Jump to content

புடைவை புடவை எது சரி.


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் உள்ள மலேயன் கஃபேயில் வடை+டி குடிக்க இன்று குந்தியபோது முன்னால் இருந்த கடையின் பெயர்ப் பலகை தென்பட்டது.

f0n7g2.jpg

புடைவை புடவை எது சரி.

கொஞ்சம் தேடியதில் மண்டை காய்ந்து குழப்பம் அதிகமானதே தவிர வேறெதுவுமில்லை பரம்பொருளே.

அவ்வையார் தனது வெண்பாவில் இப்படி கூறுகின்றார்.

கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்
எருதாய் முழப்புடவை யாகித் – திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை.

சேக்கிழார் பன்னிரண்டாம் திருமுறையில் இப்படி கூறுகின்றார்.

பொய்தருமால் உள்ளத்துப் 
   புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார் 
   வெண்புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக் 
   காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழுந் 
   திருவதிகை சென்றடைவார்

யாராவது சொல்லுங்களேன் எது சரியென்று? 

Link to comment
Share on other sites

2 minutes ago, ஈழப்பிரியன் said:

புடவை 

அப்ப சேக்கிழார் தமிழில் குற்றமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

அப்ப சேக்கிழார் தமிழில் குற்றமா?

சேக்கிளார் வேறு ஏதாவது அர்த்தத்தில் எழுதியிருப்பாரோ?

Link to comment
Share on other sites

1 minute ago, ஈழப்பிரியன் said:

சேக்கிளார் வேறு ஏதாவது அர்த்தத்தில் எழுதியிருப்பாரோ?

நானும் புடவைதான் சரியென்று இன்றுவரை நினைத்திருந்தேன் - ஆனால் இன்று மிஸ்டர் சேக்கிழார் குழப்பிவிட்டார். 

பொழிப்புரை:

பொய்யைத் தரும் மயக்கமுடைய உள்ளத்தராகிய இழிந்த சமணர்கடளித்தினின்றும் நீங்கி, மெய்யுணர்வை வழங்கி அதனால் வீடுபேற்றைத் தருபவனாகிய சிவபெருமானின் நன்னெறியை அடைபவராய், அதற்கேற்றவாறு வெண்மையான ஆடையை உடலில் உடுத்திக் கொண்டு, கைகொடுத்துத் தம்மைத் தாங்கி வருவார்மீது ஊன்றியவாறு, சமணர் காணாத வண்ணம், தவம் செய்யும் மாதவர் வாழ்கின்ற திருவதிகையை இரவில் சென்று அடைவாராய்,

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1221&padhi=72&startLimit=61&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் வாத்தியாரை அழைத்து கேட்டால் போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

யாழ்ப்பாணத்தில் உள்ள மலேயன் கஃபேயில் வடை+டி குடிக்க இன்று குந்தியபோது முன்னால் இருந்த கடையின் பெயர்ப் பலகை தென்பட்டது.

புடைவை புடவை எது சரி.

-----

அது, எப்படியும்... இருந்திட்டு போகட்டும்.....:D:
மலாயன் கபேயில... "ரீ"  என்ன விலை,  வடை... என்ன விலை விக்கிது ஜீவன் சிவா. :grin:

Link to comment
Share on other sites

8 hours ago, தமிழ் சிறி said:

அது, எப்படியும்... இருந்திட்டு போகட்டும்.....:D:
மலாயன் கபேயில... "ரீ"  என்ன விலை,  வடை... என்ன விலை விக்கிது ஜீவன் சிவா. :grin:

வடை 35 ரூபா 
டீ 35 ரூபா

ஆனால் இங்கு இப்போது நல்ல வடைக்கு நீலாம்பரி கஃபேதான் பேமஸ். இது கே கே எஸ் வீதியில் யாழ் இந்து கல்லூரிக்கும் தட்டாதெரு சந்திக்கும் இடையில் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

வடை 35 ரூபா 
டீ 35 ரூபா

ஆனால் இங்கு இப்போது நல்ல வடைக்கு நீலாம்பரி கஃபேதான் பேமஸ். இது கே கே எஸ் வீதியில் யாழ் இந்து கல்லூரிக்கும் தட்டாதெரு சந்திக்கும் இடையில் உள்ளது. 

விலையை.... பார்க்க, தலையை சுத்துது.
எப்படி... அங்கு உழைத்து வாழும் மக்கள்,  இந்த விலையில் வாங்கி உண்கிறார்கள் என்று, ஆச்சரியமாக உள்ளது.

Link to comment
Share on other sites

41 minutes ago, தமிழ் சிறி said:

விலையை.... பார்க்க, தலையை சுத்துது.
எப்படி... அங்கு உழைத்து வாழும் மக்கள்,  இந்த விலையில் வாங்கி உண்கிறார்கள் என்று, ஆச்சரியமாக உள்ளது.

இங்கு இப்போது கூலி வேலை செய்பவர்களுக்கு நாட்கூலி ரூபாய் 1000 + சாப்பாடு ++ அல்லது ரூபாய் 1250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

விலையை.... பார்க்க, தலையை சுத்துது.
எப்படி... அங்கு உழைத்து வாழும் மக்கள்,  இந்த விலையில் வாங்கி உண்கிறார்கள் என்று, ஆச்சரியமாக உள்ளது.

வெளிநாட்டிலிருந்து பார்த்தால் அப்படித்தான் தோன்றும்..!

சில வருடங்களுக்கு முன் நான் சென்னை சென்றபோது, மளிகைக் கடையில் வீட்டிற்கான பொருட்களை வாங்கச் சென்றேன்..

அனைத்தும் வாங்கிவிட்டு விலைப்பட்டியலை சரிபார்த்தபோது முட்டையின் விலை இரண்டு ரூபாய்க்கு மேல் எழுதியிருந்தது.. எனக்கு தெரிந்தவரையில் முட்டை விலை ரூ.1.40 மட்டுமே.. விலைவாசி ஏற்றத்தால் முட்டையின் விலை உயர்ந்தாலும், நான் இன்னும் பழைய நினைவிலேயே "என்ன அண்ணாச்சி.. முட்டை விலை, இவ்வளவா..?" என சந்தேகத்துடன் கேட்டேன்..

கடைக்காரர் விநோதமாக, 'என்ன இவர்.. இத்தனை நாள் உள்ளே இருந்திருப்பாரோ..?' என மனதில் நினைத்தவாறு, "சார், நீங்கள் புதுசா கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தால் இப்படிதான்..!" என சிரித்தார்..

அதன் பின் கடைகளில் விலையை கேட்பதில்லை..!

அதே போல் கடைகளில் விலையை விசாரிக்கும்போது நாணயத்தின் பெயரையும் 'ரூபாயி'க்கு பதிலாக தவறுதலாக, 'திர்ஹாம்' என பலமுறை உச்சரித்துள்ளேன்..

புடைவை என்பதே சரியான தமிழ்ச் சொல்லாக இருக்குமென நினைக்கிறேன்..!

'புடவை' என்பது பேச்சு வழக்கான சொல்லாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடவை என்பது தான் சரியான தமிழ்ச்சொல் என்று நினைக்கிறேன்!

உடு பிடவை என்று தான் எனக்குத் தெரிந்த பண்டிதர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்!

எப்படியோ புடவை என்பது பிழை என்று தெரிகின்றது! ஆனால் விளங்கப்படுத்தத் தெரியவில்லை!

தமிழில் 'புடயன்' என்று பேச்சு வழக்கில கதைத்தாலும் எழுதும் போது 'புடையன்' என்று தான் எழுதுவார்கள்!

வன்னியர் சொல்லுவது போல.. புடைவை என்பதும் சரியாக இருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடைவை --- இலக்கணச் சுத்தம்....!  புடவை  பேச்சு வழக்கு ...!  முன் கொசுவம் வைச்சும் உடுத்தலாம் , பின் கொசுவம்  வச்சும் உடுத்தலாம் .அது தமிழின் சிறப்பு ....!

ஜீவன் டீ யுடன் வடை தின்றார். ( முறுக்கு ,வடையை திண்ணுறது என்றும் சொல்லலாம்.).

பாட்டி வடையுடன் பறக்கும் காகத்தைப் பார்த்து "வட போச்சே " என்று கத்தினாள்....!

அதிகம் ஏன் ...., தேவிகாவைப் பார்த்து "நடையா இது நடையா " என்று ஜொள்ளு விட்ட சிவாஜி , நம்ம சரோஜாவைப்  பார்த்து  ஆகா மெல்ல நட , மெல்ல நட என்று தாங்கிப் பிடிக்கிறார். அப்படியும் கன்னடம் தண்ணி காட்டுது ....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடைவை ,புடவை இரண்டும் சரியானவைதான் ஆயினும் சேலை என்பதுதான் சரியான தமிழ்சொல் என்கிறார் அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் அறிவரசன் ஐயா.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

சீலை.... :mellow: :202_dark_sunglasses:

போற போக்கப் பாத்தால் "சாறி"தான் பண்டைய காலத்து சுத்த தமிழ் என்று அடுத்து இங்கு யாராவது பதிவாங்கள் போலத்தான் கிடக்குது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
On 21.9.2016 at 8:37 AM, ஜீவன் சிவா said:

போற போக்கப் பாத்தால் "சாறி"தான் பண்டைய காலத்து சுத்த தமிழ் என்று அடுத்து இங்கு யாராவது பதிவாங்கள் போலத்தான் கிடக்குது.:grin:

புடை என்றால்  சுற்றி  என்று அர்த்தம்.(உதாரணம்: பரிவாரங்கள் புடை சூழ்ந்துவர  மன்னன் ரதத்தில் பவனி வந்தான்)
அதாவது மேனி முழுவதும் சுற்றிக்  கட்டுவதால்  வந்தது தான் புடைவை
புடைவை மருகி புடவை ஆகி இப்போது பொடவை என்றும் புடவ என்றும் சில இடங்களில் மருகிவிட்டது.tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 9/22/2016 at 6:13 PM, வாத்தியார் said:

புடை என்றால்  சுற்றி  என்று அர்த்தம்.(உதாரணம்: பரிவாரங்கள் புடை சூழ்ந்துவர  மன்னன் ரதத்தில் பவனி வந்தான்)
அதாவது மேனி முழுவதும் சுற்றிக்  கட்டுவதால்  வந்தது தான் புடைவை
புடைவை மருகி புடவை ஆகி இப்போது பொடவை என்றும் புடவ என்றும் சில இடங்களில் மருகிவிட்டது.tw_blush:

15209624c5ca443e8bc9adde92c54ec0.jpg

 

வாத்தியார் சொன்னது ஏற்புடையதாக உள்ளது. அதுபோல புடைத்திருந்தது என்பது பெருத்திருந்தது எனப் பொருள்படும்.. அதனாலும் இருக்கலாம் இல்லையா?! icon_rolleyes.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு தமிழில் பூந்து விளையாடுகிறார்கள்  "சாரி / சாறி " கொஞ்சம் தள்ளி நிற்பம் 

Link to comment
Share on other sites

On 23/09/2016 at 3:43 AM, வாத்தியார் said:

அதாவது மேனி முழுவதும் சுற்றிக்  கட்டுவதால்  வந்தது தான் புடைவை

 

41 minutes ago, இசைக்கலைஞன் said:

15209624c5ca443e8bc9adde92c54ec0.jpg

 

 

அட பாவி 
வாத்தி எழுதினதை பாத்த பின்னுமா இந்த படத்தை இணைத்தீர்கள். :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, இசைக்கலைஞன் said:

15209624c5ca443e8bc9adde92c54ec0.jpg

 

வாத்தியார் சொன்னது ஏற்புடையதாக உள்ளது. அதுபோல புடைத்திருந்தது என்பது பெருத்திருந்தது எனப் பொருள்படும்.. அதனாலும் இருக்கலாம் இல்லையா?! icon_rolleyes.gif

ஆ..... வாத்தியார் சொன்னது,  உண்மை தான் இசை.
இந்த  "நைலக்ஸ்" புடவை   கட்டின எத்தினை பேரை... கண்டும் காணாமல், கடைக்கண்ணால் பார்க்கும் போது....
அவர்கள், அந்த சீலைத் தலைப்பால்.... தங்கள் மார்பகத்தை மறைக்கும்... 
அழகும், வேகமும்... என்னை இன்றும் பிரமிக்க வைக்கும்.
இதுகளை.. இன்னும் உன்னிப்பாக  பார்க்க வேணும் போல்  உள்ளமை...  எனது "வீக்னஸ்". பாயிண்டு. :grin:  10.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கரும்பு said:

 புடைவையகத்தை ஆங்கிலத்தில் Textiles என்றா கூறுவார்கள்? :rolleyes:

பாவம்.... அந்த முருகன்  கடைக்காரன். கரும்பு...
எல்லா... இடங்களிலும், எழுதியதை வைத்து... அவனும் பிழைக்க வந்த மனிதன்.
அவனுக்கு ஆங்கிலம் நன்கு  தெரிந்திருந்தால், அவன்... புடவை வியாபாரத்துக்கு இறங்கி இருக்க மாட்டான். 

புடவைக்கும், Textiles´க்கும்  என்ன சம்பந்தம் என்று...

ஆக்ஸ்பேர்ட்  டிக்ஸ்சனறி சொல்லுது.. என்பதை அறிய, எனக்கும் ஆவல். :)

Link to comment
Share on other sites

28 minutes ago, கரும்பு said:

புடைவையகத்தை ஆங்கிலத்தில் Textiles என்றா கூறுவார்கள்? :rolleyes:

Textiles என்ற சொல் பிழையா அல்லது புடவையகம் என்பதற்கான மொழிபெயர்ப்பு பிழையா?

உங்கள் கேள்வி புரியவில்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.