Jump to content

விடிவை தருமா? பான் கீ மோனின் வருகை


Recommended Posts

விடிவை தருமா? பான் கீ மோனின் வருகை

showImageInStory?imageid=293000:mr

 

 

 

ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வரு­கிறார். இலங்கை வந்து என்ன செய்­யப்­போ­கிறார்? யார் யாருடன் பேசப்­போ­கின்றார்? அவரின் வருகை எவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நன்மை பயக்கும்? இந்த விஜ­ய­மா­வது 2009 ஆம் ஆண்டு விஜ­யத்தைப் போலன்றி மக்­க­ளுக்கு விடிவு கிட்­டுமா? போன்ற விட­யங்­களே இவ்­வாரம் மக்கள் மத்­தியில் உலா வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

இலங்­கையின் மோதல் விவ­காரம் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் அர­சியல் தீர்வு போன்ற விட­யங்­களில் மிகவும் நெருங்­கிய நிறு­வ­ன­மாக உலக பலம் வாய்ந்த அமைப்­பாக ஐக்­கிய நாடுகள் சபை திகழ்­கின்­றது. எனவே அவ்­வாறு மிகப்­பெ­ரிய நிறு­வ­ன­மான ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் இலங்­கைக்கு விஜயம் செய்­கின்றார் என்­பது இல­கு­வான விட­ய­மல்ல.

எவ்­வா­றெ­னினும் ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இந்த வரு­டத்­துடன் பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெறு­கிறார். எனவே ஐ.நா. செய­லாளர் நாயகம் என்ற ரீதியில் அவரின் இறுதி விஜ­ய­மாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

எதிர்­வரும் 31 ஆம் திக­தி­யி­லி­ருந்து செப்­டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் உள்­ளிட்­டோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­துவார் . அத்­துடன் காலிக்கும் யாழ்ப்­பா­ணத்­துக்கும் விஜயம் செய்து சுனாமி அழிவு மீள­மைப்பு மற்றும் யுத்த பாதிப்பு குறித்து ஆரா­ய­வுள்ளார்.

குறிப்­பாக அர­சாங்கம் மற்றும் எதிர்த்­த­ரப்­புக்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் ஜெனிவா பிரே­ரணை அமு­லாக்கம் மற்றும் அர­சியல் தீர்வு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோ­ரு­ட­னான கலந்­து­யைா­டல்­க­ளின்­போது ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் விசா­ரணை பொறி­மு­றையின் முன்­னேற்றம் என்­பன குறித்து ஆரா­யப்­படும். எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் நடை­பெறும் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 71 ஆவது கூட்டத் தொட­ரிலும் ஜனா­தி­ப­தியும் ஐ.நா. செயலர் பான் கீ மூனும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளனர்.

இதே­வேளை எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­மந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரை ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் யாழ்ப்­பா­ணத்­தி­லேயே சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார். இச் சந்­திப்­பின்­போது பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் ஆரா­யப்­படும்.

அத்­தடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்பு அமை­ய­வேண்­டி­யதன் அவ­சியம் என்­பன குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பான் கீ மூனுக்கு விளக்­க­ம­ளிக்­க­வுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­துடன் சில தினங்­களில் இலங்­கைக்கு விஜயம் செய்து நிலை­மை­களை அவ­தா­னித்­தி­ருந்தார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு இலங்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் பிரே­ரணை ஒன்றை கொண்டு வந்து நிறை­வேற்­றி­யி­ருந்­தது.

ஆனால் இம்­முறை பான்­கீ­மூனின் விஜ­ய­மா­னது 2009 ஆம் ஆண்டு விஜ­யத்தை போன்று அமைந்­து­வி­டக்­கூ­டாது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்து சில தினங்­களில் பான் கீ மூன் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்தார். கொழும்பு வந்­த­டைந்த அவர் நேர­டி­யாக வட பகு­திக்கு சென்று யுத்த அழி­வு­களை பார்­வை­யிட்­டி­ருந்தார்.

அதன் பின்னர் பான் கீ மூன் இலங்­கை­யி­லி­ருந்து செல்­வ­தற்கு முன்­பாக அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து கூட்­ட­றிக்­கை­யொன்றை விடுத்­தி­ருந்தார். அந்தக் கூட்­ட­றிக்­கையில் யுத்­தத்தின் பின்­ன­ரான முக்­கிய நிலை­மைகள் தொடர்பில் விட­யங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பாக யுத்த காலத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் நம்­ப­க­ர­மான பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும், பொது மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும், இடம்­பெ­யர்ந்த மக்கள் அனை­வரும் விரை­வாக மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும், தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காணப்­பட வேண்டும், நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் போன்ற முக்­கிய விட­யங்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனும் வெளியிட்ட ஒன்­றி­ணைந்த கூட்­ட­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் பான் கீ மூன் இலங்­கைக்கு வந்து சென்று ஏழு வரு­டங்கள் கடந்து விட்ட நிலையில் ஏதா­வது நடந்ததா ?

ஒன்றும் நடக்­க­வில்லை. பொறுப்­புக்­கூறல் முன்­னெ­டுக்­கப்­ப­டவும் இல்லை, அர­சியல் தீர்வு காணப்­ப­டவும் இல்லை, எதுவும் நடக்­க­வில்லை. மாறாக யுத்த வடுக்கள், காயங்­களும் பிரச்­சி­னை­களும் நெருக்­க­டி­களும் அவ்­வாறே தொடர்­கின்­றன. காணிகள் விடு­விக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­ட­போ­திலும் இது­வரை முழு­மை­யாக மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

எனவே கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜ­யத்­தினால் இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு எந்த பயனும் கிடைக்­க­வில்லை என்­பதே யதார்த்­த­மாகும். ஆனால் ஒரு நன்மை கிடைத்­தது என்­ப­தனை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அதா­வது 2009 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் விஜ­யத்தின் ஊடாக இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் குறிப்­பி­டத்­தக்­க­ளவு சர்­வ­தேச அவ­தா­னத்தைப் பெற்­றி­ருந்­தன.

எனவே ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இம்­முறை இலங்கை விஜ­ய­மா­னது 2009 ஆம் ஆண்டு விஜயம் போன்று அமைந்து விடக்­கூ­டாது. இம்­மு­றை­யா­வது அவரின் விஜத்­தி­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின வடுக்கள் ஆறு­வ­தற்கு சந்­தர்ப்பம் கிடைக்க வேண்டும்.

குறிப்­பாக பான் கீ மூனின் இலங்கை விஜ­யத்தின் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்­கை­யா­னது விசேட பிரே­ர­ணை­யொன்றை கொண்டு வந்­த­தது. அந்த பிரே­ர­ணைக்கு மனித உரிமைப் பேரவையில் 29 வாக்­குகள் ஆத­ர­வாக கிடைத்­தன. 8 நாடுகள் எதிர்த்து வாக்­க­ளித்­தன.

எவ்­வா­றெ­னினும் 47 உறுப்பு நாடு­களை கொண்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் இலங்கை கொண்டு வந்த பிரே­ரணை வெற்றி பெற்­றது. அந்த பிரே­ர­ணையில் யுத்­தத்­திற்கு பின்­ன­ரான இலங்­கையின் நிலைமை தொடர்பில் பல்­வேறு விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.

ஆனால் அந்த பிரே­ர­ணையில் குறிப்­பிட்­டி­ருந்த விட­யங்கள் கூட உரிய முறையில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதன் பின்னர் 2012, 2013, 2104 ஆம் ஆண்­டு­களில் இலங்­கைக்கு எதி­ராக மேற்­கு­லக நாடு­க­ளினால் பிரே­ர­ணைகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. அவற்றில் யுத்­தத்துக்குப் பின்­ன­ரான இலங்­கையின் நிலைமை குறித்து பல்­வேறு விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் எதுவும் நடக்­க­வில்லை.

எவ்­வா­றெ­னினும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை பொறுத்­த­வ­ரையில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் இது­வரை தீர்க்­கப்­ப­டாத நிலை­மையே தொடர்­கி­றது.

குறிப்­பாக நல்­லி­ணக்க முயற்­சிகள் ஏழு வரு­டங்கள் கடந்த நிலை­யிலும் இது­வரை வெற்­றி­ய­டை­ய­வில்லை. யுத்த காலத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­ப­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது­வரை நீதி வழங்­கு­வ­தற்­கான பொறுப்­புக்­கூறல் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை.

யுத்­த­கா­லத்தில் அப­க­ரிக்­கப்­பட்ட பொது மக்­களின் காணிகள் இது­வரை மீள் வழங்­கப்­ப­ட­வில்லை. புதிய அர­சாங்கம் காணி­களை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­போ­திலும் இது­வரை அந்த மக்­களின் காணிகள் மீள் வழங்­காத பிரச்­சினை தொடர்ந்து கொண்டு இருக்­கின்­றது.

அது­மட்­டு­மன்றி யுத்­த­கா­லத்தில் காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்பில் இது­வரை எந்­த­வொரு தீர்வும் காணப்­ப­டாமல் இருக்­கின்­றது. காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்ற உண்மை இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள் பல்­வேறு துன்ப துய­ரங்­க­ளுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்­கின்­றனர்.

இது இவ்­வா­றி­ருக்க தமிழ் பேசும் மக்கள் நீண்­ட­கா­லமாக போராடி வரு­கின்ற அர­சியல் தீர்வு இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. ஒவ்­வொரு முறையும் அர­சியல் தீர்வு என்ற விடயம் தொடர்பில் பேசப்­பட்டு வரு­கின்ற போதிலும் தீர்­வா­னது எட்­டாக்­க­னி­யா­கவே இருக்­கின்­றது. புதிய அர­சாங்­கத்­தினால் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் அத­னூ­டாக அர­சியல் தீர்வு எவ்­வாறு உள்­ள­டக்­கப்­படும் என்று இது­வரை தெ ளிவற்ற தன்மை காணப்­ப­டு­கின்­றது.

மீள்­கு­டி­யேற்ற செயற்­பா­டு­களை பொறுத்­த­வ­ரையும் இது­வரை முழு­மை­ய­டை­யாத நிலையே தொடர்­கின்­றது. இன்னும் 31 க்கும் மேற்­பட்ட நலன்­புரி முகாம்­களில் மக்கள் வடக்கில் தங்­கி­யுள்­ளனர். அவர்­களை அவர்­களின் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­ற­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

அது மட்­டு­மன்றி யுத்­தத்தின் பின்னர் யுத்தம் நடை­பெற்ற பிர­தே­சங்­களில் மக்­களின் வாழ்­வா­தாரம் குறித்து பாரி­ய­ளவில் கவனம் செலுத்­த­வேண்­டிய தேவையும் இது­வரை முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. யுத்­தத்­தினால் கண­வனை இழந்த பல பெண்கள் தமது குடும்­பத்தை கொண்டு நடத்­து­வதில் பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கின்­றனர்.

இவ்­வாறு யுத்தம் முடி­வ­டைந்த 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து கடந்த ஏழு வரு­டங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் எதுவும் தீர்க்­கப்­ப­ட­வில்லை. புதி­தாக ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு ஆர்வம் காட்­டி­வ­ரு­கின்­ற­மையை மறுக்க முடி­யாது.

ஆனால் புதிய நல்­லாட்சி அர­சாங்கம் ஆர்­வத்தை வெ ளிக்­காட்­டி­னாலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் அவ்­வாறே காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றன ஒரு தீர்க்­க­மான மற்றும் முக்­கி­யத்­துவம் மிக்க கால கட்­டத்­தி­லேயே ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வரு­கிறார்.

அதன்­படி இப்­போது ஆரா­யப்­பட வேண்­டிய விடயம் என்­ன­வெனின் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இந்த விஜ­ய­மா­வது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு விடிவை தருமா ? பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்­குமா ? அல்­லது 2009 ஆம் ஆண்டில் நடை­பெற்­ற­தைப்­போன்றே இம்­மு­றையும் பான் கீ மூனின் இலங்கை விஜ­ய­மா­னது வெறு­மனே பெய­ர­ளவில் விஜ­ய­மாக மட்டும் அமைந்­து­வி­டுமா?

இந்தக் கேள்­வி­க­ளுக்கு பதில் தெரி­ய­வில்லை. காரணம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் தமிழ் பேசும் மற்றும் பாதிக்­கப்­பட்­ட­மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் எவ்­வாறு தாக்கம் செலுத்தும் என்று கூற முடி­யாது. 2009 ஆம் ஆண்டு ஒரு அனு­பவம் இருக்­கின்­றது. ஆனால் அப்­போது காணப்­பட்­ட­தை­விட இப்­போது அர­சியல் சூழல் மாறி­விட்­டது. அர­சாங்கம் மாறிவிட்டது. நல்லிணக்கம் மீது ஆர்வம் கொண்ட இருவர் தற்போது நாட்டின் உயர்மட்ட அதிகாரத்தில் இருக்கின்றனர்.

அது மட்டுமன்றி தமிழ் மக்களின் பிரச்சினையானது சர்வதேசம் வரை சென்றுள்ளதுடன் சர்வதேச அவதானம் பாரியளவில் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பான் கீ மூனை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையின்போது தமிழ் பேசும் மக்களின் தற்போதைய உண்மையான யதார்த்த நிலையை பான் கீ மூன் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு உரிய விளக்கத்தை அளிக்க முன்வரவேண்டும்.

இம்முறையாவது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயமானது பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தில் விமோசனமாக அமையவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக கடந்த வருடம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் பான் கீ மூன் ஆராய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=27/08/2016

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.