Jump to content

சிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு


Recommended Posts

சிம்பிளான... செட்டிநாடு இறால் குழம்பு

Simple Chettinad Prawn Kuzhambu Recipe

 

உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா?

 

 தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)

வறுத்து அரைப்பதற்கு...

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

ஓமம் - 1/2 டீஸ்பூன்

பட்டை - 2 துண்டு

மிளகு - 1 டீஸ்பூன்

கிராம்பு - 4

ஏலக்காய் - 4

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் - 2-4

 

குழம்பிற்கு...

சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 1/4 கப்

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு வாணலியில் போட்டு வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து அத்துடன் உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் இறாலை சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு ரெடி!

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/simple-chettinad-prawn-kuzhambu-recipe-012474.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றால் குழம்பை பார்க்க வாய் ஊறுது.

Link to comment
Share on other sites

  • 1 year later...

செட்டிநாடு இறால் குழம்பு

 

 
10CHLRDPRAWN

 

என்னென்ன தேவை

இறால் - அரை கிலோ

வறுத்து அரைக்க

சோம்பு - ஒரு டீஸ்பூன்

சீரகம் -ஒரு டீஸ்பூன்

ஓமம் - அரை டீஸ்பூன்

பட்டை - இரண்டு துண்டு

மிளகு - ஒரு டீஸ்பூன்

கிராம்பு - 4

ஏலக்காய் - 4

வெந்தயம் - கால் டீஸ்பூன்

கசகசா - ஒரு டீஸ்பூன்

மல்லி - ஒரு டீஸ்பூன்

வரமிளகாய் - 2 முதல் 4

குழம்பு தாளிக்க

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

புளிச்சாறு - ஒரு டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - கால் கப்

உப்பு - தேவைக்கேற்ப

 

எப்படிச் செய்வது

வாணலியில் எண்ணெய் ஊற்றி பின்பு தாளிப்பு பொருட்களைப் போட்டு நன்கு வதக்கவும். பின் அரைத்த பொருட்களைப் போட்டு வதக்கவும். அதன் பின்னர் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியானதும் இறால் போட்டுக் கிளறி விட வேண்டும். இறால் நன்கு வெந்ததும் குழம்பு கெட்டியானதும் இறக்கிவிட வேண்டும்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.