Jump to content

`நிரந்தர புனிதராகும் அன்னை தெரஸாவை சந்தித்த நிமிடங்கள்'


Recommended Posts

`நிரந்தர புனிதராகும் அன்னை தெரஸாவை சந்தித்த நிமிடங்கள்'

151218163421_teresa-mother_640x360_getty

 

இந்தியாவின் கொல்கத்தா மாநகரில் 19 ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த அன்னை தெரஸா, செப்டம்பர் 4 ஆம் நாள் வத்திக்கானில் நடைபெறுகின்ற பிரமாண்ட திருவழிபாட்டில் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதராக அறிவிக்கப்படுகிறார்.

ஐம்பது ஆண்டுகள் ரோம் நகரில் பிபிசியின் செய்தியாளராகப் பணியாற்றியவர் டேவிட் வில்லே. ரோமின் ஃபியுமுசினோ விமான நிலையத்தில் ஒரு மணிநேரம் அன்னை தெரஸாவை சந்தித்து உரையாடிய நினைவுகளை, உணர்வுகளாகப் பதிவு செய்கிறார்.

160902123903_mother_teresa_640x360_bbc_n  

கொல்கத்தாவின் “குப்பத்து மக்களின் புனிதர்” என்று அறியப்பட்ட அன்னை தெரஸா மிகவும் அடக்கமான, எளிமையான, நவீன கால பன்னாட்டுப் பயணி என்பதை அவரைப் பார்த்தவுடனே அறிந்து கொள்ள முடிந்தது.

ஏழைகளுக்கு பணியாற்ற 1950 ஆம் ஆண்டு நிறுவிய அன்பின் மறைபரப்பு கன்னியர்கள் சபையின் உறுப்பினர்களை சந்திக்கும் வகையில் அடிக்கடி உலக நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் மேற்கொள்பவராக விளங்கினார் தெரஸா.

அதனால், ரோமின் பொது விளையாட்டு அரங்கான கோலிசியத்திற்கு அருகில் இருக்கும் அவர் நிறுவிய சபையின் தலைமையகத்திலோ அல்லது இந்தியாவிலுள்ள நல்வாழ்வு மையத்திலோ அல்லாமல் பரபரப்பான விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டது.

நாங்கள் ஒன்றாக, விருந்தினர் வரவேற்பு பிரிவில் அமர்ந்தவுடன், வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பறப்பதற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் வழங்கியிருந்த பயண அனுமதியை அவர் பெருமையோடு காட்டி மகிழ்ந்தார்.

160315133945_mere_teresa_512x288_afp.jpg  அன்னை தெரஸாவை பின்பற்றும் 6000 பேர், 139 நாடுகளில்.

நான் அவரிடம் ஒரு நேர்முகம் காண விரும்பி நேரம் ஒதுக்க கேட்டிருந்தேன். ஆனால் கன்னியர்கள் அதனை தள்ளிப்போட்டு வந்தனர்.

இறுதியில், இந்தியாவில் இருந்து ரோம் வருகின்ற அன்னை தெரசா, கனடாவுக்கு செல்வதற்கு முன்னால் ஒரு மணிநேரம் ரோம் விமான நிலையத்தில் இருப்பார். அப்போது சந்தித்துக் கொள்ளலாம் என்பதை தெரிவித்தனர்.

இவ்வாறு அவரிடம் சிறியதொரு உரையாடலை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அவர் மிகவும் சிறிய உருவம் கொண்டவராகக் காணப்பட்டார். அவருடைய முகத்தில் தோல் சுருங்கி காணப்பட்டது.

தன்னுடைய மறைபரப்பு கன்னியர்களுக்கு சீருடையாக தேர்ந்தெடுத்த நீலக் கரையுடன் கூடிய வெள்ளைச் சேலையில் முக்காடு இட்டவராக கையில் வெள்ளை துணிப் பையோடு வந்த அவரை எளிதாக இனம்கண்டு கொள்ள முடிந்தது.

160903161217_mother_teresa_512x288_getty வறியோர் சேவையில் 50 ஆண்டுகள்

“நீங்கள் இன்னொரு விமானத்தை பிடிக்க வேண்டியிருப்பதால், உங்களுடைய பயணப் பெட்டிகளை எடுத்துகொள்ளவா?” என வாழும் புனிதர் தன்னுடைய பயணப் பெட்டியை தொலைத்து விடலாமே என்று எண்ணி கேட்டேன்.

பின்னர்தான் அது முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தேன்.

“இல்லை. என்னுடைய எல்லா உலக உடமைகளையும் இந்த சிறிய பையில் தான் உலகெங்கும் சுமந்து செல்கிறேன். எனக்கு தேவையானவை மிகவும் குறைவான பொருட்களே” என்று அவர் பதிலளித்தார்.

“எவ்வாறு அனைத்தையும் முன்னரே திட்டமிடுகிறீர்கள்? என்று செல்பேசிகளுக்கு முந்தைய காலமான அப்போது நான் கேட்டேன்.

 

151218125939_mother_teresa_bbc_640x360_b

 இறைவனிடம் சேர்ந்தபோது...

“நான் ரோமில் இருந்தால், வழக்கமாக விமான நிலையத்தில் இருக்கும் காசு போட்டு பேசுகின்ற தொலைபேசி அழைப்பு சேவையை பயன்படுத்தி நாட்டின் அதிபர் அல்லது பிரதமர் அல்லது போப் இரண்டாம் ஜான் பால் என யாரவது ஒருவரை அழைத்து பேசுவேன். அவர்கள் ஒரு காரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

நான் 1980-களில் அன்னை தெரசாவை சந்தித்த அப்போது, அவர் தொடங்கிய அன்பின் மறைமரப்பு கன்னியர்கள் மற்றும் சகோதரர்கள் மற்றும் பாதிரியார்கள் என அவர்கள் வளர்ந்து பன்னாட்டு குடும்பமாக 1,800 கன்னியர்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான பொதுநிலை பணியாளர்களைக் கொண்டு வளர்ந்திருந்தனர்.

இப்போது அவர்கள் மொத்தம் 6 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளனர். 139 நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

140512072238_india_voting_624x351_ap.jpg

 

அவருடைய சபைக்கு பன்னாட்டு எல்லைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு, பெர்லின் சுவர் இடிபடுவதற்கு முன்னரே, சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னரே இல்லங்களையும், நல்வாழ்வு மையங்களையும் உருவாக்கிய அவர், கிழக்கு ஐரோப்பாவில் தன்னுடைய சபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும் தொடங்கிவிட்டார்.

1983 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே அவர் இரண்டு மையங்களை ஹாங்காங்கில் தொடங்கிவிட்டார். ஆனால், ஏழைகளுக்கு இந்த சபையினர் செய்கின்ற பணிகளை சீனா இதுவரை எதிர்த்தே வருகிறது.

சந்திப்பின் நிமிடங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன.

நோயுற்றோர், இறக்கும் தருவாயில் இருப்போர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என அனைவருக்கும் ஒருமனப்படுத்தி பணியாற்றுவது பற்றி அன்னை தெரசா எனக்கு விளக்கினார்.

151218113524_mother_teresa__640x360_afp_

 

 போப் இரண்டாம் ஜான் பாலின் அன்புக்குப் பாத்திரமானார்

அவருடைய சொற்களில் கூறுவதாக இருந்தால், “பசித்தோருக்கு, ஆடையின்றி இருப்போருக்கு, வீடிழந்தவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, பார்வையற்றோருக்கு, தொழுநோயாளிகளுக்கு, விரும்பத்தகாதவர்களுக்கு, அன்பு கிடைக்காதவர்களுக்கு, சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு, சுமையென கருதப்படுகிறவர்களுக்கு மற்றும் அனைவராலும் தவிர்க்கப்படுவோர்களுக்கு எமது பணி தொடரும்” என்றார்.

1986 ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போப் இரண்டாம் ஜான் பால் கொல்கத்தாவிலுள்ள நல்வாழ்வு மையத்தில் அன்னை தெரஸாவை சந்தித்து, இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.

அன்னை தெரசா இறக்கும்வரை வத்திகானில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் போப்பின் பக்கத்தில் வீற்றிருப்பவராக அடிக்கடி தோன்றினார்.

பின்னர் 2003 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் தான், மறைந்த அன்னை தெரசாவுக்கு “அருளாளர்“ பட்டமளித்து புனிதர் பட்டம் பெறுவதற்கான வழிமுறையை தொடங்கி வைத்தார்.

டோரொன்டோ செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டவுடன், பிரியாவிடை பெறும் அறை வரை இருவரும் இணைந்து சென்றோம்.

விமானத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஆர்வமாகச் செல்லும் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் அதிகம் கவனிக்கப்படாதவராக, தானியங்கி கதவுகளுக்கு அப்பால் அவர் மறைந்து போனார்.

வாழும் புனிதர் ஒருவரைச் சந்தித்த அந்த உணர்வுகளை நான் முழுமையாக உணர்ந்தேன்; அவர் என் உள்ளத்தைத் தொட்டுவிட்டார்; அவருடைய வாழ்வின் மகிழ்ச்சியை எனக்குப் பரிமாறிவிட்டார்; அவர் என்னை புளகாங்கிதம் அடையச் செய்துவிட்டார் என்று கூறுவேன்.

http://www.bbc.com/tamil/global/2016/09/160903_saint_teresa

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.