Jump to content

நமீபியா பயணம்


Recommended Posts

1-namibia-dunes-riana-van-staden.jpg

இன்று நமீபியா கிளம்புகிறேன்.ஆப்ரிக்காமீது எனக்குள்ள மோகம் அ.முத்துலிங்கத்தால் உருவானது. அவரது எழுத்துக்களில்வரும் ஆப்ரிக்கா ஒரு மெல்லிய வேடிக்கை கலந்த ஓர் உலகம். ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒரு பயணம் சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை.
நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் செல்கிறோம். சென்று வந்தபின் அந்த அனுபவத்தைக்கொண்டு மலையாளத்தில் ஒரு படத்துக்கான கதையை எழுதவேண்டும். குஞ்சாக்கோ கோபன் நடிக்க மாதவன்குட்டி இயக்குகிறார். கதாசிரியர்கள் நட்சத்திரங்களாக உணரவேண்டுமென்றால் தெலுங்கில் எழுதவேண்டும் என்பார்கள். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக உணரலாம்.


மதியம் பன்னிரண்டு மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை.அங்கிருந்து ஜொகன்னஸ்பர்க். அங்கிருந்து நமீபியாவின் விண்டோக். நமீபியா பற்றி இணையத்தில் இருந்து திரட்டிய தகவல்கள் மட்டுமே கைவசம் உள்ளன. அங்கே எந்த தொடர்பையும் பெற முடியவில்லை. முழுக்கமுழுக்க சுற்றுலா அமைப்பாளர்களை நம்பிய ஒரு பயணம் இது.

நமீபியாவில் சுற்றுலாப்பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பல உண்டு என்றார்கள். ஆப்ரிக்காவுக்கே உரிய நோய்கள். இருவகை மஞ்சள்காமாலைகள்.அவற்றுக்கு எர்ணாகுளம் சென்று தடுப்பூசிகள் போட்டுக்கொண்டேன். மாமிச உணவு உண்டால் வேறு சிறப்பு நோய்கள் உண்டு.சைவ உணவு சகிக்கமுடியாது என்றார்கள்.
‘சரி வேறென்ன?’ என்றேன். ‘உலகிலேயே அதிகமான எச்.ஐ.வி நோயாளிகள் உள்ள தேசம்’ என்றார் பயணமுகவர். ‘அதனாலென்ன, நாங்கள் கற்புள்ளவர்கள்’ என்றோம். ‘அதைத்தான் சொல்லவந்தேன்.அங்கே பாலியல் வல்லுறவு அடுத்த பெரிய பிரச்சினை’ என்றார். ‘அதுவும் பிரச்சினை இல்லை, நாங்கள் இருவருமே ஆண்கள்’ என்றோம். அவர் ‘…ஆண்களுக்கும் அந்த அபாயம் உண்டு’ என்றார்

அனைத்தையும் விட முக்கியமான பிரச்சினை, மாதவன்குட்டி இதுவரை வெளிநாடு சென்றதே இல்லை என்பது. அவருக்கு ஆயிரம் திகில்கள். 2000 த்தில் நான் கனடா சென்றேன். அதுதான் என் முதல் வெளிநாட்டுப்பயணம். எந்நேரமும் பேதியின் சாத்தியக்கூறுகளில் இருந்தேன். ‘ஒண்டுமே பயப்படாதீங்க’ என்று நூறுமுறை தொலைபேசியில் சொன்ன அ.முத்துலிங்கம் என்னை டொரொண்டோ விமானநிலையத்தில் கண்டதுமே ‘என்ன ஒரு பிரச்சினையும் இல்லாமல் வந்திட்டியள்? ஆச்சரியமா இருக்கு’ என்றார்

நான் முகம் வெளிறி ‘ஒண்ணுமே பிரச்சினை இருக்காதுன்னு சொன்னீங்களே சார்’ என்றேன். ‘பின்னே அப்டித்தனெ சொல்லவேணும்?’ என்றார் சிரித்தபடி. அதன்பின் நான் அருண்மொழியை சிங்கப்பூர் கூட்டிச்சென்றேன். நாஞ்சில்நாடனை மலேசியா கூட்டிச்சென்றேன். முதல் அன்னியநாட்டுப்பயணங்களை அவர்கள் பீதியுடன் அனுபவிப்பதைக் கண்டு என் பீதியை மறந்தேன். இப்போது மாதவன்குட்டி கூடவே இருக்கிறார். பயமில்லை
உலகின் மிக உயரமான மணல்மேடுகள் கொண்ட நாடு நமீபியா. பல ஹாலிவுட்படங்களில் கண்டிருக்கிறேன். நாங்கள் இரண்டுநாட்கள் மணல்மேடுகளில் இருப்போம்

http://www.jeyamohan.in/29631

Link to comment
Share on other sites

கருநிலம் – 1 [நமீபியப் பயணம்]

சென்ற 4ஆம் தேதி காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மும்பைக்குக் கிளம்பினோம். கிளம்பிய அரைமணி நேரத்திலேயே ஒன்று தெரிந்தது, மாதவன்குட்டி ஒரு நிர்வாகி என்று. அவரது முதல் வெளிநாட்டுப்பயணம். ஆனாலும் பதற்றமே இல்லாமல் அவரே எல்லாவற்றையும் விசாரித்தார். சரிபார்த்தார். ஆகவே நான் எல்லாவற்றையும் அவரது பொறுப்புக்கே விட்டுவிட்டு நிம்மதியாக அமர்ந்துவிட்டேன்.

DSC05475.jpg

திருவனந்தபுரத்தில் நல்ல மழை. மதுபாலைக்கூப்பிட்டு ஒழிமுறியைப் பற்றிக் கடைசியாகப் பேசிவிட்டு செல்பேசியை அணைத்துவிட்டு மேகங்களில் மூழ்கி மறையும் நகரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திருவனந்தபுரத்தை சற்று உயரத்திலிருந்து பார்த்தால் அங்கே ஒரு நகரம் இருப்பதே தெரியாது. தென்னைமரக்கூட்டங்கள் ஒரு பெரும் புல்பரப்பாகத் தெரியும். அந்தப் பச்சைச்சேலையின் கரைவிளிம்பு போலக் கடலின் வெண்ணலை.

மெதடிஸ்ட் சர்ச்சின் போதகரான காட்சன் என்னுடைய நண்பர். அவர் மும்பைக்கு என்னை அழைத்துக்கொண்டே இருந்தார். நான் போக வசதிப்படவில்லை. ‘அண்ணன், இப்ப நீங்க ஒரு ஆறு மணிநேரம் இங்க இருக்கணும் இல்ல? ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்றேன்’ என்றார். தட்டமுடியவில்லை. மும்பையில் இறங்கி என்னுடைய பெட்டியை மாதவன்குட்டிக்காக வந்த கோகுலம் மூவிஸின் காரிலேயே அனுப்பிவிட்டு காட்சன் வந்த காரில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்றேன். அவரது நண்பரும் மெதடிஸ்ட் சர்ச்சின் பிரமுகருமான பொன்சிங் அவர்கள் என்னைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார். பாபா நிலையத்தில்தான் எனக்கு ஓர் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கேதான் சந்திப்பும்.

 

காட்சன் மும்பையில் இருந்து பூனாவுக்கு மாற்றலாகிவிட்டிருந்தார். அங்கிருந்து இங்கே வந்து ஏற்பாடுகள் செய்திருந்தார். அவரது அண்ணா அணுநிலைய ஊழியர். மழையில் நனைந்த மும்பை வழியாகச் சென்றோம். மும்பை என்ற மாபெரும் அராஜகம் எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற பிரமிப்பை மீண்டும் அடைந்தேன்.

பரபரப்பு நடுவே அணுநிலையம் ஒரு சோலை. அழகான கட்டிடங்கள். பசுமை. கண்ணெதிரே செங்குத்தாக ஒரு பச்சை மலை. என் அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோதே அழைக்கப்பட்ட நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். மெதடிஸ்ட் சர்ச்சைச் சேர்ந்தவர்கள் அனைவரும். காட்சனின் நண்பர்கள். பொன்சிங் எனக்கு முறைப்படி பூங்கொத்து அளித்து வரவேற்றார்.

காட்சன் போதகர்களில் அபூர்வமானவர். கிறித்தவபோதகர்களில் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்களில் நல்ல வாசகர்களைக் கண்டிருக்கிறேன். சீர்திருத்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் பிடிவாதமானவர்கள். பைபிளுக்கு அப்பால் எதையும் படிப்பதில்லை அவர்கள்.

காட்சன் நிறைய படிப்பார். அவரது சர்ச் பேருரைகளே அபூர்வமானவை. குப்பைத்தொட்டி ஏசுவைப்பற்றிப் பேசுவதுபோன்ற ஒரு கிறிஸ்துமஸ் பேருரையை எழுதி அதை ஒருமுறை சரிபார்த்துத் தரமுடியுமா என்று கோரித்தான் என்னை முதலில் அவர் அணுகினார், எட்டாண்டுகளுக்கு முன்பு.குப்பைத்தொட்டி போலக் கைவிடப்பட்டவர்களை ஏற்றுக்கொள்பவர் ஏசு என்பது அக்கட்டுரையின் சாரம். என்னை நெகிழச்செய்த கட்டுரை அது. கலப்பைக்கும் சிலுவைக்கும் ஒரு கவித்துவமான ஒப்புமையை முன்வைக்கும் ஒருகட்டுரையை அடுத்த கிறிஸ்துமஸுக்கு அவர் முன்வைத்தார். அதையும் நான் சரிபார்த்தேன்.

 

அப்போது காட்சன் பனைவெல்ல அமைப்பில் பணியாற்றியிருந்தார். அவரது இயல்புக்கும் மனநிலைக்கும் போதகர் பணி மட்டுமே பொருந்தும் என நான் சொல்லிவந்தேன். ஆனால் முழுநேரப் போதகராக ஆனபின் அவர் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது. அது ஓர் இழப்புதான்.

நான் ஒரு உரையை நிகழ்த்தினேன். முன் தயாரிப்புகள் இல்லாத உரை. உலக இலக்கியத்தில் நவீன இலக்கியம் உருவானதற்கும் சீர்திருத்தவாதக் கிறித்தவத்துக்கும் உள்ள உறவில் இருந்து தொடங்கினேன். சீர்திருத்தவாதக் கிறித்தவர்களின் சிந்தனைகளை போப் இரண்டாம் கிரிகோரி கிண்டலாக மாடர்னிசம் என்று அழைத்தார். அதிலிருந்தே அந்தப்பெயர் இறையியலில் உருவாகியது, இலக்கியத்துக்கு வந்தது.

சடங்குகள் மற்றும் பேரமைப்புகளில் இருந்து விடுபட முயன்ற சீர்திருத்தக் கிறித்தவம் நவீன சிந்தனைக்கும் இலக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறது. நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்யவும் விழுமியங்களைப் புதுக்கட்டமைப்பு செய்யவும் அது முயன்றது. நவீன ஐரோப்பிய அறவியலில் அதன் பங்களிப்பு மகத்தானது. மகாகவி கதேயில் இருந்து நிகாஸ் கஸந்த்ஸகிஸ் வரை அந்த அலை உருவாக்கிய இலக்கிய ஆளுமைகள் ஏராளம்.

 

நான் கிறிஸ்துவைக் கண்டடைந்தது அவர்கள் வழியாகவே. என்னுடைய கிறிஸ்து தல்ஸ்தோயின் கிறிஸ்து. தஸ்தயேவ்ஸ்கியின், செகாவின், எமிலி ஜோலாவின் கிறிஸ்து. நவீன இலக்கியம் நூறு ஆண்டுக்காலம் மதத்தால், திருச்சபையால், வெற்றுநம்பிக்கைகளால், ஆசாரங்களால் மறைக்கப்பட்ட கிறிஸ்துவை மீட்டெடுக்க முனைந்தபடியே இருந்திருக்கிறது. இறைமைந்தனாக, ஞானியாக, மாமனிதனாக,புரட்சியாளனாக அது கிறிஸ்துவை கண்டடைந்தபடியே இருந்தது. அதைப் பதிவுசெய்த மாபெரும் ஆக்கங்களால் ஆனது உலக இலக்கியம்.

க.நா.சு மொழியாக்கம் செய்த ஃபேர் லாகர் குயிஸ்டின் அன்புவழி என்ற நாவலின் கதையைச் சொன்னேன். அதிலிருந்து எமிலி ஜோலாவின் பரபாஸ் நாவலின் கதை. மேரி கெரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன் நாவலின் கதை. கஸந்த்ஸகீஸின் லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்டின் கதை. ஒவ்வொரு கதையும் அடையும் உச்சத்தில் கிறிஸ்து நாம் அதுவரை காணாத ஒளியுடன் உதித்தெழுவதைச் சொன்னேன்.

மலையாளத்தில் கிறிஸ்துவின் ஒளி நிகழ்ந்த பல கதைகள் உள்ளன என்று சொல்லி பால்சக்கரியாவின் அன்னம்மா டீச்சர் ஒரு நினைவுக்குறிப்பு, சொர்க்கம் தேடிச்சென்ற மூன்றுகுழந்தைகள், யாருக்குத்தெரியும் போன்றகதைகளைச் சொன்னேன். கிட்டத்தட்ட ஒரு கதைசொல்லும் நிகழ்ச்சி. எனக்கே அக்கதைகளை சொல்வது பேரனுபவமாக இருந்தது. அவற்றை மீண்டும் நானே எழுதுவதுபோலிருந்தது.

ஆனால் தமிழில் கிறிஸ்தவ ஆன்மீகத்தை வெளிப்படுத்திய இலக்கிய ஆக்கம் என ஏதுமில்லை என்றேன். கிறிஸ்தவ வாழ்க்கையைச் சொல்லும் சில நூல்கள் மட்டுமே உள்ளன. ஹெப்ஸிபா ஜேசுதாசன், டேவிட் சித்தையா போன்ற சிலர் எழுதியவை. விதிவிலக்கு ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு. அதில் வரும் காகு சாமியார் கிறிஸ்தவ விழுமியங்களில் மகத்தான உதாரணமாகத் திகழ்பவர்.

 

இதற்குக் காரணம் கிறிஸ்தவர்கள் இலக்கியத்தை அதிகம் பொருட்படுத்தாததுதான் என்பதே என் எண்ணம் என்றேன். அவர்கள் தங்கள் தீவிர மதநம்பிக்கைக்கு அப்பால் வெளிவருவதில்லை. அந்த மதநம்பிக்கை பெரும்பாலும் உலகியல் சார்ந்த பிரார்த்தனைகளுடன் முடிவடைவது. அங்கே இலக்கியத்திற்கு இடமும் இல்லை. இலக்கியம் ஆன்மீகத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும். உலகியலுக்கு அப்பால் சென்று, எந்த சுயநலக்கோரிக்கைகளும் இல்லாமல், கிறிஸ்துவைத் தீண்டக்கூடியவர்கள் மட்டுமே இலக்கியத்துக்குள் வர முடியும். அதற்கான வாசிப்பும் ரசனையும் உடைய ஒரு தலைமுறை தமிழ்ச்சூழலில் உருவாகிவரவேண்டும் என்றேன்

இலக்கியம் ஆன்மீகம் தாமஸ்கிறிஸ்தவம் பற்றி எல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். நான் சற்று மனச் சஞ்சலத்துடன் இருந்தேன். ஆப்ரிக்கா பற்றிய பற்பல தகவல்கள் அளித்த சஞ்சலம் ஒருபக்கம். காலையில் கிளம்பும்போது நாகர்கோயில் சிச்ரூஷா ஆஸ்பத்திரி அருகே ஒரு பிச்சைக்காரர் செத்து மழையில் சாலையோரம் கிடப்பதைப்பார்த்தேன். அதிர்ச்சி மேலும் அதிகரித்தது தக்கலை கனராவங்கி முன் இன்னொரு பிச்சைக்காரர் பிணத்தைப் பார்த்தபோது. இரவின் உக்கிரமழையின் பலிகள்.

காட்சனைப் பார்த்ததும் சட்டென்று ஓர் நிறைவு உருவானது. வாழ்க்கையின் சிறந்த இனிய பக்கங்களை நினைவுறுத்தும் சிரிப்பு கொண்டவர். அவரிடம் எனக்காக ஒரு ஜெபம் செய்யும்படி கோரினேன். அவர் சொன்னபடி அன்று வந்திருந்த போதகர் எனக்காக ஜெபிக்க நானும் வேண்டிக்கொண்டேன். தற்செயல்களாக நிலையின்மையாக எதிகால அச்சமாகத் தெரியும் பிரபஞ்ச விரிவுக்கு முன் ஒரு எளிய மன்றாட்டை மட்டுமே மனிதனால் முன்வைக்க முடிகிறது. அந்த ஜெபத்தின் குரல் ஒரு ஆறுதலாகவும் ஆற்றுப்படுத்தலாகவும் கூடவே இருந்தது. மாதவன்குட்டியிடம் சொன்னேன். ‘அய்யோ நானும் வந்திருப்பேனே…இலக்கியம் பேசி அறுப்பீர்கள் என நினைத்திருந்தேன்’ என்றார்.

மாலை அங்கேயே சாப்பாடு. நான் பழங்கள் சாப்பிட்டேன். நண்பர்கள் சிற்றுண்டி. இரவு பதினொரு மணிக்கு மும்பை சர்வதேச விமானநிலையம் சென்றோம். இரவு இரண்டு மணிக்கு எங்களுக்கான விமானம்.

[மேலும்]

http://www.jeyamohan.in/30618

 

Link to comment
Share on other sites

கருநிலம் – 2 [நமீபியப் பயணம்]

06092012361.jpg

ஜொகன்னஸ்பர்க் காந்தியின் வரலாற்றுடன் இணைந்து அடிக்கடி காதில் விழுந்த பெயர். அங்கே காலையில் சென்றிறங்கும்போது காந்தி நினைவுகளாகவே வந்துகொண்டிருந்தன. காந்தி ஒரு இளம் வழக்கறிஞராகத் தயக்கத்துடன் வந்து இறங்கும் காட்சியை நினைத்துக்கொண்டே இருந்தேன். மகத்தான பிடிவாதமும் எதையும் அப்பட்டமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் ஒருவரில் இணையும் என்றால் அவர் எந்தத் தளத்திலும் ஒரு மாமனிதராகவே ஆவார் என்று நினைத்துக்கொண்டேன்.

 

எளிமையும் நேரடித்தன்மையும் இருந்தால் உண்மை பிடிபட்டுவிடுகிறது, பிடிவாதம் அதில் அவரை நிலைக்கச் செய்கிறது. சிந்தனைத்திறன் ஒருவனை உண்மையில் இருந்து விலக்கமுடியும். கோழைத்தனமும் இணைந்துகொண்டால் அறிவுஜீவி அயோக்கியர்கள் உருவாகிறார்கள். அவர்கள் காந்தி என்ற சொல்லையே வெறுப்பார்கள் – கண்நோய்வந்தவன் விளக்கை வெறுப்பதுபோல.

ஜொகன்னஸ்பர்க் ஒரு வழக்கமான விமானநிலையம். அதை பெர்லின் என்றோ ஹாங்காங் என்றோ சொன்னால் நம்பலாம். அதே போன்ற கட்டிடம். அதே போன்ற ஊடுபாதை. நீண்ட பயணங்களில் காலக்கணக்கு அழிந்து விமானத்தில் கண்டபடி தூங்கி ஒருமாதிரி ’இடகாலபேதமிலி’ நிலை கைகூடும். டிரான்ஸிட் விமானநிலையங்களில் எல்லாருமே அப்படி நிலவில் வெளிவந்த கோழி மாதிரித்தான் இருப்பார்கள்.

எங்கள் அடுத்தவிமானம் இரண்டு மணிநேர இடைவெளியில். ஓடி ஓடி விசாரித்து தென்னாப்பிரிக்க விசா பரிசோதனை வரிசைகளில் நின்றோம். கரிய குண்டான பெண்மணி என்னை வரவேற்று பாஸ்போர்ட்டை உற்றுப் பார்த்து ‘யூ ஆர் வெல்கம்’ என்று சொல்லி அனுமதித்தாள். விமானநிலையம் விட்டு வெளிவரவே இல்லை. அதற்கு ஏன் டிரான்ஸிட் விசா என்று தெரியவில்லை.

06092012366.jpg

நேராக நமீபிய விசாவுக்கான வரிசை. பாதுகாப்புச்சோதனை. இத்தனை பாதுகாப்புச்சோதனைகள் வழியாகச் செல்லும்போது மெல்லமெல்ல நமக்கே நாம் எவ்வளவு நல்லவர்கள் என்று தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.

நமீபிய விமானம் சிறியது. நான்கு இருக்கைகள் கொண்ட வரிசை. எனக்கு சன்னலோரம் இடம் கிடைத்தது. விமானத்தில் அதிகமும் வெள்ளைச் சுற்றுலாப்பயணிகள். விமானம் மேலெழுந்ததும் சிற்றுண்டி. அதன்பின் கீழே பார்க்க ஆரம்பித்தேன். சற்றுநேரத்திலேயே நமீபியா வந்துவிட்டது. கீழே நிலம் தமிழக நிலத்தை நினைவூட்டியது.

06092012306-1024x768.jpg

எரிநிலம்i

பின்பு அதன் விசித்திரங்களை கவனிக்க ஆரம்பித்தேன். சிவந்த பொட்டல்நிலம். அதில் சீராகத் தூவப்பட்டது போல நெருக்கமில்லாமல் காய்ந்த பசுமையுடன் புதர்மரங்கள். அந்த நிலம் மீது ஒரு பெரும் சிலந்தி வலையை விரித்தது போலிருந்தது. செந்நிறமான வலை. நேரான நீண்ட கோடுகள் பெரும் மண்சாலைகள் என்று தெரிந்தது. அச்சாலைகளில் இருந்து சிறிய சாலைகள் பிரிந்தன. அவற்றில் இருந்து மேலும் சிறிய சாலைகள். உள்ளங்கை ரேகை போல.

சாலைவலைக்கு ஒரு மையமுடிச்சு இருக்கும். அது மின்னும் ஒரு தகரக்கூரை. ஒரு உலோகச்சிலந்தி போல அது அமர்ந்திருக்கும். மீண்டும் நெடுந்தூரம் சாலைவலை. அடுத்த சிலந்தி. மற்றபடி ஊர்களோ நகரங்களோ கண்ணில் படவில்லை. அந்த அரைப்பாலைநிலத்தில் உள்ள மனிதவாசமே அந்தத் தகரக்கொட்டகைகளில் மட்டும்தான். அவை பண்ணைவீடுகளாக இருக்கலாம்.

06092012315-1024x768.jpg

விண்ட்ஹோக் விமானநிலையம் கிட்டத்தட்ட திருவனந்தபுரம் அளவுக்கு இருந்தது. டவுன்பஸ் போல விமானத்தில் இருந்து நேராக இறக்கி விட்டார்கள். விமானங்கள் வழியாக நடந்து நிலையத்துக்குச் செல்லவேண்டும். கூட்டமே இல்லை. சரசரவென்று பரிசோதனை முடிந்து அனுமதித்தார்கள். எல்லா அதிகாரிகளுமே பெண்கள். ஒரு அம்மணி என்னிடம் நான் வைத்திருந்த மின்செருகிகள் எதற்காக என்று கேட்டாள். செல்லும் இடத்தில் உள்ள மின்சார அமைப்பு பற்றி தெரியாதல்லவா என்று சொன்னேன். ’சார், இந்த ஊர் மக்களையே உங்களுக்குத் தெரியாதே’ என்று சொல்லிச் சிரித்தாள்.

எங்களை வரவேற்க டேவிட் கெம்பித்தா வந்திருந்தார். என் பெயரைப் பார்த்ததும் நான் ‘ஹாய்’ என்றேன். டேவிட் பெரிய உதடுகளில் புன்னகையுடன் ‘ஹாய்…நான் தேவித் கெம்பித்தா . உங்கள் வழிகாட்டி’ என்று சொல்லி ஆடி ஆடி வந்து கை குலுக்கினார். சடைக்கற்றைகளாக முடி. உளுந்து போல மின்னும் நிறம். டேவிட்டின் அழகு அவரது கண்கள். அஜந்தா ஓவியங்களில் உள்ள யட்சனின் கண்கள் அவை. எங்களை உற்சாகமாக வரவேற்றுக் காரில் ஏற்றினார்.

‘என்ன ஒரு அழகன் இல்லையா?’ என்றேன். ‘நான் நினைத்தேன். இவன் நம் படத்தில் நடிக்கிறான்’ என்றார் மாதவன் குட்டி. ’ஒரு குளோஸப் வைத்தால் இந்தக் கண் எப்படி இருக்கும் தெரியுமா?’ நான் டேவிட்டிடம் பேச ஆரம்பித்தேன். ஆப்ரிக்கா பற்றி இருந்த ஐயங்கள் சஞ்சலங்கள் எல்லாமே அவரைக் கண்டதுமே விலகிவிட்டன. எதற்கெடுத்தாலும் டேவிட் உற்சாகமாக நகைத்தார்.

07092012374.jpg

டேவிட் ஒரு மாணவர். சுற்றுலாத்துறையில் முதுகலை படிக்கிறார். இது பகுதிநேர வேலை. வரும்போது வழிகாட்டியிடம் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டு வந்த நாங்கள் டேவிட்டிடம் எங்கள் நோக்கம், திட்டம் எல்லாவற்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தோம். ’நமீபியா சினிமாவுக்கான ஊர். நிறைய ஹாலிவுட் படங்கள் இங்கே எடுக்கிறார்கள். நான் உங்களுக்குச் சிலரை அறிமுகம் செய்து வைக்கிறேன். கண்டிப்பாக நாம் சினிமா எடுக்கிறோம்’ என்றார் டேவிட்.

விமானநிலையத்தில் இருந்து விண்ட்ஹோக் நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. நூறு கிலோமீட்டர் என்பது இங்கே சின்ன தூரம். சாலைகள் எல்லாமே சென்ற இருபது முப்பது வருடங்களுக்குள் போடப்பட்டவை. நூல் பிடித்தது போல நேராகச் செல்லும் இரட்டைச்சாலைகள் துல்லியமானவை. அவற்றில் கார்கள் துப்பாக்கிக் குண்டுகள் போல சீறிச்சென்றன.

இருபக்கமும் கருகிய புதர்கள். அவை கருகியவை அல்ல என்றார் டேவிட். அவற்றின் இயல்பே அப்படித்தான். அதை பென்சில் புஷ் [ Arthraerua leubnitziae] என்கிறார்கள். குறைந்த தண்ணீரில் வாழக்கூடியவை. அவையன்றி மரங்களோ செடிகளோ இல்லை. குட்டையான குன்றுகள். மேகமே இல்லாத நீலவானம். வெயில் எரிந்து நின்றுகொண்டிருந்தது.

விண்ட்ஹோக் நகரத்துக்கு வந்ததும் சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு பின்தங்கிய ஆப்ரிக்க நாட்டின் தலைநகரத்தை ஒருவாறாகக் கற்பனைசெய்து வைத்திருந்தோம். வின்ட்ஹோக் சிறிய நகரம். ஆனால் மிகத் திட்டமிட்டு அழகாகக் கட்டப்பட்டது. சீரான பழுதற்ற சாலைகளில் ஒளிவிட்டுச் செல்லும் கார்வரிசைகள். கண்ணாடிச்சன்னல்கள் மின்னும் அழகான கட்டிடங்கள். மேம்பாலங்கள். விளம்பரப்பலகைகள்.

முதலில் கவனத்தைக் கவர்ந்தது நகர் நெரிசலே அற்றிருப்பதுதான். கார்கள் கூட அதிகமில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகமிகக் குறைவு. நகரின் மொத்த மக்கள்தொகையே மூன்று லட்சம்தான்.கடைகளுக்குள் சிலர் தென்பட்டார்கள். நகரில் திறந்த சாக்கடைகள் இல்லை. குப்பைமேடுகள் இல்லை. இடிந்த அல்லது பழுதடைந்த கட்டிடங்களோ சாலைப்பகுதிகளோ பாலங்களோ இல்லை. தெருவில் எங்கும் குப்பைகளே இல்லை. அதி சுத்தமான நகரம். ஐரோப்பிய நகரங்களைப்போல .

07092012388.jpg

விண்ட்ஹோக் என்ற சொல்லுக்கு ஜெர்மன் மொழியில் காற்றின் குழி என்று பொருள் என்றார் டேவிட். பழையமேய்ச்சல் மையமான இந்த இடம் 1840-இல் ஊர்லாம் மக்களின் தலைவரான ஜோங்கர் ஆஃப்ரிக்கானரால் ஒரு சிறிய ஊராக அமைக்கப்பட்டது. அங்கே அவர் ஒரு கல்தேவாலயத்தை அமைத்தார். பின்னர் 1890-இல் ஜெர்மானிய ஆதிக்கப்படைத்தளபதியான கர்ட் வான் ஃப்ராங்வா நகரைப் புதியதாகக் கட்டி எழுப்பினார்.

நமீபியா 1990 வரை ஐநா மேற்பார்வையில் தென்னாப்பிரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான ஜனநாயக அரசு விண்ட்ஹோக் நகரத்தைத் திட்டமிட்டு விரிவாக்கம் செய்து வருகிறது. சாலைகளும் பாலங்களும் கட்டப்பட்டு வருவதை கவனித்தோம். தடையில்லாத மின்சாரமும் தண்ணீரும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கே நைஜீரியாவில் இருந்து டீசலை இறக்குமதி செய்து மின்சாரம் எடுக்கிறார்கள்.

நமீபியாவில் டீசல் விலை நாணயமதிப்பு அடிப்படையில் இந்தியாவுக்குச் சமம். ஆனால் நமீபியப் பொருளியல் இந்தியாவை விட வலுவானது. ஆறு இந்திய ரூபாய்க்கு ஒரு நமீபியன் டாலர் கிடைக்கும். நமீபியா சீராக வளர்ச்சி அடைந்து வரும் தேசம். அதற்கான காரணங்கள் பல. ஒன்று, மிகக்குறைவான மக்கள்தொகை. இந்த விரிந்த நாட்டின் மக்கள் ஒருகோடிக்குள்தான்.

நமீபியாவில் இஸ்லாமியர் அனேகமாக இல்லை. அங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்கள். சீர்திருத்தக் கிறித்தவச் சபைகள்தான் அதிகம். ஆங்கிலிகன் சர்ச்சும் மெதடிஸ்ட் சர்ச்சும் வலுவானவை. லுத்தரன் மிஷன் அடுத்தபடியாக. கத்தோலிக்கர்கள் அதிகமில்லாவிட்டாலும் பெரிய தேவாலயங்கள் எல்லாமே அவர்களுக்குரியவை. பழங்குடிவழிபாடு கொண்ட மக்கள் ஓரளவு இருக்கிறார்கள். அவர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே மோதல்கள் இல்லை. சீரிதிருத்த கிறித்தவ சபைகளைச் சேர்ந்தவர்கள்கூட பழங்குடி மதச்சடங்குகளையும் செய்வதுண்டு.

இஸ்லாமியர்கள் உள்ள நாடுகளில் எல்லாம் தீராப்பிரச்சினையாக இருக்கும் இஸ்லாமியத் தேசியப்பிரச்சினை நமீபியாவில் இல்லை என்பதே அதை நைஜீரியா போன்ற பிறநாடுகளில் உள்ள தீராத உள்நாட்டுப்போர்கள் நிகழாமல் பாதுகாத்திருக்கிறது. இஸ்லாமியர் எந்த தேசிய அமைப்புக்குள்ளும் அடங்காமல் இஸ்லாமிய தேசியத்துக்கான போராட்டத்தை வன்முறை வழியாக முன்னெடுப்பவர்கள். அவர்களின் மதம் அவர்களுக்கு இடும் கட்டளையே அதுதான்.

அந்த இஸ்லாமிய சர்வதேசியக் கனவு இன்றைய நவீன தேசியங்கள் அனைத்துக்குமே மிகப்பெரிய சவால். இஸ்லாமியர் தங்கள் ஆன்மீகத்தைத் தங்கள் தேசியக் கனவில் இருந்து பிரித்துக்கொள்ளாதவரை உலகுக்கு அமைதி இருக்கப்போவதில்லை என நினைத்தேன். இஸ்லாமுக்கு உள்ளிருந்தே அத்தகைய ஆன்மீகவாதிகளின் குரல்கள் எழவேண்டும், அவை இன்று மேலோங்கியிருக்கும் மதவாதிகளின் குரல்களை வெல்லவேண்டும், பிற மதங்களில் நிகழ்ந்தது போல.

தீவிரவாத அச்சங்கள் இல்லாத காரணத்தால் எங்கும் பாதுகாப்புச் சோதனை என்பதே இல்லை. விமானநிலையத்தில்கூட ஒப்புக்கு ஒரு பார்வையோடு சரி. சோதனைகள் மிதமாக இருப்பதே ஒரு நட்பார்ந்த சூழலை உருவாக்கிவிடுகிறது.

நமீபியாவின் பொருளியல் முதன்மையாக சுற்றுலாவைச் சார்ந்தது. சீராக அன்னியச்செலாவணி ஈட்டித்தருகிறது அது. மேய்ச்சல், விவசாயம் ஆகியவை அடுத்தபடியாக பெருந்தொழில்கள். நமீபியாவின் பிரம்மாண்டமான மேய்ச்சல்பண்ணைகள் ஐரோப்பாவுக்குச் செல்லும் மாட்டிறைச்சியில் கணிசமான ஒரு பகுதியை உற்பத்தி செய்கின்றன.

07092012387.jpg

எங்களுக்குத் தங்குவதற்காக ஒரு விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று நட்சத்திர விடுதி. நமீபியாவின் சுற்றுலாத்துறை மிகவும் தொழில்முறையானது. விடுதி ஊழியர்கள் முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். விடுதிப்பராமரிப்பு, சேவை, உணவு எல்லாமே அரசால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஆகவே ஒவ்வொன்றிலும் துல்லியம் இருந்தது. புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும் என்றார்கள். சுற்றுலாத்தொழிலுக்கான அனுமதி ரத்து என்பது நமீபியாவில் பெரிய தண்டனை.

இந்திய விடுதிகளில் ஊழியர்களுக்கு விருந்தினருடன் பழகத்தெரியாது. ஒன்று மிதமிஞ்சிய செயற்கை மரியாதை. அல்லது அக்கறையின்மை. பெரும்பாலும் இரண்டும் கலந்த தன்மை. ஆனால் நமீபியாவின் சுற்றுலா ஊழியர்கள் அனைவரிடமும் ஒரு நட்பார்ந்த சேவைமனநிலையைக் காணமுடிந்தது. புன்னகையுடன் வரவேற்பது, முகமன் சொல்வது போன்றவை அமெரிக்காவிலும் கனடாவிலும் உண்டு என்றாலும் அவை ஒரு பயின்ற பாவனைகளாகவே இருக்கும் – அல்லது கறுப்பர்களாகிய நம்மிடம் அப்படி நடந்துகொள்கிறார்கள். நமீபிய விடுதியில் வரவேற்புப்பெண்ணிடம் கண்ட அந்த நட்பு நிறைந்த திறந்த மனப்பான்மை கொண்ட பழக்கத்தை நமீபியாவிலிருந்து கிளம்பும் கணம் வரை கண்ட அனைவரிடமும் கண்டேன்.

எந்த தேசத்திலும் நான் இத்தனை மனிதர்களிடம் அந்தரங்கமாக உரையாடியதில்லை. சர்வசாதாரணமாகத் தன் நண்பர்களையும் உறவினர்களையும் நம்மிடம் அறிமுகம் செய்கிறார்கள். டேவிட் மிக ஏழையான உறவினர்களைக்கூட அறிமுகம் செய்தார். அவர் வாழ்ந்த பின் தங்கிய சூழலை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் சுட்டிக்காட்டினார். ரகசியங்களோ தயக்கங்களோ இல்லாதவர்களைப்போல பழகினார்கள்..

பாலைவன விடுதியில் ஸ்டீக் சமைத்துத் தந்த சமையற்கார மாமி செல்பேசியில் அவரது மூன்று பெண்களை எனக்குக் காட்டினார். மூன்றாம் பெண் பேரழகி. அதைச் சொன்னேன். பரவசமானார். என் செல்பேசியின் முகப்புப் படமாக இருந்த சைதன்யாவைக் காட்டினேன். தலையில் கைவைத்து நெட்டிமுறிப்பது போல ஏதோ செய்தார். என்ன செய்கிறீர்கள் என்றேன். ஆசீர்வாதம் என்று சொன்னார். எந்த தேசத்திலும் அதன் மக்கள் மீது மனம் இத்தனை பிரியத்துடன் கவிந்ததில்லை. சொல்லப்போனால் இனி ஆப்ரிக்கா அன்றி எந்த தேசத்திற்கும் பெருவிருப்புடன் செல்லப்போவதில்லை.

அடுத்த ஒருவாரமும் ஆப்ரிக்கப் பழக்கவழக்கங்களையே கவனித்துக்கொண்டிருந்தேன். நான் மிகையாகக் கற்பனை செய்துகொள்கிறேனா என்று ஐயப்பட்டபடியே. ஒவ்வொருவரும் இன்னொருவரைக் கண்டதும் ஆனந்தக்கூச்சல் எழுப்புகிறார்கள். கைகளைத் தட்டிக்கொள்கிறார்கள். உணவைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சிரித்துக்கூவிப் பேசிக்கொள்கிறார்கள். ‘நீங்கள் அடிக்கடி சந்திப்பதில்லையா?’ என்று டேவிட் ஒருவரைக் கட்டித்தழுவிக்கொண்டபோது கேட்டேன். ’’இல்லையே நேற்றுகூடப் பார்த்தேனே’’ என்றார்.

செல்லுமிடமெல்லாம் டேவிட் இவர் என் மச்சான், இவர் என் ஒண்ணுவிட்ட மாமா என்று அறிமுகம் செய்துகொண்டே இருந்தார். ’உங்களுக்கு இவ்வளவு உறவினர்களா?’ என்று கேட்டேன். ’நாங்கள் எல்லாருமே உறவினர்கள்தான் ’என்றார். உறவு என இனக்குழுவைச் சொல்கிறாரா என்று மெல்ல விசாரித்துப்பார்த்தேன். அங்கே இனக்குழு அடையாளங்கள் பெயரளவுக்கே. திருமணம் உட்பட எந்த உறவுக்கும் அவை தடை அல்ல என்றார்.

சரி அப்படியென்றால் திருச்சபை வேறுபாடு இருக்குமா என்று கேட்டேன். அதுவும் இல்லை. டேவிட்டின் வருங்கால மனைவி தாதி வேலைக்குப் படிக்கிறார். அவர் ஒரு கத்தோலிக்கப்பெண். டேவிட் ஆங்கிலிகன் சர்ச்சைச் சேர்ந்தவர். அவள் படத்தைக் காட்டி ‘அழகானவள்’ என்றார். வெள்ளைக்காரப்பெண். ‘இல்லை. அவள் நமீபியப்பெண்தான். இங்கே எங்களுக்கு நிறைய இனக்கலப்பு உண்டு. அதனால் வெள்ளைத்தோலுள்ளவர்களும் நிறையபேர் இருக்கிறார்கள்’ என்றார் டேவிட்.

நமீபிய மக்களின் அடிப்படை இயல்பில் கிறித்தவம் ஆக்கபூர்வமான பல விஷயங்களைச் சேர்த்திருக்கிறது என்ற எண்ணம் எனக்கு உருவானது. அங்கே செல்வதற்கு முன் அதற்கு நேர்மாறான எண்ணமே என்னிடமிருந்தது, ஐரோப்பியக் கிறித்தவம் அவர்களின் ஆப்ரிக்க மரபை அழித்திருக்கும் என்று நினைத்திருந்தேன். மாறாக அவர்களின் இனக்குழுவேறுபாடுகளையும் காலங்காலமாக நடந்துவந்த இனப்பூசல்களையும் இல்லாமலாக்க கிறித்தவத்தால் முடிந்திருக்கிறது என்று தோன்றியது.

அதேசமயம் அவர்களின் தொன்மையான நட்புநிறைந்த பண்பாடும் நீடிக்கிறது. அது ஐரோப்பியக் கிறித்தவ விழுமியங்களுடன் கலந்துவிட்டது. பாலைவனம், மக்கள் நட்புடன் பகிர்ந்துண்டு வாழ்ந்தாகவேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது என்று தோன்றியது. குறைந்த வளங்களுக்காகப் போராடியபடி நெருக்கியடித்துக்கொண்டு மக்கள் வாழும்போதுதான் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டு வசைபாடிக்கொண்டு வாழும் மனநிலையை வளர்த்துக்கொள்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

நமீபியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இன்னொரு முக்கியமான அம்சம் ஆங்கிலம். அங்கே எழுத்துமொழி என்பது அனேகமாக ஆங்கிலம் மட்டுமே. ஆப்ரிக்க மொழிகளுக்குக் கூட எழுத்துவடிவம் ஆங்கிலமே. நமீபிய மக்கள் சாதாரணமாகவே நாலைந்து மொழி பேசக்கூடியவர்கள் .டேவிட் பதினோரு மொழி தெரிந்தவர். ஆனால் அச்சுமொழி ஆங்கிலம். விளம்பரங்கள் அறிவிப்புகள் எல்லாமே ஆங்கிலம். நடுப்பாலைநிலத்தில் மாடுமேய்ப்பவரிடம் கூட ஆங்கிலத்தில் ஓரளவு பேச முடியும். ஆச்சரியமளித்தபடியே இருக்கும் விஷயம் இது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுவாக ஆங்கில எழுத்துக்களை வைக்கலாமே என்றொரு யோசனை முன்வைக்கப்பட்டது. அது மொழிவாதிகளால் கடுமையாக முறியடிக்கப்பட்டது. ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால் இந்தியாவில் இன்றிருக்கும் இந்த மொழிப்பிரிவினைகள் இந்த அளவுக்கு இருந்திருக்காதோ என்று நினைத்தேன். இன்று ஓர் இந்தியன் நாநூறு மைலுக்குள் மொழியால் சிறையிடப்பட்டிருக்கிறான். ஆங்கிலம் கூட இந்தியாவில் உண்மையான புழங்குமொழியாக இல்லை.

அன்று நமீபியாவின் திரைப்பட வளர்ச்சிக்குழுமத்தின் தலைவியை சந்தித்தோம். 28 வயதான ஷெல்லி பெரும்பாலான நமீபியப்பெண்களைப் போல விக் வைத்திருந்தார். அவர்களுடைய முடி மிகவும் சுருண்டது. அதைப் பராமரிப்பதைவிட மொட்டைபோட்டு விக் வைத்துக்கொள்வது சிக்கனமானது என்றார் டேவிட். சற்றே வெட்கத்துடன் தலையை ஆட்டி ஆட்டி அவர் பேசியது அழகாக இருந்தது. நமீபிய அரசு படப்பிடிப்புகளை ஊக்குவிக்கிறது, ஆனால் இயற்கைச் சூழல் மாசுபடுவதில் மட்டும் மிகக் கவனமாக இருக்கிறது. அதற்கான நிபந்தனைகள்தான் அதிகமும்.

அன்று மாலை நகரம் வழியாகச் சுற்றி வந்தோம். நகரில் இரவு பத்து மணிவரைக்கும்கூட ஆணும்பெண்ணும் சுற்றிவருகிறார்கள். அங்கே மாலையில்தான் மக்கள் நடமாட்டமே ஆரம்பிக்கிறது. இரவில் கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக சிரித்துக் கூச்சலிட்டுப் பேசிக்கொண்டு சென்றார்கள். ஒரு பெண்ணிடம் ‘ஏன் இரவில் செல்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ’கல்லூரி ஆரம்பிப்பதே சாயங்காலம் ஆறுமணிக்குத்தான்’ என்றாள். ‘அப்படியென்றால் நீ வேலை பார்க்கிறாயா?’ என்றேன். ’’ஆமாம், நான் தையல் வேலை செய்கிறேன்’’ என்றவள் எங்களைப்பற்றிக் கேட்டாள். பெண்கள் கூட்டமாக எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள்.

‘இந்தியா பற்றி என்ன தெரியும்?’ என்று கேட்டேன். ‘கேந்தி தெரியும்’’ என்றாள். காந்தி தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய ஓர் அரசியல்தலைவர், இந்தியாவில் இருந்து வந்தவர், அகிம்சையை போதித்தவர், நமீபிய அதிபராலும் நெல்சன் மண்டேலாவாலும் மேற்கோள் காட்டப்படுபவர், அவ்வளவுதான் தெரியும். அவர் இந்திய சுதந்திரப்போராட்டத்துக்குப் பாடுபட்டது தெரியாது. நான் சொன்னபோது இருபது குரல்கள் ‘’ஓ’’ என ஆச்சரியப்பட்டன.

நமீபியாவில் குற்றச்செயல்கள் அனேகமாகக் கிடையாது. வீடுகள் எல்லாமே பெரும்பாலும் திறந்தே கிடந்தன. சில செல்வந்த ஜெர்மானியர்களின் மாளிகைகளுக்கு மட்டுமே உயரமான சுவர்கள். பெரியவீடுகள் கூட ஓடுவேயப்பட்டவை. மிகக் குறைவாகவே போலீஸ் கண்ணுக்குப்பட்டார்கள். போக்குவரத்து விதிகள் நமீபியாவில் மிகமிகக் கறாராகவே கண்காணிக்கப்படுகின்றன. அங்கே சாலைப் போலீஸார் லஞ்சம் வாங்கும் வழக்கம் உண்டா என்று கேட்டேன். ‘வாங்க மாட்டார்கள். ஆனால் இரண்டுபேர் இருக்கிறார்கள். சனிக்கிழமை சாயங்காலமானால் பணம் கேட்பார்கள்’ என்றார் டேவிட். சிரித்துக்கொண்டேன்.

விண்ட்ஹோக்கின் தெருக்கள் எல்லாமே சுத்தமாக இருப்பதற்குக் காரணம் பாலைவனப்பண்பாடு காரணமாக அந்த மக்கள் குப்பைகளை வீசுவதில்லை என்பதுதான். சிகரெட் பிடித்தபின் எஞ்சிய நுனியைத் திரும்ப சிகரெட் பெட்டிக்குள்ளேயே போட்டுக்கொள்வதைப் பார்த்தேன். சூழல்தூய்மையை அரசும் கறாராகவே பேணுகிறது, அது சுற்றுலாவளர்ச்சிக்கு அவசியமானது என்பதனால்.

அன்றிரவு தூங்கும்போது மாதவன்குட்டி சொன்னார். ‘நான் ஊரில் இருந்து கிளம்பும்போது எல்லாரும் பயமுறுத்தினார்கள். கரியநிலம் கரிய மக்கள் என்று சொன்னார்கள். இங்கே வந்து ஒருநாள் தங்குவதற்குள் திருவனந்தபுரம் மனிதன் வாழவே லாயக்கில்லாத இடமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. தம்பானூர் பஸ்நிலையத்தில் செப்டிக் டாங்க் உடைத்துக்கொண்டு ஒருவருடமாக ஓடிக்கொண்டிருக்கிறது…இரவு எட்டு மணிக்கு மேல் சங்குமுகம் கடற்கரையில் கௌரவமானவர்கள் நடமாட முடியாது… என்ன நாடு அது’

கொஞ்சம் பெருமூச்சுவிட்டு ‘ஆனால் சினிமாவுக்கு இழப்புதான். இந்த நகரத்தை எப்படிக் காட்டுவது? இது ஒரு ஐரோப்பிய நகரம் என்றுதான் தோன்றும்’ என்றார்.

நான் ‘இது மூன்றாம் உலகம்தான்’ என்றேன்.  “ஆனால் நாம் நான்காம் உலகத்தைச் சேர்ந்தவர்கள்.’’ மாதவன் குட்டி சிரித்துக்கொண்டு ‘’கேரளம் ஐந்தாம் உலகத்தில் இருக்கிறது” என்று சொல்லிக் கண்களை மூடிக்கொண்டார்.

http://www.jeyamohan.in/30640

Link to comment
Share on other sites

கருநிலம் – 3 [நமீபியப் பயணம்]

அதிகாலையில் காருடன் வருவேன் என்று டேவிட் சொல்லியிருந்தார். உண்மையிலேயே அதிகாலையில் வந்துவிட்டார். பகலில் வெயில் இருந்தாலும் எல்லாப் பாலைநிலங்களையும்போல நமீபியாவின் இரவுகள் குளிரானவை. நேரக்கணக்கு குழம்பிவிட்டிருந்தமையால் இரவில் தூக்கம்பிடிக்காமல் பேசிக்கொண்டே இருந்தோம். ஆகவே காலையில் அலாரம் எழுப்பியபோது உடம்பு முறுக்கிக்கொண்டு வலித்தது. ஒருவழியாக எழுந்து குளித்து கீழே வருவதற்குள் டேவிட்டை அரைமணிநேரம் காத்து நிற்கச்செய்துவிட்டோம். அவர் வரவேற்புப்பெண்ணிடம் சரசமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘என் பழைய தோழி’ என்றார். ‘இப்போது?’ ‘இப்போது நான் திருமணம்செய்துகொள்ளப் போகிறேனே?’

கார் கிளம்பியதும் மனம் விழித்துக்கொண்டது. நகரம் அப்போதும் தூக்கத்தில் இருந்தது. விண்ட்ஹோக் ஒரு குழந்தைநகரம் என்ற எண்ணம் ஏற்பட்டது. மிகச்சிலநிமிடங்களிலேயே அதைத்தாண்டி வந்துவிட்டோம். அதன்பின் சீரான சாலை. முந்நூறு கிலோமீட்டர்வரைக்கும் ஒரு வளைவுகூட இல்லாத சாலை என்பது இந்தியர்களுக்கு ஒரு கனவு. காரில் செல்லும்போது ஈஃபில் கோபுரத்தின் அடியில் நின்று அண்ணாந்து பார்க்கும் காட்சிபோலத் தெரிந்தது சாலை. நுனியில் அது ஒரு புள்ளியில் முடிந்தது. அந்தப்புள்ளியில் இருந்து கார்கள் உதிர்ந்து விம்ம்ம் என்று பெரிதாகி வந்து வண்டு போல, அல்லது துப்பாக்கிக் குண்டுபோல நம்மைத்தாண்டிச் சென்றன.

06092012304.jpg

வறண்ட நிலம். மழையென்பதையே அறியாதது போலத் தோன்றியது. ஆனால் புழுதி இல்லை. மொத்த நிலமும் இறுகிய செந்நிறமான பரப்பாகத் தெரிந்தது. தூரத்து மலைகள் எல்லாம் செந்நிறமான பாறைகள். எங்களூரில் சொறிப்பாறைகள் என்பார்கள். மண் இறுகிப் பாறையாக ஆனவை அவை. பல மலைச்சரிவுகளில் மொத்தமாக ஒரு பகுதி பிய்ந்து கீழே விழுந்து சரிந்து கிடக்க அந்தப் பள்ளம் பொக்கைவாய்போல ஒற்றைக்கண்போல பசித்த வயிறு போல பல்லில்லாத கன்னக்குழிவு போல தெரிந்தது.

சாலையோரம் முழுக்க ஒட்டகச்செடி என்று டேவிட் சொன்ன ஒரு புதர். காய்ந்து குறுகி நின்றது. நாங்கள் மணிக்கு நூற்றிஎழுபது கிலோமீட்டர் வேகத்தில் சீறிச்செல்ல தொடுவானமோ மிகமிக மெல்ல திரும்பிக்கொண்டிருந்தது. வானம் ஒளிமிக்க கண்ணாடிப்பரப்பாக விரிந்து கிடந்தது. செல்லும் வழியில் இரு சிறு நகரங்களைத் தாண்டிச் சென்றோம்.

ரெஹபோத் என்ற நகரம் நான்கேநான்கு தெருக்களால் ஆனது. உயரமில்லாத கட்டிடங்கள். அவற்றில் வங்கிகள், கடைகள், இரண்டு ஷாப்பிங் மால்கள் இருந்தன. அங்கே குடிக்க நீரும் பழங்களும் பிஸ்கட்களும் வாங்கிக்கொண்டோம். டேவிட் ஒரு தோழியைப் பார்த்து ஹாய் சொல்லிவிட்டு வந்தார். ‘நல்லபெண், கர்ப்பமாக இருக்கிறாள்’ என்றார். ’ஆனால் சந்தோஷமாக இருக்கிறாள்’

07092012383-1024x768.jpg

காரில் சீறிச்செல்கையில் அந்த நிலத்தை விழிவிரியப் பார்த்துக்கொண்டே சென்றோம். இதை Spreetshoogte Pass என்கிறார்கள். என்னதான் நான் முயன்றாலும் இதை டேவிட் உச்சரித்ததை நான் எழுதிவிட முடியாது. நமீப் பாலை நிலம் நோக்கிய நுழைவாயில் இது என்று சொல்லலாம்

நான்குதிசையிலும் தொடுவானம் தெரியும் நிலம் கண்களை எளிய கருவிகளாக ஆக்கிவிடுகிறது. பார்க்கப்பார்க்க நாம் சிறியதாகிக்கொண்டே வந்து பூச்சிகளாக உணர ஆரம்பிக்கிறோம். இங்கே நிலம் இலவசமாகக் கிடைக்கும். ஆயிரம் இரண்டாயிரம் ஏக்கர்களைப் பெற்றுக் கடனும் வாங்கிப் பண்ணை அமைக்கலாம். ஆனால் விவசாயம் செய்யமுடியாது. வேலியிடப்பட்ட பெரும் பரப்புக்குள் மாடுகளைக் கிட்டத்தட்ட சுதந்திரமாக விட்டு வளரச்செய்வதுதான் இங்கே பண்ணையாம். முற்றிய மாட்டைப் பின்னால் சென்று பிடித்து மாமிசத்துக்குக் கொண்டுசெல்வது மட்டுமே அவற்றுக்கும் உரிமையாளர்களுக்குமான உறவு

06092012311.jpg

இங்குள்ள மாடுகள் எல்லாவகைக் காய்ந்த தாவரங்களையும் உண்கின்றன. இப்பகுதிக்காகத் தகவமைந்தவை. மிகக்குறைவான நீரையே அருந்துபவை. மாலையிலும் காலையிலும் மட்டும் மேய்ந்தபின் மற்ற நேரங்களில் நிழல்களில் கும்பல்களாகப் படுத்துக்கிடக்கும். பாலைவனத்திலேயே நிலத்தடி நீர் உள்ள பகுதிகள் உண்டு. அந்த இடங்களைக் கண்டுபிடித்து அவற்றைச்சுற்றி இந்தப் பண்ணைகளை அமைக்கவேண்டும். ஆடு அதிகமாகக் கண்ணில் படவில்லை. குதிரைப்பண்ணைகள் சில தெரிந்தன

அதன்பின் மண்சாலை. விமானத்தில் இருந்து பார்க்கையில் கண்ட மண்சாலைகளை வைத்து நமீபியாவில் பயணம் இடுப்பொடியச்செய்வதாக இருக்கும் என மாதவன்குட்டி நினைத்திருந்தார். நேர்மாறாக இங்குள்ள மண்சாலைகள் மிக உறுதியானவை, சமமானவை. ’தார்ச்சாலைகளை விட இவற்றைப் பராமரிப்பது கடினம். வாராவாரம் கற்களைப் பொறுக்கவேண்டும். இருந்தாலும் நமீபியாவின் இயற்கைச்சூழலுக்காக இந்தச் சாலைகளை மண்ணாகவே வைத்திருக்கிறது அரசு’ என்றார் டேவிட். மண்சாலைகளில் நூற்றைம்பது கிலோமீட்டர் வேகத்தில் சற்றும் குலுங்காமல் அம்பு போல செல்லமுடிந்தது.

மண்சாலையில் வண்டிசெல்லும்போது பிரம்மாண்டமான ஒரு புழுதிப்படலம் எழுந்தது. ஒரு ஜெட் போவதுபோல . தூரத்தில் ஒரு ஜெட் தெரிந்து அது எங்களைத் தாண்டிச்செல்லும்போது நாங்கள் செந்நிற மேகங்களுக்குள் சென்று மீண்டோம். இந்தப்பகுதிகளில் அவ்வப்போது செம்புழுதிக்காற்றும் அடிப்பதுண்டு. புழுதி ஒரு மழைபோலப் பெய்து விலகும். ஆனால் வேகத்தைக் குறைக்கவே வேண்டியதில்லை

06092012320.jpg

மாலை நாங்கள் ஹூடியா என்ற மலைவாச விடுதியை வந்தடைந்தோம். அங்கே மாலையுலா ஒன்று செல்வார்கள். அதில் இணைந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அவ்வளவு வேகமாக வந்தேன் என்றார் டேவிட். விடுதி, பாலைவனம் நடுவே ஒரு சிறிய பாலைவனச்சோலையில் இருந்தது. அப்பகுதி ஒரு பெரிய பள்ளத்தாக்கு. நான்குபக்கமும் செம்மலைகள். நடுவே இருபதாயிரம் ஹெக்டேர் அளவுக்குப் புல்வெளிநிலம். அது நூறாண்டுக்காலம் ஒரு ஜெர்மானிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் இங்கே செம்மறியாடு வளர்த்தார்கள்.

சுதந்திரத்துக்குப்பின் அந்த நிலத்தை அப்படியே புல்வெளியாக விட்டுவிடலாம் என நமீபிய அரசு முடிவெடுத்தது. அந்தப்புல்வெளி நமீபியாவின் மாபெரும் உயிர்வெளிகளில் ஒன்று. நான்குபக்கமும் பொன்னிறமான புற்பரப்பு. பொன்னிறக்குழந்தைக்கூந்தல் போல. பொன்னிறக் கடல் போல. உருகும் பொன்னுலைப் போல. அதன் நடுவே அந்த விடுதி. ஹூடியா பாலை விடுதி என்று பெயர்

lodge_loungs_fs.jpg

நமீபியாவுக்கே உரிய புல்லால் கூரை போடப்பட்ட வரவேற்பறை. இரண்டு மதுபான விடுதிகள். அவற்றைச்சுற்றி கிட்டத்தட்ட நூறு ஒற்றை அறை வசிப்பிடங்கள். எங்களுக்குப் பதிவுசெய்யப்பட்ட ஒற்றையறைக்குள் பெட்டியை வைத்துவிட்டு முகப்புக்கு ஓடினோம். பாலைநிலத்துக்குள் செல்லும் பயணிவண்டியில் ஏற்கனவே ஆட்கள் ஏறிக்கொண்டிருந்தார்கள். நமீபியாவுக்கு அதிகம் வருபவர்கள் ஜெர்மானியச் சுற்றுலாப்பயணிகள்தான். அவர்கள் ஆண்ட நிலம் என்ற நினைவின் ருசி.

06092012325.jpg

நாங்கள் வண்டியில் ஏறியபோது பணியாள் எங்கள் டீயையும் கேக்குகளையும் காருக்கே கொண்டுவந்து தந்தான். ’அவசரத்தில் சாப்பிடாமல் கிளம்பிவிட்டீர்கள்’ என்று சிரித்தான். அழகான கருப்புப்பையன். வண்டி கிளம்பியது. திறந்த மேல்மாடியில் நான் நின்றுகொண்டேன். வண்டி புல்வெளிக்குள் ஆழமான தடமாகத் தெரிந்த செம்மண் சாலை வழியாகச் செல்ல ஆரம்பித்தபோது என்னைச்சுற்றிப் பொன்னலைகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. கண்ணை நிறைத்து சிந்தனையை நிறைத்துக் கனவுகளை நிறைத்து ஆன்மாவைப் பொன்னிறமாக ஆக்கும் நிலவிரிவு. என் வாழ்க்கையின் மாபெரும் நிகழ்கனவுகளில் ஒன்று.

புல்வெளியில் காலையிலும் மாலையிலும் மட்டுமே மிருகங்கள் வரும் என்றார் டேவிட். அவை நீர் அருந்துவது குறைவு. புல்நுனிகளில் தேங்கும் பனித்துளிகளையே அதிகமும் குடிக்கின்றன. பலநாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நீர் அருந்துகின்றன. ஆகவே நீர் உடலில் இருந்து போகாமலிருக்க பகல் முழுக்க புதர்களுக்குள் தோண்டப்பட்ட குளிர்ந்த குழிகளுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும். மாலையின் வெயில் சிவக்க ஆரம்பித்தது. சூரியனை இத்தனை முழுமையாக வேறெங்கும் பார்க்கமுடியாது. மாபெரும் எரிமலைக்கோளம் போல பிரம்மாண்டமானதோர் பொற்சக்கரம்போல மேற்கில் நின்றது. காற்று சிவந்தபடியே செல்லச்செல்ல புல்வெளியின் பொற்பரப்பு செம்பொன்னாக முறுகி முறுகிச் சென்றது.

07092012382-1024x768.jpg

அந்தப்புல்வெளியில் ஓரிக்ஸ் எனப்படும் ஆப்ரிக்க மிளா அதிகம். அனேகமாக அதற்கு எதிரிகள் இல்லை. ஆகவே அச்சமில்லாமல் நிமிர்ந்து நோக்கி கம்பீரமாக கொம்பைத் திருப்பிக்கொண்டு மேலும் மேய்ந்தது. நெருப்புக்கோழிகள் சிறிய கூட்டங்களாக மேய்வதைக் கண்டோம். கோல்டன்பக் எனப்படும் அழகிய பொன்னிறமான மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்தன. காரின் ஒலியை ஏறிட்டுப்பார்த்து சிலைக்கூட்டமாக நின்றன. முன்நோக்கிக் குவிந்த செண்பக இலைக்காதுகள் சட்டென்று விடுபட அனைத்தும் ஒரே சமயம் துள்ளி அம்புக்கூட்டங்களாகப் புல்மேல் பாய்ந்து பாய்ந்து சென்று மறைந்தன.

ஒரே ஒரு தனித்த ஓநாய் புல் வழியாக ஊடுருவிச்செல்வதைக் கண்டோம்.சாலையைக் கடக்கையில் அது வாலைக்குறுக்கிச் செல்வது தெரிந்தது. பின்பு புல்லுக்குள் அது செல்வதன் தடம் மட்டும் தெரிந்தது.ஒரு ரகசிய நினைவுபோல. அந்தரங்கமான ஒரு புல்லரிப்பு.

06092012302.jpg

அந்தப்பகுதியைச் சுற்றி இருக்கும் செந்நிறமான மலைகள் வெட்டிவைத்த மாமிசப்பாளங்களாக பவளக்குவியல்களாகத் தெரிந்தன. அவை பழைய மணல்மேடுகள். காற்றின் ஈரத்தால் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பாறையாக ஆகிவிட்டவை. ஜீப்பில் அந்த மணல்பாறைகள் மீது சென்று நின்று அஸ்தமனத்தைப்பார்த்தோம். செங்குத்தான பாறை விளிம்பில் பாறை பெயர்ந்து பெயர்ந்து விழுந்து விழப்போகும் நிலையில் நின்றது. நான் மக்கென்னாஸ் கோல்டின் இறுதிக்காட்சியை நினைத்துக்கொண்டேன்

அங்கே நிற்கையில் டேவிட் ஒரு காட்சியை சுட்டிக்காட்டினார்.Tsauchab ஆறு தெரிகிறதா என்றார். ‘ஆறா இங்கேயா?’ என்றேன். ‘ஆம் இங்கே நான்காயிரம் வருடம் முன்பு ஓர் ஆறு ஓடியது. அதன் நீரோட்டம் மண்ணுக்குள் நூறடி ஆழத்தில் உள்ளது. அந்த மரங்கள் நூறடிக்குமேல் வேர் செலுத்துபவை. ஆகவே அவை அந்த ஆற்றுப்படுகையில் வளர்கின்றன என்றார். அதன்பின்புதான் நான் அந்த பச்சைமரவரிசையை கவனித்தேன். சில கணங்களில் பசுமை ஆறாக ஓடும் காட்சியைக் கண்டேன்.

07092012379-1024x768.jpg

மாலையில் ஒரு சிறிய சோலையில் கடைசி நிகழ்ச்சி. காரில் கொண்டுவந்த பீர் மற்றும் குளிர்பானத்தைப் பரிமாறினார்கள். கேக்குகள்,முந்திரிப்பருப்பு,உலர்ந்த திராட்சை. வெள்ளையர் எங்கும் எதையாவது தின்ன முயல்வதை கவனித்தேன். பீர் புட்டிகளைக் கையில் எடுத்ததுமே தாங்கள் ‘ரிலாக்ஸ்’ ஆகிவிட்டதான உணர்வை அடைவது அவர்களின் வழக்கம்போலும். புன்னகைக்க ஆரம்பித்தார்கள்.

நான் பார்த்ததிலேயே மகத்தான அந்திகளில் ஒன்று நிகழ ஆரம்பித்தது. செந்நிறம். செந்நிறத்தின் பல்லாயிரம் நிறபேதங்களால் ஆன பிரபஞ்ச வெளி. செந்நிறம் அடர்ந்து அடர்ந்து கருமை கொண்டு இருண்டு மெல்ல மறைந்தது. அதன்பின்னரே அந்த அந்தியின் வித்தியாசமென்ன என்பதை உணர்ந்தேன். இந்தியாவில் எங்கும் அந்தி என்பது ஒரு பறவைக்கொண்டாட்டம். இமயமலையில் மட்டுமே இத்தகைய அமைதியான அந்தி சாத்தியம். ஒரு பிரபஞ்ச ரகசியம் நிகழ்ந்து முடிவது போல. ஒரு மகத்தான செவ்வியல்கலைநிகழ்வின் திரைசரிவு போல

06092012363.jpg

திரும்பி வரும்போது இருட்டிவிட்டது. விடுதிக்குப்பின்னால் மிக அருகே இருந்த செம்மண்மலைகளின் விசித்திரமான சிற்பவடிவங்கள் மேல் விளக்கொளி பாய்ச்சி ஒரு கனவுத்தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். இருளில் வெளிச்சக்கற்றை புல்வெளிமேல் பாய்ந்து துழாவியது. ஒளிபட்டுக் கனல்போல சுடர்ந்தபடி மான்கள் துள்ளிச்சென்றன. இரவில் எழுந்த நூற்றுக்கணக்கான பூச்சிகளும் சிற்றுயிர்களும் சேர்ந்த பெரும் ரீங்காரம் எழுந்துகொண்டிருந்தது. புல்வெளி ஒரு பெரிய வாத்தியமாக மாறிவிட்டதுபோல. மனிதர்கள் காணமுடியாத ஒரு தேவநடனம் அங்கே ஆரம்பித்துவிட்டது போல

06092012367.jpg

 

Foto:

படங்கள் 

http://www.jeyamohan.in/30653

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமீபியா பயணம் நன்றாகப் போகின்றது ....!

தொடருங்கள் ஆதவன் ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான.... படங்கள். 
பகிர்விற்கு.... நன்றி,  ஆதவன். :)

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி ஆதவன் 

இவ்வளவையும் சுத்திப் பாத்திட்டு நாம் தள்ளுறதுக்கு ஒரு பாட்டை எடுத்திட்டு வந்துடுவானுங்க பயபுள்ளைக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகிர்வுதான்.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

06092012302.jpg

 

இவர்தானே ஜெயமோகன்? :rolleyes:

இலங்கையிலை இனப்படுகொலை நடக்கேல்லை எண்டு சொன்னதும் இவர்தானே??:cool:

Link to comment
Share on other sites

கருநிலம் – 4 [நமீபியப் பயணம்]

அதிகாலையில் கண்டிப்பாகக் கிளம்பியாகவேண்டும் என்று டேவிட் சொல்லியிருந்தார். ஆகவே இம்முறை முன்னதாகவே படுத்துவிட்டோம். இரவு தூக்கம் விழிக்கச்செய்யும் சூழல். பாலைநிலம் நடுவே திறந்தவெளியில் உணவுமுற்றம். நமீபியாவில் அசைவம் உண்ண வேண்டாம் என்று நினைத்திருந்தேன். காரணம் ஏகப்பட்ட எச்சரிக்கைகள். ஆனால் வந்த அன்றே ஒரு சிக்கன் சாண்ட்விச் சாப்பிட்டேன். நான் சாப்பிட்டதிலேயே சிறந்த அசைவ உணவு அதுதான். அதன்பின்னர் நான் சாப்பிட்ட எல்லா உணவுகளுமே மிகச்சிறந்தவை என்றே சொல்லவேண்டும். அமெரிக்காவில் கசாப்புக்கும் சமையலுக்கும் நடுவே காலம் நிறைய ஓடியிருப்பதனால் மாமிசத்தின் சுவையில் ஒரு சின்ன மாற்றம் இருக்கும். நமீபியாவில் எல்லா மாமிசமுமே புத்தம்புதியவை.

07092012377.jpg

இரவுணவை உண்ண எனக்குத் தடையாக இருந்தது பழங்கள் உண்ணும் வழக்கம். ஆனால் ஒரு கறுப்பு மாமி அவள் செய்த ஸ்டீக்கை நான் சாப்பிட்டே ஆகவேண்டும் என்று என் டேபிளுக்கு வந்து மன்றாடினாள். ஆகவே ஒரு மாட்டுத்தொடைக்கீற்றைச் சாப்பிட்டேன். அமெரிக்காவில் சிறந்த ஸ்டீக்குகளைச் சாப்பிட்டிருக்கிறேன் என்றாலும் அது அபாரமான சுவையுடன் இருப்பதாகப் பட்டது. ‘நீங்கள் இந்தியர்கள். ஆகவே நன்றாகவே வறுத்தேன்’ என்றாள். ‘என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறீர்கள்? எங்கள் நிறமும் உங்களை மாதிரித்தானே?’ என்றேன். ’முடியைப் பார்த்தால் தெரிகிறதே’ என்றார். ‘நாங்கள் நிறைய செலவு செய்து உங்களைப்போல முடியை நீட்டிக்கொள்கிறோம்’ என்றாள். ‘இந்தியாவில் அதைவிட செலவுசெய்து முடியை உங்களைப்போலத் திரித்துக்கொள்வார்கள்’ என்றேன். சிரித்தாள்

காலையில் Sossusvlei என்ற இடத்துக்குக் கிளம்பினோம். சௌஸஸ்வெலி என்று ஓரளவு சொல்லலாம். இது ஒருகாலத்தைய ஏரி. இப்பொது உறைந்து களிமண் பரப்பாக உள்ளது. அதைச்சுற்றி பிரம்மாண்டமான செம்மணல்மலைகள். மழைக்காலத்தை ஒட்டி இப்போதும் கொஞ்சம் நீர் தேங்குவதுண்டு. இந்த இடத்தைச்சுற்றியுள்ள ஒரு இருநூறு கிலோமீட்டர் பரப்பை சௌஸஸ்வெலி என்றுதான் சொல்கிறார்கள்.

Sossusvlei.jpg

‘அதிகாலையில் சென்றால்தான் நாம் மிருகங்களைப் பார்க்கமுடியும்’ என்றார் டேவிட். ஆனால் காலையில் பொன்னிறமாகப் புல்வெளி விழித்தெழும் அற்புதத்தைக் காண்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. என் முழு ஆன்மாவும் கண்களில் அமர்ந்திருந்தது. பிரம்மாண்டமாகச் சுழன்றது நிலம். இளம்பச்சையில் தொடங்கி எரியும் செம்பொன்னிறம் வரை சென்ற பல்லாயிரம் நிறக்கூட்டுகள். முப்பதாண்டுகளுக்கு முன் முதன்முதலாகக் கைலாசமலையைப் பார்க்கையில் அடைந்த மன எழுச்சியை, மௌண்ட் சாஸ்தாவைப் பார்க்கையில் பெற்ற கனவை , அப்போது மீண்டும் அடைந்தேன்.

நிலம் மனிதனுக்கு அளிக்கும் பேரின்பத்தை என்னவென்று சொல்வது? எப்படி அதை விளக்குவது? பிரபஞ்சம் என்ற விரிவில் மனிதன் தொட்டறியக்கூடிய தூலம் அதுமட்டும்தானே? அவனை உருவாக்கி வாழவைத்து உள்ளிழுத்துக்கொள்ளும் இருப்பு. நான் இதில் ஒரு துளி என மனம் கொள்ளும் எக்களிப்பே நிலம் அளிக்கும் அனுபவம்போலும். பரவசத்தால் கண்ணீர்மல்கிய நிலையிலேயே அந்த நிலம் வழியாகச் சென்றேன்.

என்றும் நிலக்காட்சிகளின் ரசிகன் நான். என் நினைவறிந்த நாள்முதல் தொடர்ந்து பயணம்செய்துகொண்டிருப்பவன். இந்தியப்பெருநிலத்தில் மலைகளில் பள்ளத்தாக்குகளில் நதிப்படுகைகளில் பாலைகளில் பனிமலைகளில் அலைந்தவன். கனடா,ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா,அரேபியா என்று நிலங்களைக் கண்டவன். ஆனால் ஆப்பிரிக்கநிலம் அளித்த பரவசம் சமானமில்லாத ஒன்றாக இருந்தது.

அதற்குக் காரணமென்ன என்று பின்னர் யோசித்தேன். அது மனிதன் தொடாத கன்னிநிலம் என்ற எண்ணம்தான். தொடுவான் வரை விரிந்த அந்த நிலத்தில் ஒருமுறைகூட மனிதக்கால்படாத இடங்கள் நிறையவே இருக்கும். மனிதன் பிறந்துவிழுந்த பிரசவக்கட்டில் அப்படியே ஈரம்காயாமல் இருப்பது போல ஒரு பிரமை. புதிய உலகம் எனப்படும் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் அப்படி விரிநிலங்கள் உண்டு. ஆனால் அவை எல்லாமே வேலிகட்டப்பட்டு அளந்து உரிமைகொண்டாடப்பட்டவை. இந்த நிலம் இன்னும் இயற்கைத்தெய்வத்திடமே இருந்துகொண்டிருக்கிறது

07092012397-1024x768.jpg

புல். எவ்வளவு மகத்தான உயிர். டேவிட் அட்டன்பரோவின் பிளானட் எர்த் ஆவணப்படத்தில் புல்லைச் சொல்லும்போது ‘இந்தத் தனி உயிர்வகைதான் பூமியின் மாபெரும் உணவு உற்பத்தியாளர். இவ்வுலகில் உண்ணப்படும் உணவு முழுக்க புல்லால் உருவாக்கப்படுகிறது. சூரிய ஆற்றலை உணவாற்றலாக மாற்றுவது புல்தான்’ என்று ஒரு வரி வரும். அக்கணமே ‘விசும்பின் துளிவீழின் அல்லால் பசும்புல் தலைகாட்டலரிது’ என்ற வரியும் வேதத்தின் திருணசூத்திரங்களும் என்நினைவில் எழுந்து வந்தன.

வெல்லமுடியாதது. அழியாதது. மண்ணில் கோடிகோடி உயிர்களுக்கு இயற்கை அள்ளி வைத்த அமுது. பசுமையாக பொன்னாக பொலிந்து நின்றது புல். உணவுக்கு மேல் சொட்டி நின்றன நீர்த்துளிகள். சாய்வொளியில் அவை சுடர்த்துளிகளாக மின்னி உதிர்ந்தன. பொன்னிறமான்கள் நெருப்புக்கோழிகள் புரிகொம்பு மிளாக்கள் பலவகைக் காட்டுக்கோழிகள் மேய்ந்தன. சின்னஞ்சிறு பறவைகள் எழுந்து சுழன்றமர்ந்தன.

வழியெங்கும் நின்ற எல்லா மரங்களிலும் தொலைபேசிக் கம்பங்களிலும் குட்டி வைக்கோல்போர் அளவுக்கு ஏதோ இருந்தது. அது ஒரு சிறு குருவியின் கூடு என்றார் டேவிட். எந்தக் காற்றிலும் அது கிழியாது. பல ஆண்டுகளாக பற்பல தலைமுறைகளாக அவை அந்தக்கூட்டைக் கட்டிக்கொண்டே இருக்கும். உள்ளே நூற்றுக்கணக்கான அறைகள். ‘அவை சிறிய நகரங்கள்’ என்றார் சிரித்தபடி.

மெல்ல மணல்மேடுகள் தெரிய ஆரம்பித்தன. குங்குமக்குவியல்கள். உறைந்து நிலைத்த அந்தி. பிரம்மாண்டமான மலர் ஒன்றின் இதழ்ச்சுழிப்புகள். வானில் இருந்து விழுந்து படிந்த செம்பட்டாடை. அந்த வளைவுகளின் நளினம் நெஞ்சைப் பரவசத்தால் நிறைத்தது. இயற்கையின் தன்னியல்பு பெண்மைதானோ என்ற எண்ணம் எழுந்தது. ஆண்மை என்பது அதை அறியும் தன்னியல்பு மட்டும்தானா? சக்திரூபம் கொண்ட மண்.

மணல்மேடுகள் அருகே வண்டியை நிறுத்தினார் டேவிட். நான் அருகே இருந்த மேட்டை சுட்டிக்காட்டி ‘அங்கே போகலாமா?’ என்றேன். ‘போகலாமே’ என்றார் அவர். நான் அந்த செம்மணல்குன்று நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். சில நிமிடங்களிலேயே முற்றிலும் பாலைநிலத்தால் சூழப்பட்ட உணர்வை அடைந்தேன். காதடைக்கும் அமைதி. என் காலடி ஒலி அந்த அமைதியை வெண் திரையைக் கத்தியால் குத்திக் குத்திக் கிழிப்பது போல ஒலித்தது.

அரைமணிநேரம் நடந்தபின்பு தெரிந்தது மணல்மலை உண்மையில் தூரத்தில் இருக்கிறது என. பாலைவனத்தில் கண்ணைக்கொண்டு தொலைவை மதிப்பிடவே முடியாது. மலை விலகி விலகிச் சென்றுகொண்டே இருந்தது. அதன் மென்மையான சிவந்த சருமத்தின் காற்றலைமடிப்புகள் மீது காலைவெயில் மாறுபட்டது. வெயில் மாற மாற கணம்தோறும் மலைகள் உருமாறியபடியே இருந்தன. நெருப்பு போல. நிலத்தில் பரவிய செந்தழல்களா அவை? இல்லை அந்திச் செம்மேகங்களின் பருவடிவங்களா?

மூச்சுவாங்க ஆரம்பித்தது. மணல்மேட்டில் ஏற ஏற அது சரிந்து சரிந்து என்னை கீழே விட்டது. அம்மாவின் பாலிஸ்டர் புடவையைப் பற்றி ஏற முயலும் கைக்குழந்தைபோல உணர்ந்தேன். பின் மணலிலேயே படுத்தேன். என்னை ஒரு மெல்லிய அருவி போல அது கீழே கொண்டுவந்தது. தேன் வழியலில் ஒட்டிய ஈ போலக் கீழே வந்தேன்.

மலைக்குவைகள் செக்கச்சிவந்த உள்ளங்கைக் குவிதல்கள் போல. திறந்த சிப்பியின் செஞ்சதை போல. புன்னகையில் விரிந்த பிரம்மாண்டமான உதடுகள் போல. சட்டென்று கோயில்பட்டியின் வத்தல்மிளகாய் குவியல்கள் நினைவுக்கு வந்தன. கீழே நின்று பார்க்கையில் சிவந்த புடவை கட்டி அமர்ந்திருக்கும் அம்மாவின் தொடைகள் போலத் தெரிந்தன அவை.

கூ கூ என்று குரல் கேட்டது. டேவிட். நான் திருப்பிக் கூவினேன். அவர் என்னை அடையாளம் கண்டு ஒரு குன்று மேல் ஏறி கைகாட்டினார். நான் திரும்பி வந்து சேர்ந்தேன். ‘எங்கே போனீர்கள்?’ என்றார். ‘போகலாமென்று சொன்னீர்களே?’ என்றேன். ’அது நான் சொல்லும் இடத்தில்…இங்கே வழிதவறினால் கண்டுபிடிப்பது கஷ்டம். குடிக்கத் தண்னீர் இல்லாமல் வேறு போய்விட்டீர்கள்…’ என்று பீதியைக் கிளப்பினார்.

அங்கே மணலில் ஒரு நெக்லஸ் போன்ற தடத்தைச் சுட்டிக்காட்டினார் டேவிட். ‘பாலைவன மணல் என்பது ஒரு நாளிதழ் போல. நேற்றைய செய்தி முழுக்க எழுதப்பட்டிருக்கும்…இதோ இது ஒரு உடும்பு போன தடம்….’ உடும்பின் வாலின் தடம் நடுவே கோடாகச் செல்ல நான்குகால்தடங்களும் பூக்களாகத் தொடுக்கப்பட்டிருந்தன. ‘இது ஓரிக்ஸ். இது மான்கூட்டம். இது முயல்…’ என்று சொன்னவர் ‘இது ஒரு பாம்பு. மணலில் மூழ்கி கிடந்து வாலை மட்டும் சிறிய புழு போல ஆட்டும். பக்கத்தில் போனால் கடித்துவிடும். கடும் விஷம் உடையது’ என்றார்

07092012451.jpg

சட்டென்று ஒரு அடையாளத்தைக் கண்டார். நாணலால் வரைந்த தடம்போல சிறிய முத்திரைகள். எழுத்துக்கள் போல. ‘இதை எழுதியவர் ஒரு பெண்மணி’ என்றபின் மணலைத் தோண்ட ஆரம்பித்தார். மூன்றடி ஆழத்தில் ஒரு குழாய் தென்பட்டது. பிசினால் ஆனது. அதற்குள் குச்சிவிட்டபோது அரையடி ஆழத்துக்குச் சென்றது. உள்ளிருந்து ஒரு பெரிய வெள்ளைச்சிலந்தியை எடுத்தார் ‘இதற்கு டேன்ஸிங் வைட் லேடி என்று பெயர்’ என்றார். அம்மணி அவ்வளவு ஆழத்தில் குளிர்ந்த வளைக்குள் தூங்கிக்கொண்டிருந்தாள். ’விஷமுண்டா?’ என்றேன். ‘சேச்சே அவள் சீமாட்டி’ என்றார்.

டேவிட் அவளை ஒரு புதருக்குள் விட்டார். ‘இங்கே வெயிலில் விட்டால் அவள் செத்துவிடுவாள். நிழலில் என்றால் ஒருமணிநேரத்தில் புதைந்துவிடுவாள்’ ஆப்பிரிக்கர்கள் பொதுவாக வேட்டையாடிகள். எல்லாவற்றையும் தின்பவர்கள். ஆனால் அவர்களுக்கு உயிர்க்கொலை என்பது பெரும்பாவமும்கூட. உணவுக்காக மட்டும் உயிர்களைக் கொல்லவேண்டும். கொல்லப்பட்ட மிருகத்தின் ஆன்மா ஈடேற பிரார்த்தனையும் செய்யவேண்டும். அர்த்தமில்லாத கொலை என்பது பெரும் வன்முறை அவர்களுக்கு. இந்த ஒரு வாரத்தில் இந்த மனநிலையைத் திரும்பத்திரும்பக் காண நேர்ந்தது

அங்கே காலையுணவை உண்டபின் கிளம்பினோம். சிவந்த மணல்மேடுகள் வந்து எங்களைச் சூழ்ந்துகொண்டன. ஒரு சிறிய வண்டாக பிரம்மாண்டமான குடல் ஒன்றுக்குள் சென்றது எங்கள் கார். உருகி வழிந்த எரிமலைக்குழம்பு போல மணல்மலைகள். நான் பாலைவனத்தைப் பலமுறை கண்டிருக்கிறேன். மணல்மலைகளையும் கண்டிருக்கிறேன். ஆனால் நமீபியாவின் குங்கும மலைகள் போலத் தீவிரமான அழகனுபவமாக ஆனவை எவையும் இல்லை.

 

http://www.jeyamohan.in/30671

Link to comment
Share on other sites

கருநிலம் – 5 [நமீபியப் பயணம்]

செம்மணல்மலைகள் ஒவ்வொன்றுக்கும் எண்ணிடப்பட்டுள்ளது என்றார் டேவிட். நாற்பத்தைந்தாவது மணல்மலை உயரமானது, சாலையருகே இருப்பது. அதை வரும்போது பார்ப்போம். இப்போது சௌஸஸ்வெலி போவோம் என்றார். மணல்மலைகளின் ஊடாகச் சென்று ஒரு மையத்தை அடைந்தோம். அங்கேதான் நாம் சென்ற வாகனங்களை நிறுத்திவிட்டுப் பாலைவன வண்டிகளில் ஏறவேண்டும். அகலமான சக்கரங்களும் நான்குசக்கரங்களிலும் இயந்திர இணைப்பும் கொண்ட பெரிய வண்டிகள் அவை. நிஸான் வண்டிகளே அதிகமும் நமீபியாவில் தென்பட்டன.

07092012443.jpg

வண்டிநிறுத்துமிடமும் சூழலும் எல்லாமே நம்பமுடியாத அளவுக்குச் சுத்தமானவை. இந்தியாவில் எந்த ஒரு சுற்றுலாமையத்திலும் அப்படி ஒரு சுத்தத்தை நினைத்துப்பார்க்கமுடியாது. எந்த ஒரு சிறு குப்பையையும் குப்பைத்தொட்டியில் மட்டுமே போடவேண்டும் என்பதில் அங்கே கவனமாக இருக்கிறார்கள். ‘பாலைவனம் எங்களுடைய தேசிய சொத்து..’ என்றார் டேவிட். ‘எங்கள் பிழைப்பே இதுதான்’ ஆம், ஆனால் கன்னியாகுமரியில் அந்தக் கடற்கரையை வைத்துத்தான் ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. அந்த ஆயிரம் குடும்பங்களும் அந்தக்கடற்கரையில்தான் அத்தனை குப்பைகளையும் கொட்டி மலம் கழிக்கிறார்கள்.

வண்டிகளில் மணல்வெளிக்குள் நுழைந்தோம். பெரிய வெப்பம் இல்லை. மணல் தீபோல எரியும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நீங்கள் மேலே செல்லலாம் என்று சொன்னபோது நான் தயங்கியபடி இறங்கினேன். ஆனால் மணல் ஜில்லென்றிருந்தது. அங்கே மணல் சற்று அழுத்ததுடன் இருந்தது. ‘இன்னொருவர் ஏறிச்சென்றதன் மேல் ஏறினால் எளிதில் செல்லலாம். இல்லையேல் ஆற்றல் வீணாகும்’ என்றார் டேவிட்

07092012444.jpg

மணல்மேல் ஏற ஆரம்பித்தேன். பனிமேல் ஏறும் அதே அனுபவம். நுரையீரல் எவ்வளவு முக்கியமான உறுப்பு என்று தெரியவரும். மொத்த உடலும் நுரையீரல் மேல் ஏறி கனக்கும். வாயால் மூக்கால் கண்ணால் காதால் எல்லாம் மூச்சுவிட்டபடி ஏறினேன். என்னைவிட வெள்ளைக்காரப்பெண்கள் வேகமாக ஏறினார்கள். தொடர்ந்த உடற்பயிற்சி செய்பவர்கள்.

மணல்வெளியின் ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு நிறம். ஒரேநிறம்தான், தூரம் அவற்றை நிறம் மாற்றுகிறது என்றார் டேவிட். பொடிமணல். கையில் அள்ளினால் விரலிடுக்கு வழியாக மொத்த மணலும் உதிர்ந்து செல்லும். மணல்மேட்டின் விளிம்பு கத்தி போலக் கூரியது. ஆனால் அருகே சென்றபோது தெரிந்தது அந்த விளிம்புகூட அலையலையாகத்தான் இருந்தது. கதிர் அரிவாள்கருக்கு போல. காற்றின் செதுக்கல் அது. மணல்மேட்டின் நுனி புடவைத்தலைப்பு போலப் பறந்துகொண்டிருந்தது. கனல்மேல் புகைபோல மென்மணல் வீசியது.

மணலின் செங்குத்தான சரிவைக்கண்டால் குலை பதறும். ஆனால் விழவே மாட்டீர்கள் என்று டேவிட் சொல்லி குதித்துக்காட்டினார். மணல் வாங்கிப் புதைத்துக்கொண்டது. எங்கே எப்படிக் குதித்தாலும் விழமாட்டோம். ஆனால் நான்குபனை உயரத்தில் நின்றுகொண்டிருக்கவும்செய்வோம். மணல் உச்சிவிளிம்பில் அமர்ந்துகொண்டேன். என் மேல் மென் தூறலாக செம்மணல் கொட்டிக்கொண்டிருந்தது

07092012398-1024x768.jpg

சிலர் மணலில் சறுக்க ஆரம்பித்தனர். ‘நீங்கள் தாராளமாகச் சறுக்கலாம்…’ என்றார் டேவிட். காற்றால் அள்ளிக் குவிக்கப்பட்ட மணலில் கல்லோ முள்ளோ எதுவும் இருக்காது. இந்திய யூத்துக்கள் அதிகம் வராத காரணத்தால் புட்டிகள் உடைந்து கிடக்க வாய்ப்பில்லை. நான் மணலில் பாய்ந்து குப்புறச்சரிந்தேன். என்னை மணல் கீழே கொண்டு சென்றது. திரும்பிப்பார்த்தால் பிரம்மாண்டமான ஒரு நாக்கில் அமர்ந்து நான் இறங்குவதாகத் தோன்றியது.

மணலில் சிறிய துளைகளில் வசிக்கும் வண்டுகள் எழுந்து பறக்க துளைகளுக்குள் மணல் புகுந்து கடல் அலை பின்வாங்கிய மணல்போல கொப்பளிப்புகள் எழுந்தன. மணல்சரிவு ஒரு பெரும் செந்தாமரை இதழ் போலத் தேங்கியது. நான் கீழே வந்த சில நிமிடங்களில் காற்று என் தடத்தை அழித்தது.

தலையணைமெத்தைகளில் கும்மாளமிடும் குழந்தைகள் போல மணலில் அளைந்தோம். திளைத்தோம். உருண்டு கீழே வந்தோம். மீண்டும் மேலே சென்றோம். திரவமாக மாற எண்ணிப் பாதியில் தயங்கிவிட்ட மண் போல இருந்தது அது. மணலின் கடல். மணலில் அலைகள். மணலின் நுரை. மணலின் சுழிகள். மணல் ஒரு மகத்தான ரகசியம். கோபோ ஆப்ன் நாவலான வுமன் ஆன் டியூன்ஸின் தொடக்கத்தில் மணலைப்பற்றிய ஒரு வர்ணனை வரும். மணல் சமமான அளவுள்ள துகள்களால் ஆனது. அந்த கனகச்சிதமே அதன் எல்லா இயல்புகளையும் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மணலும் தன்னந்தனியாகவே இருக்கிறது. தனியாகவே நகர்கிறது. மணல் ஒருபோதும் நிலைகொள்வதில்லை.

கீழே இருந்த களிமண் பரப்பு மேலிருந்து பார்க்க சிறிதாக இருந்தது, ஆனால் அது ஒரு பெரிய ஏரியின் அடித்தளம். அங்கே பட்டு நின்ற மரங்கள் நான்காயிரம் வருடப் பழைமை கொண்டவை. மொத்தத் தமிழ்ப்பண்பாட்டையும் விடத்  தொன்மையானவை. பலநூறடி ஆழத்தில் வேரோடியமையால் அவை விழவே முடியாது. அவை வைரம் மட்டுமேயான மரங்கள். இன்னும் பல்லாயிரம் வருடம் அவை அப்படியே நின்றிருக்கக் கூடும். அவற்றைத் தொட்டபோது மரம்போலவே இல்லை. உலோகத்தாலானவை போலிருந்தன.

அந்தக் களிமண்பாறைநிலத்தில் ஒளி கண்ணைக்கூசச்செய்தது. சுற்றிலும் இருந்த செம்மைக்கு மாறாக ஒரு வெளிறல். கைவிடப்பட்ட ஒரு கைக்குட்டை போல. களிமண் என்று கண்ணுக்கும் பாறை என்று காலுக்கும் சொல்லி மாயம்காட்டியது நிலம்.

மதியம் சாப்பிட சாண்ட்விச்சும் குளிர்பானமும் கொண்டுவந்திருந்தோம். பீஃப் சாண்ட்விச் இப்பகுதியின் சுவையான உணவு. அவற்றைச் சாப்பிட்டபோதுதான் எவ்வளவு பசிக்கிறது என்ற உணர்வே எழுந்தது. நல்ல வெயில். மரநிழலில் நின்றாலும் சூடு தகித்தது. ஆனால் வியர்வை எழவில்லை. காற்றில் ஈரப்பதம் என்பது அனேகமாக முற்றிலும் கிடையாது. மணலில் நின்றபோது மணலில் உள்ள குளிர் வெப்பத்தை மறைத்தது என்று தெரிந்தது. ஒரு அடிக்கு மேல் ஆழத்தில் மணல் ஜில்லிட்டுக் கிடந்தது. பல அடி ஆழத்தில் கை பொறுக்காத குளிர் இருக்கும் என்றார்கள். வெயில் எரியும் அந்த செம்மணல் மலைகள் உண்மையில் குளிர்ந்து இறுகிய மௌனங்கள். நூற்றாண்டுகளின் யுகங்களின் குளிர் அது.

மீண்டும் செம்மணல் விளையாட்டு. விளையாடும்போது மட்டுமே மனிதன் இயற்கையாக இருக்கிறான் என்று எமர்சன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சிக்காக மட்டுமே செய்யப்படும் ஒன்றிலேயே மானுடமுழுமை நிகழமுடியும். ஆம், லீலை என்று நாம் அதைச் சொல்கிறோம். இந்த மணல்மேடுகள் பிரம்மலீலைகள். அது விளையாடியவை. நமக்கு விளையாட அளித்தவை

மாலையில் திரும்பி வந்தோம். சௌஸஸ்விலி அருகிலேயே ஒரு புதியவிடுதி. செஷ்ரீம் விடுதி. புல்கூரை போட்ட மதுபானவிடுதி. கூடாரக்கூரைபோட்ட அழகிய அறைகள். அங்கே பெட்டிகளைப் போட்டோம். முகம் துடைக்க குளிரவைக்கப்பட்ட துவாலைகள் தந்தனர். ‘அழுத்தித் துடைக்காதீர்கள். ஒற்றி எடுங்கள்’ என்றார் டேவிட். மணலை ஒற்றி எடுத்தோம். ஆச்சரியம் வெள்ளைத்துவாலையில் சற்றும் அழுக்கு இல்லை. கழுத்து தோள் எனப் பல இடங்களைத் துடைத்தோம். துவாலை வெண்ணிறமாகவே இருந்தது

‘பாலைவனத்தில் அழுக்கு கிடையாது. இங்கே குளிக்கவேண்டிய தேவையில்லை. மணலைத் தட்டிவிட்டுக்கொண்டால்போதும். உடைகளும் ஆறுமாதம் வரை அழுக்காகாமல் இருக்கும்’ என்றார் டேவிட் சிரித்தபடி. டெஸ்மண்ட் பேக்லியின் பாலைவன நாவல்கள் எனக்குப்பிடிக்கும். ஃப்ளை அவே என்ற நாவலில் ஒரு வெள்ளைக்காரர் சகாராவுக்கு வந்தவர் அங்கேயே தங்கிவிடுவார். அதற்கு அவர் சொல்லும் காரணம், பாலைவனத்தில் அழுக்கு இல்லை என்பதுதான். உடலில் படியும் அழுக்கு உள்ளேயும் படியக்கூடியது என்பார். அதை நினைத்துக்கொண்டேன்

மாலையில் மீண்டும் கிளம்பி மணல்குன்றுகளுக்குள் சென்றோம். இந்தமணல்குன்றுகள் சௌஸஸ்விலி தேசியப்பூங்கா என அறிவிக்கப்பட்டவை. அங்கே கறாரான பாதுகாப்பு விதிகள் உண்டு. நாற்பத்தைந்தாம் மணல்மலைக்குச் சென்று மேலே ஏறினேன். இப்போது ஏறுவதன் சூட்சுமம் பிடிகிடைத்தது. மணல்சரிவின் நுனிமீது நடக்கவேண்டும். கால்களை அரக்கி அரக்கி வைக்கக் கூடாது. செருப்பில்லாமல் வெறும்காலால் நடப்பது நல்லது

மணல்மேட்டின் உச்சியில் அமர்ந்துகொண்டேன். நெடுநாட்களுக்குப் பின் நான் அற்ற நிலை கைகூடியது. மணலும் வானமும் ஒளியும் காற்றும் மட்டுமே அங்கே இருந்தன. விழித்துக்கொண்டபோது இருத்தல் தித்தித்தது. அடைவதற்கோ வெல்வதற்கோ ஏதுமில்லாத இயல்புநிலைப் பேரின்பம் அது.

சூரியன் அணைந்துகொண்டிருந்தான். செம்மேடுகள் மேல் அந்தி. சிவந்து சிவந்து அணைந்தன வானும் மண்ணும். மாலையில் திரும்பும்போது இருளில் மெல்ல அமிழும் மணல்மலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், சொல்லற்று. இரவில் அவற்றின் அடிப்பகுதி மூழ்கிவிட்டபோதிலும் விளிம்பு நுனியில் ஒளி சொட்டிக்கொண்டிருந்தது. வாள்நுனிக் குருதித்துளி போல.

அன்றிரவு நான் ஒரு சொல் பேசவில்லை. உணவும் உண்ணவில்லை. என் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டேன். செக்கச்சிவந்த ஒரு முழுமையில் அமிழ்ந்து மறைந்து போனேன்

 

http://www.jeyamohan.in/30686

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாரி, கண்ணாடி போடாமல் வாசித்ததில் "நமீதா பயணம்" என வாசித்துவிட்டேன்..

பகிர்விற்கு நன்றி!

Link to comment
Share on other sites

கருநிலம் – 6 [நமீபியப் பயணம்]

காலையில் எழுந்தபோது முந்தையநாள் ஒருசெக்கச்சிவந்த புன்னகைக்குள் தூங்கி எழுந்ததுபோல உணர்ந்தேன். விளக்கமுடியாத கனவுகள் வழியாகச் சென்ற தூக்கம். கூரைக்கூடாரத்துணி மேல் பொழிந்துகொண்டே இருந்த மணல் கனவுகளுக்குள் புகுந்தது. முன் தினம் மணலில் அலைந்தது முழுக்க இப்போது கனவுகளுடன் கலந்து நிகழ்ந்ததா என்றறிய முடியாதபடி ஆகிவிட்டிருந்தது.

08092012456.jpg

காலையில் மீண்டும் புல்வெளியைப்பார்த்தபடி மிதந்து வந்தோம். காலைப்பனியை மேய்ந்து கொண்டிருந்த மான்கள் எம்பி காற்றில் மிதந்திறங்கின. சில நெருப்புக்கோழிகள் ஆச்சரியமே இல்லாமல் திரும்பிப்பார்த்தன. நெருப்புக்கோழியின் தகவமைவு ஆச்சரியப்படுத்துவது. அது பாலைவனத்தின் உயரமில்லாத புதர்மரம் மாதிரியே இருக்கும். சிலநிமிடங்களுக்குப்பின்னர்தான் அதை அடையாளம் காணவே முடியும்

Feenkreis_Marienflusstal_Namibia.jpg

வழியில் நமீபியாவின் ஒரு சுவாரசியமான புதிர்நிலத்தைக் கண்டோம். இவை ஃபெயரி சர்க்கிள்கள் என்று அழைக்கப்படுகின்றன. விரிந்த புல்வெளியில் கனகச்சிதமான வட்டங்கள் உருவாகின்றன, மறைகின்றன. இந்த வட்டங்களுக்குள் எந்தத் தாவரமும் முளைப்பதில்லை. இது ஏன் என்று ஆராய்ந்துள்ளார்கள். இந்தவட்டங்கள் விண்வெளி மர்மங்களுடன் தொடர்புள்ளவை என்ற ஊகங்கள் நிறைய உள்ளன.

இந்தவட்டங்களைப் பற்றி ஆராயும் அறிவியலாளர்களின் நிரந்தரக் கட்டிடங்கள் அப்பகுதியில் உள்ளன. வட்டங்களுக்கு உள்ளே உள்ள மண்ணுக்கும் வெளியே உள்ள மண்ணுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வட்டத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரேசெடியை நட்டு ஒரே நீர் ஊற்றினால் உள்ளே உள்ள செடி பட்டுப்போகிறது

இந்தப்புல்வெளியின் ஏதோ சூழியல் தகவமைவு இது என்ற அளவில்தான் இன்றும் விளக்கம் உள்ளது. இறங்கி அந்த வட்டங்களைப் பார்த்தோம் காலால் தொட்டுப்பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. உண்மையிலேயே ஏதாவது விண்வெளி மர்மம் இருந்து நான் காலத்துளை வழியாக மறுபக்கம் போய்விட்டால் என்னசெய்வது? அருண்மொழி இந்தப்பக்கம் இருப்பாளே.

அந்தவட்டங்கள் எந்தத் தனித்தன்மையும் இல்லாதவை. செயற்கையாக உருவாக்கப்பட்ட பாத்திகள் போலத்தான் தோன்றின. மான்கள் அந்த வட்டத்தைத் தாண்டிச்செல்லாது என்றார் டேவிட். வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே பழங்குடிகள் அதைக் கண்டறிந்து அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.

2247-fairy-circles.jpg

வழியில் சாலைத்தொழிலாளர் சிலர் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். டேவிட் வண்டியை நிறுத்தி அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு வேகம் எடுத்தார். ஓர் இடத்தில் சாலையோரமாக ஓர் உடும்பைப் பார்த்தோம். பல்லியா முதலையா உடும்பா என்று தெரியாத பிராணி. நான்கடி நீளமிருக்கும். நாங்கள் இறங்கி அருகே சென்றதும் மண்ணெண்ணைக்காற்று ஸ்டவ் போல ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ஹ்ஹ்ஹ் என்று சீறியது. வாலால் அடித்தது. அது கடிக்காது, ஆனால் வாலால் அடித்தால் காயம் வரும். காயம் சீக்கிரம் ஆறாது என்றார் டேவிட்.

‘நல்ல இறைச்சி. ஆனால் இப்போது இதை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்றார்.  நமீபியாவில் ஆரிக்ஸ், நெருப்புக்கோழி, கோல்டன்பக் மூன்றையும் வேட்டையாட அனுமதி உண்டு. வேட்டையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும். அதற்கான காரணம் இங்கே அவற்றைக் கொன்று தின்னும் ஊனுண்ணிகள் அருகிவிட்டன என்பதே. இங்கே உள்ள முக்கியமான ஊனுண்ணியான சிவிங்கிப்புலி நீர் உள்ள மலை மடிப்புகளில் மட்டும் வாழும். புல்வெளிக்கு மிகப்பெரும்பாலும் வருவதில்லை.

வழியில் ஒரு பெண்ணும் ஆணும் வண்டிக்காகக் கை காட்டினார்கள். ‘டேவிட் நீங்கள் விரும்பினால் ஏற்றிக்கொள்ளலாம்’ என்றார். கண்டிப்பாக என்றோம். அவர் முதலில் கைகாட்டிய பெண்ணை ஏற்றிக்கொண்டார். 25 வயதான லூசி ஒரு மருத்துவப்பணியாளர். எட்டுமாதம் பயிற்சிபெற்றபின் காசநோய், தொழுநோய், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கான அடிப்படைச் சிகிழ்ச்சைகளை ஊர் ஊராகச் சென்று செய்பவள். அவள்சென்ற கிராமம் அச்சாலையில் இருந்து இருபது கிமீ தூரத்தில் இருக்கிறது. அவள் ரெஹபோத் நகருக்குத் திரும்பிச்செல்லவேண்டும்.

08092012457.jpg
‘பேருந்து வசதி உண்டா?’ என்றோம். நமீபியாவில் பொதுப் பேருந்துகள் இல்லை. பாலைவனத்தில் வணிக அடிப்படையில் அது சாத்தியமும் இல்லை. அதிகபட்சம் ஓரிரு பயணிகள்தான். அப்படியென்றால் எப்படி போக்குவரத்து நிகழ்கிறது? சாலையோரத்திற்கு வந்து நின்று ‘லிஃப்ட்’ கேட்பதுதான் ஒரே வழி. ஆனால் பெரும்பாலும் எவராவது ஏற்றிக்கொள்வார்கள். சரக்குவண்டிகள், சுற்றுலா வண்டிகள் சென்றுகொண்டுதான் இருக்கும். சிலர் பணம் வாங்குவார்கள். பெரும்பாலும் இலவசம். அப்படி ஏற்றிக்கொண்டாகவேண்டும் என்பது ஒரு எழுதப்படா விதி.

’வண்டி கிடைக்காவிட்டால்?’ என்றேன். ‘திரும்பச் செல்லவேண்டியதுதான்.சிலசமயம் அப்படி ஆகும்’ என்றாள் அவள். இரவுவரை பார்த்துவிட்டு அந்தக் கிராமத்துக்கே செல்வாள். நடந்தா? நடக்கலாம், சிலசமயம் கழுதைவண்டிகள் வரும். தனியாக அப்படி பாலைநிலத்தில் நிற்பது பயமாக இருக்காதா? ’என்ன பயம்? இங்கே நம்மைத்தாக்கும் விலங்குகள் இல்லை’ என்றாள். எப்படி மேலே சொல்வதென்று தெரியவில்லை.

‘திருமணமாயிற்றா?’ என்றேன். ஆப்பிரிக்காவில் அதெல்லாம் தாரளமாகக் கேட்கலாம் என்றார் டேவிட். தனிப்பட்ட விசாரிப்புகளை அங்கே கௌரவமாகவே கருதுவார்கள், வெள்ளையர்களைப் போல அத்துமீறலாக நினைக்க மாட்டார்கள். ‘இல்லை’ என்றாள். ‘ஏன்?’ என்றேன். ‘ஆண்கள் பொய்யர்கள்’ நான் புன்னகை செய்தேன்.டேவிட் ‘உனக்கு எத்தனை குழந்தைகள்?’ என்றார். ‘ஒன்றுதான். அம்மாவுடன் இருக்கிறது. நான் திரும்பிச்செல்ல அதுதான் காரணம்’ என்றாள்.

08092012460.jpg

கடந்த சில ஆண்டுகளாக நமீபிய அரசு பொதுச்சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. டாக்டர்களுக்குப் பதிலாக ஆயிரக்கணக்கில் மருத்துவ உதவியாளர்களை உருவாக்கி உள்கிராமங்களுக்கு அனுப்பி சிகிழ்ச்சை அளிக்கிறார்கள். மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. அங்கே காசநோய் வலுவாகத் திரும்பவந்துள்ளது. எய்ட்ஸ் பரவலாக உள்ளது.

ரெஹபோத் நகரில் அவளை இறக்கி விட்டோம். அங்கே மாதவன்குட்டிஅமெரிக்க டாலரை நமீபியடாலராக மாற்ற ஒரு வங்கிக்குப் போனார். பாதுகாப்பு ஏற்பாடு இல்லாத வங்கியில் இரண்டே கவுண்டர்கள். நாலைந்து வாடிக்கையாளர்கள். பிரம்மாண்டமான ஒரு பெண் கையில்லாத டிஷர்ட் -ஷார்ட்ஸ் அணிந்து வந்து என்னருகே நின்றாள். அந்த அளவுகளில் ஒரு பெண்ணை நான் கண்டதே இல்லை. மாநிறம். என்னிடம் ‘; ஹாய்…ஐ யம் எ செக்‌ஷுவல் வர்க்கர்…ஆர் யூ இண்ட்ரெஸ்டட்? ஐ ஹேவ் எ நைஸ் பிளேஸ்’ என்றாள். ‘நான் சாரி மேடம்…ஐ அம் பிஸி ’ என்றேன். ‘நைஸ்…ஹேவ் எ பிளெசெண்ட் ஜெர்னி’ என்றாள்

மாதவன்குட்டி வந்து அங்கே அன்னியச்செலவாணி வாங்குவதில்லை, பக்கத்து வங்கிக்குச் செல்லவேண்டும் என்றார். நான் அந்தப்பெண்ணிடம் அந்த வங்கியைக் கேட்டேன். அவளே வந்து சுட்டிக்காட்டி விரிவாக நடைமுறையையும் விளக்கினாள். வங்கியில் ஒருத்தியைப் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவளுடைய தோரணையும் பேச்சும் அவள் அன்னிய வாடிக்கையாளர்களை நம்பியிருப்பவள் என்று காட்டியது. அதற்குச் சரியான இடம் வங்கிதான்

நாங்கள் மீண்டும் விண்ட்ஹோக் வந்து சேர மதியமாகிவிட்டது. அதே ஓட்டல். அதே அறை. ‘பாலைவனம் பிடித்திருந்ததா?’ என்றார் காவலர். ‘ஆமாம்…அற்புதம்’ என்றேன். ‘நீங்கள் மலேசியா தானே? உங்கள் நாடு பசுமையாக இருக்கும் இல்லையா?’ என்று ஆர்வத்துடன் கேட்டார். நான் சிரித்தேன்.

மதியம் சாப்பிட்டேன். நமீபியாவின் ஸ்டீக்குக்கு நான் அடிமையாகிவந்தேன். அது நெருப்புக்கோழி ஸ்டீக். கோழிமாதிரித்தான் இருந்தது. மதியம் தாண்டியதும் டேவிட் வந்தார். எங்களை விண்ட்ஹோக் நகரைப் பார்க்கக் கூட்டிசென்றார். நகரின் அதிகம் பிரபலமல்லாத இடங்களைப் பார்க்கவேண்டும் என்றோம்.

டேவிட் எங்களை நகரின் சேரிப்பகுதிக்குக் கொண்டுசென்றார். வீடுகள் எல்லாமே தகரத்தாலான கூரையும் சுவர்களும் கொண்டவை. வறுமை நிறைந்த சேரிதான். ஆனால் மும்பை அல்லது சென்னை போலப் பரிதாபகரமான சேரி இல்லை. இங்குள்ளதுபோல கொடூரமான வாழ்க்கை நிலை இருப்பதாகவும் தெரியவில்லை. முக்கியமான விஷயம் சேரி சுத்தமாக இருந்தது என்பதே. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு கரிய பாலிதீன் பையில் குப்பை போட்டார்கள்.

08092012459.jpg

‘அரசு இதை சுத்தம்செய்யுமா?’ என்றேன். ‘இல்லை. இவர்களே இதை குப்பை எரிக்கும் இடத்துக்கு மொத்தமாகக் கொண்டு சென்று கொடுப்பார்கள். ஆளுக்கு ஐந்து நமீபியன் டாலர் இதற்கு செலவாகும். தாங்கள் வாழுமிடம் குப்பையாக இருப்பதை இவர்கள் விரும்பமாட்டார்கள்’ என்றார் டேவிட். குப்பையை எரித்து மின்சாரம் எடுக்கும் ஆலை ஒன்று நகருக்கு வெளியே இருந்தது.

அங்கே உள்ள பிரச்சினைகளில் முக்கியமானது குடிநீர்தான். அதை விலைகொடுத்து வாங்கியாகவேண்டும். குடிநீர் அரசுக் குழாய்களில் கிடைக்கும் . தானியங்கி முறை. நாணயத்தைப்போட்டால் ஐந்து நிமிடம் நீர் கொட்டும். அதைக் குடங்களில் பிடித்துச்செல்கிறார்கள். மிகச்சிக்கனமாகவே நீரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நீர் எப்போதும் கிடைக்கும்.

சாலைகளில் குழந்தைகள் குதியாட்டம் போட்டன. அவை மாதவன்குட்டியின் மீசையை மிக விரும்பின. ‘மேன் யூ ஹேவ் ஃபன்னி திங் தேர்’ என்றது ஒரு குண்டுக் குழந்தை. மற்ற குழந்தைகள் வாய்பொத்திச் சிரித்தன. ‘நாட் மேன்…அங்கிள் அங்கிள்’ என்றார் மாதவன்குட்டி. அவர்கள் மீசையைப் பார்த்ததில்லை. அங்கே உள்ளவர்களுக்கு மீசை முளைப்பதில்லை. முடி நுரைபோலத்தான் இருக்கும்.

சேரியில் பதினைந்து வயதான ஒரு பெண்ணின் இடுப்பில் குழந்தையைப் பார்த்தோம். ‘தம்பியா?’ என்றேன். சிரித்தாள். டேவிட் அது அவளுடைய குழந்தை என்றார். அது அங்கே சாதாரணம். சிறுவர்கள் மதுக்கடையில் நுழைந்து குடிப்பதைக் கண்டோம். அதுவும் அங்கே சாதாரணம். ‘மது இங்கே பெருகி விட்டது. பெண்கள் நிறையக் குடிக்கிறார்கள். அதுதான் எங்கள் சமூகப்பிரச்சினை’ என்றார் டேவிட்

டேவிட் வேலை கிடைக்கும்வரை அங்கேதான் வாழ்ந்தாராம். கோடைகாலத்தில் கடுமையாக சுடும் என்றார். அவரது அத்தை வீடு அங்கே இருந்தது. அத்தையும் தோழிகளும் வாசலில் அமர்ந்து ‘பாடுபேசி’க்கொண்டிருந்தார்கள். டேவிட்டைக் கண்டதும் உற்சாகமான ஆரவார உபசரிப்பு. அத்தைபெண்ணை டேவிட் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டார். அவருக்கு அவள் சகோதரி முறை. டேவிட்டின் நிறைய உறவினர் அங்கே இருந்தனர். பெரும்பாலானவர்கள் செக்யூரிட்டி வேலைபார்ப்பவர்கள். உடல் உழைப்பாளிகள்.

குழந்தைகள் அழகிய கண்களுடன் கருமுத்துக்கள் போலிருந்தன. அவற்றைத் தொட்டுத் தூக்கலாமா என்று கேட்டேன். தாரளமாக என்றார். நான் ஒரு குண்டுப்பையனைத் தூக்கிக் கொஞ்சினேன். அவன் அக்கா வெட்கம் தாளாமல் ஓடிவிட்டாள். பையனுக்குப் பரிசாக நான் பத்துடாலர் கொடுத்தேன். டேவிட் அவன் அம்மாவிடம் நான் குழந்தையை ஆசீர்வாதம்செய்கிறேன் என்று சொன்னார். அந்த அம்மையார் முகம் மலர்ந்து ‘அவன் நல்ல பையன்…நாங்கள் கத்தோலிக்கர்கள்’ என்று சொன்னார். பையன் பெயர் சேவியர்.

உலகின் எந்த நாட்டிலும் நான் குழந்தைகளைத் தொட்டதில்லை. பொதுவாக எங்கும் குழந்தைகளைக் கொஞ்ச நான் விரும்புவேன். ஆனால் வெள்ளையர் அதை விரும்புவதில்லை என்று தெரியும். நான் ஒரு வெள்ளைக்காரக் குழந்தையைத் தொட்டதே கிடையாது. புன்னகை மட்டும் செய்வேன். கொஞ்சம் அதிகமாகப் பேசினால்கூட அதன் பெற்றோர் ஜாக்கிரதையாக ஆகிவிடுவதைக் கண்டிருக்கிறேன். அக்குழந்தைகளும் அன்னியர் பற்றிய பயம் கொண்டவை.

நகரின் புகழ்பெற்ற மதுக்கடைப்பகுதிக்குச் சென்றோம். வின்ட்ஹோக் நகரின் இன்னொரு முகம் இது. தெரு முழுக்க மதுக்கடைகள். அங்கே அந்த பின்மதியத்திலும் கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் குடித்துக்கொண்டிருந்தார்கள். சாலைகளில் பாடலுக்கு நடனமாடினார்கள். எங்கும் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ‘இன்றைக்கு விடுமுறையா?’ என்றேன்.’ விடுமுறை என்றால் நாம் இப்படி காரில்செல்லவே முடியாது’ என்றார் டேவிட்

அருகே இருந்த ஒரு சந்தைக்குச் சென்றோம். வடசேரி கனகமூலம் சந்தை போலவே இருந்தது. ஆனால் குப்பைகளும் சாக்கடையும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. மக்காச்சோள மாவுதான் அவர்களின் முக்கியமான தானியம். பலவகையான கருவாடுகள். உலர்ந்த இறைச்சி, உலரவைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் உலர்ந்த பழங்கள். பெண்கள் சாவகாசமாக சாமான்களை வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

அங்கேயே கையேந்திபவன்கள். மக்காச்சோளக் களிக்கு மாட்டிறைச்சிக் கறி. களியை உருட்டிக் கறியில் போட்டு எடுத்து சாப்பிடவேண்டியதுதான். பெங்களூரில் கேப்பைக்களி சாப்பிடுவார்கள் அதைப்போல. ஓர் இடத்தில் மாட்டிறைச்சியைத் தீயில் சுட்டு விற்றார்கள். சாம்பிள் கேட்டால் சும்மா ஒரு துண்டு கொடுத்தார்கள். நான் ஒரு துண்டு சாப்பிட்டேன். காரம் தூக்கியடித்தது.

மீண்டும் அந்த சாராயச்சாலைக்கு வந்தபோது இருட்டாக ஆரம்பித்திருந்தது. சாலைகளில் விதவிதமான கார்கள் நின்றன. கார்களில் இருந்து பாடல்கள் ஒலித்தன. குட்டை ஆடை அணிந்த பெண்கள் நடமாடினார்கள். ’இரவெல்லாம் குடிப்பார்கள். நேராகப் போய்ப் படுத்துத் தூங்கி எழுந்து மீண்டும் குடிப்பார்கள். கடைசிப்பைசாவையும் குடிப்பது வரை நிம்மதியே இருக்காது’ என்றார் டேவிட்

நமீபியாவில் இருசக்கர வாகனங்கள் அனேகமாக இல்லை. கார்கள்தான் அதிகம். நகரத்தில் பேருந்து உண்டு. ரயில் தொலைதூர நகரங்களுக்கு. ரயில் இங்கே மிகமிக மலிவு என்றார் டேவிட். இருசக்கர வாகனங்கள் ஏன் இல்லை என்று யோசிக்கவேண்டும். அது அங்குள்ள காலநிலைக்குப் பொருந்துவதில்லை என்று தோன்றவில்லை. நம்மூர் வெயில்தான் அங்கும். யாரும் வாங்க ஆரம்பிக்கவில்லை, அவ்வளவுதான் என்று தோன்றியது. அங்கு காரே அதிக விலையில்லை. சாலையில் ஓடும் பெரும்பாலான கார்கள் ஐரோப்பாவில் இருந்து பழையவிலைக்குப் பெறப்பட்டவை.

இரவு குளிர ஆரம்பித்ததும் டேவிட் எங்களைத் திரும்ப எங்கள் விடுதிக்குக் கொண்டுவந்து சேர்த்தார். காவலர் சிரித்தபடி ‘எங்கே சென்றிருந்தீர்கள்?’ என்றார். மதுக்கடைச்சாலைக்கு என்றேன். ‘ஓ நோ…’ என்று சிரித்துத் தலையாட்டினார். ‘ஏன் ?’ என்றேன். ‘உங்கள் கண்ணைப்பார்த்தாலே தெரியும் நீங்கள் குடிப்பதில்லை. நீங்கள் ஒரு புத்திஸ்ட்’ என்றார்

 

http://www.jeyamohan.in/30698

Link to comment
Share on other sites

 

கருநிலம் – 7 [நமீபியப் பயணம்]

 

நமீபியா ஒரு பெரிய நாடு. அதைப் பொதுவாக மூன்று பெரும் நிலப்பகுதிகளாகப் பிரிக்கலாம். மேற்கே கடற்கரையை ஒட்டியபகுதி பாலைவனம். தெற்கே கொஞ்சம் வளமான ஆற்றுப்படுகைகள் உண்டு. அங்கே மக்காச்சோளம் பயிரிடுகிறார்கள். கிழக்கே உள்ள கலகாரி பாலைவனம் உண்மையில் பாலைவனம் அல்ல, மேய்ச்சல்நிலம்தான் நாங்கள் ஒரேஒருவாரம்தான் திட்டமிட்டிருந்தோம். அதில் இருநாட்கள் சினிமா சம்பந்தமான விசாரணைகளுக்காகச் செலவாயின. எஞ்சியநாட்களில் கணிசமான நேரம் காரில் கழிந்தது. ஏனென்றால் பாலைவனத்தில் ஆயிரம் கிலோமீட்டரெல்லாம் ஒரு தூரமே இல்லை.

08092012461.jpg

ஆகவே ஒருபானைச்சோற்றுக்கு ஒரு சோறு என்ற தேய்வழக்கின்படி நமீபியாவின் ஒரு நாநுனிச்சுவையையே அறிந்தோம். அதற்கே இரண்டுலட்சம்வரை செலவாயிருக்கும். ஆனால் ஒப்பிடும்போது இந்தியாவிலேயே அந்தச் செலவு ஆகிவிடும் என்று தோன்றியது. பதினொன்றாம் தேதி நாங்கள் கிளம்பவேண்டும். அதற்கு முன் சில நமீபிய கிராமங்களைப் பார்க்க விரும்பினோம்.

நமீபியாவில் இன்றும் முழுமையான பழங்குடிவாழ்க்கை வாழ்பவர்கள் என்றால் ஹிம்பா, புஷ்மேன் என்ற இரு இனக்குழுக்கள்தான். புஷ்மேன் வாழ்வது கலகாரியில். அங்கே செல்ல வின்ட்ஹோக்கில் இருந்து நேர் எதிர் திசையில் செல்ல வேண்டும். நெடுந்தூரம். ஹிம்பா கிராமத்துக்குப் போகத் திட்டமிருந்தது. ஆனால் அதற்கான செலவு அதிகம் என்று கடைசியில் அதைக் குறைத்துவிட்டோம். சினிமாவுக்கான இடங்களை மட்டுமே முடிவுசெய்தோம். எங்கள் கதைக்குள் ஹிம்பாக்கள் இல்லை. மேலும் ஹிம்பாக்களைத் திரையில்காட்ட நமீபிய அரசு ஒப்புக்கொள்வதில்லை. காரணம் அவர்கள் பெரும்பாலும் ஆடை அணியாதவர்கள்.

ஒக்கஹாஞ்சா [ Okahandja ] இடத்துக்கு டேவிட் கொண்டு சென்றார். அது ஒரு பழங்குடி கலைப்பொருள் சந்தை. கலைப்பொருட்களைச் செய்பவர்களே கொண்டுவந்து விற்கவேண்டும் என்பது விதி. அல்லது உறவினர்கள் விற்கலாம். டேவிட்டின் பெரியம்மா பையன் அங்கே ஒரு கடை வைத்திருந்தான். காட்சனின் மகன் ஆரோனுக்காக ஒரு சிறிய முரசு வாங்கிக்கொண்டேன். மர முகமூடிகள், மரத்தாலான வாட்கள், மந்திரக்கோல்கள், பலவகையான சிற்பங்கள் குவிந்துகிடந்தன. வெள்ளையர் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஒக்கஹாஞ்சா என்ற கிராமம் சற்று தள்ளி இருந்தது. அங்கே டேவிட்டின் தாய்மாமாக்கள் இருவர் இருந்தனர். அவரைப்பார்த்த ஒரு பெண் கட்டித்தழுவி உணவுண்ண அழைத்தார். டேவிட்டின் பெரியம்மா மகளாம். காலையுணவும் மக்காச்சோளக் களியும் மாட்டிறைச்சியும்தான். ‘No meat don’t eat’ என்பது தன் கொள்கை என்றார் டேவிட்.

கிராமம் என்றாலும் அது நாம் நினைப்பது போன்ற ஆப்பிரிக்க கிராமம் அல்ல. பழமையான குடிசைகள் அனேகமாக இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. தகரக்கூரை போட்ட வீடுகள். ஒரு சில வீடுகளில்தான் புல்கூரை. அந்தப் பாலைவனப்புல் நம் கட்டைவிரல் அளவு கனமானது. பிளாஸ்டிக் போல மட்காதது. அதை ஒரு சாண் கனத்துக்கு அடுக்கிக் கூரைபோட்டிருக்கிறார்கள். கூரை புதியதாக இருக்கையில் பொன்னிறமாகவும் ஓரிரு வருடம் கழித்துக் கருமையாகவும் இருக்கும். பத்துவருடம்வரை கூரை இருந்துகொண்டிருக்குமாம்.

மரச்சிம்புகளால் உருவாக்கப்பட்ட தட்டிகளில் மண்பூசி சுவராகக் கட்டிய சில குடிசைகளும் இருந்தன. குடிசைக்கு வெளியேதான் அடுப்பு. மக்காச்சோளக் கதிர் முதல் மாட்டிறைச்சி வரை நேரடியாக அடுப்பில் சுட்டுத் தின்பதுதான் அவர்களின் வழக்கம். ஆனால் சுடுவதை அற்புதமான கலையாக ஆக்கியிருந்தார்கள். முழுக்கோழியையும் பொன்னிறமாகச் சுட்டார்கள். ஒரு கருகல் இல்லை, ஒரு இடத்தில் தசைவெடித்துக் கொழுப்பு ஒழுகவும் இல்லை.

சுட்ட சீனிக்கிழங்கும் கோழியிறைச்சியும் புளிக்கவைக்கப்பட்ட மாவுநீரும் [நீராகாரமேதான்] தந்து எங்களை டேவிட்டின் பெரியப்பா உபசரித்தார். அவர் ஒரு முன்னாள் ராணுவவீரர். தென்னாப்பிரிக்க ராணுவத்தில் இருந்தார். 1989 இல் தென்னாப்பிரிக்க ராணுவத்திற்கும் நமீபிய சுதந்திரப்படைக்கும் போர்நடந்து கிட்டத்தட்ட பதினாறாயிரம் பேர் கொல்லப்பட்டபோது அவர் நமீபிய புரட்சிப்படையில் இருந்தார். இப்போது அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. வீட்டில் இருந்து கலைப்பொருட்கள் செய்வது தொழில்.

கிராமத்தில் வயதானவர்கள் மட்டுமே இருந்தார்கள். கோயில்பட்டிப்பக்கம் ஒரு கிராமத்திற்குப் போனதுபோல இருந்தது. வயதானவர்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கைவேலைகள் செய்தார்கள். மற்றவர்கள் மாடு மேய்க்கச் சென்றிருந்தார்கள். பெரியகுலுக்கைகளில் மக்காச்சோளம் சேமித்து வைத்திருந்தனர். அதுதான் வருடம் முழுக்க உணவு. எண்ணை, நெய் போன்றவை உணவில் கிடையாது. பதிலுக்கு மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்புதான்.

தலையில் ஆறுமாதத்துக்கு ஒருமுறை சுருள்வைத்து சிறிய சடைகள் கட்டிக்கொண்டால் அதன்பின் எண்ணை தேய்ப்பது சீவுவது ஏதும் இல்லை. அல்லது மொட்டை. அங்கே சீப்பே புழக்கத்தில் கிடையாது. இரண்டு வாரத்துக்கு ஒருமுறைதான் குளியல். அதுவும் நீரால் துடைத்துக்கொள்வது மட்டுமே. துணிகளைப் பெரும்பாலும் துவைப்பதில்லை. உதறி வெயிலில் போட்டு ஒரு குச்சியால் அடித்துத் தூசு இல்லாமலாக்கிக்கொள்வார்கள். சோப்பெல்லாம் கிராமங்களில் யாருக்கும் தெரியாத பொருட்கள். உண்மையில் அந்த வறண்ட காலநிலைக்கு சோப்பு போட்டால் தோல் காய்ந்து உரிந்துவிடும். நான் சோப்பு போடாமல் குளித்ததுகூட என் சருமத்தை உரிந்து கழலச்செய்தது. மீண்டும் சொந்தச்சருமம் பெற பத்துநாட்கள் ஆயின.

குழந்தைகள் புழுதியோடு புழுதியாக விளையாடிக்கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் அழகிய பெரிய கண்கள். சோழிப்பற்கள் நடுவே சிறிய இடைவெளி. பேசும்போது இரு கைகளாலும் சைகை காட்டித் தோளைச் சரித்து அவை பேசுவது அழகாக இருந்தது. ‘யூ குட் மேன்’ என்றான் ஒரு பயல், அவனுக்கு நான் ஒரு பிஸ்கெட் பாக்கெட் கொடுத்தபோது.

மாலை விண்ட்கோக் வந்து சேர்ந்தோம். டிம் என்ற ஜெர்மானிய வம்சத்தைச் சேர்ந்த ஒரு திரைப்பட இயக்குநரைச் சந்தித்தோம். அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கான நடைமுறைச் சிக்கல்களைக்கேட்டுத் தெரிந்துகொண்டோம். டிம் ஒரு தொலைக்காட்சித் தயாரிப்பாளர், இயக்குநர். நமீபியாவில் தொழில்முறை சினிமா இல்லை. வின்ஹோக்கில் மட்டுமே திரையரங்குகள் உள்ளன. கின்யா, நைஜீரியா படங்கள் வரும். தொலைக்காட்சிகளிலும் தென்னாப்பிரிக்க, நைஜீரிய ஆதிக்கம்தான். கிம் சில செய்திப்படங்களை எடுத்திருக்கிறார். ஒரு புனைவுப்படம் எடுக்கப்போகிறார்

பாலைவனப்படப்பிடிப்பு பற்றி சொன்னார். முக்கியமாக வெயில். அடுத்தது மணல். மணல்துகளுக்கு எதிராகக் காமிராவை நன்றாகப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். ஆனால் இந்தியர்களுக்குச் சிறப்பான ஒரு சில ஆலோசனைகள் சொல்ல விரும்பினார். சில இந்திப்படங்கள் அங்கே எடுத்திருக்கிறார்கள். நமீபிய அரசு பாலைவனத்தை மிகச்சுத்தமாகப் பராமரிக்கிறது. பாலைவனத்தில் ஒரு குப்பைகூட மிஞ்சக்கூடாதென்பதில் கறாராக இருக்கிறது. இந்தி ஆசாமிகள் வழக்கம்போலக் குப்பை வீசியபடி வேலைசெய்தார்கள். முடிந்ததும் கூட்டிப்பெருக்கலாம் என்ற நினைப்பு

ஆனால் காற்றில் குப்பைகள் பறந்து பத்து கிலோமீட்டர் சுற்றளவில் நிறைந்துவிட்டன. அவற்றைத் தூய்மைப்படுத்தப் பதினாறு லட்சம் ரூபாய் கட்டணமும் எட்டுலட்சரூபாய் அபராதமும் போட்டார்களாம். குழு சத்தமில்லாமல் பணத்தைக் கட்டிவிட்டு வந்தார்களாம். ‘படப்பிடிப்பிலேயே ஒரு துண்டுத் தாள்கூட கீழே போடாமல் இருங்கள்’ என்றார் டிம்

மறுநாள் காலையிலேயே கிளம்பிவிட்டோம். எங்கள் விமானம் காலை எட்டுமணிக்கு. நான்குமணிக்கே டேவிட் வந்தார்.ஆறரை மணிக்கு எங்கள் டிக்கெட் விசா சோதனை முடிந்து உள்ளே செல்வது வரை வெளியே நின்றிருந்தார். பின்பு கையாட்டி விட்டுச் சென்றார். அவரைப் பிரியும்போது நமீபியாவின் மண்ணைப் பிரிந்த கனம் மனதில் வந்தது. கட்டித்தழுவி விடை பெற்றேன். ‘டேவிட் நான் அனேகமாக ஆறுமாதத்துக்குள் வருவேன். அல்லது அஜிதனை அனுப்புவேன் ’ என்றேன்

’அனுப்புங்கள்.நான் பார்த்துக்கொள்கிறேன். டிசம்பரில் என் திருமணம். திருமணத்துக்கு வந்தால் கௌரவமாக இருக்கும் எனக்கு’ என்றார் டேவிட். ’முயல்கிறேன்’ என்றேன்.

விமானம் மேலேறியது. கரிய மண் கீழே விரிந்து கிடந்தது. மனிதன் பிறந்த மண். கருவறை.

[நிறைவு]

 

படங்கள்

 

[நிறைவு]

http://www.jeyamohan.in/30708

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருநிலம் மனநிலத்தை உழுது விட்டது ... அருமையான கட்டுரை ....! tw_blush:

நன்றி ஆதவன் .....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.