Jump to content

சமஷ்டி தீர்வுத் திட்டமும் இனவாதிகளின் கூச்சலும்


Recommended Posts

சமஷ்டி தீர்வுத் திட்­டமும் இன­வா­தி­களின் கூச்­சலும்
 

புதிய அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்டித் தீர்வு உள்­ள­டக்­கப்­பட்­டு­விட்­டது என்ற புதிய கண்­டு­பி­டிப்பை தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார். கொழும்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த அவர், யுத்­தத்தின் மூலம் பெறப்­பட முடி­யாத சமஷ்­டியை தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெற முயற்­சிக்­கின்­றார்கள். தமி­ழர்­க­ளுக்­கான பிராந்­திய சமஷ்டி ஆட்­சியை விரும்பும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் புலம்­பெ­யர்ந்த அமைப்­புக்­க­ளுடன் இணைந்து புதிய அர­சி­ய­ல­மைப்பில் அதற்­கான ஏற்­பா­டு­களை உள்­ள­டக்­கி­விட்­டார்கள் என்று கூறி­யி­ருக்­கின்றார்.

நாட்டை தாரைவார்க்க நினைப்­ப­வர்கள் அதற்­கான நோக்கங்­களை பாரா­ளு­மன்­றத்தின் அனு­ம­தி­யோடு நிறை­வேற்ற நினைக்­கின்­றார்கள். தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தமி­ழர்­க­ளுக்­கான சமஷ்டித் தீர்வைப் பற்றி முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் மிகவும் அநா­க­ரி­க­மான கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரை­யாற்­றும்­போது மாகாண அதி­கா­ரங்­களை உள்­ள­டக்­கிய அதி­கார வேறாக்கல் கோரிக்­கைக்கு இணங்­கி­யி­ருப்­ப­தோடு புதிய அர­சி­ய­ல­மைப்பில் அதற்­கான சகல ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­மென்று உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார். இதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் தமி­ழர்­களின் சமஷ்டிக் கோரிக்கை அவ­சி­ய­மான தேவை­யெ­னவும் அதற்­கான சகல ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். 13ஆம் திருத்­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் மாகாண அ­தி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்­கான பட்­டி­யலை அப்­ப­டியே தழுவி தமிழ் மக்­க­ளுக்­கான சமஷ்டி முறை­மையை கொண்­டு­வ­ர­வுள்­ளனர் என்றும் விமல் வீர­வன்ச கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் முக்­கி­ய­மா­ன­வ­ராக காணப்­பட்ட ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்­ணவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஏற்­க­னவே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கி­விட்­டனர். அதனை நடை­முறைப்­ப­டுத்­து­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தை பயன்­ப­டுத்தப் பார்க்­கின்­றனர். தமி­ழர்கள் யுத்­தத்தின் மூலம் பெற­மு­டி­யாத சமஷ்­டியை புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக பெறு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் என்றும் அவர் செய்­தி­யாளர் மாநாட்டில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதேபோல் தூய்­மை­யான ஹெல ­உ­று­ம­யவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பி­லவும் இவ்­வி­டயம் தொடர்பில் கருத்துக் கூறி­யி­ருக்­கின்றார். முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மதச் சார்­பற்ற நாடாக இலங்கை மாற்­றப்­ப­ட­வேண்டும். சிங்­கள பௌத்­தர்­க­ளாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ளும் மூடர்கள் சிலர் மதச் சார்­பற்ற சமஷ்டி ஆட்­சிக்கு கீழான இலங்­கையை உரு­வாக்க தடைக்­கல்­லாக இருக்­கின்­றனர் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். இலங்­கையை மதச் சார்­பற்ற நாடாக மாற்ற வேண்­டு­மென்று கூறு­ப­வர்கள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்­க­ளா­கவே உள்­ளனர். அவ்­வா­றாயின் இவர்கள் யாரின் தேவைக்­காக இக்­கோ­ரிக்­கை­யினை முன்­வைக்­கின்­றனர் என்­பது தெளி­வா­கின்­றது. தமிழ் பிரி­வி­னை­வாத சக்­தி­களின் தேவைக்­கா­கவே இத்­த­கைய கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன என்று உதய கம்­மன்­பில கருத்துக் கூறி­யுள்ளார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச மற்றும் தூய்­மை­யான ஹெல உறு­ம­யவின் தலைவர் உதய கம்­மன்­பில ஆகி­யோரின் கருத்­துக்­க­ளா­னது ஏற்­க­னவே சமஷ்­டி­யு­ட­னான அர­சியல் தீர்வு தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண வேண்­டு­மென்ற நோக்கில் அர­சாங்­க­மா­னது செயற்­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகியோர் இந்த விட­யத்தில் ஈடு­பாடு காட்டி வரு­கின்­றனர். இந்த மூன்று தலை­வர்­களும் அதி­காரப் பகிர்வின் அவ­சியம் குறித்து கூட்­டங்­க­ளிலும் சந்­திப்­புக்­க­ளிலும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

மூன்று தசாப்­த­கா­ல­மாக நாட்டில் பெரும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய யுத்­தத்­திற்­கான அடிப்­படை கார­ணத்­துக்கு விடை காணப்­படா­விட்டால் மீண்டும் முரண்­பா­டுகள் தலை­தூக்கும் என்­பதை இந்த மூன்று தலை­வர்­களும் உணர்ந்தே உள்­ளனர். இத­னால்தான் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை தேசிய அர­சாங்­க­மானது எடுத்து வரு­கின்­றது.

இதன் ஒரு கட்­ட­மா­கவே பாரா­ளு­மன்றம் அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு புதிய அர­சியல் யாப்பில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வையும் உள்­ள­டக்­கு­வ­தற்­கான வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் பிர­தமர் தலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் பிரதிநிதித்­துவம் வகிக்கும் கட்­சி­களைச் சேர்ந்த 21 உறுப்­பி­னர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். இந்தக் குழுவில் விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில ஆகி­யோரை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் பொது எதி­ர­ணியின் சார்பில் தினேஷ் குண­வர்­தன எம்.பி. அங்கம் வகிக்­கின்றார்.

தற்­போது இந்த வழி­ந­டத்தல் குழு­வா­னது அர­சியல் தீர்வு விவ­காரம் தொடர்பில் ஆராய ஆரம்­பித்­துள்­ளது. கடந்த வாரம் கூடிய இந்தக் குழுவில் இவ்­வி­டயம் தொடர்பில் ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது. மீண்டும் இக்­கு­ழு­வா­னது அடுத்த வாரம் கூடி அடுத்த கட்­டங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யாட ஏற்­ப­டா­கி­யுள்­ளது. அர­சியல் யாப்பு குழுவின் வழி­ந­டத்தல் குழு­வா­னது தற்­போ­துதான் அர­சி­ய­ல­மைப்பு தீர்வு தொடர்பில் ஆராயத் தொடங்­கி­யுள்ள நிலையில் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச சமஷ்டி தீர்வு தொடர்பில் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்டு விட்­டது என்ற கருத்து தெரி­வித்­துள்­ள­மை­யா­னது வேடிக்­கை­யான விட­ய­மா­கவே அமைந்­தி­ருக்­கின்­ற­து.

இவரின் இத்­த­கைய கருத்­தா­னது பெரும்­பான்மை சிங்­கள மக்­களை அச்­சத்­துக்குள்­ளாக்­கு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. நாட்டில் தற்­போது பெரும்­பான்­மை­யான மக்கள் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் நிரந்­தர சமா­தா­னத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­றனர். பெரும்­பான்­மை­யின மக்கள் கூட பிரச்­சி­னைக்கு தீர்வு காண­வேண்டும் என்ற மன­நி­லைக்கு வந்­தி­ருக்­கின்­றனர். இவ்­வா­றான சாத­க­மான நிலை­மையை குழப்­பி­ய­டித்து சிங்­கள மக்­களின் மனங்­களை மாற்­ற­ம­டையச் செய்­வ­தற்­கா­கவே இன­வாத சக்­திகள் தற்­போது இல்­லாத பொல்­லாத விட­யங்­க­ளை­யெல்லாம் கூறி வரு­கின்­றன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­யி­லேயே தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்­சவும் தூய ஹெல உறு­ம­யவின் தலைவர் உதய கம்­மன்­பி­லவும் ஈடு­பட்­டுள்­ளமை தெளி­வா­கின்­றது.

அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவில் அர­சாங்­கத்தின் சார்­பிலும் பொது எதி­ர­ணியின் சார்­பிலும் எதிர்க்­கட்­சி­யான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்­பிலும் 21 உறுப்­பி­னர்கள் உள்­ள­டக்­க­ப்­பட்­டுள்­ளனர். அர­சியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இந்தக் குழுவில் எத்­த­கைய விட­யங்கள் ஆரா­யப்­ப­டு­கின்­றன என்­பது தொடர்பில் சக­ல­ருக்­குமே தெரி­ய­வரும். இதில் ஒளி­வு­ம­றை­வு­களை செய்­து­விட முடி­யாது. உண்­மை­நி­லை­யினை அறிந்­து­கொண்டு இன­வாத சக்­திகள் சிங்­கள மக்­களின் மனங்­களை மாற்றும் வகையில் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டு­வ­ரு­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மே­யாகும்.

தமிழ் மக்கள் தமது பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வினை எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர். இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்­டியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தீர்வு அமை­ய­வேண்­டு­மென்­பதே அவர்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது. ஆனாலும் வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி என்­பன புதிய அர­சியல் யாப்பில் சாத­கமா என்ற கேள்­வியும் தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. தற்­போ­தைய நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு அற்ற சமஷ்­டி­யற்ற தீர்­வினை ஏற்­ப­தற்கு தமிழ் மக்­களும் தயா­ராக இல்லை.

தமிழ் மக்­களின் நிலைப்­பாடு இவ்­வா­றி­ருக்­கையில், தமிழ் பேசும் மக்­க­ளுக்கு உரிய தீர்வுத் திட்­டத்தை அர­சாங்கம் வழங்­கி­விடக் கூடாது என்­ப­தற்­கான முன் முயற்சிகளை இனவாதசக்திகள் மேற்கொண்டு வருகின்றன. தனிநாடு கோரி போராடிய தமிழ் மக்கள் இன்று சமஷ்டி கோரிக்கையை ஏற்பதற்கு தயாராக உள்ளனர். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் ஏற்கும் தீர்வு வேண்டும் என்பதே எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் கோரிக்கையாக உள்ளது.

எனவே, தமிழ் மக்களின் கோரிக்கைகளை கருத்தில்கொண்டு இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது நல்லாட்சி அரசாங்க மானது அரசியல் தீர்வொன்றை காணவேண்டியது அவசியமாகின்றது. இதற்கு தமிழ் தலைமைகளும் இயன்றளவு ஒத்துழைத்து செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

ஏனெனில் அரசியல் தீர்வைக் காண்பதற்கான தக்க தருணம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. வரலாற்றில் ஒருபோதுமில்லாதவாறு இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளன. எதிர்க்கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது. இவ்வாறான நிலையில் அரசியல் தீர்வைக் கண்டு 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றியதுபோல் புதிய அரசியல் யாப்பையும் நிறைவேற்றக்கூடிய சூழல் தற்போது காணப்படுகின்றது. எனவே, இதனை பயன்படுத்த சகல தரப்பும் முன்வரவேண்டும்

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=21/09/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.