Jump to content

தென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன்


Recommended Posts

தென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன்

 

 

தென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்துள்ளதாக அறிவித்திருந்தார்.

unnamed__10_.jpg

41 வயது நிரம்பிய சிராஜ் இப்ரஹாம்ஸ், ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகன வியாபாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

இவரை சிலர் தாக்கியும் துப்பாக்கியால் சுட்டுமிருந்தனர். இதன் போது இவரின் சட்டைப்பையிலிருந்த Huawei P8 Lite மீது குறித்த துப்பாக்கி சன்னம் தாக்கியிருந்ததாகவும் இதன் காரணமாக தமது உயிருக்கு நேரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருந்ததை தாம் பின்னர் அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

Huawei ஸ்மார்ட்ஃபோன் ஒன்றின் மூலமாக நபர் ஒருவரின் உயிர் பாதுகாக்கப்பட்டிருப்பது இது முதலாவது சந்தர்ப்பமல்ல. கடந்த ஆண்டும் கோதமாலாவைச் சேர்ந்த ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் உயிரை Huawei P7 பாதுகாத்திருந்தது.

கென்யாவில் ஆய்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் தமது Media Pad ஐ பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்திலிருந்து உயிர் பிழைத்திருந்தார்.

 

இதுபோன்ற செய்திகள் iPhone கள் மற்றும் சம்சங் கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலும் வெளியாகியுள்ளன. இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த கையடக்க தொலைபேசிகள் வலிமையானவை என்பதுடன் குண்டு துளைக்காத திறன் வாய்ந்தனவாகவும் அமைந்துள்ளமை இதன் மூலம் உறுதியாகின்றது.

 

இன்றைய காலகட்டத்தில் துப்பாக்கிச்சன்னங்களை கையடக்க தொலைபேசிகள் தடுப்பது என்பது அதிர்ஷ்டவசமான சம்பவங்களாக அமைந்திருந்த போதிலும் Huawei போன்ற ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளின் வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்துவது மட்டுமின்றிரூபவ் தமது உற்பத்தி மற்றும் தர கட்டுப்பாடுகள் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றன.

 

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தக நாமத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால், 100 மில்லியனுக்கும் அதிகமான கையடக்க தொலைபேசிகளை 170க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற உலகின் முதல் மூன்று சிறந்த கையடக்க தொலைபேசி வர்த்தக நாமங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

 

தனது உற்பத்திகளின் தரம் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான Huawei இடம் பரிசோதனை ஆய்வுகள் காணப்படுவதுடன் துறையின் முன்னணி பரிசோதனை ஆய்வுகூடங்களுடன் கைகோர்த்துள்ளது.

 

Huawei நுகர்வோர் வியாபார பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் யு கருத்துத்தெரிவிக்கையில்,

“Huawei ஐ பொறுத்தமட்டில் தரம் என்பது நெறிமை மற்றும் முக்கிய இலக்காக அமைந்துள்ளது. எமது உற்பத்திகளின் தரத்தை உறுதி செய்வதற்கு முறையான மேற்பார்வை அம்சங்களை நாம் கொண்டுள்ளோம்” என்றார்.

http://www.virakesari.lk/article/11597

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.