Jump to content

கடலுக்குள் ஒளிந்து கொள்ளும், அதிசய சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

21-1474454004-crazy-road-in-france-01.jpg21-1474454039-crazy-road-in-france-07.jpg

21-1474454010-crazy-road-in-france-02.jpg

கடலுக்குள் ஒளிந்து கொள்ளும் மேஜிக் சாலை: இது பிரான்ஸ் அதிசயம்!
 

உலகின் அழகான சாலைகள், அபாயகரமான சாலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்போது பார்க்கப்போகும் பிரான்ஸ் நாட்டிலுள்ள மேஜிக் சாலை சற்றே விந்தையானது. ஆம், இந்த சாலையில் தினசரி இரண்டு முறை மட்டுமே போக்குவரத்து நடைபெறும். மீதமுள்ள நேரங்களில் கடல் நீர் மட்டம் அதிகரித்து சாலை தண்ணீருக்குள் மறைந்து போகிறது. இந்த விந்தையான சாலையின் படங்கள், கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பிரான்ஸ் நாட்டின் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள பர்னெப் வளைகுடாவிலிருந்து நோயிர்மோட்டியர் தீவை இந்த சாலை இணைக்கிறது. இந்த சாலை 4 கிமீ நீளம் கொண்டது. பேசேஜ் டு கோயிஸ் என்று இந்த சாலை அழைக்கப்படுகிறது. கோயிஸ் என்றால் ஈரமான காலணிகளுடன் சாலையை கடந்து செல்வது என்று பொருள் கூறப்படுகிறது. காற்று வீச்சு காரணமாக அலைகள் உயரே எழும்பும்போது இந்த சாலை கடல் நீருக்குள் மூழ்கிவிடுகிறது. சுமார் 13 அடி உயரத்திற்கு கடல் நீர் மட்டம் ஏறி விடுகிறது.

தினசரி இரண்டு முறை மட்டுமே சாலையில் நீர் வடிந்து போக்குவரத்திற்கு பயன்படும். அதுவும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரை மட்டுமே தண்ணீர் விலகி காணப்படும். அப்போது வேக வேகமாக வாகனஙகளும், மக்களும் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை 1701ம் ஆண்டிலிருந்து வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறதாம். 1840ம் ஆண்டு முதல் இந்த சாலையில் குதிரைகள் மூலமாக போக்குவரத்து துவங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

21-1474454021-crazy-road-in-france-04.jpg

தற்போது கார்கள் மூலமாக தீவிற்கும், முக்கிய நிலப்பகுதிக்குமான போக்குவரத்து நடக்கிறது. இந்த சாலையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. நடுவழியில் செல்லும்போது கடல் நீர் மட்டம் அதிகரித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதற்காக, இந்த சாலையில் ஆங்காங்கே கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை தண்ணீர் மட்டம் அதிகரித்தால் இந்த கோபுரத்தில் ஏறி தப்பிக்கலாமாம். மீட்புக் குழுவினர் வரும் வரையிலோ அல்லது தண்ணீர் குறையும்போது கடக்க வேண்டும். கடல் நீர் மட்டம் உயர்வது குறித்து எச்சரிக்கை செய்வதற்கான மையமும் இந்த சாலையின் இருபுறத்திலும் செயல்படுகிறது.

21-1474454027-crazy-road-in-france-05.jpg

இந்த சாலையில் பயணிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து சாகச பயண பிரியர்கள் இங்கு வருகை தருகின்றனர். கடல் நீர் மட்டம் ஏறும்போது பயணிக்க விரும்புவதால், அதில் பலர் அலையில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனராம். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய சாலையாக குறிப்பிடப்படுகிறது.

தற்போது கான்கீரிட் அமைத்து போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.     1999ம் ஆண்டு டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றுக்கு இந்த சாலை பயன்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றின் துவக்கப் புள்ளியாகவும் இந்த சாலை அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விநோதமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது..

இதேபோன்ற அனுபவம் கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கே எனக்கு ஏற்பட்டது..

அமீரகத்தில் பல இடங்களில் செயற்கையான நீர்வழிக் கால்வாய்களை வெட்டி, பாலைவனத்திற்குள் கடல் நீரைக்கொணர்ந்து அந்த கால்வாய் ஓரங்களில் பல அடுக்கு மாடிகள், ஷாப்பிங் மால்கள் அமைப்பார்கள்..கீழேயுள்ள படத்தை பார்த்தால் புரியும்..

arabian-canal-773048.jpg

அப்படி செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் துபாய் மெரீனா நகரம்.

BTW, வேறொரு இடத்தில், இரு புதிய திட்டப்பகுதிகளுக்கு பரிசோதனைக்காக செல்லவேண்டியிருந்தது, ஆனால் அவை அமைக்கபட்ட இடங்களோ செயற்கையாக உருவாக்கப்பட்டுவரும் இரு கடல் நீர் வாய்க்கால்களுக்கு அப்பால் இருந்தது..

இரு திட்டப்பகுதிகளுக்கும் செல்லவேண்டுமெனில் ஆழம்குறைந்த பகுதியில் காலை 7.30 மணிக்குள் ஜீப்பை ஓட்டிக் கடக்கவேண்டும்..தவறவிட்டால் கடல் நீர்மட்டம் ஏறி அப்பகுதியில் கடக்க முடியாது.. 8 கி.மீ சுற்றிவர வேண்டும்..

சுவாரசியமான அனுபவம்.

 

செய்தி பகிர்விற்கு நன்றி, சிறீ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

விநோதமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது..

இதேபோன்ற அனுபவம் கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கே எனக்கு ஏற்பட்டது..

அமீரகத்தில் பல இடங்களில் செயற்கையான நீர்வழிக் கால்வாய்களை வெட்டி, பாலைவனத்திற்குள் கடல் நீரைக்கொணர்ந்து அந்த கால்வாய் ஓரங்களில் பல அடுக்கு மாடிகள், ஷாப்பிங் மால்கள் அமைப்பார்கள்..கீழேயுள்ள படத்தை பார்த்தால் புரியும்..

arabian-canal-773048.jpg

அப்படி செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் துபாய் மெரீனா நகரம்.

BTW, வேறொரு இடத்தில், இரு புதிய திட்டப்பகுதிகளுக்கு பரிசோதனைக்காக செல்லவேண்டியிருந்தது, ஆனால் அவை அமைக்கபட்ட இடங்களோ செயற்கையாக உருவாக்கப்பட்டுவரும் இரு கடல் நீர் வாய்க்கால்களுக்கு அப்பால் இருந்தது..

இரு திட்டப்பகுதிகளுக்கும் செல்லவேண்டுமெனில் ஆழம்குறைந்த பகுதியில் காலை 7.30 மணிக்குள் ஜீப்பை ஓட்டிக் கடக்கவேண்டும்..தவறவிட்டால் கடல் நீர்மட்டம் ஏறி அப்பகுதியில் கடக்க முடியாது.. 8 கி.மீ சுற்றிவர வேண்டும்..

சுவாரசியமான அனுபவம்.

 

செய்தி பகிர்விற்கு நன்றி, சிறீ..

வன்னியன்... உங்கள் பதிவில், "துபாய் மெரீனா நகரம்" என்று குறிப்பிட்டுள்ளீ ர்கள்.
அதில் உள்ள மெரீனா சென்னையில் உள்ள மெரீனாவை நினைத்து... அந்தப் பெயரை சூட்டினார்களா? 
அல்லது...  இந்த மெரீனாவுக்கு,  அரபு மொழியில் வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.