Jump to content

துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு


Recommended Posts

துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு
 
 
துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு
சுவிஸ்நாட்டில்   வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழர் ஒருவர் தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் 11 மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். 
 
சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் தனது மகள் கீர்த்திகாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் 11 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். இந்நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் விக்னே ஸ்வரன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள மாகாணசபையில் இடம்பெ ற்றது.
 
யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட போராசிரியர் புஸ்பரட்ணம் மூலம் குறித்த நிதியுதவி வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 10 மாணவர்களுக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வேலணை மத்திய கல்லுாரி மாணவிக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து உள்ளுராட்சி ஆணையாளரின் பன்முக ப்பட்ட நிதி மூலம் பருத்தித்துறை பிரதேசசபைக்கு மலக்கழிவு ஏற்றும் புதிய வண்டியும் வழங்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/17020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள், நல்லதொரு  எடுத்துக்காட்டான முன்மாதிரி.

இப்படி தாயகம் சென்றுவரும் ஒவ்வொரு குடும்பமும் வடமாகாணசபை ஊடாக இவ்வாறான உதவிகளையாவது செய்திருந்தால்  

இன்று எமது மக்கள் தன்னிறைவு கண்டிருப்பர்.

கோயிலுக்கும்

கூல் ரிங்சுக்கும் கொட்டியதில் ஒரு  சிறு தொகை தான் இதுவும்..

இனியாவது.......???

யாழ் கள உறவுகளாவது இதை பின் பற்றலாமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பாராட்டுக்கள், நல்லதொரு  எடுத்துக்காட்டான முன்மாதிரி.

இப்படி தாயகம் சென்றுவரும் ஒவ்வொரு குடும்பமும் வடமாகாணசபை ஊடாக இவ்வாறான உதவிகளையாவது செய்திருந்தால்  

இன்று எமது மக்கள் தன்னிறைவு கண்டிருப்பர்.

கோயிலுக்கும்

கூல் ரிங்சுக்கும் கொட்டியதில் ஒரு  சிறு தொகை தான் இதுவும்..

இனியாவது.......???

யாழ் கள உறவுகளாவது இதை பின் பற்றலாமே....

நல்ல விடயம் பாராட்டுக்கள்
செய்யலாம்.... ஆனால் இப்படி செய்தி வந்தால் விளம்பரம் செய்கின்றார்கள் என்று சொல்லவும் எம்மிடையே மனிதர்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

நல்ல விடயம் பாராட்டுக்கள்
செய்யலாம்.... ஆனால் இப்படி செய்தி வந்தால் விளம்பரம் செய்கின்றார்கள் என்று சொல்லவும் எம்மிடையே மனிதர்கள் உண்டு.

நல்லவிடயங்களுக்கு

நாலு  பேருக்கு போய்ச்சேருவதற்கு விளம்பரமும் வேண்டும்

அதை விளங்காதவர் போல் முட்டையில் மயிர் புடுங்குவோர் பற்றிய ஆதங்கம் எம்மை மேலும் மேலும் பின் தங்கி

அவர்களுக்கு விளம்பரம் தந்துவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாத்தியார் said:

நல்ல விடயம் பாராட்டுக்கள்
செய்யலாம்.... ஆனால் இப்படி செய்தி வந்தால் விளம்பரம் செய்கின்றார்கள் என்று சொல்லவும் எம்மிடையே மனிதர்கள் உண்டு.

வாத்தியார்! 
தற்போதைய ஊர் நிலவரங்களை பார்க்கும் போது இப்படியான செய்திகளுக்கு கட்டாயம் விளம்பரம் தேவைப்படுகின்றது.
புலம் பெயர்ந்தவர்களில் 80 வீதமானோர் தாயகத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே இருக்கின்றார்கள். பலர் நம்பகத்தன்மையான வழிகள் தெரியாமலே இருக்கின்றார்கள். அதற்காகவாவது  விளம்பரம் அவசியம்.

அரசியல்வாதிகளிடம் கையேந்தாமல் எம்மக்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும். அவர்களுக்கான சொந்த தொழில்வசதிகளை இலகுவாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.


ஈழத்து புலம்பெயர் தேச மக்கள் போரை விரும்பியவர்களில்லை என்பதை இங்குள்ள/அங்குள்ள வெள்ளாந்திகளுக்கு புரிய வைக்க வேண்டும்.  

போரை சிங்களமே எம்மவர் மீது திணித்தது என்பதையும் நாம் புரிய வைக்க வேண்டும்:)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் 

நிட்சயமாக அரசியல் வாதிகளை நம்ப வேண்டாம் உதவி செய்ய விரும்புவர்கள் ஊரில் உள்ள கிராம சேவகரை அணுகி அவர் மூலமாக வறிய குடும்பங்களை கண்டறித்து உதவலாம் அவரிடம்சகல குடும்பங்களின் விபரங்கள் உண்டு  என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.