Jump to content

ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை!


Recommended Posts

ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை!

 

 
nambikkai_3009622f.jpg
 

ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை.

அவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன், ‘‘உங்க மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் உங்க மேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையே?’’

‘‘என்ன சார் சொல்றீங்க?’’

‘‘நீங்க நல்லா சொல்லித் தருவீங்க என்ற நம்பிக்கையிலதான் என் பிள்ளைகளை உங்க பள்ளிக்கு அனுப்புறேன். ஆனால், நீங்க உங்க பிள்ளையைப் பக்கத்து ஊருல இருக்கிற மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அனுப்புறீங்களே? ’’

மெலிதாகப் புன்னகைத்த ஆசிரியை, ‘‘என் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறா. நான் ஒன்றாம் வகுப்பு டீச்சர். நம்ம பள்ளியில எல்லா வகுப்புலயும் ஒவ்வொரு பிரிவுதான் இருக்கு. இதே பள்ளியில, அதுவும் என் வகுப்பிலேயே என் மகளும் படிச்சா, என்னை அறியாம என் கவனம் முழுவதும் அவள் மேலதான் இருக்கும். மத்த குழந்தைகளை நல்லா கவனிக்க முடியாதுன்னுதான், அவளை அந்தப் பள்ளியில சேர்த்திருக்கேன். இந்த ஒரு வருஷம்தான். அடுத்த வருஷம் ரெண்டாம் வகுப்பு படிக்க நம்ம பள்ளிக்கே வந்துடுவா’’ என்று கூறிவிட்டு பள்ளிக்குள் சென்றார்.

அவர் மீதான நம்பிக்கை பலமடங்கு உயர்ந்திருந்தது.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.