Jump to content

'அவரைப்போல ஃபினிஷிங்... சான்ஸே இல்ல..!’ அவரைத்தான் சொல்கிறார் லான்ஸ் குளூஸ்னர்


Recommended Posts

'அவரைப்போல ஃபினிஷிங்... சான்ஸே இல்ல..!’ அவரைத்தான் சொல்கிறார் லான்ஸ் குளூஸ்னர்

dhoni.jpg

 

தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த லான்ஸ குளூஸ்னரை அவ்வளவு எளிதில்  கிரிக்கெட் ரசிகர்கள் மறந்து விட முடியாது. உலகக் கோப்பை  அரையிறுதி  போட்டிகளில் 'தி பெஸ்ட் திரில்லர்' என  ரசிகர்கள் வர்ணிக்கும் 1999 உலகக்கோப்பை அரையிறுதி  போட்டியில் விளையாடியவர். 

இந்தியாவுக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு  கொல்கத்தாவில் நடந்த  டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில்  ஒரு விக்கெட் கூட எடுக்க வில்லை ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் டெண்டுல்கர், டிராவிட் தவிர மற்ற  அனைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒரு இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டை  கைப்பற்றியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்  இவர் மட்டும் தான். 

தென்னாபிரிக்கா அணிக்காக ஆல்ரவுண்டராக விளையாடி கலக்கியவர் தற்போது பயிற்சியாளராகி விட்டார்.  ஜிம்பாபவே அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட  நிலையில்,  தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை  ஏற்றிருக்கிறார். இவரது பயிற்சியின் கீழ் அந்த அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி  பெற்றிருக்கிறது.

பயிற்சியாளர் அனுபவம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் 'இப்போது விளையாடும் வீரர்களில் யார் சிறந்த வீரர்'? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. "விராட் கோஹ்லியும், ஏ, பி டிவில்லியர்ஸும் இந்த  தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஆனால் "நான் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகன்" என்றார். " ஐந்து - ஏழு டவுனில் ஒரு பேட்ஸ்மேன்  ஆடுவது மிகவும் கஷ்டமான விஷயம். ஒரு அணிக்கு ஃபினிஷராக இருப்பது சாதாரண விஷயமில்லை. அதுவும் ஏதோ ஓரிரு போட்டிகளில் மட்டும் தோனி நல்ல பினிஷிங்க்கை கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடவில்லை, தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இந்த வேலையைச்செய்து கொண்டிருக்கிறார். இது போதாது என விக்கெட் கீப்பர், கேப்டன் பணியையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். நானும் ஃபினிஷராக இருந்தவர் என்பதால் எனக்கு  தோனியை  ரொம்பவே பிடிக்கும்"  எனச்சொல்லியிருக்கிறார் குளூஸ்னர். 

 

 

1999 ஆண்டு உலககோப்பை அரை இறுதி போட்டி கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பிரபலம்.

இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் மைதானத்தில் 1999 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 213 ரன்களை எடுத்திருந்தது. தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்யும் போது தொடர்ச்சியாக  வார்னே பந்தில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. 31 பந்தில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை, கையில் நான்கு விக்கெட் மட்டுமே இருந்தது. பொல்லாக், குளூஸ்னர் இருவரும் களத்தில் இருந்தார்கள். பொல்லாக், பவுச்சர், எல்ஸ்வொர்த் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக குளூஸ்னர் மட்டும் பவுண்டரிகளாக அடித்து விளாசினார். 

கடைசி ஓவரில் கைவசம் ஒரு விக்கெட் இருக்கிறது ஒன்பது ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை தென்னாப்பிரிக்காவிற்கு இருந்தது. முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார் குளூஸ்னர். நான்கு பந்தில் ஒரு  எடுத்தால் வெற்றி என்ற நிலை. இறுதி ஓவரில் மூன்றாவது பந்தில்   ரன் அவுட் வாய்ப்பு ஆஸ்திரேலியாவால்  கோட்டை விடப்பட, களத்தில் இருந்த குளூஸ்னர், டொனால்டு இருவரும் பதற்றமானார்கள். பேட்டிங் செய்து கொண்டிருந்த குளூஸ்னர் அவசரமாக ஒரு  ரன் எடுக்க முனையும்போது, எதிர் முனையில் இருந்த டொனால்டு தவறு செய்து  ரன் அவுட் ஆனார்.  16 பந்தில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் விளாசிய குளூஸ்னருக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அன்றில் இருந்து இன்று வரை கடந்த 18 வருடங்களில் எந்தவொரு அரையிறுதி போட்டியிலும் தென்னாபிரிக்கா வென்றதே கிடையாது என்பது தான் சரித்திரம். 

 

மிக மிக முக்கியமான போட்டிகளில்  கடைசி கட்ட டென்ஷன்களில் ஆட்டத்தை கோட்டை விடும்  தென்னாபிரிக்க அணியை சேர்ந்த வீரருக்கு, எப்பேர்ப்பட்ட டென்ஷனையும் திறம்பட சமாளிக்கும் தோனிக்கு ரசிகராக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை தான். 

http://www.vikatan.com/news/sports/68160-klusenar-praises-dhoni-as-the-best-finisher.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.