Jump to content

இந்த ஆண்டு டெஸ்ட் சீசன் முடிவில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்: ஒரு நாள் போட்டி கேப்டன் தோனி நம்பிக்கை


Recommended Posts

இந்த ஆண்டு டெஸ்ட் சீசன் முடிவில் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும்: ஒரு நாள் போட்டி கேப்டன் தோனி நம்பிக்கை

 

 
தோனி. | படம்: பிடிஐ.
தோனி. | படம்: பிடிஐ.

இந்த ஆண்டு சீசன் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளுக்கான தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் என ஒருநாள் போட்டிக்கான கேப்டன் தோனி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதங்களில் சொந்த மண்ணில் நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தற்போது டெஸ்ட் தர வரிசையில் 110 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி இந்த சீசன் முடிவில் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என தோனி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தற்போதைய நிலையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பாக உள்ளது. குறுகிய வடிவிலான போட்டிகளில் நமது அணி தற்போது முழுமை பெற்றுள்ளதுடன் நல்ல பேட்டிங் அனுபவமும் உள்ளது. கடந்த இரண்டரை வருடங்களாக ஒரே பேட்டிங் குழுவை பயன்படுத்தி வரு கிறோம். இதில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் அதிகம் கற்றுக் கொண்டுள்ளனர்.

டெஸ்ட் போட்டி எப்போதுமே உச்சகட்ட வடிவமுடையது. நாம் மீண்டும் முதலிடத்தை பிடிக்க முடியும். சாதகமான விஷயமாக நமது வேகப்பந்து வீச்சாளர்கள் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். முறையாக வேகப்பந்து வீசக்கூடிய 10 வீரர்களை நாம் கொண்டுள் ளோம். இவர்கள் அணிக்கு கிடைத்த சொத்து. தற்போது நாம் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை தேவைக்கு தகுந்தபடி நாம் சுழற்சி முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செயல்திறனில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். திறமை, அனுபவம் ஆகியவை அணியின் செயல்திறனாக சரியான நேரத்தில் வெளிப்பட வேண்டும். இந்த சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம். எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் இந்த சீசன் முடிவில் இந்திய அணி தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும். மேலும் 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கும் நமக்கும் இடையே கணிசமான இடைவெளியும் இருக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் எந்தவித வித்தியாசமும் இருந்ததாக நான் கருதவில்லை. முதல் போட்டியில் விளையாடிய ஆடுகளம் போன்றுதான் இருந்தது. இரு ஆட்டங்களுக்கும் அதிக கால இடைவெளி இல்லை. இது பந்து வீச்சாளர்கள் விரைவான திட்டம் வகுக்க உதவியது. சுழற்பந்து வீச்சாளர் மிஸ்ரா அருமையாக பந்து வீசினார். ஒட்டு மொத்த பந்து வீச்சு குழுவும் சிறப்பாக செயல்பட்டு 140 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்திய விதம் அபாரமானது.

இந்த தொடரில் இருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. முதல் ஆட்டத்தில் 245 ரன்களை துரத்துவது ஆரம் பத்தில் இருந்தே கடினமாக அமைந்த போதிலும் நமது பேட்ஸ்மேன்கள் அருமையாக விளையாடினர்.

அதேபோல் பந்து வீச்சாளர் களுக்கு முதல் ஆட்டம் கடினமாக அமைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் மீண்டு வந்தனர். இது வியப்பாகவும் அமைந்தது. அதேவேளையில் நமது பந்து வீச்சு குழுவின் தன்மையை உணர்ந்து கொள்ள முடிந்தது.

நாங்கள் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளோம். அணியில் உள்ள வீரர்கள் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட குறுகிய வடிவிலான தொடர்களில் பங்கேற்ற அனுபவமும் உள்ளது. குழுவாக பந்து வீச்சு சிறப்பாக உள்ளது.

அதேவேளையில் பேட்டிங் குழுவானது, உலக சாம்பியன் அணியில் இருந்து சற்று மாறு பட்டதாக உள்ளது. மொத்தத்தில் இந்த தொடர் சில இளம் வீரர் களுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. கே.எல்.ராகுல் முதல் ஆட்டத்தில் வியக்கும் வகையில் பேட் செய்தார்.

ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக அமையாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இருந்து நல்ல விஷயங்கள் கிடைத்துள்ளது. டெஸ்ட் தொடரில் விளையாடி விட்டு உடனடியாக வீரர்கள் டி 20 ஆட்டத்துக்கு தகுந்தபடி தங்களை வடிவமைத்துக் கொண்ட விதம் பாராட்டுக்குரியது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர்.

இந்த தொடர் இந்தியாவுக்கு மட்டும் அல்ல மேற்கிந்தியத் தீவுகளுக்கும் சிறப்பாகவே இருந்தது. இந்த இடம் மேற்கிந்தியத் தீவுகள் அணி யினருக்கு அருகாமையிலேயே உள்ளது. மீண்டும் நாங்கள் இங்கு திரும்பி வந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுவோம்.

துரதிருஷ்டவசமாக கடைசி போட்டி மழையால் பாதிக்கப் பட்டது. மற்றபடி வானிலை கிரிக்கெட்டுக்கு பொருத்தமாகவே உள்ளது. போட்டியை ஒளிபரப்பும் நேரம் வசதியாக உள்ளது. ரசிகர் களும் அதிகளவில் மைதானத்துக்கு போட்டியை காண நேரில் வருகின் றனர். இவ்வாறு அவர் கூறினார்.

http://tamil.thehindu.com/sports/இந்த-ஆண்டு-டெஸ்ட்-சீசன்-முடிவில்-இந்திய-அணி-முதலிடத்தை-பிடிக்கும்-ஒரு-நாள்-போட்டி-கேப்டன்-தோனி-நம்பிக்கை/article9048913.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.