Jump to content

“கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்” ஷாலினி சார்ல்ஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்” ஷாலினி சார்ல்ஸ்

13689296_1077766188966485_1761712982_n

ஷாலினி சார்ல்ஸ்

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டு யாழ்நகரில் வசித்துவரும் ஷாலினி சார்ல்ஸ், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பன்முக ஆளுமையுடையவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். திரைப்பட நெறியாட்கை, குறும்படத்தயாரிப்பு, சமூக சேவை, யாழ் என்ரர்ரெயிமென்ற், மற்றும் யாழ் அறக்கட்டளை ஸ்தாபகர்  என்று பலதுறைகளில் தனி முத்திரை பதித்து இருக்கின்றார் இவரே ஈழத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற தகமையையும் பெறுகின்றார். இவரது “உயிர்வலி” குறும்படம் விருதை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது. திரைப்படம், சமூகம், அரசியல் என்று தனது எண்ணப்பாடுகளை “வல்லினம்”   இலக்கிய சஞ்சிகை  வாசகர்களுடன்  ஷாலினி சார்ல்ஸ் மனம் திறக்கின்றார். அண்மையில் நான் தாயகம் சென்றிருந்தபோது மலேசியாவில் இருந்து வெளியாகும் வல்லினம் இலக்கிய சஞ்சிகை  வாசகர்களுக்காக பிரத்தியேகமாகப் பதிவுசெய்யப்பட்ட நேர்காணல் இது. 

  •  கோமகன்

உங்களை எப்படியாக தெரிந்து கொள்வது 

அடிப்படையில் நான் மிகவும் சாதாரணமானவள். என்னைப்பற்றி நான் சொல்வதைவிட மற்றவர்கள் நான் யார் ? எனது செயல்கள் என்ன ? என்று சொல்வதையே நான் அதிகம் விரும்புகின்றேன்.

இளைய வயதினராகிய உங்களை திரைப்படத்துறை எப்படியாக வசப்படுத்தியது?

எல்லோரும் சொல்வதைப்போல இந்தத்துறையானது “விபத்து” என்று சொல்லமாட்டேன். எனது இந்ததுறையின் பிரவேசமானது பல படிமுறைகளைக் கொண்டதேயாகும். ஆரம்ப காலகட்டங்களில், 2002 – 2003 ஆண்டளவில் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் அனுசரணையுடன் யாழ் நகரில் சிறுவர் விழிப்புணர்வு பற்றிய ஆற்றுப்படுத்தல்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருந்தேன். அதன்பொழுது சில ‘காணொளித் துண்டுகளை’ செய்ய வேண்டியிருந்தது. அதன் மையக்கருவானது  “சிறுவர் துஷ்பிரயோகம்‘ பற்றியதாகவே இருந்தது. அப்பொழுதெல்லாம் இயக்கம், கமரா, வசனம் எழுதுதல், படப்படிப்பு சம்பந்தமான களங்களைத் தெரிவு செய்தல் என்பதெல்லாம் எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. என்னையொத்த இளையவர்கள் தன்னார்வத்துடன் இந்த செயல்திட்டத்தில் இறங்கினோம். இதன்பொழுது இரண்டு பிரச்சாரப் படங்களை நெறியாட்கை செய்திருந்தேன். என்னுடன் கடமையாற்றிய கிருத்திகன் இன்றும் இந்தத்துறையில் இருக்கின்றார். அதன்பின்னர் ஒரு காலஇடைவெளி ஏற்பட்டது. 2006 ஆம் ஆண்டளவில்  இன்னுமோர் சர்வதேசத் தொண்டு அமைப்பினால் சிறுவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் உளவளப்பயிற்ச்சி நெறியில் கடமையாற்றினேன். அதற்காக மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு தன்னம்பிக்கையை மனதில் வைத்து சாதனைகள் புரிகின்றார்கள் என்ற விடையத்தை மையமாக வைத்து “தன்நம்பிக்கை” என்ற ஆவணப்படத்தை நெறியாட்கை செய்தேன். அதன் பின்னரே குறும்படத்தை இயக்க ஆரம்பித்தேன். முதலாவதாக எனது நெறியாட்கையில் “மறுபக்கம்”  என்ற குறும்படம் வெளியாகியது. இது சிறுவர் தொழிலாளர்களைப் பற்றிப் பேசிய ஒரு குறும்படமாகும். இதுவே எனது படிமுறை வளர்ச்சியாகும்.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் வடபகுதி முன்னணியில் இருக்கின்றதை பத்திரிகைகளில் படிக்க கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக சிறுவர் பாலியல் வன்முறை மற்றும் கூட்டு வன்புணர்வு போன்றவை. வடபகுதியில் பாலியல் கல்வியானது எவ்வளவு தூரத்துக்கு முன்னேறியுள்ளது

இப்பொழுது ஓரளவு முன்னேறி இருக்கின்றதுதான் என எண்ணுகின்றேன். ஆனால், பாடசாலை மட்டங்களில் முற்றுமுழுதாகவே இல்லை என்றுதான் சொல்வேன். பாலியல் விழிப்புணர்வு பற்றிய போதிய பயிற்சிகள் ஆசிரியர்கள் மட்டத்தில் இல்லாமையும் ஒரு காரணம். ஆனால், வெளியே கருத்தரங்கங்கள் கற்கைநெறிகளில் இதுபற்றிய விழிப்புணர்வு இருக்கவே செய்கின்றது.

யாழ் என்ரரெயின்மென்ற்” உருவாகவேண்டிய பின்புலங்கள் எப்படியாக இருந்ததுஅது தனது இலக்கில் வெற்றியடைந்ததாக எண்ணுகின்றீர்களா?

எனது கணவராகிய  இசையமைப்பாளர் பிரியன் அவரது பாடசாலை காலத்திலேயே இசைத்துறையில் ஈடுபட்டு வந்தவர். அப்பொழுது சிறு கலையகமிருந்தது. திருமணத்திற்குப் பின் எம் ஒலிப்பதிவு கலையகத்துக்கு வைத்த பெயரே “யாழ் என்ரரெயின்மென்ற்”. பின்னர் இதனூடாக திரைப்படத்துறை தொடர்பான பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்கங்கள் போன்றவற்றை  யாழ் என்ரரெயின்மென்ற் மூலம் முன்னெடுத்தோம். இப்பொழுது ஆரம்பத்தில் நாங்கள் எடுத்திருந்த நோக்கங்களை விட பலமடங்கு முன்னேறி இருக்கின்றோம் என்றுதான் சொல்வேன்.

உயிர்வலி”  குறும்படம் எடுத்தபொழுது உங்களுடைய அனுபவங்கள் எப்படியாக இருந்தது?

” உயிர்வலி”  குறும்படமானது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றுதான் சொல்வேன். இந்தக் குறும்படமானது சர்வதேச எயிட்ஸ் தினத்துக்காக செய்யப்பட்டது. கார்த்திகை மாதம் 27-28 ஆம் திகதிகளில் அதாவது வெறும் இரண்டே நாட்களில் இந்த குறும்படத்தை படப்பிடிப்பு செய்திருந்தோம். இந்தக் குறும்படத்தைப் பொறுத்தவரையில் மிகக்குறுகிய காலகட்டத்தில் செய்து  முடித்தேனே என்ற மகிழ்சியும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டது. அதேவேளையில் படப்பிடிப்புக்களத்தில் எனது குழுவிற்கு படப்பிடிப்பு செய்யப்பட்ட நாட்களில் குழப்பங்கள் ஏற்பட்டன. இருந்தபோதிலும் நான் முறையாக அரச படை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இந்த குறும்படத்தை எடுத்தமையால் பெரிய அளவு வன்முறைகள் ஏற்பட்டிருக்கவில்லை.

இறுகிய பண்பாட்டு விழுமியங்களை உடைய யாழ் சமூகத்தில் ஒரு பெண் இயக்குனராக கடமையாற்றிய பொழுது நீங்கள் சந்தித்த சவால்கள் எப்படியாக இருந்தது ?

எமது சமூகத்தில் ஒரு பெண்ணானவள் அதுவும் பொது வாழ்வில் எதையும் இலகுவாக செய்ய முடியாது என்றுதான் சொல்வேன். அதுவும் சினிமாத்துறையில் மிகவும் காட்டமான விமர்சனங்களை அவள் கடந்தேயாகவேண்டும். இருந்தபோதிலும் எனது குடும்பத்தில் உள்ள கட்டுப்பாடற்ற ஆதரவானது வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை மறக்கடிக்கின்றது என்பதையும் நான் சொல்லியே ஆகவேண்டும். 2012 ஆம் ஆண்டு நான் நெறியாட்கை செய்திருந்த  குறும்படம் ஒன்றை ஒருவர் பிரதி செய்து திருட்டு வீ ஸி டி மூலம் வெறும் ஐம்பது ரூபாய்களுக்கு சந்தையில் கிடைக்குமாறு செய்ததால் நான் காவல்துறைவரை செல்ல நேரிட்டது. அந்தக் காலகட்டங்களில் பிரதி செய்வதற்கு நாம் DVD கடைகளையே நாட வேண்டி இருந்தது.  தனியாரிடம் ஒலிப்பதிவுகளை செய்ய வேண்டியிருந்தது. அந்தக் குறும்படம் வெளியாகமுன்பே அதன் திருட்டுப்பிரதி வெளியாகிவிட்டது. இதற்காக நான் காவல்துறைவரை  சென்ற அனுபவங்கள்கூட உண்டு.

சமகால ஈழத்து திரைப்படத்துறையானது தாயகக் கட்டமைப்பு மற்றும் புலம் பெயர் கட்டமைப்பு என இருவேறு தளங்களில் பயணம் செய்வதை அவதானிக்க முடிகின்றது. இதை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?

என்னைப்பொறுத்தவரையில் தாயக கட்டமைப்புக்கும்  புலம் பெயர் கட்டமைப்புக்கும்  சரியான தொடர்பாடல் முறைகள்  இல்லையென்றே சொல்வேன். அதேவேளையில் இங்கு குழுமவாதச் செயல்பாடுகள் அதிகமாக உண்டு. பொதுவாகவே “ஈழத்துத் திரைப்படத்துறை” என்று பார்க்கும்பொழுது, இலங்கையின் வேறு மாவட்ட கலைஞர்கள் ஒருவித சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கின்றார்கள் .அதாவது தாங்கள் உள்வாங்கப்படாத நிலையில் எவ்வாறு ஈழதிரைப்படத்துறை என்று அழைக்கமுடியும் ? என்பது அவர்களது வாதம். அவர்களைப் பொறுத்தவரையில் ஈழம் என்ற சொல்லாடலானது வடக்கை மட்டுமே குறிப்பதாக உள்ளது.

இந்த சந்தேகங்களை நீங்கள் ஏன் உடைக்க முன்வரவில்லை 

நான் கிழக்கு மாகாணத்தவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன். அப்பொழுது ஈழம் என்றால் என்ன என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன் என்னைப் பொறுத்தவரையில்  சினிமாத்துறையில் ஈழம் என்ற சொல்லாடல் என்பது  தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற வடக்கு கிழக்கு மலையகம் எல்லாவற்றையும் இணைத்ததே. நான் ஈழம் என்று பாவிப்பது இலங்கையைத்தான்.

அண்மையில் வடக்குப் பகுதியில் உருவான சர்வதேச உலகத்திரைப்பட விழா பற்றிய உங்கள் எண்ணப்பாடுதான் என்ன ?

அந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் எனது குறும்படமும் பங்கு பற்றியிருந்தது. அத்துடன் அதனது இயக்குனர் என்றவகையில் என்னாலும் பங்கு பற்றக்கூடியதாக இருந்தது. ஆனால், இதை ஆழமாக உற்று நோக்கினால் இதில் பங்குபற்றிய கலைஞர்கள் யாராக இருந்தார்கள் என்றவகையில் விமர்சனங்கள் உண்டு.

எந்தவகையில் விமர்சனங்கள் உண்டு 

வடபகுதியில் இருக்கின்ற திறமையான கலைஞர்களுக்கு அந்த நிகழ்வில் முக்கியத்துவமோ முன்னுரிமையோ கொடுக்கப்படவில்லை. அதேவேளையில் பல திறமையான உள்ளூர்  திரைப்படங்கள் இருந்தாலும் அங்கு காட்சிக்குட்படுத்தப்பட்ட  திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டமைபுக்குட்பட்டே இருந்தது. அதனால் எமது மண்ணின் கலைஞர்களுக்குரிய கௌரவமோ இல்லை முன்னுரிமையோ கொடுக்கப்படவில்லை. ஆனால், நிகழ்வு என்றவகையில் பார்த்தால் சிறப்பாகவே இருந்தது.

விருதுகளுக்காக சினிமாப்படங்களை நெறியாட்கை செய்தல் பற்றிய உங்கள் நிலைப்பாடு எப்படியாக இருக்கின்றது ?

இந்த விடயம் என்னைப்பொறுத்தவரையில் உடன்பாடில்லாததொன்று. ஏனெனில் எமது படைப்பானது மிகவும் தரமானதாக இருந்தால் விருதுகள் தாமாகவே எம்மைத் தேடிவரும். நாமாக விருதுகளை நோக்கித் தேடிஓடவேண்டியதில்லை. மேலும் விருதுக்காக எடுக்கப்படும் படங்களானால் அதில்  ஜீவன் இல்லாது வெறும் விருதின் வேட்கையே அங்கு மேலோங்கி இருக்கும்.

அதாவது உங்களுக்கு தாயகத்தில் விருதுகள் வழங்குவதில் உவப்பில்லை என்கின்றீர்களா?

ஒரு படைப்புடன் ஒன்றி ஆத்மபூர்வமாக அந்தப்படத்தை நெறியாட்கை செய்யும்பொழுது தாமாகவே தேடிவருகின்ற விருதுகளில் நான் உடன்பாடானவளே ! ஆனால், விருதுகளுக்காக படம் எடுப்பதை நான் முற்றுமுழுதாக மறுதலிக்கின்றேன்.

ரதி விருது ” கிடைத்தபொழுது ஏற்பட்ட குழப்பம் தான் என்ன ?

ரதி விருது மூன்றாவது முறையாக தாயகத்தில் நடைபெற்றது. ரதி விருது என்றாலே குழப்பங்களும் பிரச்சனைகளும் நிறைந்தது என்ற எண்ணப்பாடு பொதுவெளியில் உண்டு. முதல் இரண்டு வருடங்களில் நாங்கள் போட்டியிடக் கூடிய பலமான பின்னணிகள் இருந்திருக்கவில்லை. இந்தவருட ரதி விருதுக்கு மொத்தம் ஏழு படங்களை அனுப்பி இருந்தோம். இந்த விருதின் ஊடாக இரண்டு விடயங்களை வெளிப்படுத்த விரும்பினோம். முதலாவதாக யாழ் நகரில் இருக்கின்ற பெரும்பாலான சினிமாத்துறையை சார்ந்த கலைஞர்கள்  சமூகவலைத்தளங்களில் வருகின்ற விருப்பு வாக்குகள், பகிர்வுகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆகியனவற்றை அடிப்படையாக வைத்து ஒருவித போதை நிலையில் காணப்படுகின்றார்கள் .அத்துடன் யூ டியூப் போன்ற காணொளித் தளங்களில் பணத்தைச் செலுத்தி பார்வையாளர்களை அதிகரிக்கச்செய்து தங்கள் இசைத்தொகுப்புகள் மிக வெற்றியடைந்து விட்டதாக சனங்களுக்குப் போலியான தகவல்களை பரப்புரை செய்கின்றார்கள். இதை முறியடிப்பதற்காக மக்கள் வாக்கெடுப்புக்கு எமது பாடல்களை அனுப்பியிருந்தோம். அதில்  குறும்படம், காணொளி பாடல், மற்றும் ஒலிநாடாப் பாடல் ஆகிய மூன்றிற்கும் எமது படைப்புகளுக்கே மக்கள் வாக்களித்து இருந்தார்கள். ஆனால், வளமையாக குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நாங்கள் யூ டியூப் காணொளியில் பகிரும்பொழுது கலைஞர்கள் மட்டத்தில்  எமக்கு பெரிய அளவு ஆதரவு கிடைப்பதில்லை. உண்மையாக ஒரு படைப்பு சனங்களுக்குச் சேர வேண்டுமானால் அது சேர வேண்டிய விதத்தில் சேரும் என்பதில் எமது இந்த அணுகுமுறையானது வெற்றியை தந்தது.

ரதி விருது வழங்கப்படுவதில் ஊழல்கள் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கமைய விருதுகளைத் தெரிவு செய்தல் என்பன தெரிந்திருந்தும் பலர் அதைத் தட்டிக்கேட்க தயங்கினார்கள். இதை முறியடிப்பதற்காக எமது படைப்புகளை விருதுக்கு அனுப்பி விட்டுக் காத்திருந்தோம் .இதில் எனக்கு சாதகமான விடயமாக இருந்தது. இந்த விருதுத் தேர்வில் கலந்து கொண்ட நடுவர்கள் எல்லோருமே எனக்கு தெரிந்தவர்கள். அதில் ஒரு நடுவர் எனக்கு தொலைபேசி ஏன் நான் படைப்புகளை அனுப்பவில்லை என்றும் தான் எனது படைப்புகளைப் பார்க்கவில்லை என வினாவினார். நான் மூன்று நடுவர்களிடமும் இதை உறுதிப்படுத்தி விட்டு பேசாது இருந்தேன். அதன் பின்னர் விருது விழாவிற்கு அழைப்பு வந்தது. நான் அங்கு சென்றேன். அந்த விழாவில் எனது படைப்புக்கு மொத்தம் ஆறு விருதுகள் கிடைத்திருந்தன. அதில் மூன்று விருதுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவை. அதை மக்கள் விருப்பு வாக்குகளால் வந்த விருதுகள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அது தவிர சிறந்த இயக்குனர், சிறந்த இசை, இன்னுமோர் படைப்புக்கான இயக்குனர் என்று மொத்தம் ஆறு விருதுகள் கிடைத்திருந்தன . இந்த விருதுகள் “உயிர் வலி” குறும்படத்துக்கும் மற்றும் “அண் ரைற்ரில்”  என்ற குறும்படத்துக்கும் கிடைத்திருந்தன. உயிர் வலி குறும்படத்துக்கு கிடைத்தது இரண்டு விருதுகள். இதை நடுவர்கள் பார்க்கவே இல்லை. நடுவர்களே பார்க்காத ஒரு படைப்புக்கு நீங்கள் எவ்வாறு விருது வழங்க முடியும் என்பதே நான் எழுப்பிய கேள்வி.  நடுவர்களுக்கு காட்டப்படாத ஒரு படைப்புக்கு விருது வழங்கப்பட்ட விசித்திரத்தை ரதி விருது வழங்கும் நிகழ்வில் நான் கண்டேன்.

அறிவியல் ரீதியான புனைவுகள் ஏன் ஈழத்து சினிமாவில் உருவாகவில்லை ?

அறிவியல் புனைவுகளை திரைப்படமாக்குவதற்கு மிகவும் முக்கிய தடையாக இருப்பது போதிய தொழில்நுட்ப வளங்கள் இல்லை. யாழ்ப்பாணத்தில் மிகவும் தரமான செம்மைப்படுத்தும் கலையகம் என்று இரண்டே இரண்டுதான் உள்ளது. அதேவேளையில் அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் பாரிய பொருட்செலவில் மேற்கொள்ளப்படவேண்டும் அதுவும் அறிவியல் திரைப்படங்கள் வெளிவராமைக்கு ஒரு காரணம்.

தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஈழம் சார்பான திரைப்படங்களை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?

தமிழகத்தில் இருந்து வெளியாகி ஈழம் தொடர்பான ஒருசில  குறும்படங்கள் பார்த்திருக்கின்றேன். அவற்றில் எனக்கு அதிகளவு உடன்பாடில்லை. முக்கியமாக ஈழத்தமிழின் பாவனை முறையில் உடன்பாடில்லை. முழு நீளத் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் அதிகமான படங்கள் புலம்பெயர் நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை குறிவைத்தே எடுக்கப்படுவதாக எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. சில காட்சியமைப்புகள் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தாலும் தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஈழம் தொடர்பான திரைப்படங்களில் எனக்கு அதிக முரண்களே உண்டு. ஏனெனில் ஈழம் தொடர்பான திரைப்படங்கள் அந்த மண்ணின் கதை மாந்தர்களது வரலாறு சரியாகத் தெரிந்த ஒருவராலேயே எமது வலிகளை திரை மொழியில் தத்துரூபமாகக் கொண்டு வர முடியும்.

தமிழகத்து திரைப்படத்துறை புலம்பெயர் சமூகத்தை நம்பி இருப்பதாக கூறியிருக்கின்றீர்கள். ஆனால், புலம்பெயர் சமூகமானது ஈழத்து திரைப்படத்துறையையே எதிர்க்கின்றதே குறிப்பாக, தமிழகச் சொல்லாடல்களை ஈழத்துத் திரைப்படத்துறை வலிந்து திணிப்பதை  புலம்பெயர் சமூகம் அவ்வளவாக ரசிக்கவில்லை. இதை ஏன் உங்களால் முறியடிக்க முடியவில்லைகுறிப்பாக உங்கள் உயிர் வலி குறும்படத்தில் கூட இது இருக்கின்றதே 

அடிப்படையில் உயிர்வலி முற்று முழுதான ஈழத்து சொல்லாடல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதே. நீங்கள் குறிப்பிடுகின்ற பகுதியில் இளைய சமூகமானது எவ்வாறு தமிழக ஊடகங்களினால் மூளைச்சலவை செய்யப்படுகின்றார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்தவே ஒருசில சொல்லாடல்களைச் சேர்க்க வேண்டியதாக இருந்தது. அதேவேளையில் யாழ்ப்பாணத்தில் தமிழகத்துத் தமிழே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு நான் முற்று முழுதாக எதிரானவள். ஆனால், நாங்கள் இங்கு எடுக்கின்ற திரைப்படத்தில் ஒரு தமிழகத்துக் கதாபாத்திரம் வருவதாக இருந்தால் தமிழகத்துச் சொல்லாடலை பாவிப்பதில் எதுவித பிரச்சனையும் இல்லை. அதேபோல  மட்டக்களப்பு கதாபாத்திரம் வருமானால் நாங்கள் மட்டக்களப்புத் தமிழைப் பாவிப்பதில் எதுவித பிரச்சனையும் இல்லை. ஆனால், கதைக்களம் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியும் கதாபாத்திரங்கள் உள்ளூர்  கலைஞர்களாகவும் இருந்து கொண்டு தமிழகத்துத் தமிழைப் பேசுவதை நான் முற்றிலும் மறுதலிக்கின்றேன்.

இந்தப்போக்கானது குறிப்பிட்ட காலமாக உள்ளதா?  இல்லை நீண்ட காலமாக உள்ளதா ?

இங்கு குறும்படத்துறையானது  அதிஉயர் வளர்ச்சியை அடைந்தது ஒரு மூன்று வருடகாலமே. அதற்கு முன்னர் வந்திருக்கின்றனதான். ஆனால், ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டது. இந்த அதிஉயர் வளர்ச்சியை அடைந்தபொழுதே தமிழகத்து சொல்லாடல்களும் தாமாகவே வந்து ஒட்டிக்கொண்டு வந்துவிட்டன. உள்ளூர் கலைஞர்களே சமூகவலைத்தளங்களில் எமது மொழியானது நாடகத்தமிழ்  என்றும், ஈழத்து சினிமா எடுத்தால் அடுத்த கட்ட நகர்வை நோக்கிச் செல்லமுடியாது என்று பிரச்சாரம் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். என்னைப்பொறுத்தவரையில் இங்கு இருக்கும் பலரது கனவு என்னவென்றால்  ஈழத்து சினிமா என்ற தோளில் ஏறி தமிழகத்து சினிமாவில் குதிப்பதுவே ! இது ஒருபோதும் சாத்தியப்படாத விடையம்.

ஒரு திரைப்படம் அல்லது குறும்படம் ஆகியவற்றின் வெற்றியை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?

பொதுவாகவே தாயகத்தைப் பொறுத்தவரையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பொருளாதார ரீதியில் ஒரு திரைப்படத்துக்கு வெற்றியை ஈட்ட முடியாது. அதற்கான சாத்தியப்பாடுகள் அருந்தலாகவே காணப்படுகின்றன. என்னைப்பொறுத்தவரையில் நீண்ட நெடிய போரை சந்தித்த மக்களுக்கு திரைப்படம் மூலமாக அவர்களை ஆற்றுப்படுத்தும் ஏதாவது ஒரு செய்தி சொல்லப்பட்டு அது அவர்களை சென்றடைந்தால் அதுவே அந்தப் படைப்பின் வெற்றி என்று சொல்வேன். பொருளாதார ரீதியிலான வெற்றிகளை இனி வரும் காலங்களே தீர்மானிக்கும்.

குறும்படத்துறையானது வர்த்தகத்துறையாகி விட்டது”   என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

ஈழத்து சினிமாத்துறையை வர்த்தக ரீதியாக மாற்றுவதற்கு பலர் போராடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அதேவேளையில் தயாரிப்பாளருக்கான பொறுப்புகளைச் சரிவரக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்தக் குற்றச்சாட்டுகளானது  ஒருசில தனிப்பட்ட செயல்பாடுகளாலேயே ஏற்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

ஈழத்துத் திரைப்படத்துறையில் ஒரு இயக்குனருக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாகஎண்ணுகின்றீர்களா?

இல்லை என்றுதான் சொல்வேன். காரணம் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து திரைப்பட கலைஞர்களும் ஏகலைவர்களே. எமக்குத் துறைசார் நிபுணத்துவம் கிடையாது. நாமாகவே பல சுய பரிசோதனைகளை நடாத்தி அனுபவ வாயிலாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றோம். எனவே நிறுவனசார் அங்கீகாரம் என்பது எமக்கு இல்லையென்றே சொல்ல முடியும்.

போருக்கு முன்னரும் பின்னரும் ஈழத்து திரைப்படத்துறையானது எப்படியாக இருந்தது, இருக்கின்றது?

போருக்கு முன்னைய காலங்களில் எமக்கு தெரிந்தது தமிழ்ஈழத் திரைப்படங்களே. அதையும் தாண்டிய திரைப்படங்கள் இருந்திருக்கலாம். அறியப்படாமைக்கு அந்தநாட்களில் எனது வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் சிறுமியாக இருந்தவேளையில் தெரு ஓரத்தில் இரண்டு பக்கத்திலும் தொலைக்காட்சிப் பெட்டிகள்  வைத்து இரண்டு இந்திய சினிமாவும் ஒரு தமிழ் ஈழத் திரைப்படமும் பார்த்த நினைவு எனக்குண்டு. போருக்குப் பின்னரான காலங்களில் தனிநபர் சார்ந்து பல காத்திரமான குறும்படங்கள் முழுநீளத் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எழுபத்திரண்டுகளில் வெளியாகிய ஈழத்தின்  திரைப்படங்களுக்கும் சமகாலத்துதிரைப்படங்களுக்கும் எத்தகைய வேறுபாடுகளை உணருகின்றீர்கள் ?

சமகாலத்துத் திரைப்படங்கள் தமிழகத்துப் பேச்சு வழக்கு மற்றும் அதன் பாரம்பரியங்கள் போன்றவற்றை உள்ளடக்கியே வந்து கொண்டு இருக்கின்றன. இத்தகைய போக்கு மிகவும் கவலைக்குரியதுடன் ஆரோக்கியமில்லாத விடயமே ! ஆனால்,, எமக்கான தனி அடயாளத்தையும், மண்வாசனையும் கொண்டு மதிசுதாவின் நெறியாட்கையில் உருவான “உம்மாண்டி” முழு நீளத் திரைப்படமும், கேசவராஜனின் நெறியாட்கையில் உருவான “பனை மரக்காடு” முழு நீளத் திரைப்படமும்  வெளியாக இருக்கின்றது. இந்தத் திரைப்படங்கள் ஈழத்து திரைப்படத்துறையில் ஒரு மைல்கல் என்று சொல்ல முடியும் .

1972-களில் உருவான திரைப்படங்கள் எனது வயது காரணமாகப் பார்க்க  முடியவில்லை ஆனாலும் “வாடைக்காற்று” திரைப்படம் தொடர்பான விமர்சனங்களை படித்திருக்கின்றேன். “வாடைக்காற்று” படத்தை ஒத்ததாக தென் இந்திய சினிமாவில் மலையாள படமான “செம்மீன்” வெளியானது. ஆனாலும் தமிழ் திரைப்படத்துறையில் அப்படியான திரைப்படம் வரவில்லை என்றே சொல்லப்பட்டது. அன்றைய கால கட்டங்களில் நடித்த பல கலைஞர்களை சமகாலத்து இளையவர்கள் பலர் மறந்து போனார்கள். வாடைக்காற்று திரைப்படத்தின் கதையை எழுதிய செங்கையாழியானை எத்தனை பேருக்குத் தெரியும் ? அண்மையில் அவர் காலமான பொழுது வந்திருந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம்.

உங்கள் திரைப்படத்துக்கான கதாநாயகன்/கதாநாயகியை எவ்வாறாகத் தேர்வு செய்கின்றீர்கள்?

கதைக்களத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் ஏற்ற ஒரு கற்பனைப் பாத்திரம் எனக்குத் தோன்றும். இதனடிப்படையிலேயே தேர்வு செய்கின்றேன். மேலும் ஒரு பாடலுக்கு வருகின்ற கதாநாயகன் வடிவாகவும் சிவந்த நிறத்தை உடையவராகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவைகளைத் தாண்டி வசீகரம் இருந்தாலே போதுமானது. எனது “உயிர்ச்சூறை” பாடல் காட்சிக்கு இந்த கதாநாயக சட்டகங்களைத் தாண்டி மதிசுதா நடித்திருந்தார் .

ஒரு திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பாகவே அதீத எதிர்பார்ப்புகளை கொடுக்கும் ஊடகத்துறையை நீங்கள் எப்படியாகப் பார்கின்றீர்கள் ?

இதில் நான்  பொத்தாம்பொதுவாக  ஊடகத்துறையை மட்டும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. திரைப்படத்துறையைச் சேர்ந்த கலைஞர்களும் அவர்களைச் சுற்றியுள்ள நண்பர்களும் அதிக எதிர்பார்ப்புகளை கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக சமூவலைத்தளங்கள் பெரும் தாக்கத்தை இந்த விடயத்தில் உருவாக்கிக் கொண்டு வருகின்றன. இவைகள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொடுத்து அந்தப் படைப்பானது வெளியாகும்பொழுது ஏலவே சமூவலைத்தளங்களின் தாக்கத்தால் ஒரு சாதாரணப்பட்ட பார்வையாளனின் எதிர்ப்பார்ப்புகளுக்கு இல்லாதபொழுது அவன் கடும் மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றான். இந்த விடயத்தில் நான் மாற்றுக் கருத்தினையே கொண்டுள்ளேன்.

நீங்கள் நெறியாட்கை செய்யும் திரைப்படங்களில் வடிவமைப்பையா இல்லை உள்ளடக்கத்தையா அதிகம் பார்க்கின்றீர்கள் ?

என்னால் வடிவமைப்பை இரண்டாம் பட்சமாகவே எடுக்க முடியும். ஒரு படைப்பின் போக்கை தீர்மானிப்பது அதன் உள்ளடக்கமே.

ஈழத்துத் திரைப்படத்துறையில் பெண்களது பங்களிப்பு எப்படியாக உள்ளதுஅவர்களின் இருப்பை இந்தத் தாயகத்துச் சமூகம் எப்படியாகப் பார்க்கின்றது?

ஆரம்ப காலகட்டங்களில்  அதாவது 2005 / 2006 ஆண்டுகளில் இந்தத் துறையில்  பெண்களது பங்களிப்பு என்பது அருந்தலாகவே இருந்தது. அண்மைக்காலம் வரைக்கும் ஈழத்தின் தொடர்ச்சியான செயல்பாடுள்ள முதலாவது பெண் இயக்குனர் என்றால் அது நானாகவே இருப்பேன். 2006 அளவில் ரம்யா உதயகுமார் “பாரதி ” என்ற குறும்படத்தை நெறியாட்கை செய்திருந்தார். அதன் பின்னர் கதாநாயகிகளைத் தேடிப்பிடிப்பதே மிகவும் கடினமாக இருந்தது. ஒருசிலரே தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள். ஆனால்,, சமகாலத்தில் தொழில் நுட்பத்துறையிலும் சரி நடிப்புத்துறையிலும் சரி பெண்களது பங்களிப்பானது ஓரளவு வளர்ச்சி அடைந்துள்ளது.

சமூகம் என்று பார்க்கும்பொழுது இந்த விடயத்தில் யாழ்ப்பாணத்தின் இறுகிய சமூகக்கட்டமைப்பானது மாற்றம் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், குடும்ப ரீதியாக ஆதரவுகள் இருப்பது என்பதை மறுப்பதற்கில்லை.

சமகாலத்தில் குறும்படத்தின் முக்கியத்துவம் எப்படியான முறையில் சனங்களுக்கு அவசியமாகப்படுகின்றது ?

பொதுவாகவே யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுமக்களுக்கு இங்கு எடுக்கப்படுகின்ற குறும்படங்கள் மற்றும் முழுநீளத்திரைப்படங்கள் அதிகம் தெரிவதில்லை என்றுதான் சொல்லவேண்டும். அத்துடன் எமது படைப்புகளை நேரடியாக வந்து பார்வையிடுகின்ற பொதுமக்களை 1 – 2 வீதத்துக்குள் வரையறை செய்யலாம். அதே வேளையில் நாங்கள் சொல்லப்போகின்ற செய்திகள் மக்களிடம் இலகுவாகப் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகத் “தமிழகச் சொல்லாடலிலும் மற்றும் தமிழகத்துப் பண்பாட்டு விழுமியங்களையும் கொண்ட திரைப்படங்களை எடுக்கின்றோம்” என்ற கருத்துருவாக்கம் எம்மிடையே உண்டு. ஆனால், அவை மக்களிடம் போய்சேர்வதில்லை என்பதே உண்மையாகும். ஒரு சிலரே எமது மண்ணின் வாசனை கொண்ட திரைப்படங்களைப் பார்க்கின்றார்கள். அதுவும் சமூவலைத்தளங்களில் உள்ள காணொளிகள் மூலமாக பார்க்கின்ற வசதிகள் உள்ளவர்களே பார்க்கின்றார்கள். அதேவேளையில் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் தாயகத்தில் இணையவசதி இல்லாத மக்களும் எமது படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அவர்கள் எங்களது மண் வாசனையுடன் கூடிய திரைப்படங்களையே அதிகம் எதிர்பார்க்கின்றார்கள்.

ஒரு திரைப்படத்தை நெறியாட்கை செய்யும்பொழுது எத்தகைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள்?

என்னைப்பொறுத்தவரையில் எல்லா விடயங்களுமே முக்கியமான விடயங்கள்தான். ஆனால், நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது காலம் மற்றும் தொழில்நுட்ப வளங்கள். அத்துடன் திரைப்படத்துக்கான நடிக நடிகையர் தேர்வு மற்றும் கதையமைப்பு போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றேன்.

ஒரு கலையானது கலைக்காக இருக்கவேண்டுமா இல்லை சமூகத்துக்காக இருக்கவேண்டுமா?

கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்.

நீங்கள் நெறியாட்கை செய்யும் படங்களில் பேசும்மொழியானது எப்படியாக இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் ?

ஒரு திரைப்படத்தின் பேசும்மொழியானது அத்திரைப்படத்தின் கதைக்களத்தின் போக்கைச்  சார்ந்தே தீர்மானிக்கப்படும்.

பெண் இயக்குனர்களின் வீச்சு மற்றும் தொழிநுட்பவியலாளர்களது வீச்சு ஈழத்துத் திரைப்படத்துறையில் எப்படியாக இருக்கின்றது?

சமகாலத்தில் பெண்இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள்  இருக்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எல்லோரும் நின்று நிலைத்து இருக்கின்றார்களா ? என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகும். ஒரு படைப்பைக் கொடுத்துவிட்டு நாங்கள் தொடர்ந்து அதில் நிற்க முடியாமைக்கு எமது சமூகப்பின்னணிகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நல்ல படைப்புகளைக் கொடுத்தவர்களே அவர்கள் தாங்கள் குடும்ப வாழ்வில் சென்றவுடன் ஒதுங்கியதைக் கண்டிருக்கின்றேன்.

அண்மையில் இடம்பெற்ற புலம்பெயர் – தாயகத்துக் கலைஞர்களின் கலந்துரையாடலை எப்படியாகப் பார்க்கின்றீர்கள் ?

இப்படியான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமான விடயமே. ஒரே நோக்குடன் ஒரு நேர்கோட்டில் இது செல்லுமானால் பயன்தரும் என்றுதான் சொல்வேன். எமது நோக்கமானது, நாங்களும் புலம்பெயர் கலைஞர்களும் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேலைத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரல் மற்றும் அவர்களினுடாக அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ளல் என்பதைக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவர்களது நோக்கம் என்ன என்பது எமக்குச் சரிவரத்தெரியவில்லை.

அவர்கள் தங்கள் நோக்கங்களை தெளிவுபடுத்தியிருந்தார்களா ?

எமது திரைப்படங்களுக்கு வர்த்தக ரீதியான ஒத்துழைப்புகளையும் தரமான திரைப்படக்கதைகளுக்கு தயாரிப்பாளர்களை வழங்குவது பற்றியும் சொல்லியுள்ளார்கள். ஆனால், வருங்காலங்களில் அதுதொடர்பான செயலத்திட்டங்கள் அமுலுக்கு வரும்பொழுதுதான் எதையும் உறுதியாகச் சொல்லமுடியும்.

எமக்கென்று பாரம்பரியச் சொல்லாடல்கள் இருக்கும்பொழுது ஈழத்தில் இருந்து வெளியாகும் திரைப்படங்களில் தமிழகத்துச் சொல்லாடல்கள்  வலிந்து திணிக்கப்படுவது எதற்காக ?

தென்னிந்திய சினிமாவில் ஊறிய எமது மக்களுக்கு அந்த சொல்லாடல்களிலேயே சொன்னால்தான் அது சென்றடையும் என்றும், இந்திய

கோமகன்

கோமகன்

சினிமாவே எமது அடுத்த இலக்கு எனவே இந்தவழியில் சென்றாலே எமது இலக்கை அடையமுடியும் என்றவொரு கட்டுப்பெட்டித்தனமான கற்பிதங்களை எமது கலைஞர்கள் வளர்த்துக்கொள்கின்றார்கள். இந்தக் கற்பிதங்களில் இருந்து நான் முற்றுமுழுதாகவே முரண்படுகின்றேன். ஏனெனில், எமது மக்களுக்குத் தெரிந்தது ஈழத்துத் தமிழ்ச் சொல்லாடல்தான். எனவே இந்திய சினிமா மொழியில்தான் கொண்டு சென்று சனங்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்ற எந்தவொரு அத்தியாவசியமும் இல்லை. அத்துடன் ஒரு திரைப்படம் அல்லது குறும்படத்தைப் பார்ப்பதற்கு மொழி என்பது அவசியமற்றது. அதற்கு திரைமொழி என்றவோர் மொழி உண்டு. மொழியே இல்லாத பல திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றோம். மொழியே புரியாத பல அந்நியநாட்டுத் திரைப்படங்களைப் பார்த்திருக்கின்றோம். ஏன் அதன் கதையையும் கூடச்சொல்வோம். ஆகவே, இந்தியச் சொல்லாடல்களில் திரைக்கதையை செய்தால்தான் அது மக்களைச் சென்றடையும் என்ற வறட்டு வாதமானது இந்த இடத்தில் அடிபட்டுப்போகின்றது. அத்துடன் நாம் தமிழகத்து சொல்லாடல்களையும் சரிவரப் பயன்படுத்துவதில்லை என்பதுடன் எமது பாரம்பரிய சொல்லாடல்களையும் சரிவரப் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மையாகும்.

இசைப்பேழையில் உங்கள் அனுபவம் எப்படியாக இருந்தது ?

எனக்குப் பாடல்கள் எழுதிய அனுபவங்கள் உண்டு. ஆனால், இசைப்பேழைகள்  உருவாக்கிய அனுபவங்கள் இல்லை.

யாழ் அறக்கட்டளை” உருவாக்கப்பட்டதன் பின்னணி என்ன ?

எனது நண்பர் ஒருவர் அவரது பிறந்தநாளுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஏதாவது காப்பகத்துக்கு உணவு வழங்க முன்வந்தார். அப்பொழுது அவரின் அனுசரணையின் பேரில் ஒரு காப்பகத்தில் உள்ள போரினால் பாதிக்கப்படட சிறுவர்களுக்கு உணவு வழங்கினோம். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதைப்பார்த்த பல நண்பர்கள் தாங்களும் உதவ ஆர்வம் கொண்டுள்ளதாகத் தொடர்புகொண்டார்கள். அப்பொழுது இதை ஒரு ஸ்தாபனமயப்பட்ட நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல வேலைத்திட்டங்களை  செய்யத்  தீர்மானித்து உருவாக்கப்பட்டதே “யாழ் அறக்கட்டளை”.

தாயகத்தில் பெண் விடுதலை மற்றும் பெண்ணியம் உங்கள் பார்வையில்   எப்படியாக இருக்கின்றது?

பெண்களான எங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன, சமத்துவம் வேண்டும் என்று சொல்கின்றோம். அத்துடன் ஆண்கள் செய்கின்ற வேலைகளை பெண்களாகிய நாங்கள் செய்யவதற்குப் பல தடைகள் இருப்பதாகவும் சொல்லிக்கொள்கின்றோம். ஆனால், எமக்குரிய சுதந்திரத்தின் எல்லைகள் மீறாதவரைக்கும் எமக்குரிய சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளலாம் என எண்ணுகின்றேன் .அதேவேளையில் ஆண்கள்தான் பெண்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு பெரும் தடையாக இருக்கின்றார்கள் என்ற வாதத்தை நான் முற்றுமுழுதாகவே மறுதலிக்கின்றேன். ஏனெனில், பல சாதனைகளைப் புரிந்த பெண்களது பின்னணிகளில் ஆண்கள் முட்டுக்கட்டையாக இருந்திருப்பார்கள் என்றால் அவர்களால் அந்த சாதனைகளைப் புரிந்திருக்க முடியாது. அத்துடன் ஒரு பெண்ணின் சிந்தனையிலும் அவளது ஆடைத் தேவைகளிலும் இன்று பெண்ணானவள் இங்கு சரிசமனாகவே இருக்கின்றாள். எனவே எந்தவகையில் பெண்விடுதலை அடையவேண்டும் அல்லது பெண்ணியத்தைப் பற்றிப் பேசவேண்டும் ? என்பதில் எனக்கு அதிகமாகவே சந்தேகங்கள் உண்டு.

பெண்களது தலைமைத்துவம் அங்கீரிக்கப்படுவதாக உணருகின்றீர்களா?

ஆம்…. நிட்சயமாக உணருகின்றேன். நான் ஏலவே உங்களது கேள்வி ஒன்றிற்கான பதிலில் கூறியவாறு பெண்விடுதலை மற்றும் பெண்ணியம் பேசிப்பேசியே எங்களுக்கான தலைமைத்துவம் இல்லையோ என்ற மாயத்தோற்றத்தையே கொண்டுவருகின்றோம் என்றே  எண்ணுகின்றேன்.

உங்களது உணர்வுகள் அல்லது கருத்துக்கள் பெண் என்ற காரணத்தால் மறுதலிக்கப்பட்டு உள்ளனவா?

இல்லை, நிட்சயமாக இல்லை.

அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழகம் உருவாக்கியிருந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றிய உங்கள் எண்ணப்பாடு என்ன ?

இதில் அதிகக் கெடுபிடிகளை கையாளவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆடைகளை அணிதல் ஒவ்வொருவரது தனிமனித சுதந்திரமாகும். அதேவேளையில் அந்தச் சுதந்திரமானது சுற்றி இருப்பவர்களை உறுத்தாத வகையில் இருத்தல் வேண்டும். பல்கலைக்கழகத்தில் வேட்டியும் சேலையும்தான் மாணவர்கள் அணிந்து கொண்டு வரவேண்டும் என்பதை நான் முற்றுமுழுதாகவே மறுதலிக்கின்றேன்.

பறையிசை பயற்சிப் பட்டறையின் நோக்கங்கள் என்ன?

இந்தப் பறையிசை பயற்சிப் பட்டறையின் செயல்திட்டமானது கடந்தவருடத்துக்குரியது. கடந்த வருடம் யாழ் என்ரர்ரெயின்மென்ற்-க்குப் போதிய நிதிவளம் இல்லாத காரணத்தினால்  அந்தச் செயல்திட்டத்தைக் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தவில்லை. 2014 ஆம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த பறையிசைக் கலைஞரான மணிமாறன் அவர்களைச் சந்தித்து, அதன் பின்னர் 2015 இல் முறையான பயிற்சி எடுத்திருந்தோம். இந்தப் பறையிசையின் முக்கிய நோக்கமானது எமது பாரம்பரிய இசையை மீள் அறிமுகம் செய்வதுதான். இதில் பறையை மட்டும்தான் முன்னெடுக்க வேண்டும் என்று “யாழ் என்ரர்ரெயின்மென்ற்” எண்ணியிருக்கவில்லை. மாறாகத் தமிழரின்  பாரம்பரிய இசைவடிவங்களான ஒயிலாடடம், பொம்மலாட்டம்,  குதிரையாட்டம், கரகம், சிலம்பு போன்றவற்றை  முறையாகப் பயின்று அறிமுகப்படுத்துவதே  “யாழ் என்ரர்ரெயின்மென்ற்” இன் நோக்கமாக இருந்தது. இதில் பறையிசை முதலாவதாகச் சாத்தியப்பட்டது.

இந்தப் பறையிசையை அண்மைக்காலத்தில்  பிரபல்யப்படுத்துவதற்கு என்னதான் வலுவான காரணமாக அமைந்தது ?

இந்தப் பாரம்பரியக்கலைகள் அழியாது எமது அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இதில் இருந்தது. அத்துடன் நான் ஏலவே கூறியபடி எமக்குப் போதிய நிதிவளங்கள் இதை முன்னெடுத்த ஆரம்ப காலகட்டங்களில் இருந்திருக்கவில்லை. இதுவும் ஒரு முக்கிய காரணம்.

ஆனால், ‘அண்மையில் யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரகத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர்யாழ் சமூகத்தில் இந்துத்துவாவின் பல வடிவங்களையும்சாதியத்தினையும்சாதீய அரசியலையும்மற்றும் இந்தியக் கொள்கைவகுப்புத் திட்டங்களையும்யாழ்நகரில் உள்ள இலக்கியவாதிகள்மற்றும் கலைஞர்கள் ஊடாக விஸ்தரித்து வருவதாகவும், அதில் இந்தப் பறையிசை பயிற்சிப்பட்டறையும்  ஒன்று’  என்றவொரு காட்டமான விமர்சனம் உண்டு. இதற்கு உங்கள் பதில் என்ன ?

இதில் இந்தியத் துணைத்தூதரகத்துக்கும் எமக்குமிடையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதுவித தொடர்பும் இருந்திருக்கவில்லை. தமிழகத்தில் இருந்து கலைஞர்கள் வந்திருந்தாலும் இந்தியத்துணைத் தூதரகம் சார்பாக யாரையும் நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைப்பு  விடுக்கவில்லை. “யாழ் என்ரர்ரெயின்மென்ற்” -க்கும் தமிழகத்தில் இருந்த மணிமாறனுக்கும் இடையிலான நேரடித்தொடர்பிலேயே இந்தப்பயிற்சிப் பட்டறை உருவானது.  இந்தப்பயிற்சிப் பட்டறைக்கு “வொய்ஸ் ஒப் பிறீடம்”  மற்றும் இங்குள்ள ஒருசில வர்த்தக நிறுவனங்கள் அனுசரணையாளராக இருந்தார்கள். எமது நோக்கமே இந்தப் பாரம்பரிய இசைவடிவத்தை தமிழக மற்றும் உள்ளூர் கலைஞர்களையும் ஒன்றிணைத்து செய்வதாகவே திட்டமிட்டிருந்தோம். ஆனால், உள்ளூர் கலைஞர்கள் தங்களிடம் போதிய வளமின்மையால் இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இங்கு ஒரு பெரிய பறையின் பெறுமதியானது அதிகமானது. அத்துடன் அவர்கள் பயிற்சிக்காகக் கேட்டிருந்த தொகையும் அதிகமாகவே இருந்தது. இதுவும் உள்ளூர் கலைஞர்களை இணைப்பதற்கு தடையாக இருந்த முக்கியக்காரணமாக இருந்தது.

இந்தப் பறையிசை பட்டறை மற்றும் முன்னெடுப்பு நிகழ்வுகளால் வடக்கு கிழக்கில் விளிம்பு நிலையில் இருக்கும் பறையடிக்கும் சமூகத்தினர் ஏதாவது நன்மை பெற்று இருக்கின்றார்களாஇல்லை அவர்களது இருப்புகளாவது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா 

நாங்கள் இங்கு இருக்கும் பல பறையிசைக் கலைஞர்களை தனிப்பட்டமுறையில் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்படி அழைப்புவிட்டிருந்தோம். மறுதலையாக அவர்கள் எமது அழைப்பை மறுதலித்து விட்டிருந்தார்கள். காரணம், “தாங்கள் இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள்  என்பதைப் பொதுவெளியில் வெளிப்படுத்த விரும்பவில்லை” என்பதே. அத்துடன் சாதீய நெருக்குவாரங்கள் இருப்பதனால் பல கலைஞர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளத் தயங்குகின்ற நிலையே காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் சாதீய முறைமையானது நீர்த்துப்போய் உள்ளதாக ஒரு கருத்து உண்டு. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

இற்றை வரைக்கும் நான் சாதீயம் இல்லை என்றே நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், இந்த பறையிசை பயிற்சிப்பட்டறை நடைபெற்ற மூன்று நாட்களும் எனது நம்பிக்கையை மீளாய்வு செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளின. இந்நிகழ்வானது பலரது முகத்திரையைத் தோலுரித்துக் காட்டியது. முக்கியமாகச் சமூகத்தில் உயர் நிலையில் இருந்தவர்களின் முகத்திரையை. நாம் இவர்கள் பலருக்கு அழைப்பு விட்டிருந்தும் பலர் இந்தநிகழ்வைப் புறக்கணித்து இருந்தார்கள்.

சமகாலத்தில் நடைபெறும் நல்லாட்சி பற்றிய உங்கள் பார்வைதான் என்ன?

எனக்கு அரசியலில் அதிகம் ஆர்வம் இல்லை. இருந்தபோதிலும், நான் சார்ந்த இந்தச் சமூகம் சார்பான அக்கறை எனக்கு நிறையவே உண்டு. அந்தவகையில், சமீபத்தில் நல்லாட்சி தொடர்பான ஒரு விபரணக்காணொளி ஒன்று பார்க்க நேரிட்டது. யாழில் இருக்கின்ற மக்களில் பலர், மேலோட்டமாக யாழ்ப்பாணம் அடைந்துவரும் அபிவிருத்தியைப் பார்த்துச் சொக்கிப் போயிருக்கின்றார்களே ஒழிய அதன் பின்னர் ஒளிந்திருக்கும் ஆதிமூலமான  சமூக அபிவிருத்தி எப்படியாக இருக்கின்றது என்பதை சிந்திக்கத் தவறிவிடுகின்றார்கள். வடக்கிலும் கிழக்கிலும் போரினால் பாதிக்கப்பட்ட  பல லட்சம் மக்களது  தனிவாழ்வு சிறக்கவில்லை. காப்பகங்களும் கல்வித்தரத்தின் வீழ்ச்சியும் அதிகரிக்கின்றன .இதை யாரும் கவனத்தில் கொண்டுள்ளதாக நான் எண்ணவில்லை.

போர் முடிந்து 7 வருடங்கள் கடந்துவிட்டது. எமது இளைய சமூகமானது கலாச்சார சீரழிவுகளில் சிக்கிச் சீரழிவதும்அவர்களது கல்வியானது திட்மிட்டவகையில்  மழுங்கடிக்கப்படுகின்றது என்ற காட்டமான  குற்றச்சாட்டு உண்டு.இதற்கு உங்கள் பதில் என்ன?

இறுக்கமான போர்ச்சூழலில் அருந்தலான தொடர்பாடல்களையும் வாழ்க்கை முறமையையும் கொண்டிருந்த எமது சமூகமானது போரின் பின்னர் வந்த கட்டற்ற சுதந்திர வாழ்வு  முறமைக்கு முகம் கொடுக்க முடியாதவோர் அகச்சிக்கலின் வெளிப்பாடே இந்த கலாச்சார சீரழிவு என்று சொல்வேன். அதனுடன் தொடர்புடையதே கல்வித்தரத்தின் வீழ்ச்சியும். அத்துடன் வெளிநாட்டில் இருந்து வருகின்ற தங்குதடையற்ற அளவுக்கு அதிகமான பணமும் இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.  இந்த விடயத்தில் புலம்பெயர் சமூகமும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு முக்கிய பங்காளிகளாகி விடுகின்றனர். எனவே தாங்கள் கொடுக்கின்ற அதிகளவு பணவிடயங்களில் புலம்பெயர் சமூகமும் தமது எண்ணங்களை மறுசீரமைக்க வேண்டும். அவர்களது உழைப்பிற்கான கடினத்தன்மையை இங்கிருக்கும் உறவுகள்  உணர்வதாக தெரியவில்லை. அதனை உணர்ந்தாலே  இந்தக் கலாச்சார சீரழிவுகள் அகலும் என எண்ணுகின்றேன்.

அதே வேளையில் இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். கலாச்சாரச் சீரழிவு நடக்கின்றது என்று குற்றம் சாட்டப்படுகின்ற இதே இளைய சமூகத்தினர்தான் பல சாதனைகளை வடக்கு கிழக்குப் பகுதியில் செய்கின்றார்கள். அவர்களை யாருமே ஊக்கப்படுத்தி தட்டிக்கொடுப்பதில்லை. ஒரு சமூகம் என்பது  தவறும் சரியும் இரண்டும்  கலந்துதான்  இருக்கவேண்டும். அதுதான் சரியானதும்கூட. ஆனால், இங்கு நடப்பது என்னவென்றால், முக்கியமாக ஊடகங்கள் சரியானதை முறைப்படி சனங்களுக்கு கொடுக்காது ஒரு சிறிய தவறு நடந்தாலும் அதனை பூதாகரமாக்கி அவர்கள் விட்ட சிறிய தவறுகளை மேலும் கடுமையாக செய்யத் தூண்டுகின்றன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

http://vallinam.com.my/version2/?p=3107

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

பகிர்வுக்கு நன்றி கிருபன்.
இப்போது தான் இந்த பேட்டி பார்த்தேன்.

//2002 - 2003களில் என்னுடன் கடமையாற்றிய கிருத்திகன் இன்றும் இந்தத்துறையில் இருக்கின்றார்.//
? ஞாபகங்கள் அற்புதமானவை. குறிப்பிட்டமைக்கு நன்றி இயக்குனர் ஷாலினி சால்ஸ்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி!

ஈழத்தில் பல ஷாலினிகள் உருவாக வேண்டும். அதேவேளை காத்திரமாகச் சிந்திக்கின்றார். குறிப்பாகத் தமிழர்கள் கலைகளை மீட்பது தொடர்பான செயற்பாடு பாராட்டுதற்குரியது. உண்மை மெதுவாகவே ஏற்கப்படும் அவலம் எமதினத்தோடு ஒட்டியது. எதையுமே போராடிப்பெற வேண்டிய நிலையிலேயே உள்ளோம் என்பதே மெய்நிலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.