Jump to content

ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம்


Recommended Posts

ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம்

Purple.jpg

ஒரு மெல்லிய நீரோடை போல துவங்கும் இந்த நாவல் அதனுள் இத்தனை அழுத்தமான ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் கருத்தினை வைத்திருக்கும் என படிக்க துவங்கும்போது யாரும் உணர்ந்திட மாட்டார்கள். நைஜீரிய எழுத்தாளர் 'சிமாமந்தா எங்கோசி அடிச்சி' எழுதியுள்ள 'ஊதாநிறச் செம்பருத்தி' அது வெளியாகிய 2003-ம் காலப்பகுதியிலேயே பெரும் கவனம் பெற்றது. 

அரசியல் ஸ்திரதன்மையற்ற நைஜிரியாவில் நிகழ்கிறது கதை. தாய்,தந்தை, நாயகி, அவளுக்கொரு அண்ணன் என சின்னஞ்சிறு பணக்கார கத்தோலிக்க குடும்பம். தீவிர மதப்பற்றுள்ள அப்பா. அவர் மீது பயமும் மரியாதையும் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நடுங்குகிறது அந்த குடும்பம். ஆனால் அப்பாவிற்கோ கடவுளின் மீதும் மதத்தின் மீதும் பயம், மரியாதை. அவரின் கனவெல்லாம் அவ்வூரின் சிறந்த கத்தோலிக்கராக தான் கருதப்படவேண்டும் என்பதுதான் அதற்காக சொந்த தகப்பனை கூட வறுமையில் வாடவிடுபவர். 

நாயகி காம்ப்ளி, அவளின் தாய் பியாட்ரிஸ், காம்ப்ளியின் அத்தை இஃபியோமா, அவரின் மகள் அமக்கா என நான்கு பெண்களை சுற்றிப்பின்னப்பட்ட கதை. செல்வ வளமிக்க அதே சமயம் சிரிக்கக்கூட அதீத கட்டுப்பாடுகள் நிறைந்த நாயகியின் குடும்பமும், நினைத்ததை பேசும் உரிமைகொண்ட தந்தையை இழந்த வறுமை வாட்டும் அத்தை இஃபியோமாவின் குடும்பமும் என இரண்டு குடும்பங்கள் முன்வைக்கப்படுகின்றன. கணவனை கொன்று விட்டதாக ஊரார் குற்றம் சொன்னாலும் அது குறித்து சட்டை செய்யாமல் தன் பிள்ளைகளை கல்வியின் பால் பற்றுகொண்டு வளர்க்க முற்படும் இஃபியோமாவும், ஒரு நாளின் சாதாரணக்கடமைகளை கூட கணவனின் அட்டவணைப்படிதான் செய்ய வேண்டியிருக்கும் பரிதாப பியாட்ரிஸும் முந்திய தலைமுறையின் இரண்டு அடையாளங்களாக இருக்கின்றனர். வகுப்பில் இரண்டாம் ரேங்க் வாங்கியதற்காகக்கூட தந்தையின் கடுமையான தண்டனைக்குள்ளாகும் காம்ப்ளி, நினைத்ததை வெளிப்படையாய் பேசுகின்ற, தன் விருப்பங்களை துணிச்சலாக வெளியில் சொல்லும் காம்ப்ளியின் அத்தை மகள் அமக்கா என  நவீன தலைமுறையின் இரண்டு பெண் அடையாளங்களை நாவலின் வழியாக அடிச்சி காட்சிப்படுத்துகிறார். 

குடும்ப அமைப்பில் ஆணாதிக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை அம்பலப்படுத்தும் இந்த நாவல், அதற்கு நாடு பேதம் இல்லை என்றும் உணர்த்துகிறது. இந்த நாவலின் கதை நிகழும் பகுதியை இந்தியா, இலங்கை, கிழக்காசியா என காலனி நாடுகள் எவற்றை களமாக வைத்து எழுதினாலும் இயல்பாக பொருந்திப்போகும் என்பதுதான் ஆச்சர்யமான ஒன்று.

பின்காலனிய காலகட்டத்தில் நிகழும் இந்த கதையில் மேற்கு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை எவ்வாறு சுரண்டலுக்கு பயன்படுத்திக்கொண்டு பின்னர் தூக்கி எறிந்து விடுகின்றன என்றும், அவை சென்ற பின்னரும் அந்நாடுகள் அறிமுகப்படுத்திய மதங்களும்,மொழியும் எவ்வாறு தொடர்ந்து அதிகாரங்களை செலுத்திவருகின்றது என்பதையும், உள்ளூரின் மதமும், சிறுதெய்வங்களும், மொழியும் இரண்டாம் தரமாக பின்தள்ளப்படுவதையும் கதையின் நடையிலேயே அம்பலப்படுத்திவிடுகிறார் ஆசிரியர்.

அதே போல குடும்ப வன்முறை என்பதை ஆண் எப்படி வெகு சாதாரணமாக நியாயப்படுத்துகிறான் என்பதை நாயகி காம்ப்ளியின் தந்தையின் பாத்திரம் வெளிபடுத்தப்படுகிறது. தினமும் காலையும் மாலையும் கடவுளை தொழும், எந்நேரமும் கையில் பைபிளை வைத்திருக்கும் பக்திமானான யூஜின் சின்ன தவறுகளுக்கு கூட மனைவி, மகள் மகனை என தன் குடும்பத்தினைரை தண்டனைக்குள்ளாக்குகிறார். தான் அடிப்பது அவர்களை திருத்தத்தான் என்கிற எண்ணத்தோடே அதை செய்கிறார். 'ஒரு தவறை திருத்துகிறேன் என்கிற பெயரில் தாமும் ஒரு தவறைத்தான் செய்கிறோம்' என்கிற எண்ணம் துளியுமின்றி அவர் செயல்படுவதை நாம் ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கமுடியும். 

இந்த நாவலின் ஆசிரியை சிமாமெந்தா எங்கோசி அடிச்சி நைஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர்.தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். தீவிர பெண்ணியவாதியான இவர் ஆப்ரிக்க பெண்ணியவாதிகளின் அடையாளமாக கருதப்படுபவர். இந்த நாவல் 2005-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் விருது பெற்றது. தற்போது இந்த நாவலை பேராசிரியர் பிரேம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.அணங்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

http://www.vikatan.com/news/miscellaneous/67696-purple-hibiscus-novel.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.