Jump to content

நீ காதலியில்லை என் தோழி


Recommended Posts

வா தோழியே ....
எல்லோரும் பொறாமை படும் ......
அளவுக்கு நட்பாய் இருப்போம் ......
இப்படியும் நட்பாக இருக்க .....
முடியுமா என்பதை ......
நிரூபிப்போம் .......!!!

கையில் முத்தமிட்டால்......
காதலியாகிவிடுவாள் .....
கை கொடுத்து  உறவுவந்தால்  .....
நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி 
ஆண் பெண் நட்பு கவிதை 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ 

Link to comment
Share on other sites

நீ 
காதலியில்லை என்பதை ......
யாரும் நம்புவதாய் இல்லை .....
இத்தனை அழகியை யார் தான் .....
நம்புவார்கள் ..........???

உன்னோடு கைகோர்த்து ......
நடக்க ஆசைப்படுகிறேன் ......
நரிகள் உள்ள இருட்டு உலகில் .....
சற்று பயமாகவும் இருக்கிறது .....
இன்னும் நாம் நட்பாய் இருப்போம் .....
நிச்சயம் ஒருநாள் நிகழும் ......!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி 
ஆண் பெண் நட்பு கவிதை 02
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

Link to comment
Share on other sites

நெஞ்சில் அவளையும் .....
உடலில்  பொதியையும்.....
சுமர்ந்து கொண்டு சென்றேன் ......
சுற்றுலா பயணமொன்று .......!!!

அவள் கொண்டுவந்த உணவு .....
நான் கொண்டு சென்ற உணவு .....
எதுவென்று தெரியாமல் ......
உண்டு களித்து பயணம் ......!!!

திடீரென தூறல் மழை ......
ஜன்னலை மூடினேன் ......
அவள் தடுத்தாள்.................
சிறு துளிமழை முகத்தல் ....
சிந்துவதில் ஒரு சுகம் .......
ரசித்த படியே பயணம் .......!!!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி 
ஆண் பெண் நட்பு கவிதை 03
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
      காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
 

Link to comment
Share on other sites

தனியாக இருக்கவேண்டும் ......
மௌனமாக இருக்கவேண்டும் .......
சற்று தொலைவில் நீ இருக்கணும் .....
ஓரக்கண்ணால் பார்க்கணும் ......
நீயும் அப்படியே செய்யணும் .......!!!

சில்லென்று குளிர்காற்று .....
இடையிடையே சிறு துளிகள் ......
மெல்லிய மண் குத்த ........
ஆதவன் மறையும் நேரம் ......
நீ தனியே நான் தனியே .....
பிரிந்து செல்லவேண்டும் .............!!!

முடிந்தால் இந்த இடத்துக்கு .....
கூட்டி செல் என்றாள் நண்பி ........!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி 
ஆண் பெண் நட்பு கவிதை 04
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அத்தனை நட்புகளும் ......
ஏதோ ஒரு நலன் தான் ......
உன் நட்பை எப்படி .....
வர்ணிப்பது .........?

நீ எனக்கு தாயா ......?
நீ என் தலைவியா ......?
நீ என் வழி நடத்துனரா .....?
நீ என் இறைவியா .....?

மாஜங்கள் காட்டும் ......
மாஜ உருவ கருவி -நீ 
உருவம் தான் மாஜம்.......
உன் செயல்கள் சிற்பம் ......!!!

ஒரு அடைபட்ட இதயத்தில் .....
வாழ்ந்த என்னை .......
பறந்து திரியும் சிட்டு .....
குருவியாக்கியவள் -நீ 
நீ என்னருகில் இருக்கும் ...
காலமெல்லாம் நான் ....
சுதந்திர பறவை ............!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி 
ஆண் பெண் நட்பு கவிதை 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
 

திட்டு வாங்குவாள் .....
சிலவேளை அழுவாள் .....
சில மணி நேரம் பேசமாடடாள் ......
அவளை சமாதான படுத்துவேன் .....
சின்ன சிரிப்போடு .......
சமாதானம் ஆவாள்...............!!!

நீயும் என் அப்பாவும் ......
ஒருதாண்டா என்று திட்டுவாள் .....
ஒருகணம் உறைந்து போவேன் .....
அவள் குழந்தை குணத்தில் ......
அப்பாவாக பார்க்கும் அழகு .....
தூயநட்பிலேயே காணலாம் .....!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீ காதலியில்லை என்தோழி 
ஆண் பெண் நட்பு கவிதை 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.