Jump to content

பஸ்ஸில் உயிரிழந்த மனைவி: கைக்குழந்தையுடன் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பஸ்ஸில் உயிரிழந்த மனைவி: கைக்குழந்தையுடன் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன்.

 

f2111.jpg

மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி. இவரது மனைவி மல்லி பாய், இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மல்லி பாய் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
 
இந்நிலையில் ராம் சிங் லோதி உடல் நலம் சரியில்லாத மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 5 மாத குழந்தை மற்றும் தனது தாயார் ஆகியோருடன் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி பஸ்சில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனை அறிந்த கண்டக்டர் அவர்களை பாதி வழியிலேயே இறங்கச் சொல்லி வற்புறுத்தினார். ராம் சிங் எவ்வளவோ கெஞ்சியும் கண்டக்டர் மனம் கரையவில்லை. நடுகாட்டில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டார். இறந்த மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதா வீட்டுக்கு கொண்டு செல்வதா என்று தெரியாமல் தவித்தார். இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல 20 கி.மீ பயணம் செய்ய வேண்டும்.
 
இந்நிலையில் அந்த வழியாக ஹசாரி மற்றும் ராஜேஷ் படேல் என்ற இரு வழக்கறிஞர்கள் வந்து கொண்டிருந்தனர், இவர்களின் நிலைமையை அறிந்த அவர்கள் ராம் சிங் மனைவியின் உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல உதவி செய்தனர். அதனை தொடர்ந்து ராம் சிங் லோதி போலீசில் புகார் தெரிவித்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரை கைது செய்தனர்.
 

மனிதநேயமும் மெல்ல மெல்ல சாகின்றது.tw_anguished:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.