Jump to content

இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:-


Recommended Posts

இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:-

 

 

இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:-

 

என் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய மகான் 
 
அவர்களின் பிரிவுச் செய்தியை ஈழநாடு முன்னாள் உதவி ஆசிரியரும்  முன்னாள் கொழும்பு அலுவலக நிருபருமாகிய கந்தசாமி அண்ணா அனுப்பியது கண்டபோது 
முதலில் அதிர்ச்சியடைந்தேன்.
 
 நாட்டைவிட்டு திடீரென்று வெளிநாடு போன ஊடகவியலாளர்கள் போல   பிரிவுத் துயரைஅதிர்ச்சியுடன் தந்தது .
 
மகானை நான் கடைசியாகச் சந்தித்தது  கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் முன்னுள்ள ஒரு விருந்தகத்தில் . அவர் இந்தியா போவதற்கு முன்னர்  கொழும்பு வந்திருந்தபொழுது என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்.  கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் -இல்லத்தின் உரிமையாளரும் ஈழநாடு உரிமையாளரான  திரு ராஜன் சண்முகரத்தினமும் நானும் மகானும் அன்று அச் சந்திப்பில் கலந்திருந்தோம்.
 
ஈழநாட்டின் பூர்வீகத்  தொடர்போ என்று சொல்லலாமோ என்னவோ -திரு  ராஜனுடன்   இன்று வரைக்கும் தொடர்பு நீடித்தது.  குறிப்பாக மகாராஜா நிறுவனத்தில்  இணைந்த பின்னர் எனது "வாகனத்தின் "   பாவனை அலுவல்களுக்காக அவருடைய மோட்டார் இயந்திர நிலையத்திற்கே போக வேண்டியிருந்தது . கொழும்பு ஈழநாடு அலுவலகம் அமைந்திருந்த திரு ராஜனின் இல்லத்தில் தற்பொழுது அவரது வாகன இயந்திர பராமரிப்பு நிலையமும் உள்ளது. கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய திரு ராஜன் பின்னர் அங்கிருந்து விலகி வந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தாலும் - மகாராஜா நிறுவனத்தின் வாகனங்கள் அனைத்தையும் பழுது பார்ப்பதுடன் கண்காணிக்கும் பொறுப்பையும்  இதுவே செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
நான் இங்கு வந்த பின்னர் இரண்டு தடவை மகானுடன் பேசினேன்.  ஒன்று நட்பு ரீதியானது. மற்றது இலங்கையின் முன்னணி நிறுவனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் ஈழநாடு இதழை மீண்டும் வெளியிடுவது தொடர்பான அவரது ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் கேட்பதற்காக அவருடன் பேசினேன்.
 
மகான் அதற்குச் சொன்ன பதில் , இன்றைய தமிழ் ஊடகங்களில் அவர் கொண்டிருந்த வெறுப்பையும் சலிப்பையும் காட்டியது.
 
"கானம் (அவர் குறிப்பிட்டது உதயன் பிரதம ஆசிரியர் திரு கான மயில் நாதனை ) இருக்கிறான் என்று நம்பினேன். இப்போ கானத்திற்கும் ஏலாது என்று தெரிகிறது. அவ என்ன மாதிரி எழுதுவான் தெரியுமா... எல்லாரும் தமிழ் இப்போ கொல்கிறான்கள் .
 
பெருமாள் மொழிபெயர்ப்போட நின்றுவிட்டாராம்.
 
எங்கட காலத்தில ஊடகப்  பயிற்சி , பல்கலைக்கழகத்தில் ஊடகப் பயிற்சி என்று ஒன்றும் இல்லை .. ஆனால் இப்போ தெருவுக்குத் தெரு பல பயிற்சிகள் நடத்திறார்களாம் ..ஆனால் எவனும் ஒழுங்கா தமிழ் எழுதுறானா அல்லது செய்தியை செய்தியாய் எழுதுறானா என்று தெரியுதில்லை ...ஆசிரியர் பதவியில் இருக்கிறவங்களும் பதவிக்கும் சம்பளத்திற்கும் இருக்கிறான்கள் " என்று தமது உள்ளக்  கிடக்கையைச்    சொன்னார்.
 
 மகான் என்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்பட்ட  அமரர்   கே ஜீ மகாதேவா ஈழநாட்டின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தான் நான் கரவெட்டி நிருபராக நியமனம் பெற்றேன் .
 
கரவெட்டி நிருபராக பணியாற்றிய எனது சகோதரர் வெளிநாடு சென்றதால் அந்த இடத்துக்கு நான் விண்ணப்பித்த போது  அண்ணர் மீதான ஒரு நம்பிக்கையும் காரணமாக அமைந்தது. பொதுவாக  மூன்று மாதங்கள் பார்த்த பின்னர்தான்  நிரந்தரமான நியாயமனக் கடிதம் வழங்கப்படும்.
எனினும் மகாதேவா எனக்கு ஒரு மாதத்திலேயே கொடுப்பனவைச்  சிபாரிசு செய்தார்.
 
"நல்ல எழுத்து ஐஸே ! அண்ணரும் நீரும் தமிழை மட்டுமல்ல எழுத்தையும் அழகாக எழுதுகிறீர்கள்  "- என்று சொல்லிவிட்டு என்னைச் சில கணங்கள் அவர் பார்த்துக் கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வருகிறது .
 
ரூபவாஹினிக்கு நான் நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற போது   ஈழநாடு செய்தி ஆசிரியர் என்ற வகையில் ஒரு கடிதம் கேட்டிருந்தேன்.
 
"எப்ப இன்ரவியூ ..போக முன்னர் நினைவு படுத்தும்"  என்று  சொன்னார்.
 
அப்படியே போக முன்னர் அவரிடம் போய்க் கேட்டேன் . அவர் அங்கு இருந்த அமரர் பெரி சண்முகநாதனை அழைத்து தான் சொல்வதை ஆங்கிலத்தில் எழுதச்   சொல்லிவிட்டு - எனது பதவியை  correspondent  என்று போடாமல் stringer என்று போடச்  சொன்னார்.
 
பெரி - "அது அங்க உள்ளவங்களுக்கு விளங்குமோ தெரியாது " என்றார் .
 
இது விளங்காட்டா அவனுக்கு மீடியா தெரியாது .அதனால எடுப்பார்கள் என்று தமக்கேயுரிய நக்கலான சிரிப்புடன் சொன்னார்.
 
இரண்டு மூன்று வசனங்களை மட்டும் கொண்ட மூன்றே  மூன்று  பந்திகள் கொண்ட கடிதம் அது.
 
நான் வாங்கிப் பார்த்தபோது , "என்ன கடிதம் சின்னனாய் இருக்கு என்று பார்க்கிறீரா ? ; இதன் வல்லமை அங்கு இருப்பவர்களில் தங்கியுள்ளது . இது விளங்கினால் உம்மை விளங்குவார்கள் என்று என் முதுகில் தட்டி வாழ்த்தினார்.
 
நான் ரூபவாஹினிக்கு 1984 ஜூலை மாதம் நேர்முகப் பரீட்சசைக்கு சென்றபொழுது என்னுடைய எல்லா சான்றிதழ்கள் கலைத்துறை சார்ந்த படங்களை பார்த்தவர்கள் மகானின் கடிதத்தை  ஆழமாக மெதுவாக வாசித்தனர். அங்கு இருந்த ஒருவர் ஆங்கில இலக்கியம் கவிதைகளில்  ஆர்வமும் தேர்ச்சியும்  மிக்க ஒருவர்.  
அவரின் நிருவாகத்தின் கீழ் நான் பின்னர் பணியாற்றினேன்.
அவர் நேர்முகத்தில் மகனின் கடிதத்தைத்  திரும்பித் திரும்பி வாசித்து என்னைப் பார்த்தார்.
 
மகாதேவா  சொல்லி, பெரி ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் அதுவாயினும்  மகானின்  சிறுகச் சொல்லித் தகவல் வழங்கும் ஆளுமையை   அக் கடிதம் காட்டி நின்றது. இக் கடிதம் தவறியமையால் இங்கு இட  முடியவில்லை.எனது 
தவறவிடப்பட்ட ஆவணங்களில் அதுவும் ஒன்று.
 
மகானின் "இப்படியும் நடக்கிறது" என்ற பத்தியை ஈழநாட்டின் பின் பக்கத்தில் படித்துவிட்டுத் தான் முதற்பக்கத்தைப் பார்க்கும் ஒரு காலத்தை ஈழநாடு கொண்டிருந்தது.
 
இப்படியும் நடக்கிறது ஊடுருவி ஒரு "ஸ்டார்ட்டர் (starter) -தொடக்கி வைப்பவர் போல அன்றைய பல வாசகர்களுக்கு இருந்தார் .
 
நான் ரூபவாஹினிக்கு போய் எனக்கு எனது நேர் முகப் பரீட்சசையில் நடந்ததை ஊடுருவி (மகான் ) தமது இப்படியும் நடக்கிறது பத்தியில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
 
அண்மையில் தலைநகரில் ஒரு நேர்முகப் பரீட்சசை நடந்தது.
 
நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் பரீட்சசைக்குத் தோற்றினர் .
 
கூட்டுத்தாபனம் ஒன்றில் காலியாகவுள்ள பதவிக்கு இந்த நேர்முகப் பரீட்சசை நடைபெற்றது .
 
அந்த இளைஞர் 
நீதிபதிகள்" முன்னர் தமது "பைலுடன் " நின்றார் .பல "செர்டிபிகேட்டுகளும்" கைமாறின.
 
 நீதிபதிகளில் ஒருவர்," நீர் ஈழநாடு பத்திரிகையிலும் கடமையாற்றியிருக்கிறீர் . அது யாழ்ப்பாணத்திலிருந்துதானே வருகிறது .அது தடைசெய்யப்பட்டு விட்டதல்லவா?
 
நீதிபதிகளில் மற்றொருவர் ," நீங்கள் சொல்வது சாட்டர்டே ரிவியூவை . ஈழநாடு ஒரு தேசிய பத்திரிகை அது யாழ்பாணத்திலிருந்து நீண்ட காலமாக வருகிறது."
 
உங்கள் காதுகளுக்கு மட்டும் :-
 
இந்த இளைஞரை முதலில் விசாரித்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவரது கேள்வியின் சந்தேகத்தைத் தீர்த்தவர் ஒரு சிங்களப்  பெண்மணி.
 
 மகாதேவாவின் சமூகப்பாங்கை வெளிக்காட்டும் அவரது  "இப்படியும் நடக்கிறது"
 பத்தியில் வந்த சில குறிப்புக்கள் அன்றைய யாழ்ப்பாணத்தினதும் தமிழ் சமூகத்தினதும் காலத்தின் கண்ணாடியாக அமைகிறது.
 
அவற்றில்  சிலவற்றை இங்கு நினைவு கூர்வது அன்னாருக்கு இந்நாளில் செய்யும் அஞ்சலியாகுமென நான் கருதுகிறேன்.
 
எமது அரச ஊடகங்கள் பற்றி அவர் எழுதிய சில:-
 
( தனியார் ஊடகங்கள் மன்னிக்க வேண்டும் ஏனெனில் அக்காலத்தில் வசை வாங்குவதற்கும் புகழ் பெறுவதற்கும் அரச ஊடகங்கள் மட்டுமே இருந்தன)  
 
 
வானொலியின் செய்தி வேகம் 
 
சர்வகட் சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழர் விடுதலைக்கு கூட்டணிச் செயலாளர் நாயகம் திரு அ .அமிர்தலிங்கமும் முன்னாள் திருமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு இரா. சம்பந்தனும் சென்னையிலிருந்து புறப்படுகின்றனர் என்று பி ரி ஐ செய்தி தெரிவித்துள்ளது.
 
மேலே நீங்கள் படித்தது இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இன்றைய தமிழ்ச் செய்தி  அறிக்கை.
 
ஒருவர் கதைத்தால் இரகசியம் இருவர் கதைத்தால் பரம இரகசியம் என்பார்கள் .இதனை சற்றுத் தலை கீழாகப் பார்ப்போம்.
 
பரம இரகசியம்:- மேற்படி செய்தி ஓர் எழுத்துக்கு கூட மாற்றமடையாமல் நேற்று முன்தினம் இரவும் நேற்றுக் காலையும்  இலங்கை ஒலி பரப்புக் கூடுத்த்தாபனத்தின் தமிழ்ச் செய்திகளில் இடம்பெற்றிருந்தன.
 
காதோடு காதாக :- திரு அமிர்தலிங்கமும் திரு சம்பந்தனும் நேற்று முன்தினம் பகலே கொழும்பு திரும்பிவிட்டனர்.
 
ஈழநாடு:07.02.84
*****
 
தமிழ்சசேவையின் கழுத்தறுப்பு 
 
 ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் நூல் வெளியீட்டு விழா சம்பந்தமான செய்தி இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை யின் செய்திப் பிரிவுக்குச் சென்றிருக்கிறது .
 
காலையில் இடம்பெறும் மாகாணச்   செய்தியில் இடம்பெறுவதாக ஏற்பாடு .ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை , குறிப்பிட்ட நூலின் வெளியீட்டு விழாச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டது.
 
இது ஒரு செய்தி . மற்றைய செய்தி..
 
தமிழகத்தின் "குப்பை இலக்கியங்கள்" என்று வர்ணிக்கப்பட்டு கடந்த கால இலங்கை அரசால் கட்டுப்படுத்தப்பட்ட சஞ்சிகைகளில்  வெளிவந்த 
சிறுகதைகளைத் தொகுத்து ஜே எம் சாலியினால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா பற்றிய செய்தி, இலங்கை வானொலிச் செய்தியில் அதுவும் நண்பகல் பிரதான செய்தியில் இடம், நேரம், காலம் ஆகிய விப ரங்களுடன்  இடம்பெற்றிருக்கிறது.
 
அப்படியானால் இலங்கைப் படைப்பாளியின் நூல் வெளியீட்டுவிழாவில் தஞ்சாவூர் பல்கலைக்கழக விரிவுரையாளர் , யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , உதவி அரசாங்க அதிபர் கலந்து கொள்வது செய்தி அல்ல.
 
தமிழக எழுத்தாளரின் மூன்றாம் ரகக் கதைகள் வெளியீட்டு விழாதான் இலங்கை வானொலியின் தரத்துக்குச் செய்தி!
 
ஈழநாடு 23.05.83
 
 *****
 
கனா  கண்ட  காலங்கள் ...
 
இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனம் முன்னர் இலங்கை வானொலியாக இருந்தபோது ,அரை மணிநேரம் நடைபெற்ற வர்த்தக சேவை புகழ் பெற்றது. அச்சேவையைத் திறம்பட நடத்தி இந்தியாவிலும் இலங்கை வானொலியை அறிமுகப்படுத்திய பெருமை திரு என் மயில்வாகனனையே சாரும். விளம்பரத்துத்துறையில் பல புதுமைகள் செய்தவர் அவர்.
 
இதுபோல இப்பொழுது குரல் வளமிக்க பி எச் அப்துல் ஹமீத் ஒரு புதுமை  செய்கிறார்-பொருத்தமாக 
 
இரவுச் சேவை இரண்டு இரவின் மடியில் முடிந்ததும் "பி எச்" இப்படி நம்பிக்கை கூறுகிறார்.
 
"நாளை விடியும்போது நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டி விடைபெறுவது "என்று பய பக்தியுடன் சொல்கிறார்.
 
எத்தனை அர்த்தங்கள் 
 
(ஈழநாடு 12.11.1983)
 
 ******
 
 
குருட்டு அதிர்ஷ்டம் 
 
தேசிய லொத்தர் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது செய்தியில் நேற்று மாலை பின்வருமாறு வெளியிட்டது:-
 
"அண்மையில் நிகழ்ந்த கலவரத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுவீப்  டிக்கற் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது.   வாரந்தோறும் இந்த அதிகரிப்புக் காணப்படுகிறது.
 
தெற்கில் எல்லாவற்றையும் இழந்து வடக்கே வந்தவர்களின் "அதிர்ஷ்ட நம்பிக்கையை " இது பிரதிபலிக்கிறது அல்லவா?
 
(ஈழநாடு 13.11.1983)
 
******
 
 பனைமட்டை இரகசியம் 
 
கண்டிப்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்து பணம் மட்டைகளைக் கொள்வனவு செய்து அவற்றைக் கண்டிக்கு கொண்டு சென்று தும்புகளாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் அவர் நூற்று நாற்பது இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டார். இதற்கு ஊக்குவிப்பு உபகார பணமாக 14 இலட்சம் ரூபாவையும் அரசிடமிருந்து தட்டிக் கொண்டார் .
 
இந்த விபரத்தை வெளியிட்டவர் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினரும் யாழ் மாவட்ட தெங்கு பனம்பொருள் உற்பத்தி விற்பனைச் சங்கத்தின் தலைவருமான எஸ் நடேசு அவர்கள்.
 
வடபகுதி தொழில் அதிபர்கள் ,வர்த்தகர்களுக்கு இது சமர்ப்பணம்.!
 
ஈழநாடு 14.07.1983
 
*******
 
 
பத்திரிகா தர்மம் 
 
ஒரு நாட்டின் ஐக்கியத்தை  கட்டிக் காப்பதில் தேசிய பத்திரிகைகளின் பங்கு எத்தகையது?
 
இது என்ன கேள்வி? ஜனநாயகத்தின் காவல் நாய்களே பத்திரிகைகள்  தானே என்று நீங்கள் முணுமுப்பது ஒருபுறமிருக்கட்டும்...
 
நேற்று வெளியான ஒரு செய்தி சின்ன சந்தேகத்தை எழுப்பிவிட்டிருக்கிறது..
 
ஒரே பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகைகள் அவை .ஆங்கிலம் .சிங்களம் ,தமிழ் மூன்றிலும் தினசரிகள் வெளிவருகின்றன.
 
ஜனாதிபதி ஜே ஆரின் அதி முக்கியம் வாய்ந்த உரை பற்றிய செய்தி அது. அதுவும் ஜூலைக் கலவரம் தொடர்பாக அவர் கூறிய அறிவுரை :-
 
"மீண்டும் ஒரு ஜூலைக்  கலவரம் வரக்கூடாது . தமிழக கடைகளை சிங்களவர்கள் தாக்கியதால் சிங்களவர்கள் தான் நஷ்டம் அடைந்தனர் . . தமிழர்களைத் தோற்கடித்து சிங்களவர்கள்வெற்றி அடைந்தனர்  என்று சில சிங்களவர் நினைத்தால் அது முட்டாள்த்தனமாகும்" என்று "பச்சை"யாகக் கூறியுள்ளார் ஜனாதிபதி .
இது யாருக்கு கூறிய அறிவுரை? சாட்சாத் . சிங்கள மக்களுக்குத்தான். அவர்கள் தான் இந்த அறிவுரையைப் பார்க்க வேண்டும் .படிக்க வேண்டும். ஆனால் செய்தி வந்த விதமோ..?
தமிழ்ப் பத்திரிகையில் அதன் முதல் பக்கத்தில் அது தலைப்புச் செய்தி.
 
அதே நிறுவனத்தின் ஆங்கிலப் பத்திரிகையில் , வரி வரியாக படித்து, தொடர்ச்சிகளையும் பார்த்து ,ஒரு படியாக ஏதோ ஒரு மூலையில் சில வசனங்களில் மூழ்கிக் கிடந்தது அந்தச் செய்தி .
 
ஆனால், சிங்கள பத்திரிகையில் ..பூதக்  கண்ணாடி பிடித்தும் கண்ணுக்குப் புலப்படவில்லை !
 
ஈழநாடு 17.07.84
 
*******
 
தரமான யாழ் வீடியோ 
 
யாழ்ப்பாணத்தில் திரைப்படப் பயிற்சி நிலையம் எதுவும் இயங்குகிறதா?
 
படத்தின் பெயர் :-"கல்லூரி வசந்தத்தில் "
வெறும் பொழுதுபோக்கு  அம்சம் எதுவுமில்லாமல் மாணவ சமுதாயத்தை வழிநடத்தக் கூடிய விதத்தில் படம் அமைந்திருக்கிறது 
தயாரிப்பு :-யாழ்ப்பாணக் கல்லூரி தமிழ் மன்றத்தினர்.
 
இயக்குனர்:- யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் வீ எஸ் நேசானந்தன்  
 
சும்மா சொல்லக் கூடாது .படம் வீடியோப் படம் தான்.ஆனால் தென் இந்தியாவின் தரமான திரைப்படங்களுக்கு நிகராக இருக்கிறது.  சபாஷ்!
 
ஈழநாடு 16.07.84
 
*******
 
 
அமைச்சர் விமலா வீசிய குண்டு 
 
  அமைச்சர் ஒருவர் பேசிய பேச்சுக்கு குறித்து இருவர் சுவாரஸ்யமாகக் கதைத்துக்கொண்டிருந்தார்கள் 
 
ஒருவர்:- கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் விமலா ஒரு கூட்டத்தில் நல்லாய் பேசியிருக்கிறாரே ..?
 
மற்றவர்;- நானும்  பேப்பர் பார்த்தனான் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லையே..?
 
ஒருவர்:- அப்படின்னா பேப்பரை ஒழுங்காய் படிக்கேல்லை என்று சொல்லுங்க. அமைச்சர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? யானையும் புலியும் காட்டில் ஒன்றையொன்று மோதிக்கொள்ளாமல் வாழமுடியுமானால், நாட்டில் ஏன் இரு வேறுபட்ட மக்கள் ஒன்றாகக் கூடி வாழ முடியாது ? என்று அமைச்சர் விமலா கேட்டிருக்கிறார்.
 
மற்றவர்:- அது சரி காட்டில் யானையும் புலியும் வாழ்ந்தாலும் ஒன்றாக வாழ்வதில்லையே ? அதுபோல இரு இன  மக்களும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்  செளக்கியமே..."
 
 (ஈழநாடு 2.11.1983)
 
********
 
 
 காலத்தின்  ஆவணமாக இவரது "இப்படியும் நடக்கிறது " பல நிகழ்வுகளையும் சமூகத்தின்  அனுபவங்களையும் நமக்குத்தந்துள்ளது.
 
கதையல்ல நிஜம் என்ற இவரது நூல் இவற்றின் தொகுப்பாகவும், நினைவலைகள் இவரது ஊடக வாழ்வின் அனுபவங்களையும் தரும் வகையில் ஊடக மாணவர்களுக்கும் தாம் வாழ்ந்த சமூகத்திற்கும் நல்ல இரு ஆவணப் பதிவுகளைத்  தந்துவிட்டுச் சென்றுள்ளார் !
 
மகா தேவாவின் ஆத்மா சாந்தியடைவதாக!

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135874/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள்.   சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே.     கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும்.   ADVERTISEMENT                                               முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி     சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும்     சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
    • உங்கள் எடிட் ரீசனை பார்த்தேன், சிரித்தேன். வீடியோவ பார்க்காமல் இணைத்தால் இப்படித்தான். நாம் தமிழர் தம்பியின் காணொளியில் தூசணம் இல்லாவிட்டால்தான் அது செய்தி🤣. நீங்களும், பையனும், புலவரும் எழுதியவை 6 கண்களால் அதே தமிழ் நாட்டில், நேரடியாக சேகரிக்கப்பட்டது🤣
    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையின் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை காசுக‌ள் க‌ட்சி சின்ன‌ம் நோடிஸ் எல்லாம் கீழ‌ விழுந்து போய் கிட‌க்கு ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.