Jump to content

2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

(கொசுக்களுக்குப் பிடிக்காத நிறம்)

வாழ்நாள் முழுவதும்

கொசுக்களோடு போராடியவன்

கொசுக்கடியால் நோயுற்று

செத்தே போனான்.

சுருள்கள், வில்லைகள், திரவங்கள்,

மின்மட்டைகள் என்று

கொசுவுக்கு எதிராக அவன்

பிரயோகித்த ஆயுதங்கள்

முடிவுறாத அவனது போராட்டத்தின்

மௌன சாட்சிகளாக நிற்கின்றன.

அவன் மரணத்தை தொலைக்காட்சியில்

விவாதித்தவன் சொன்னான்,

கொசுக்களுக்குப் பிடிக்காத நிறத்தில்

அவன் சட்டை அணிந்திருந்தால்

கொசு கடித்திருக்காதாம்!

 

 

(பருவங்களை உடுத்துபவள்)

சீரிய சுழற்சியில்

ஆடைகளை அவிழ்த்து

மாற்றி அணிகிறாள்.

அவள் வெய்யிலை உடுத்தியபோது

தவித்துப்போனேன்.

காற்றை உடுத்தியபோது

கலைந்துபோனேன்.

மழையை உடுத்தியபோது

மனம் கிறங்கிப்போனேன்

இப்போது அவள்

பனியை உடுத்துகையில்

போர்வைக்குள் பதுங்குகிறேன்

கவிதைக் கனவுகளோடு!

 

 

(காதலைச் சொல்வதற்கு...)

காதலைச் சொல்வதற்கு

சரியான இடம்

எதுவென்று வினவினான்.

கடற்கரை?

திருமண வீடு?

பூங்கா?

கல்லூரி வாசல்?

பேருந்து நிறுத்தம்?

பலரும் யோசனை சொன்னார்கள்.

காதலைச் சொல்வதற்கு

சரியான இடம்

மனதில்லையோ?

(நன்றி: குங்குமம் 2.9.16)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துமே அழகிய கவிதைகள், நண்ப !

 

இருந்தாலும் பின்வரும் கவிதையின் கடைசி மூன்று வரிகளைப் படித்ததும்.. கொஞ்சம் ஆடித் தான் போனேன்..!

அதில் புதைந்து கிடக்கும்... அர்த்தங்களோ..ஆயிரம்!

2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 

(பருவங்களை உடுத்துபவள்)

சீரிய சுழற்சியில்

ஆடைகளை அவிழ்த்து

மாற்றி அணிகிறாள்.

அவள் வெய்யிலை உடுத்தியபோது

தவித்துப்போனேன்.

காற்றை உடுத்தியபோது

கலைந்துபோனேன்.

மழையை உடுத்தியபோது

மனம் கிறங்கிப்போனேன்

இப்போது அவள்

பனியை உடுத்துகையில்

போர்வைக்குள் பதுங்குகிறேன்

கவிதைக் கனவுகளோடு!

 

வாழ்த்துக்கள்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, கரும்பு said:

காதலை சொல்லக்கூடாது, வெளிப்படுத்த வேண்டும். 

வெளிப்படுத்தலில் ஒரு வகை சொல்லுதல் தோழர்!

 

7 hours ago, புங்கையூரன் said:

அனைத்துமே அழகிய கவிதைகள், நண்ப !

 

இருந்தாலும் பின்வரும் கவிதையின் கடைசி மூன்று வரிகளைப் படித்ததும்.. கொஞ்சம் ஆடித் தான் போனேன்..!

அதில் புதைந்து கிடக்கும்... அர்த்தங்களோ..ஆயிரம்!

2.9.16 குங்குமம் இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 

(பருவங்களை உடுத்துபவள்)

சீரிய சுழற்சியில்

ஆடைகளை அவிழ்த்து

மாற்றி அணிகிறாள்.

அவள் வெய்யிலை உடுத்தியபோது

தவித்துப்போனேன்.

காற்றை உடுத்தியபோது

கலைந்துபோனேன்.

மழையை உடுத்தியபோது

மனம் கிறங்கிப்போனேன்

இப்போது அவள்

பனியை உடுத்துகையில்

போர்வைக்குள் பதுங்குகிறேன்

கவிதைக் கனவுகளோடு!

 

வாழ்த்துக்கள்!

 

மிக்க நன்றி தோழரே!

 

Link to comment
Share on other sites

4 hours ago, seyon yazhvaendhan said:

வெளிப்படுத்தலில் ஒரு வகை சொல்லுதல் தோழர்!

 

மிக்க நன்றி தோழரே!

 

காதலை வெளிப்படுத்துவதில் ஓர் வகை சொல்லுதல், ம், அதுவும் சரிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/30/2016 at 6:32 PM, கரும்பு said:

காதலை வெளிப்படுத்துவதில் ஓர் வகை சொல்லுதல், ம், அதுவும் சரிதான். 

வாழ்த்துக்கள் நண்பா

சொல்ல வ்போனால்  அடி முதல் நுனி வரை நடுங்குதப்பா  இதயம் வெளிய வந்து அடிக்குது ம்ம்ம்ம்tw_dissapointed:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சேயோன் யாழ்வேந்தன்!!

யாழ் கடந்தும் குங்குமம் தங்கள் கவித்துவத்தைத் துலங்க வைத்துள்ளது கண்டு மகிழ்ச்சி.

காதலைச் சொல்வதை, கேட்பதை விடவும் உணர்ந்துகொள்ளும் நிலைதான் தெய்வீகக் காதலோ.... :love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/1/2016 at 5:58 PM, முனிவர் ஜீ said:

வாழ்த்துக்கள் நண்பா

சொல்ல வ்போனால்  அடி முதல் நுனி வரை நடுங்குதப்பா  இதயம் வெளிய வந்து அடிக்குது ம்ம்ம்ம்tw_dissapointed:

நன்றி தோழரே!

 

On 9/3/2016 at 0:13 PM, Paanch said:

வாழ்த்துக்கள் சேயோன் யாழ்வேந்தன்!!

யாழ் கடந்தும் குங்குமம் தங்கள் கவித்துவத்தைத் துலங்க வைத்துள்ளது கண்டு மகிழ்ச்சி.

காதலைச் சொல்வதை, கேட்பதை விடவும் உணர்ந்துகொள்ளும் நிலைதான் தெய்வீகக் காதலோ.... :love:

தங்களின் உளமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி தோழரே!   யாழ் தளம் எனக்கு நல்லதொரு கவிதைக் களம் அமைத்துத் தந்திருக்கிறது.   நன்றி அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.