைவரும் உடனே வெளியேறவும் - ஜெயலலிதா திடீர் உத்தரவு

 

18374_thumb.jpg

 

காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நேற்று நள்ளிரவு அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கும்பல் கும்பலாக வந்தனர். அமைச்சர்களின் பி.ஏ-க்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என்று பெருங்கூட்டமே மருத்துவமனை ஏரியாவில் கூடினர். இதனால், பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போலோ மருத்துவமனை சாலையில் போக்குவரத்தை போலீஸார் நிறுத்திவிட்டனர். ஏற்கனவே மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையின் உள்ளே, வெளியே போகமுடியாமல் போலீஸார் தடுத்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இன்று காலை மருத்துவமனையில் கட்சிக்காரர்கள் குவிந்திருக்கும் நிலவரங்களை ஜெயலலிதா, மருத்துவமனை தரப்பினரிடம் கேட்டு தெரிந்துகொண்டாராம். பிறகு, உதவியாளர் மகாலிங்கத்தை அழைத்து, சாதாரண ஜுரம் தானே?..சிகிச்சை முடிந்துவிட்டது. வீடு திரும்ப போகிறேன். அமைச்சர்களை அலுவலகப்பணியை போய் கவனிக்கச் சொல்லுங்கள். மருத்துவமனையில் யாரும் நிற்கக்கூடாது' என்று உத்தரவிட்டாராம். அதையடுத்து, மகாலிங்கம் மூலம் அமைச்சர்களுக்கு தகவல் பரிமாறப்பட்டது. அடுத்த நிமிடமே, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மருத்துவமனையை விட்டு கோட்டைக்கு கிளம்பினர்.

http://www.vikatan.com/news/flashnews/18374-ministers-leave-from-hospital.art

முதல்வருக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

 

18375_thumb.jpg

 

முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கமான உணவை முதல்வர் இன்று காலை சாப்பிட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

http://www.vikatan.com/news/flashnews/18375-jayalalithaa-is-fine-now-apollo-hospital.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் சாபக்கேடு

கன்னட முதல்வர்   =  எது வரினும் ஒன்றாக ஒற்றுமையாக போராடலாம்

தமிழக முதல்வர் நோய் என ஒதுங்குதல்..

கன்னடத்துக்கு இதுவும் ஒரு தகவல்

நான் உங்களுடன்......

Link to comment
Share on other sites

விரைவில் நலம் பெறுவீர்கள்..! முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி வாழ்த்து

karuna-%20jaya%20long.jpg

''முதலமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்'' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டதாகவும், இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அதிமுகவினர் கோயில்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா நலம் பெற திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவத்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/68747-get-well-soon---karunanidhi-wishes-to-cm.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14362731_506488349547415_1150875816079851289_o.jpg

ஜெயா.... என்ன, அன்னை தெரேசாவா... என்று,  சீமான்  கேள்வி. 
சீமான் கேட்ட  கேள்வி,  சரியானது தானே..... 

Link to comment
Share on other sites

Panneerselvam-PTI.jpg

"நமக்கு இன்னொரு சான்ஸ் அடிக்கப்போகுது..!" tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

Panneerselvam-PTI.jpg

"நமக்கு இன்னொரு சான்ஸ் அடிக்கப்போகுது..!" tw_blush:

படத்துக்கு... பொருத்தமான, நல்ல சூப்பர் கருத்து. ரசித்தேன்..... இசை. :)

பன்நீருக்கு... உடம்பெல்லாம், மச்சம். :grin:
போற போக்கிலை..... தமிழ் நாட்டின், ஆறாவது  முதல்வராகி....
கருணா, ஜெயா.... போன்றவர்களின் சாதனையை... முறியடித்து விடுவார் போலுள்ளது. 
:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23.9.2016 at 3:50 PM, நவீனன் said:

விரைவில் நலம் பெறுவீர்கள்..! முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி வாழ்த்து

அரசியல்லை பரம எதிரியாக இருந்தாலும் சிங்கனுக்கு பழைய பாசம் விட்டு இன்னும் போகேல்லை...:cool:

 

kajj.jpg

Link to comment
Share on other sites

இயல்புக்குத் திரும்பின அப்பல்லோ சாலைகள்... #அப்போலோவில் ஜெயலலிதா!

 

hs1.jpg

 

சென்னை கிரீன்வேஸ் அப்பல்லோ சாலை நேற்றிருந்தது (வெள்ளிக்கிழமை) போல் இன்று இல்லை.

சாலையை மறித்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் இல்லை. ஒரே ஒரு மாற்றம் கிரீம்ஸ் சாலையில் துளி மண் கூட இல்லாத அளவிற்கு சாலை சுத்தம் செய்யப்பட்டிருந்தது.  முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்குச் செல்லும் அத்தனை வழிப்பாதையும் திறந்து விடப் பட்டிருந்தது. மருத்துவமனையின் மெயின்கேட் முன்பாகவும் கூட்டம் இல்லை. மருத்துவமனைக்குச் செல்லும் யாரையும் தடுத்து நிறுத்தி கெடுபிடி காட்டிய நேற்றைய கெடுபிடி போலீஸ் இன்றில்லை. அப்பல்லோவின் மெயின் கேட்டில் நின்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் மட்டும் மருத்துவமனைக்குள் போய் வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரிடம் பேசியபோது, "அம்மாவுக்கு நல்லாயிடுச்சாம்.   டாக்டர்கள் நேற்று இரவே சொல்லிட்டாங்க. வீட்டுக்குப் போனால் கட்சி, ஆட்சின்னு வேலை அதிகமாயிடும். மறுபடியும் அட்மிட் பண்ண வேண்டிதாயிடும்

அதனால் இங்கேயே இருந்து உடம்பை நன்றாக பார்த்துக் கொண்டு விட்டுப் போகச் சொல்லி விட்டார்கள்... இன்று (சனிக்கிழமை) அஷ்டமி -நவமி பார்த்து விட்டு அம்மா வீட்டுக்குப் போயிடுவாங்கன்னு வெளியே பேசறாங்களாம். ஆனா கார்டனில் ரெஸ்ட் எடுக்கும் சூழ்நிலை இருந்தால் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். இனி அம்மாதான் டிஸ்சார்ஜ் பற்றிச் சொல்ல வேண்டும்" என்றனர். அதிகபட்சமாக 50 போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

http://www.vikatan.com/news/tamilnadu/68766-apollo-roads-coming-back-to-normal.art

Link to comment
Share on other sites

’கார்டனுக்கு செல்ல வேண்டும்!’ - முதல்வரின் உறுதி... சசிகலாவின் ஆறுதல்

cm.jpg

ப்போலோ மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ' இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகே, கார்டன் திரும்புவார் முதல்வர். மருத்துவமனை உணவுகளையே சாப்பிடுகிறார்' என்கின்றனர் அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள். 

போயஸ் கார்டனில் நேற்று முன்தினம் இரவு, அரசுச் செயலர்களுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது எதிர்பாராதவிதமாக மயக்கமடைய, பதறிப் போன சசிகலா உள்ளிட்டவர்கள் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். முதல்வரின் உடல்நிலை குறித்த தகவல் பரவியதால், மாநிலம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க தொண்டர்கள், மருத்துவமனை வாசலில் குவிந்தனர். நேற்று தலைமைச் செயலாளர் ராம மோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் மட்டும் முதல்வரை சந்தித்துவிட்டுத் திரும்பினர். ' அம்மா நல்லா இருக்காங்க' எனச் சொன்னாலும், அரசியல் கட்சித் தலைவர்களின் அடுத்தடுத்த ஆறுதல் வாழ்த்துக்களால், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் இன்னமும் அச்சம் அகலவில்லை. கோவிலில் சிறப்பு வழிபாடு, மசூதிகளில் தொழுகை என தீவிர பிரார்த்தனையில் இறங்கிவிட்டனர். 

cm1.jpg

' என்னதான் நடக்கிறது மருத்துவமனையில்?' என்ற கேள்வியை, அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். " அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில், டாக்டர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுவரையில் ரத்த மாதிரி, ஸ்கேன் உள்பட 12 வகையான சோதனைகள் எடுக்கப்பட்டுவிட்டன. இதற்கான முடிவுகளை எதிர்பார்த்து மருத்துவர்கள் காத்திருக்கின்றனர். நேற்று முன்தினம் முதல்வர் மயக்க நிலைக்குச் சென்றதற்குக் காரணமே, அவர் சாப்பிட்ட மருந்து ஒத்துக் கொள்ளாததுதான். இதனால் வயிற்றுப் பகுதியில் தொற்று ஏற்பட்டுவிட்டது. தொற்று தீவிரம் அடைந்ததோடு, காய்ச்சலின் தன்மையும் அதிகமாக இருந்ததால், மயக்கமடைந்துவிட்டார். முதல்வரின் உடல்நிலையை கவனிக்க, கார்டனிலேயே போதுமான சிகிச்சைக் கருவிகள் இருக்கின்றன. சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்கு, கார்டனிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். 

வாரத்தில் இரண்டு முறை தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கார்டனுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சிறுநீரகத்தில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களாக தூக்கமே இல்லாமல் சசிகலா, இளவரசி, மருத்துவர் சிவக்குமார், திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோர் கவனித்து வருகின்றனர். நேற்று மாலையில் இருந்தே, ' கார்டனுக்குப் போக வேண்டும்' என முதல்வர் விடாப்பிடியாக இருந்தார். இதுபற்றி டாக்டர்களிடம் பேசிய சசிகலா, ' கார்டனுக்குள் இப்போதைக்கு அழைத்துச் செல்லும் முடிவில் நாங்கள் இல்லை. அவருக்கு நல்ல ஓய்வு தேவைப்படுகிறது. வீட்டுக்கு வந்துவிட்டால், மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசனை என அமைதியாக இருக்க மாட்டார். அதற்குப் பேசாமல் மருத்துவமனையிலேயே இருப்பது நல்லது' என உறுதியாகச் சொல்லிவிட்டார். முதல்வரையும் சமாதானப்படுத்திவிட்டார். முதல்வருக்கான உணவுகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்தே தயாராகிறது. கார்டனில் இருந்து எந்த உணவுகளும் செல்லவில்லை. காலை, இரவு நேரங்களில் இட்லி மட்டுமே சாப்பிடுகிறார். சிறிதளவே சாதம் எடுத்துக் கொண்டார்" என விவரித்தவர், 

cm2.jpg

" முதல்வரின் உடல்நலம் குறித்து வெளியாகும் தகவல்களில் முக்கியமான ஒன்று. ' அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார்' என்பது. இந்தத் தகவலில் எந்த உண்மையும் இல்லை. அப்படிச் செல்லும் அளவுக்கு எதுவும் நேர்ந்துவிடவில்லை. தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். மருத்துவமனையில் இருந்து இரண்டு நாட்களில் முதல்வர் கார்டன் திரும்புவார். அண்மையில் திருமணம் செய்த விவேக் ஜெயராமன், தற்போது ஹனிமூன் பயணமாக சுவிஸ் சென்றிருக்கிறார். முதல்வரின் உடல்நிலை பற்றிக் கேள்விப்பட்டதும் பதறிவிட்டார். ஆனால், கவலைப்படும்படி நிலவரம் இல்லையென்றதும் சற்றே நிம்மதியாகிவிட்டார். 'முன்னரே திட்டமிட்டபடி 30-ம் தேதி சென்னை வருவேன். அது ஓ.கேதானே... இல்லை முன்னரே கிளம்பி வரவா!' என விசாரித்திருக்கிறார். இரண்டொரு நாட்களில் ஜெயலலிதாவே கார்டன் திரும்பிவிடுவார் என்றதுமே சமாதானமாகி இருக்கிறார். ஆனாலும், சிறுவயதில் இருந்தே முதல்வர் தூக்கி வளர்த்த விவேக், உடனடியாகக் கிளம்பி மருத்துவமனைக்கு வராததில் இளவரசிக்குக் கொஞ்சம் வருத்தம்தான்" என விவரித்து முடித்தார். 

' முதல்வர் சிங்கப்பூர் செல்கிறார்; அமெரிக்கா செல்கிறார்'  என உறுதிப்படுத்தாத தகவல்கள் வலம் வந்தாலும், ' அவர் நன்றாக இருக்கிறார்' என கார்டன் தரப்பில் இருந்தும் தகவல்கள் வெளியாகின்றன. நலம் உண்டாகட்டும்!

http://www.vikatan.com/news/tamilnadu/68770-admk-top-cadre-explains-jayalalithaas-health-condtions.art

Link to comment
Share on other sites

தொடர் மருத்துவக் கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா

 

 
முதல்வர் ஜெயலலிதா. | கோப்புப் படம்
முதல்வர் ஜெயலலிதா. | கோப்புப் படம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல் இரவு 12 மணி அளவில் வெளியானது.

மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், அதிமுகவினர் அதிக அளவில் மருத்துவமனை பகுதியில் குவிந்தனர். போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.

அத்தகவலை உறுதி செய்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவித்தது.

பின்னர், முதல்வரின் உடல்நலம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்கு இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. அவர் சாதாரண உணவு எடுத்துக்கொண்டார். தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்" என கூறப்பட்டது.

மூன்றாவது நாளாக மருத்துவமனையில்:

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று (சனிக்கிழமை) மூன்றாவாது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். அவர் சாதாரண உணவு எடுத்துக்கொண்டார்" எனத் தெரிவித்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/தொடர்-மருத்துவக்-கண்காணிப்பில்-முதல்வர்-ஜெயலலிதா/article9142336.ece?homepage=true

Link to comment
Share on other sites

வெளிநாட்டுக்குச் சென்ற ஜெயலலிதாவின் தூதுவர்..!   -தமிழகம் வருவார்களா மருத்துவர்கள்!?

jayanand.jpg

விமான நிலையத்தில் ஜெயானந்த்

' மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக' மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. ' வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படுவதால், அவரச பயணமாக வெளிநாடு கிளம்புகிறார் சசிகலா மருமகன்' என்கின்றனர் கார்டன் உதவியாளர்கள். 

சென்னை, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தற்போது நலமோடு இருக்கிறார். " கடந்த ஒரு வாரமாகவே, மிகவும் சோர்வில் இருந்தார் முதல்வர். பல வாரங்களுக்குப் பிறகு அவர் முகத்தில் சற்று உற்சாகத்தைப் பார்க்கிறோம்" என மருத்துவமனை நிலவரத்தை விவரித்த, கார்டன் உதவியாளர் ஒருவர், " சட்டமன்றத் தேர்தல் நேரத்திலேயே அமெரிக்க மருத்துவக் குழு முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. சர்க்கரை குறைபாடு, மூட்டு பிரச்னை என அவரை வதைத்த பல நோய்களுக்கு ஓரளவுக்குத் தீர்வு கிடைத்தது. இதன்பிறகு, மருத்துவர் சிவக்குமார் தலையிலான குழுவினர் தினம்தோறும் பரிசோதித்து வந்தனர். கடந்த சில வாரங்களாகவே முன்பைப் போல் அவரால் செயல்பட முடியவில்லை. இதைப் போக்குவதற்காக எடுக்கப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளே வினையாகிப் போய்விட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட மருந்துகளால் தொற்றுக்கு ஆளாகிவிட்டார். காய்ச்சல், சிறுநீரகத் தொற்று என அவரால் இயங்கவே முடியவில்லை. அதன் விளைவாகவே மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தது. 

appolollo.jpg

தற்போதைக்கு நிலைமை ஓரளவு சீரடைந்துவிட்டாலும், சிறுநீரகம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வை எதிர்பார்க்கிறார் முதல்வர். இதற்காக, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் உள்ள மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ' இந்தப் பணிக்கு யாரை அனுப்புவது' என்று முடிவெடுத்தபோது, அருகில் இருந்த திவாகரன் மகன் ஜெயானந்த்திடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். உலகம் முழுக்கவே ' ஓம் முருகா' இணையதளத்தின் மூலம், தமிழர்களை ஒருங்கிணைத்து சேவைகளைச் செய்து வருவதால், அவரை நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் சசிகலா. முதல்வரின் உடல்நிலை குறித்து, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உள்ள சிறந்த மருத்துவர்களுக்கு மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுவிட்டது. அவர்களை சென்னைக்கு வரவழைக்கவும் அதுதொடர்பான முன்நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க வேண்டியிருப்பதால், இன்று மதியம் வெளிநாடு சென்றுவிட்டார் ஜெயானந்த். நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு, சென்னை திரும்புவார்" என்றார். 

வெளிநாட்டுப் பயணம் செல்வதைவிடவும், தலைசிறந்த மருத்துவ வல்லுநர்களை சென்னைக்கே வரவழைத்துச் சிகிச்சை பெறும் முடிவில் இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ' அவரது உடல்நலன் குறித்த தகவல்கள் வேறு மாதிரியான விளைவுகளை உருவாக்கிவிடக் கூடாது' என்பதிலும் மிகுந்த கவனமாக இருக்கின்றனர் கார்டன் உதவியாளர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/68778-foreign-doctors-might-come-to-chennai-for-jayalalithaa-treatment.art

Link to comment
Share on other sites

முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை

 

Daily_News_6379772424698.jpg

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.  முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி  மாலை  அவரின் வீட்டில் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் அலோசனை நடத்தினர். அதன்பின் மாலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.  இதையடுத்து, அவரை வழக்கமாக பரிசோதிக்கும் டாக்டர்கள் வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்தனர். டாக்டர்களின் ஆலோசனையின் பேரில்  இரவு 11 மணி அளவில் ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா அழைத்து  செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அதில் அவருக்கு நீர்ச்சத்து குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.  
இதற்கிடையில், முதல்வருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தகவல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவியது. அமைச்சர்கள், அதிமுக  நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனை முன் குவிந்தனர். அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனைக்கு  வந்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவை காண அதிமுக நிர்வாகிகள் பலர்  மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், ‘முதல்வர் குணமடைந்து  விட்டார். இயல்பாக உணவு சாப்பிட்டு வருகிறார்’ என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். அதே சமயம், சிகிச்சைக்காக  மருத்துவமனையில் தங்கி இருக்குமாறு டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதனால் 4வது நாளாக அவர் தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர  சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கிறார். இந்நிலையில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர். இதுதொடர்பாக அதிமுக  செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி இன்று அளித்த பேட்டியில், ‘முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார். அவர் சிங்கப்பூருக்கு  அழைத்து செல்லப்படவில்லை. அவர் விரைவில் வீடு திரும்ப உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248079

Link to comment
Share on other sites

தமிழக முதல்வர் ஜெயலலிதா சில தினங்களில் வீடு திரும்புவார்: மருத்துவர்கள் தகவல்

 

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர ஜெயலலிதா நலமாக உள்ளார் என்றும், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்னும் சில நாட்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார்: மருத்துவமனை நிர்வாகம்

 

 இன்னும் சில நாட்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார்: மருத்துவமனை நிர்வாகம்

ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணி அளவில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர், கடந்த 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயல்லிதாவுக்கு நீர் சத்து குறைபாடு இருந்ததாகவும் 23 ஆம் தேதி காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்படுவார் போன்ற பல தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

முதல்வரருக்கு மீண்டும் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சாதாரண உணவுகளை அவர் உட்கொண்டு வருகிறார் என்று தெரிவித்தனர்.

மேல் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்படுவார் போன்ற பல தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வதற்கு தற்போது அவசியமில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்படுவார் போன்ற பல தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

அனைத்து சிகிச்சைகளுக்கும் தமிழக முதல்வரின் உடல் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. மேலும், நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது. உடல் சுகவீனத்திலிருந்து தமிழக முதல்வர் மீண்டு வர இன்னும் அதிக நாட்கள் ஓய்வெடுக்க வேண்டி உள்ளது. இன்னும் சில நாட்களில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். அதன்பின், தனது அலுவலக கடமைகளை தொடர்வார் என்று தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/india-37466509

Link to comment
Share on other sites

வெறும் உடல்நலக் குறைவு, காய்ச்சல் என்று சொல்கிறார்களே தவிர உண்மையான காரணம் வெளிவருவதாக இல்லை. இவவுக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாக ஒரு தகவலைப் படித்தேன். உண்மையோ தெரியாது.. :unsure:

Link to comment
Share on other sites

On 24/09/2016 at 1:17 PM, நவீனன் said:

cm1.jpg

பன்னீரின் முகத்தைப் பார்த்தால் அம்மா மறுபடியும் சுகமா எழுந்து வந்துட்டான்னுதான் தோணுது.

Link to comment
Share on other sites

ஜெ., உடல்நலம்; வதந்திகளை நம்ப வேண்டாம்: அப்பல்லோ மருத்துவர்கள்

Tamil_News_large_1615034_318_219.jpg

 

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அப்பல்லோ மருத்துமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைப்பாட்டினால் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

அவர் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை தினமும் ஊடகங்களுக்கு அதிகாரப்பூர் தகவல்களை அளித்து வருகிறது.

 

அதன்படி, இன்று வெளியிட்ட தகவலில், "முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1615034

Link to comment
Share on other sites

இது என்ன மாத்திரை? சிவக்குமார் எங்கே?' - ஆவேச முதல்வர்... பதற்றத்தில் அப்போலோ

appolollo.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்துவிட்டன. 'நியூயார்க் மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை நடந்து வந்தாலும், முதல்வர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்' என்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள். 

சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ' கடந்த 20 ஆண்டுகளில் சிகிச்சைக்காக இவ்வளவு நாட்கள் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை' என்பது கார்டன் கவலை. நேற்று மாலை முதல்வரின் உடல்நலம் குறித்து சில தகவல்கள் பரவியதும், உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து அறிக்கை வெளியிடச் சொன்னார் சசிகலா. இதனையடுத்து, 'முதல்வரின் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தது காவல்துறையின் அறிவிப்பு. இந்நிலையில், 'இப்போது எப்படி இருக்கிறார் முதல்வர்?' என்ற கேள்வியை மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம். 

sivakumar.jpgநம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர் ஒருவர், " முதல்வர் உடல்நலன் குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. திரவ உணவுகளை எடுத்துக் கொள்கிறார். நேரத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொள்கிறார். மருத்துவமனையிலேயே அவருக்கென பிரத்யேகமான திரவ உணவுகள் தயாரிக்கப்படுகிறது. நேற்று மாலை செய்தித்தாள்களை வாங்கிப் படித்தார். சசிகலாவும் இளவரசியும் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார்கள். 'சீக்கிரமே வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர். அதன் வெளிப்பாடாக மருத்துவமனை ஊழியர்களிடம் கோபத்தைக் காட்டுகிறார். அவரைக் கவனித்துக் கொள்ள ஷிஃப்ட்டுக்கு மூன்று நர்சுகள் வீதம் பணியில் இருக்கின்றனர். நேற்று அவருக்கு மாத்திரைகளைக் கொடுப்பதற்காகச் சென்ற நர்ஸிடம், ' இது என்ன மாத்திரை? சிவக்குமார் எங்கே? (முதல்வரின் பிரத்யேக மருத்துவர்) அவரை வரச் சொல்லுங்கள்' எனக் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார். இதனால் அவர் அருகில்  செல்லவே நர்சுகள் பயப்படுகின்றனர். 

நேற்று மாலை முதல்வரின் உடல்நிலை குறித்து சில தகவல்கள் வெளியானதும், முதல்வரை கவனித்துக் கொள்ளும் நர்சுகள் முதல் இரண்டாம் தளத்தின் பொறுப்பாளர்கள் வரையில், அனைவரது செல்போன் எண்களையும் வாங்கிக் கொண்டார் காவல்துறை அதிகாரி ஒருவர். ' ஊழியர்கள் வேறு எதாவது எண்களைப் பயன்படுத்துகிறார்களா' என விசாரித்தார். இதன்பின்னர் எங்களிடம், ' உங்கள் அனைவரது போனும் ட்ரேஸ் செய்யப்படுகிறது. இங்கிருந்து எந்த ஒரு தகவல் சென்றாலும் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' என எச்சரித்துவிட்டுச் சென்றார். இதனால் ஊழியர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது முதல்வருக்கு நியூயார்க்கைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, சர்வதேச மருத்துவக் குழு ஒன்று, அப்போலோ மருத்துவமனையோடு நேரடி தொடர்பில் இருக்கிறது. முன்பைவிட வேகமாக குணமடைந்து வருகிறார் முதல்வர். எனவே, மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம். காவல்துறை கெடுபிடிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்" என ஆதங்கப்பட்டார்.  

" மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதற்கொண்டு அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளும் அரசு ஆலோசகர்களும் முதல்வரை சந்தித்துவிட்டுத் திரும்புகின்றனர். இந்த சந்திப்பு குறித்து ஏதேனும் ஒரு படத்தை வெளியிட்டாலே தேவையற்ற வதந்திகள் உலவுவதற்கு வாய்ப்பில்லை" எனவும் குமுறலை வெளிப்படுத்துகின்றனர் அதிகாரிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/68839-jayalalithaa-angry-on-apollo-hospital-staffs.art

Link to comment
Share on other sites

அப்போலோவில் அரசாங்க ஃபைல்கள்!- போட்டு உடைக்கிறார் நாஞ்சில் சம்பத்...!

jaya%20nanjil%20550%201.jpg

சென்னை அப்போலா மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா  ஐந்தாம் நாளாக  தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கலும் நேற்று துவங்கியது.

வேட்புமனு தாக்கல் துவங்கியது முதல் தினத்தன்றே ஆளும்கட்சியான அ.தி.மு.க, தனது வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிட்டு தேர்தல் ரேசில் முந்திக்கொண்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதால்,ஜெயலலிதாவிற்கு தெரியாமல் பட்டியல் வெளியானது என அ.தி.மு.கவினர் மத்தியில் திடீர் சர்ச்சை எழுந்தது.

“முதல்வர்,  மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக இருக்கும்போது, வேட்பாளர் பட்டியலை யார் உறுதி செய்தது?” என்ற கேள்வி அ.தி.மு.கவினர் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் அப்போலா மருத்துவமனையில் முதல்வரை சந்தித்துவிட்டு வந்த அ.தி.மு.க வின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், “உள்ளாட்சி மன்றத் தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள், எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அம்மா அவர்கள் அறிவித்துவிட்டார்கள். இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். காவேரி தண்ணீர் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தில்  தொடுத்திருக்கிற வழக்கில் கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன் பிரமாண வாக்குமூலம் செய்துள்ளோம். அரியலுார் அருகே விபத்தில் இறந்தவர்களுக்கு அம்மா அவர்கள் நிதி உதவி அளித்துள்ளார்கள். எனவே கட்சிப் பணியையும், ஆட்சிப் பணியையும் மருத்துமனையில் இருந்தே அம்மா செய்துகொண்டுள்ளார்கள். அவர்களின் உடல் நிலையும் சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் அம்மா பத்திரமாக உள்ளார்கள். அம்மாவின் கண்காணிப்பில் தமிழகம் பத்திரமாக உள்ளது” என்றார்.

jaya%20letter%20550%201.jpg

அ.தி.மு.க வின் வேட்பாளர் பட்டியல் ஜெ.வின் ஒப்புதலோடு தான் வெளியானது, என்பதை தான் நாஞ்சில் சம்பந்த மூலம் அ.தி.மு.க தலைமை தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் இருந்துகொண்டே அனைத்துப் பணிகளையும் முதல்வர் செய்து வருகிறார் என்பதை தெரிவிக்க தான் நாஞ்சில் சம்பந்தை வைத்து இந்த கருத்தை வெளியிட வைத்துள்ளார்கள் என்கின்றார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/68844-tamilnadu-is-very-safe-under-jayalalithaa-regime-says-nanjil-sampath.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமளவள்ளிக்கு தோட்டத்தில் சகல வசதிகளும் இருக்கே?????    எதற்கு அப்பலோ மருத்துவமனை?

Link to comment
Share on other sites

அப்போலோவுக்குள் நுழைய முயன்ற பெண் சாமியார்..! பரபர நிமிடங்கள்

women%20samiyar.jpg

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு அருள்வாக்கு சொல்ல முயன்ற சேலம் பெண் சாமியாரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

முதல்வர் ஜெயலலிதா, காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் குணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, முதல்வர் உடல் நலம் குறித்து வதந்திகள் பரவின. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்போலோ மருத்துவமனையிலேயே முதல்வர் ஜெயலலிதா, காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனை முன்பு அ.தி.மு.க தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அந்த இடத்திலேயே கற்பூரம் ஏற்றியும் தொண்டர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு கையில் சூலாயுதம் ஏந்தியபடி பெண் சாமியார் ஒருவர் வந்தார். மருத்துவமனைக்குள் அவர் செல்ல முயன்றார். அவரை பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் தடுத்தனர்.

girlsam1.jpg

 

அப்போது பெண் சாமியார், அருள்வந்து 'அம்மா நூறுவருஷம் நல்லா இருப்பார்கள்' என்று ஆவேசத்துடன் கூறினார். தொடர்ந்து அவரை பெண் போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பெண் சாமியார் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவரது பெயர் ஜெயந்தி என்றும், சேலம் மாவட்டம், அழகாபுரத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கேட்ட போது, "நேற்றிரவு அப்போலோ மருத்துவமனை முன்பு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தோம். அப்போது ஒரு பெண் சாமியார், கையில் சூலாயுதத்துடன் வேகமாக வந்தார். அவரிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அம்மாவைப் பார்த்து அருள்வாக்கு சொல்லப்போகிறேன் என்றவர், திடீரென அம்மா என்று கூச்சலிடத் தொடங்கினார். உடனடியாக போலீஸ் உயரதிகாரிகள் வந்து அவரிடம் பேசினர். பிறகு அங்கு இருந்த போலீஸாருக்கு விபூதி கொடுத்து விட்டு அவர் சென்றார்" என்றனர். 

http://www.vikatan.com/news/coverstory/68924-woman-priest-tries-to-enter-apollo-hospital-during-midnight.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.